Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: காப்பிடல் (10 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
192பெரியாழ்வார் திருமொழி || (2-8 காப்பிடல்) - சந்திர மண்டலத்தளவும் ஓங்கி யிருக்கின்ற மாளிகைகள் நிறையப் பெற்றதும் மங்களாசாஸநம் செய்ய வல்லவர் மலிந்திருக்கப் பெற்றதுமான திருவெள்ளறையில் எழுந்தருளி யிருப்பவனே!, எல்லாத் தேவரும் உன்னை ஸேவிக்கும்படி மந்த்ர புஷ்பங் கொண்டு வந்து மறைந்து நிற்கிறார்கள், பொழுதும் ஸந்தியா காலமாயிற்று. உனது அழகுக்கு ஒரு குறை வாராதபடி நான் திருவந்திக்காப்பிட வரவேணுமென்பதாம். பகவத் ஸ்தோத்ரமாகிய வேத மந்திரங்களைச் சொல்லிக் கொண்டு பகவானுக்கு ஸமர்ப்பிப்பதற்காகக் கையிலேந்தியுள்ள மலர் மந்திர மலர் எனப்பட்டது. காப்பு = ரக்ஷை. 1
இந்திரனோடு பிரமன் ஈசன் இமையவர் எல்லாம்
மந்திர மா மலர் கொண்டு மறைந்துவராய் வந்து நின்றார்
சந்திரன் மாளிகை சேரும் சதுரர்கள் வெள்ளறை நின்றாய்
அந்தியம்போது இதுவாகும் அழகனே காப்பிட வாராய் – 2-8 1-
சந்திரன், chandiran - சந்த்ரனானவன்
மாளிகை சேரும், maaligai serum - வீடுகளின் மேல் நிலையிலே சேரப் பெற்ற
சதுரர்கள் வெள்ளறை, sathurargal vellarai - மங்களா ஸாஸன ஸமர்த்தர்கள் வஸிக்கின்ற திரு வெள்ளறையிலே
நின்றாய், nindrai - நின்றவனே!
அழகனே, azhagane - அழகு உடையவனே!
இந்திரனோடு, indiranodu - இந்திரனும்
பிரமன், piraman - ப்ரஹ்மாவும்
ஈசன், eesan - ருத்ரனும்
இமையவர், imaiyavar - மற்றுமுள்ள தேவர்களும்
எல்லாம், ellam - (ஆகிய) யாவரும்
மா மந்திரம் மலர் கொண்டு, maa manthiram malar kondru - சிறந்த மந்த்ர புஷ்பங்களைக் கொண்டு
உவர் ஆய் வந்து, uvar aay vandhu - (மிக்க ஸமீபமாவும் மிக்க தூரமாகவு மல்லாமல்) நடுவிடத்தி லிருப்பவராக வந்து
மறைந்து நின்றார், marainthu nindraar - மறைந்து நின்றார்கள்
இது, idhu - இக் காலம்
அம், am - அழகிய
அந்தி போது ஆகும், andhi podhu aagum - ஸாயம் ஸந்த்யா காலமாகும்
காப்பு இட வாராய், kaappu ida vaaraay - (ஆகையால்) (நான் உனக்கு ரக்ஷையாக) திருவந்திக் காப்பிடும்படி வருவாயாக
193பெரியாழ்வார் திருமொழி || (2-8 காப்பிடல்) - பசுக்களைக் கறக்க வேண்டிய நான் உன்னைக் காப்பிட அழைத்துக் கொண்டிருப்பதனால்! மேய வெளியே போயிருந்த பசுக்களெல்லாம் கன்றுகளுள்ள விடத்தில் வந்து சேர்ந்த பின்பும் கறப்பாரில்லாமல் முலைக்கடுப் பெடுத்துக் கத்துகின்றன என்பது முதலடியின் கருத்து. ‘கதறுகின்ற, என்பதை இடைநிலைத் தீபகமாக்கி, கன்றுகள் முலை யுண்ணப் பெறாமையால் கத்துகின்றன; பசுக்கள் புறம்பே நின்று கொண்டு கன்றுகள் முலை யூட்டுதல் கறத்தல் செய்யாமையாலே முலைக் கடுப்பாற் கதறுகின்றன என்றுமாம். ‘நேசமேல், என்றவிடத்தில், நேசம் ஏல் என்று பிரித்து ஏல் என்பதை அசைச் சொல்லாகவுங் கொள்வர். நேசம் – ‘ஸ்நேஹம், என்ற வடசொல் விகாரம். 2
கன்றுகள் இல்லம் புகுந்து கதறுகின்ற பசு எல்லாம்
நின்று ஒழிந்தேன் உன்னைக் கூவி நேசமேல் ஒன்றும் இலாதாய்
மன்றில் நில்லேல் அந்திப்போது மதிள் திருவெள்ளறை நின்றாய்
நன்று கண்டாய் என் தன் சொல்லு நான் உன்னைக் காப்பிட வாராய் -2 8-2
மதிள், madhil - மதிளரணை யுடைய
திரு வெள்ளறை, thiru vellarai - திரு வெள்ளறையிலே
நின்றாய், nindrai - நின்றருளினவனே!
