Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: சிந்துரச் செம்பொடி (10 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
587நாச்சியார் திருமொழி || 9 - சிந்துரச் செம்பொடி (திருமாலிருஞ்சோலை அழகரை வழிபடுதல்) 1
சிந்துரச் செம்பொடிப் போல் திரு மால் இருஞ்சோலை எங்கும்
இந்திர கோபங்களே எழுந்தும் பரந்திட்டனவால்
மந்திரம் நாட்டி யன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட
சுந்தரத் தோளுடையான் சுழலையில் நின்றுய்தும் கொலோ
திரு மாலிருஞ்சோலை எங்கும், Thirumaalirunjolai engum - திருமாலிருஞ்சோலையில் பார்த்த விடமெங்கும்
இந்திர கோபங்கள், Indira Gopangal - பட்டுப் பூச்சிகளானவை
செம், Sem - சிவந்த
சிந்துரம் பொடி போல், Sindhuram Podi pol - ஸிந்தூரப் பொடி போல
எழுந்து, Ezhundhu - மேலெழுந்து
பரந்திட்டன, Parandhittana - பரவிக் கிடக்கின்றன
ஆல், Aal - அந்தோ!
அன்று, Andru - (கடலைக் கடைந்து அமுதமளிக்கவேணுமென்று தேவர்கள் சரணம் புகுந்து வேண்டின) அக் காலத்திலே
மந்தரம், Mandharam - மந்தர மலை
நாட்டி, Naati - (பாற் கடலில் மத்தாத) நாட்டி (கடல் கடைந்து)
கொழு மதுரம், Kozhu Madhuram - மிகவும் மதுரமான
சாறு, Saaru - அம்ருத ரஸத்தை
கொண்ட, Konda - எடுத்துக் கொண்ட
சுந்தரம் தோள் உடையான், Sundharam thol udaiyaan - ஸ்ரீ ஸுந்தர பாஹு நாதனுடைய
சுழலையில் நின்று, Suzhalaiyil nindru - சூழ் வலையில் நின்றும்
உய்தும் கொல், Uydhum kol - பிழைப்போமோ?
588நாச்சியார் திருமொழி || 9 - சிந்துரச் செம்பொடி (திருமாலிருஞ்சோலை அழகரை வழிபடுதல்) 2
போர்க் களிறு பொரும் மாலிரும் சோலை யம்பூம் புறவில்
தார்க் கொடி முல்லைகளும் தவள நகை காட்டுகின்ற
கார்க்கொள் படாக்கள் நின்று கழறிச் சிரிக்கத் தரியேன்
ஆர்க்கிடுகோ தோழீ அவன் தார் செய்த பூசலையே
போர் களிறு, Por Kaliru - போர் செய்வதையே தொழிலாக வுடைய யானைகள்
பொரும், Porum - பொருது விளையாடுமிடமான
மாலிருஞ் சோலை, Maalirunjolai - திருமாலிருஞ் சோலை மலையினுடைய
அம்பூம் புறவில், Amboom Puravil - மிகவுமழகிய தாழ்வரைகளிலே
தார் கொடி முல்லைகளும், Thaar Kodi Mullaigalum - அரும்புகளை யுடைய கொடி முல்லைகளும்
தவளம் நகை, Thavalam Nagai - (அழகருடைய) வெளுத்த புன்சிரிப்பை
காட்டுகின்ற, Kaatukindra - நினைப்பூட்டா நின்றன (அன்றியும்)
கார் கொள், Kaar kol - சினை கொண்ட
படாக்கள், Padaakal - படா என்னுங் கொடிகள்
நின்று, Nindru - பூத்து நின்று
கழறி சிரிக்க, Kazhari Sirikka - ‘எமக்கு நீ தப்பிப் பிழைக்க முடியாது‘ என்று சொல்லிக் கொண்டே சிரிப்பது போல விகஸிக்க
தரியேன், Thariyen - (அது கண்டு) தரிக்க மாட்டுகின்றிலேன்
தோழீ, Thozhi - எனது உயிர்த் தோழியே!