மேல், mel - (என்) மேல்
ஒன்றும், ondruum - துன்பமும்
நேசம் இலாதாய், naesam ilaadhaay - அன்பில்லாதவனே!
உன்னை கூவி, unnai koovi - உன்னைக் கூவிக் கொண்டு
நின்றொழிந்தேன் (அதனால்), nindrozhinthen (adhanal) - நின்று விட்டேன்
பசு எல்லாம், pasu ellam - பசுக்களெல்லாம்
கன்றுகள் இல்லம் புகுந்து, kanrugall illam pugundhu - கன்றுகளிருக்குமிடத்திலே சேர்ந்து
கதறுகின்ற, kadharukindra - முலை கடுப்பாலே கத்துகின்றன;
அந்தி போது, andhi podhu - அந்தி வேளையில்
மன்றில், manril - நாற் சந்தியில்
நில்வேல், nilvael - நில்லாதே;
என் தன் சொல்லு, en than sollu - என்னுடைய வார்த்தை
நன்று கண்டாய், nanru kandaay - (உனக்கு) நல்லதாகுங்கிடாய்
நான் உன்னை காப்பு இட வாராய், naan unnai kaappu ida vaaraay - இப்போது இது சொல்வது சடக்கென (நீ) காப்பிட வருவதற்காக
194பெரியாழ்வார் திருமொழி || (2-8 காப்பிடல்) - சிறு பெண்கள் விளையாட்டாக மணற்சோறு சமைப்பதும் மணல் வீடு அமைப்பதுமாயிருக்க, அதை நீ அழித்து அப் பெண்களோடே வலிவிற் சண்டை யிட்டுக் கொண்டிருந்ததனால் ‘நீ இப்படித் திரியக்கூடாது, என்று நான் உனக்கு ஹிதமாக அதட்டினேன்; ஒருகால் நான் அடிப்பனோ வென்று அஞ்சி நீ ஓடிப் போய்ச் சோறுண்பதற்கும் வாராது நின்றிட்டாய்; இப்போது அப்படியொன்றுஞ் செய்யமாட்டேன்; காப்பிட நீ வரவேணுமென்கிறாள். ஆள்வாய்! – என் சொற்படி கேட்டு நான் கொடுத்தவற்றை வாங்கிக் கொண்டு என் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்பவனே! என்றவாறு. முப்போது – இரண்டு ஸந்த்யையும் ஒரு உச்சிப்போதும். ‘‘வானவரேத்த,, என்பதும் பாடம். 3
செப்போது மென் முலையார்கள் சிறு சோறும் இல்லும் சிதைத்திட்டு
அப்போது நான் உரப்பப் போய் அடிசிலும் உண்டிலை ஆள்வாய்
முப்போதும் வானவர் ஏத்தும் முனிவர்கள் வெள்ளறை நின்றாய்
இப்போது நான் ஒன்றும் செய்யேன் எம்பிரான் காப்பிட வாராய் 2-8 3
ஆள்வாய், aalvai - என்னை ஆளப் பிறந்தவனே!
முப்போதும், muppothum - ­மூன்று காலத்திலும்
வானவர், vaanavar - தேவர்கள்
ஏத்தும், eththum - ஸ்தோத்திரஞ்செய்கின்ற
முனிவர்கள் வெள்ளறை, munivargal vellarai - (உன் மங்களத்தையே) எண்ணுகிறவர்களுடைய திரு வெள்ளறையிலே
நின்றாய், nindrai - நிற்பவனே! (நீ)
செப்போது, seppodhu - பொற் கலசங்களை (உவமையாகச்) சொல்லத் தகுந்த
மெல் முலையார்கள், mel mulaiyaarkal - மெல்லிய முலையை யுடைய ஸ்திகள்
சிறு சோறும், siru sorum - (விளையாட்டாகச் செய்த) மணற் சோற்றையும்
(சிறு) இல்லும், (siru) illum - மணல் வீட்டையும்
சிதைத்திட்டு, sidhaidittu - அழித்து விட்டு (நிற்க)
அப்போது, appodhu - அக் காலத்தில்
நான், naan - நான்
உரப்ப, urappu - கோபித்துச் சொல்ல
போய், poi - (பிடித்தடிப்பேனோ? என்றஞ்சி என் முன் நில்லாமல்) அப்பாற்போய்
அடிசிலும், adisilum - சோற்றையும்
உண்டிலை, undilai - உண்ணாமலிருந்திட்டாய்
இப்போது, ippodhu - இந்த மையத்திலே
நான் ஒன்றும் செய்யேன், naan ondruum seyyen - நான் உன்னை (மருட்டுதல் முதலியன) ஒன்றும் செய்ய மாட்டேன்
எம்பிரான் காப்பிட வாராய், empiraan kaappida vaaraay - எம்பிரான் காப்பிட வாராய்
195பெரியாழ்வார் திருமொழி || (2-8 காப்பிடல்) - ‘நாங்கள் கண்ணை விழித்து விளையாட வொண்ணாதபடி இந்த கிருஷ்ணன் எங்கள் கண்ணிலே மண்ணைத் தூவியும், நீ ஏன் எங்கள் கண்ணிலே மண்ணைத் தூவினாயென்று நாங்கள் கேட்கக் காலினாலுதைத்தும் போனான், என்றிப்படி இவ்வூரிலுள்ள பிள்ளைகள் ஒருவரிருவர் அல்லாமல் மிகப்பலர் வந்து என்னிடத்தில் முறையிட்டுக் கொள்ளுகிறார்கள்; ஆதலால் நீ அங்கு போகாமல் நான் காப்பிடும்படி வரவேணுமென்கிறாள். கண்டாரோடே தீமை செய்வாய் = உன்னிடம் அன்புள்ளவர்களாய் நீ செய்தவற்றைப் பொறுக்குமவர்களிடத்தில் மாத்திரமல்லாமல் யாவரிடத்துமட் தீமை செய்கிறாயே! என்றவாறு. ‘‘தீமை செய்வாய்! வண்ணம் வேலையதொப்பாய்,, என்றது – நீ தீம்பு செய்தாலும் உன்னை விடமுடியாதபடி யிருக்கிறது உனது வடிவழகு என்றபடி. வேலையது = அது – முதல் வேற்றுமைச் சொல்லுருபு. 4
கண்ணில் மணல் கொடு தூவி காலினால் பாய்ந்தனை என்று என்று
எண்ணரும் பிள்ளைகள் வந்திட்டு இவரால் முறைப்படுகின்றார்
கண்ணனே வெள்ளறை நின்றாய் கண்டாரோடே தீமை செய்வாய்
வண்ணமே வேலையது ஒப்பாய் வள்ளலே காப்பிட வாராய் 2-8 4
கண்ணனே, kannane - ஸ்ரீக்ருஷ்ணனே!