அவன் தார், Avan thaar - (நாம் ஆசைப்பட்ட) அவனுடைய தோள் மாலையானது
செய்த, Seidha - உண்டு பண்ணின
பூசலை, Poosalai - பரிபவத்தை
ஆர்க்கு இடுகோ, Aarku idugo - யாரிடத்து முறையிட்டுக் கொள்வது?
589நாச்சியார் திருமொழி || 9 - சிந்துரச் செம்பொடி (திருமாலிருஞ்சோலை அழகரை வழிபடுதல்) 3
கருவிளை யொண் மலர்காள் காயா மலர்காள் திருமால்
உரு வொளி காட்டுகின்றீர் யெனக்குய் வழக்கொன்று உரையீர்
திரு விளையாடு திண் தோள் திருமால் இரும் சோலை நம்பி
வரி வளையில் புகுந்து வந்தி பற்றும் வழக்குளதே
ஒண், On - அழகிய
கருவிளை மலர்காள், Karuvilai Malarkaal - காக்கணம் பூக்களே!
காயா மலர்காள், Kaayaa Malarkaal - காயாம் பூக்களே! (நீங்கள்)
திருமால், Thirumaal - எம்பெருமானுடைய
உரு ஒளி, Uru Oli - திருமேனியின் நிறத்தை
காட்டுகின்றீர், Kaatukindreer - நீனைப்பூட்டாநின்றீர்கள்
எனக்கு, Enakku - (அதனை நீனைத்து வருந்துகின்ற) எனக்கு
உய் வழக்கு ஒன்று, Uy Vazhakku ondru - பிழைக்கும் வகை யொன்றை
உரையீர், Uraiyeer - சொல்லுங்கள்
திரு விளையாடு, Thiru Vilaiyaadu - பெரிய பிராட்டியார் விளையாடுமிடமான
திண் தோள், Thin Thol - திண்ணிய திருத் தோளை யுடையரான
திருமாலிருஞ் சோலை நம்பி, Thirumaalirunjolai Nambi - அழகர்
இல் புகுந்து, il pugundhu - (எனது) வீட்டினுள் புகுந்து
வரி வளை, Vari Valai - (எனது) அழகிய வளைகளை
வந்தி பற்றும் வழக்கு உளதே, Vandhi patrum vazhaku uladhe - பலாத்காரமாகக் கொள்ளைகொண்டு போவதும் நியாயமோ?
590நாச்சியார் திருமொழி || 9 - சிந்துரச் செம்பொடி (திருமாலிருஞ்சோலை அழகரை வழிபடுதல்) 4
பைம் பொழில் வாழ் குயில்காள் மயில்காள் ஒண் கரு விளைகாள்
வம்பக் களங்கனிகாள் வண்ணப்பூவை நறும் மலர்காள்
ஐம் பெரும் பாதகர்காள் அணி மால் இரும் சோலை நின்ற
எம்பெருமான் உடைய நிறம் உங்களுக்கு என் செய்வதே
பைம் பொழில் வாழ், Paim Pozhil Vaazh - பரந்த சோலையில் வாழ்கின்ற
குயில்காள், Kuyilkaal - குயில்களே!
மயில்காள், Mayilkaal - மயில்களே!
ஒண் கருவிளைகாள், On Karuvilaikaal - அழகிய காக்கணம் பூக்களே!
வம்பக் களங்கனிகாள், Vamba Kalanganikaal - புதிய களாப்பழங்களே!
வண்ணம் நறு பூவை மலர்காள், Vannam Naru Poovai Malarkaal - பரிமளத்தையுமுடைய காயாம் பூக்களே!
ஐபெரு பாதகர்காள், Aiperu Paadhakarkaal - (ஆகிய) பஞ்ச மஹா பாதகர்களே!