வெள்ளறை நின்றாய்!, vellarai nindrai! - புண்டரீகாக்ஷன் தானே இவன்
கண்டாரோடே, kandaarode - கண்டவரோடெல்லாம்
தீமை செய்வாய், theemai seivaay - தீம்பு செய்பவனே!
வண்ணம், vannam - திருமேனி நிறம்
வேலை அது, velai adhu - கடலின் நிறத்தை
ஒப்பாய், oppaay - ஒத்திருக்கப் பெற்றவனே!
வள்ளலே, vallale - உதாரனே!
எண் அரு, en aru - எண்ணுவதற்கு அருமையான (மிகப் பல)
பிள்ளைகள் இவர், pillaigal ivar - இப் பிள்ளைகள்
வந்திட்டு, vandhittu - வந்திருந்து
மணல் கொடு, manal kodu - மணலைக் கொண்டு வந்து
கண்ணில் தூவி, kannil thoovi - கண்ணில் தூவி விட்டு
காலினால் பாய்ந்தனை, kaalinaal paaindhanai - (அதனோடு நில்லாமல்) காலினாலும் உதைத்தாய்;
என்று என்று, endru endru - என்று பலதரஞ்சொல்லி (நீ செய்யுந்தீம்பைக் குறித்து)
முறைப்படுகின்றார், muraippaduginraar - முறையிடா நின்றார்கள்
காப்பு இட வாராய், kaappu ida vaaraay - (ஆதலால் அங்கே போவதை விட்டு) காப்பு இட வாராய்
196பெரியாழ்வார் திருமொழி || (2-8 காப்பிடல்) - பஞ்சலக்ஷங் குடியுள்ள இவ்வூரிலோ தீம்புசெய்யும் பிள்ளைகள் பலருண்டு; அப்படியிருக்கவும், அவர்கள் தாம் தாம் செய்யுந் தீம்பை உன்மேலே யேற்றிவிடுகிறார்கள். ஆதலால் உன் மேலே குற்றத்தைச் சுமத்துகின்ற அவர்களை விட்டிட்டு, உன்னை அன்புடன் வாழ்த்திக் காப்பிடும்படி உன்மேல் பரிவுள்ளவர்களிருக்கின்ற இவ்விடத்திற்கு வரவேணுமென்பதாம். எம்பெருமானுடைய திவ்யாத்ம ஸ்வரூபம் ஸ்வயம் ப்ரகாசமாய் ஜ்ஞாநமயமாயிருப்பதால் ‘ஞானச்சுடரே, என்கிறார். எல்லாம் போகாது – ஒருமைப் பன்மை மயக்கம். 5
பல்லாயிரவர் இவ்வூரில் பிள்ளைகள் தீமைகள் செய்வார்
எல்லாம் உன் மேல் அன்றிப் போகாது எம்பிரான் இங்கே வாராய்
நல்லார்கள் வெள்ளறை நின்றாய் ஞானச் சுடரே உன் மேனி
சொல்லார வாழ்த்தி நின்று ஏத்தி சொப்படக் காப்பிட வாராய் -2 8-5
இ ஊரில், i ooril - (பஞ்சலக்ஷம் குடியுள்ள) இவ்வூரிலே
தீமைகள் செய்வார், theemaigal seivaar - தீம்புகளைச் செய்பவர்களாகிய
பிள்ளைகள், pillaigal - சிறுவர்கள்
பல் ஆயிரவர், pal aayiravar - அனேக ஆயிரக் கணக்கானவர்கள்;
எல்லாம், ellam - அவர்கள் செய்யும் தீம்புகளெல்லாம்
உன் மேல் அன்றி , un mel andri - உன் மேலல்லாமல்
போகாது, pogaadhu - (வேறொருவர் மேலும்) ஏறாது;
எம்பிரான்! நீ இங்கே வாராய், empiraan! nee inge vaaraay - (இப்படியிருப்பதால் அங்கே போகாமல்) எம்பிரான்! நீ இங்கே வாராய்;
நல்லார்கள் வெள்ளறை நின்றாய், nallaargal vellarai nindraay - நல்லவர்கள் வாழ்கிற வெள்ளறை(யில்) நின்றாய்!
ஞானம் சுடரே, gyaanam sudare - ஞான வொளியை யுடையவனே!
உன் மேனி, un meni - உன் திருமேனியை
சொல் ஆர் நின்று ஏத்தி, sol ar nindru aethi - சொல் நிறையும்படி நின்று ஸ்தோத்ரஞ்செய்து
வாழ்த்தி சொப்பட காப்பு இட வாராய், vaazhthi soppada kaappu ida vaaraay - மங்களாசாஸநஞ்செய்து நன்றாக காப்பு இட வாராய்
197பெரியாழ்வார் திருமொழி || (2-8 காப்பிடல்) - கம்ஸன் ஆகாச வாணி சொன்னதைக் கேட்டது முதல் தேவகியின் கருப்பம் பிறந்ததும் அப்போதைக்கப் போது அழித்து வருகையில் உனது யோக நித்திரையாற் பிறந்த கன்னிகையைக் கொல்ல முயன்ற போது அக் கன்னிகை ‘உன்னைக் கொல்லப் போகிறவன் ஒளித்து வளர்கின்றான், என்று சொல்லியதைக் கேட்டது முதல் உன் மேல் கோபங்கொண்டவனாய் உன்னை வஞ்சனையாலழிப்பதற்குத் தாய் வடிவத்தோடு போகும்படி பேய் மகளாகிய பூதனையை ஏவினானென்று லோக ப்ரவாதமிருக்கிறது; ஆகையால், அவன் உன்னைக்கொல்ல இன்னும் யாரையேனும் ஏவக் கூடும்; எனக்கு அச்சமாயிருக்கிறது; ஆகவே, நீ அவ்விடத்து நின்றும் நான் அந்திக் காப்பிட இங்கு வரவேணுமென்பதாம். 6
கஞ்சன் கறுக்கொண்டு நின் மேல் கரு நிற செம்மயிர் பேயை
வஞ்சிப்பதற்கு விடுத்தான் என்பதோர் வார்த்தையும் உண்டு
மஞ்சு தவழ மணி மாட மதிள் திரு வெள்ளறையில் நின்றாய்
அஞ்சுவன் நீ அங்கு நிற்க அழகனே காப்பிட வாராய் -2- 8-6
மஞ்சு தவழ், manju thavazh - மேகங்கள் ஊர்ந்து செல்கின்ற
மணி மாடம், mani maadam - ரத்ந மயமான வீடுகளையும்
மதிள் திருவெள்ளறை, madhil thiru vellarai - மதிளையுமுடைய திருவெள்ளறை(யில்) நின்றாய்!
கஞ்சன், kanjan - கம்ஸனானவன்
நின் மேல், nin mel - உன் மேலே
கறுக்கொண்டு, karukkondu - கோபங்கொண்டு
கரு நிறம், karu niram - கரு நிறத்தையும்
செம் மயிர், sem mayir - செம் பட்ட மயிரையுமுடைய
பேயை, peyai - பூதனையை
வஞ்சிப்பதற்கு, vanjippatharku - (உன்னை) வஞ்சனையாகக் கொல்வதற்கு
விடுத்தான், Vidutthaan - அனுப்பினான்
என்பது, Enbadhu - என்பதான
ஓர் வார்த்தையும் , Or vaarthaiyum - ஒரு சொல்லும்
உண்டு, undu - கேட்டிருப்பதுண்டு
நீ அங்கு நிற்க, Nee Angu Nirka - (ஆதலால்) நீ அவ்விடத்திலே நிற்பதற்கு
அஞ்சுவன், Anjuvan - நான் அஞ்சா நின்றேன்
அழகனே! காப்பு இட வாராய், Azhagane! Kaappu Ida Vaaraay - அழகனே! காப்பு இட வாராய்
198பெரியாழ்வார் திருமொழி || (2-8 காப்பிடல்) - ‘’பேய்ச்சிமுலையுண்ட பின்னை இப்பிள்ளையைப் பேசுவதஞ்சுவனே” என்ற பெரிய திருமொழிப் பாசுரத்தோடு இப்பாட்டின் இரண்டு ­மூன்றாமடிகளை ஒருபுடை ஒப்பிடுக. பார்த்தால் சிறுவன் போலிருக்கின்றாய், நீ செய்யும் செய்கையோ அதிமாநுஷம், ஆகையால் உனது உண்மையான ஸ்வரூபம் என்னாலறியப் போகிறதில்லை யென்கிறாள். 7