உங்களுக்கு, Ungaluku - உங்களுக்கு
அணி மாலிருஞ்சோலை நின்ற எம்பெருமானுடைய நிறம் என் செய்வது, Ani Maalirunjolai Nindra Emperumaanudaiya Niram En Seivadhu - திருமாலிருஞ் சோலையிலுள்ள அழகருடைய திருமேனி நிறமானது எதுக்காக? (அந்த நிறத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டது என்னை ஹிம்ஸிப்பதற்காகவே என்கை)
591நாச்சியார் திருமொழி || 9 - சிந்துரச் செம்பொடி (திருமாலிருஞ்சோலை அழகரை வழிபடுதல்) 5
துங்க மலர்ப் பொழில் சூழ் திருமால் இருஞ்சோலை நின்ற
செங்கட் கருமுகிலின் திருவுருப் போல் மலர் மேல்
தொங்கிய வண்டினங்காள் தொகு பூஞ்சுனைகாள் சுனையில்
தங்கு செந்தாமரைகாள் எனக்கோர் சரண் சாற்றுமினே
துங்கம் மலர் பொழில் சூழ், Thungam Malar pozhil soozh - ஓங்கின மலர்களை யுடைய சோலைகள் சூழ்ந்த
திருமாலிருஞ் சோலை, Thirumaalirunjolai - திருமாலிருஞ்சோலையில்
நின்ற, Nindra - நின்ற திருக் கோலமாய் எழுந்தருளியிருக்கிற
செம் கண் கருமுகிலின், Sem Kan Karumukilin - செந்தாமரை போன்ற திருக் கண்களையும் காள மேகம் போன்ற வடிவையுமுடைய எம்பெருமானுடைய
திருவுருப் போல், Thiruvuru pol - அழகிய வடிவம் போலே
மலர் மேல் தொங்கிய வண்டு இனங்காள், Malar Mel Thongiya Vandu Inankaal - மலர் மேல் தங்கி யிருக்கிற வண்டுக் கூட்டங்களே!
தொகு, Thogu - நெருங்கி யிருக்கின்ற
பூஞ்சுனைகாள், Poonjunaikaal - அழகிய சுனைகளே!
சுனையில் தங்கு, Sunaiyil Thangu - அச் சுனைகளில் உள்ள
செம் தாமரைகாள், Sem Thaamaraikaal - செந்தாமரை மலர்களே!
எனக்கு, Enakku - (உங்கள் யம தூதர்களாக நினைக்கிற) எனக்கு
ஓர் சரண் சாற்றுமின், Or Charan Satrumin - ஒரு பற்றுக்கோடு சொல்லுங்கள்
592நாச்சியார் திருமொழி || 9 - சிந்துரச் செம்பொடி (திருமாலிருஞ்சோலை அழகரை வழிபடுதல்) 6
நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த அக்கார வடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளும் கொலோ
நறு பொழில் நாறும், Naru Pozhil Naarum - பரிமளம் மிகுந்த பொழில்கள் மணங்கமழா நிற்கப் பெற்ற
மாலிருஞ் சோலை, Maalirunjolai - திருமாலிருஞ்சோலையில் (எழுந்தருளி யிருக்கிற)
நம்பிக்கு, Nambiku - எம்பெருமானுக்கு
நான், Naan - அடியேன்
நூறு தடாவில், Nooru Tadaavil - நூறு தடாக்களில் நிறைந்த
வெண்ணெய், Vennnei - வெண்ணெயை
வாய் நேர்ந்து, Vaai Nerndhu - வாயாலே சொல்லி
பராவி வைத்தேன், Paraavi Vaithen - ஸமர்ப்பித்தேன் (இன்னமும்)
நூறு தடா நிறைந்த, Nooru Thadaa Niraindha - நூறு தடாக்களில் நிறைந்த
அக்கார அடிசில், Akkara adisil - அக்கார வடிசிலும்
சொன்னேன், Sonnen - வாசிகமாக ஸமர்ப்பித்தேன்
இவை, Ivai - இந்த வெண்ணெயையும் அக்கார வடிசிலையும்
ஏறு திரு உடையான், Eru Thiru Udaiyaan - (நாட்செல்ல நாட்செல்ல) ஏறி வருகிற ஸம்பத்தை யுடையரான அழகர்
இன்று வந்து, Indru Vandhu - இன்று எழுந்தருளி
கொள்ளும் கொல், Kollum Kol - திருவுள்ளம் பற்றுவரோ?