கள்ளச் சகடும் மருதும் கலக்கழிய உதை செய்த
பிள்ளை அரசே நீ பேயை பிடித்து முலை உண்ட பின்னை
உள்ளவாறு ஒன்றும் அறியேன் ஒளி உடை வெள்ளறை நின்றாய்
பள்ளிகொள் போது இதுவாகும் பரமனே காப்பிட வாராய் -2 -8-7
கள்ளம், Kallam - வஞ்சனை யுடைய
சகடும், Sagadum - சகடாஸுரனையும்
மருதும், Marudhum - யமளார்ஜுநங்களையும்
கலக்கு அழிய, Kalakku Azhiya - (வடிவம்) கட்டுக் குலைந்தழியும்படி
உதை செய்த, Udhai Seydha - (திருவடிகளால்) உதைத்துத் தள்ளிய
பிள்ளை அரசே, Pillai Arase - பிள்ளைத் தன்மையைக் கொண்ட பெருமையனே!
நீ, Nee - நீ
பேயை, Peyai - பூதனையினுடைய
முலை பிடித்து உண்ட பின்னை, Mulai pidithu unda pinnai - தாயாகவே நினைத்து முலையைப் பிடித்து (வாய் வைத்து) உண்ட பின்பு
உள்ள ஆறு, Ulla aaru - உள்ள படி
ஒன்றும் அறியேன், Ondrum ariyen - ஒன்றுமறிகிறேனில்லை;
ஒளி உடை வெள்ளறை நின்றாய், Oli udai vellarai nindrai - ஒளி உடை வெள்ளறை நின்றாய்!
இது, Idhu - இப்போது
பள்ளி கொள் போது ஆகும், Palli kol podhu aagum - படுத்து உறங்குகிற வேளையாகும்;
பரமனே!, Paramane! - அழகாலே மேம்பட்டவனே காப்பு இட வாராய்
199பெரியாழ்வார் திருமொழி || (2-8 காப்பிடல்) - அங்கு துர்க்கையென்னும் க்ஷுத்ர தேவதையிருப்பதனால் அவ்விடத்தை விட்டு நான் காப்பிடும்படி விரைந்து வர வேணுமென்பதாம். \ கபாலி – ருத்ரனென்றுமாம். இனி, உடம்பு நிறையச் சாம்பல் பூசி எலும்புகளை மாலையாகக் கட்டியணிந்து கையில் கபாலங்கொண்டு பிச்சை யெடுப்பவர் இரவிற் பிச்சை யெடுத்தத் திரிவது முற்காலத்தியற்கையாதலால் அப்படிப்பட்டவர்களை ‘கபாலி, என்றதாகவுமாம்; அப்படியிருப்பவர்களைக் கண்டு குழந்தைகள் அஞ்சுமென்று அழைத்தல் இயல்பு. 8
இன்பம் அதனை உயர்த்தாய் இமையவர்க்கு என்றும் அரியாய்
கும்பக் களிறு அட்ட கோவே கொடும் கஞ்சன் நெஞ்சினில் கூற்றே
செம் பொன் மதிள் வெள்ளறையாய் செல்வத்தினால் வளர் பிள்ளாய்
கம்பக் கபாலி காண் அங்கு கடிதோடிக் காப்பிட வாராய் – 2-8 -8
இன்பம் அதனை, Inbam adhanai - உன் குண சேஷ்டிதங்களால்) பரமாநந்தத்தை
உயர்த்தாய், Uyarthaai - (எனக்கு) மேன் மேலுண்டாக்கினவனே! தொல்லை இன்பத்து இறுதி கண்டவள் அன்றோ
இமையவர்க்கு, Imaiyavarkku - தேவர்க்கு
என்றும், Endrum - எந்நாளும்
அரியாய், Ariyaai - அருமையானவனே!