593நாச்சியார் திருமொழி || 9 - சிந்துரச் செம்பொடி (திருமாலிருஞ்சோலை அழகரை வழிபடுதல்) 7
இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் நான்
ஓன்று நூராயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளும் செய்வன்
தென்றல் மணம் கமழும் திரு மால் இருஞ்சோலை தன்னுள்
நின்ற பிரான் அடியேன் மனத்தே வந்து நேர் படிலே
தென்றல், Thendral - தென்றல் காற்றானது
மணம் கமழும், Manam Kamazhum - மணத்தைக் கொண்டு வீசுகின்ற
திரு மாலிருஞ் சோலை தன்னுள், Thiru Maalirunjolai thannul - திருமாலிருஞ்சோலை மலையிலே
நின்ற, Nindra - எழுந்தருளி யிருக்கிற
பிரான், Piran - ஸ்வாமியான அழகர்
இன்று, Indru - இன்றைக்கு
வந்து, Vandhu - இவ்விட மெழுந்தருளி
இத்தனையும், Ithanaiyum - நூறு தடா நிறைந்த வெண்ணெயையும் அக்கார வடிசிலையும்
அமுது செய் திட பெறில், Amuthu seithida peril - அமுது செய்தருளப் பெற்றால் (அவ்வளவுமன்றி)
அடியேன் மனத்தே வந்து நேர் படில், Adiyen manathe vandhu ner padil - அடியேனுடைய ஹ்ருதயத்திலே நித்ய வாஸம் பண்ணப் பெற்றால்
நான், Naan - அடியேன்
ஒன்று, Ondru - ஒரு தடாவுக்கு
நூறு ஆயிரம் ஆ கொடுத்து, Nooru Aayiram Aa Koduthu - நூறாயிரம் தடாக்களாக ஸமர்ப்பித்து
பின்னும், Pinnum - அதற்கு மேலும்
ஆளும் செய்வன், Aalum Seivan - ஸகல வித கைங்கரியங்களும் பண்ணுவேன்
594நாச்சியார் திருமொழி || 9 - சிந்துரச் செம்பொடி (திருமாலிருஞ்சோலை அழகரை வழிபடுதல்) 8
காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள்
மாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ
சோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான்
ஆலினிலைப் பெருமான் அவன் வார்த்தை வுரைக்கின்றவே
கரிய குருவி கணங்கள், Kariya kuruvi kanangal - கரிய குருவிக் கூட்டங்கள்
காலை, Kaalai - விடியற்காலத்திலே
எழுந்திருந்து, Ezhundhirundhu - எழுந்து
சோலைமலை பெருமான், Solaimalai Peruman - திருமாலிருஞ்சோலை மலைக்குத் தலைவனாயும்
துவராபதி எம்பெருமான், Dhuvarapathi Emperuman - துவராபுரிக்குத் தலைவனாயும்
ஆலின் இலை பெருமான் அவன், Aalin ilai Peruman avan - ஆலிலையில் வளர்ந்த பெருமானுயுமுள்ள அந்த ஸர்வேச்வரனுடைய
வார்த்தை, vaarthai - வார்த்தைகளை
உரைக்கின்ற, uraikindra - சொல்லா நின்றன (இப்படி)
மாலின், Maalin - எம்பெருமானுடைய
வரவு, Varavu - வருகையை
சொல்லி, solli - சொல்லிக் கொண்டு
மருள் பாடுதல், Marul paaduthal - மருளென்கிற பண்ணைப் பாடுவதானது
மெய்ம்மை கொல், Meimmai kol - மெய்யாகத் தலைக் கட்டுமா