கும்பம், Kumbam - மஸ்தகத்தையுடைய
களிறு, KaLiru - குவலயாபீடத்தை
அட்ட, Atta - கொன்ற
கோவே, Koode - ஸ்வாமியே!
கொடு, Kodu - கொடுமை தங்கிய
கஞ்சன், Kanjan - கம்ஸனுடைய
நெஞ்சினில், Nenjil - மநஸ்ஸிலே
கூற்றே, Kootre - யமன் போல் பயங்கரனாய்த் தோன்றுமவனே!
செம் பொன் மதிள் வெள்ளறையாய்!, Sem pon madhil vellaraiyaay! - செம் பொன் மதிள் வெள்ளறையாய்!
செல்லத்தினால் வளர், Sellathinaal valar - செல்வச் செருக்கோடு வளர்கின்ற
பிள்ளாய், Pillay - குழந்தாய்!
அங்கு, Angu - நீ இருக்கிறவிடத்தில்
கம்பம், Kambam - (கண்டார்க்கு) நடுக்கத்தை விளைக்க வல்ல
கபாலி காண், Kabali kaan - துர்க்கையாகும்;
கடிது ஓடி காப்பு இட வாராய், Kadidhu odi kaappu ida vaaraay - (ஆகையால் அங்கு நில்லாமல்) மிகவும் விரைந்தோடி காப்பு இட வாராய்
200பெரியாழ்வார் திருமொழி || (2-8 காப்பிடல்) - “உனக்கு ரக்ஷை யிடும்படி விலக்ஷணரான பிராமணர் சங்குகளில் நீரெடுத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள்” என்று யசோதை சொல்லவும், கண்ணன் விளையாடப் போகவே, மீண்டும் ‘நீ பிராமணர்கள் ரக்ஷை யிடும்படி வராவிட்டாலும் நாற் சந்தியிலே செருக்குடன் விளையாடித் திரிதல் கூடாது. அது க்ஷுத்ர தேவதைகள் வஸிக்கிற இடமாகும். தாய் சொல்வதை இன்னுஞ் சிலகாமாவது கேள்; உனக்கு ரக்ஷை யிட விளக்கேற்றுகிறேன்; நீ அவ்விடத்தை விட்டு வரவேணும், என்கிறாள். இக்காலத்திலும், விளக்கேற்றிக் குழந்தைகளுக்குச் சுழற்றும் வழக்கமுளது. 9
இருக்கொடு நீர் சங்கில் கொண்டிட்டு எழில் மறையோர் வந்து நின்றார்
தருக்கேல் நம்பி சந்தி நின்று தாய் சொல்லு கொள்ளாய் சில நாள்
திருக் காப்பு நான் உன்னைச் சாத்தத் தேசுடை வெள்ளறை நின்றாய்
உருக்காட்டும் அந்தி விளக்கு இன்று ஒளி கொள்ள ஏற்றுகிறேன் வாராய் – 2-8 9
இருக்கொடு, Irukodu - (புருஷ ஸூக்தம் முதலிய) ருக்குக்களைச் சொல்லிக் கொண்டு
நீர், Neer - தீர்த்தத்தை
சங்கில், Sangil - சங்கத்திலே
கொண்டிட்டு, Kondittu - கொணர்ந்து
எழில், Ezhil - விலக்ஷணரான
மறையோர், Maraaiyor - ப்ராஹ்மணர் (உனக்கு ரக்ஷையிடுவதற்கு)
வந்து நின்றார், Vandhu nindraar - வந்து நிற்கிறார்கள்;
நம்பி, Nambi - தீம்பு நிறைந்தவனே!