595நாச்சியார் திருமொழி || 9 - சிந்துரச் செம்பொடி (திருமாலிருஞ்சோலை அழகரை வழிபடுதல்) 9
கோங்கலரும் பொழில் மாலிரும் சோலையில் கொன்றைகள் மேல்
தூங்கு பொன் மலைகளோடு உடனே நின்று தூங்குகின்றேன்
பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலியும்
சாரங்க வில் நாண் ஒலியும் தலைப் பெய்வது எஞ்ஞான்று கொலோ
கோங்கு அலரும் பொழில், Kongu Alarum Pozhil - கோங்கு மரங்கள் மலரப் பெற்ற சோலைகளை யுடைய
மாலிருஞ் சோலையில், Maalirunjolaiyil - திருமாலிருஞ் சோலை மலையில்
கொன்றைகள் மேல், Kondraigal Mel - கொன்றை மரங்களின் மேல்
தூங்கு, Thoongu - தொங்குகின்ற
பொன் மாலைகளோடு உடனாய் நின்று, Pon Maalaigalodu Udanay Nindru - பொன் நிறமான பூமாலை களோடு ஸமமாக
தூங்குகின்றேன், Thoongukinren - வாளா கிடக்கின்றேன்
பூ கொள், Poo kol - அழகு பொருந்திய
திரு முகத்து, Thiru Mugathu - திருப் பவளத்திலே
மடுத்து, Maduthu - வைத்து
ஊதிய, Oodhiya - ஊதப் படுகிற
சங்கு, Sangu - ஸ்ரீபாஞ்சஜந்யத்தினுடைய
ஒலியும், Oliyum - த்வநியும்
சார்ங்கம் வில்நாண் ஒலியும், Saarngam Vilnaan Oliyum - சார்ங்கமென்னும் வில்லின் நாணோசையும்
தலைப் பெய்வது, Thalai Peivadhu - ஸமீபிப்பது
எஞ்ஞான்று கொல், Yenjaandru kol - என்றைக்கோ?
596நாச்சியார் திருமொழி || 9 - சிந்துரச் செம்பொடி (திருமாலிருஞ்சோலை அழகரை வழிபடுதல்) 10
சந்தொடு கார் அகிலும் சுமந்து தடங்கள் பொருது
வந்திழியும் சிலம்பாறுடை மாலிருஞ்சோலை நின்ற
சுந்தரனை சுரும்பார் குழல் கோதை தொகுத்து உரைத்த
செந்தமிழ் பத்தும் வல்லார் திருமாலடி சேர்வர்களே
சந்தொடு, Santhodu - சந்தனக் கட்டைகளையம்
கார் அகிலும், Kaar Agilum - காரகிற் கட்டைகளையும்
சுமந்து, Sumandhu - அடித்துக் கொண்டு
தடங்கள் பொருது வந்து, Thadangal Poruthu Vandhu - பல பல குளங்களையும் அழித்துக் கொண்டு ஓடி வந்து
இழியும், Izhiyum - பெருகுகின்ற
சிலம்பாறு உடை, Silambaaru udai - நூபுர கங்கையையுடைத்தான
மாலிருஞ் சோலை நின்ற சுந்தரனை, Maalirunjolai Nindra Sundharanai - திருமாலிருஞ்சோலை மலையில் எழுந்தருளி யிருக்கிற அழகரைக் குறித்து
சுரும்பு ஆர் குழல் கோதை, Surumbu Aar Kuzhal Kodhai - வண்டுகள் படித்த கூந்தல் முடியை யுடைய ஆண்டாள்
தொகுத்து உரைத்த, Thoguthu uraitha - அழகாக அருளிச் செய்த
செம் தமிழ் பத்தும் வல்லார், Sem Thamizh Pathum Vallar - செந்தமிழிலாகிய இப்பத்துப் பாசுரங்களையும் ஓத வல்லவர்கள்
திருமால் அடி, Thirumaal Adi - ஸ்ரீமந்நாராயணனுடைய திருவடிகளை
சேர்வர்கள், Servarkal - அடையப் பெறுவர்கள்