சந்தி நின்று, Sandhi nindru - நாற்சந்தியிலே நின்று
தருக்கேல், Tharukkael - செருக்கித் திரியாதே
சில நாள், Sil naal - சில காலம்
தாய் சொல்லு, Thai sollu - தாய் வார்த்தையை
கொள்ளாய், Kollaay - கேட்பாயாக;
தேசு உடை வெள்ளறை நின்றாய், Desu udai vellarai nindraay - தேஜஸ்ஸை உடைய வெள்ளறை நின்றாய்!
இன்று, Indru - இப்போது
நான், Naan - நான்
திரு காப்பு, Thiru kaappu - அழகிய ரக்ஷையை
உன்னை சாத்த, Unnai saathu - உனக்கு இடுதற்காக
உருகாட்டும் அந்திவிளக்கு, Urukaatum andhivilakku - உன் திருமேனி வடிவத்தைக் காட்டுகின்ற அந்தி விளக்கை
ஏற்றுகேன் வாராய், Etruken vaaraay - ஏற்றுவேன் (இதைக்காண) கடுக வருவாயாக
201பெரியாழ்வார் திருமொழி || (2-8 காப்பிடல்) - ஒரு பாசுரத்தின் ஓரடிக்கு இத் துணை மஹிமை கூறிய முகத்தால் இத்திருமொழியின் பயன் அளவிட்டுச் சொல்ல முடியாதென்பதைக் கைமுதிக ந்யாயத்தால் பெறவைத்தார். (பாதப்பயனித்யாதி.) ஒவ்வொரு பாட்டின் கடைசிப்பாதத்தில் கூறியுள்ள காப்பிடலாகிய புருஷார்த்தத்தைக் கைக் கொள்ளக் கடவ பக்தர்களுடைய பாபங்கள் தீருமென்று முரைக்கலாம். 10
போதமர் செல்வக் கொழுந்து புணர் திரு வெள்ளறையானை
மாதர்க்கு உயர்ந்த யசோதை மகன் தன்னைக் காப்பிட்ட மாற்றம்
வேதப் பயன் கொள்ள வல்ல விட்டு சித்தன் சொன்ன மாலை
பாதப் பயன் கொள்ள வல்ல பத்தர் உள்ளார் வினை போமே -2- 8-10
மாதர்க்கு உயர்ந்த, Maadharkku uyarntha - ஸ்திரீகளுள் சிறந்த
அசோதை, Asodhai - யசோதைப் பிராட்டி
மகன் தன்னை, Magan thannai - தன் புத்ரனான கண்ணனை
காப்பு இட்ட, Kaappu itta - ரக்ஷை யிட அழைத்த
மாற்றம், Maatram - வார்த்தையை
போது அமர், Pothu amar - தாமரைப் பூவைப் (பிறப்பிடமாகப்) பொருந்திய
செல்வக் கொழுந்து, Selva kozhundhu - செல்வத்திற்கு உரியவளாய் மற்றைத் தேவியரிற் சிறந்தவளான பிராட்டி
புணர், Punar - ஸம்ச்லேஷிக்கப் பெற்ற
திரு வெள்ளறையானை, Thiru vellaraiyaanai - திரு வெள்ளறையில் நின்றருளியவனைப் பற்றி
வேதப் பயன், Vedha payan - (எம்பெருமானுக்கு மங்களாசாஸநம் செய்கையையே) வேத தாத்பர்யமாக
கொள்ள வல்ல, Kolla valla - அறிய வல்ல
விட்டு சித்தன், Vittu chithan - பெரியாழ்வார்
சொன்ன, Sonna - அருளிச் செய்த
மாலை, Maalai - பாமாலையினுடைய
பாதம் பயன், Paadham payan - ஓரடி கற்றதனாலாகிய பயனை; நாலாம் அடியில் சொன்ன காப்பிடுதலை
கொள்ள வல்ல, Kolla valla - அடைய வல்ல
பக்தர் உள்ளார், Bakthar ullaar - பக்தராக உள்ளவரது
வினை, Vinai - வினைகளெல்லாம்
போம், Poom - கழிந்து விடும்