Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: தாமுகக்கும் (10 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
607நாச்சியார் திருமொழி || 11 - தாமுகக்கும் (தலைவி திருவரங்கன் செய்கைக்கு மனம்பொறாது தாய்மார் முதலியோரை நோக்கி வருந்திக் கூறுதல்) 1
தாமுகக்கும் தங்கையில் சங்கமே போலாவோ
யாமுகக்கும் என் கையில் சங்கமும் ஏந்திழையீர்
தீ முகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர்
ஆ முகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே
ஏந்து இழையீர்!, Endhu izhaeeyir - ஆபரணங்களை யணிந்துள்ள மாதர்களே!
யாம் உகக்கும் என் கையில் சங்கமும், Yaam ugakkum en kaiyil sangamum - நான் உகந்து தரித்துக் கொண்டிருக்கிற என் கையில் வளைகள்
தாம் உகக்கும் தம் கையில் சங்கம் போலாவோ, Thaam ugakkum tham kaiyil sangam polaavo - தான் உகந்து தரித்துக் கொண்டிருக்கிற தன்கையில் சங்கோடு ஒவ்வாதோ?
தீ முகத்து, Thee mukathu - க்ரூரமான முகங்களை யுடைய
நாக அணை மேல், Naaga anai mel - திருவனந்தாழ்வானாகிற படுகையின் மேலே
சேரும், Serum - பள்ளி கொண்டருளா நின்ற
திரு அரங்கர், Thiru arangar - ஸ்ரீரங்கநாதன்
முகத்தை, Mukathai - (என்னுடைய) முகத்தை
நோக்கார், Nokaar - நோக்குகின்றாரில்லை
ஆ!, Aa! - ஐயோ!
அம்மனே! அம்மனே!, Ammane! Ammane! - அந்தோ! அந்தோ!
608நாச்சியார் திருமொழி || 11 - தாமுகக்கும் (தலைவி திருவரங்கன் செய்கைக்கு மனம்பொறாது தாய்மார் முதலியோரை நோக்கி வருந்திக் கூறுதல்) 2
எழில் உடைய அம்மனை மீர் என்னரங்கத்து இன்னமுதர்
குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர் கொப்பூழில்
எழு கமலப் பூ அழகர் எம்மானார் என்னுடைய
கழல் வளையைத் தாமும் கழல் வளையே ஆக்கினரே
எழில் உடைய, Ezhil udaiya - அழகை யுடைய
அம்மனைமீர், Ammanaimir - தாய்மார்களே!
அரங்கத்து, Arangathu - திருவரங்கத்திலெழுந்தருளி யிருக்கிற
என் இன் அமுதர், En in Amudhar - என்னுடைய இனிய அமுதம் போன்றவராய்
குழல் அழகர், Kuzhal azhagar - அழகிய திருக் குழற் கற்றையை யுடையவராய்
வாய் அழகர், Vaay Azhagar - அழகிய திரு வதரத்தை யுடையவராய்
கண் அழகர், Kan Azhagar - அழகிய திருக் கண்களை யுடையவராய்
கொப்பூழில் எழு கமலம் பூ அழகர், Koppuzhil ezhu kamalam poo Azhagar - திருநாபியி லுண்டான தாமரைப் பூவாலே அழகு பெற்றவராய்
எம்மானார், Emmaanaar - எனக்கு ஸ்வாமியான அழகிய மணவாளர்
என்னுடைய, Ennudaiya - என்னுடைய
கழல் வளையை, kazhal valaiyai - “கழல்வளை“ என்று இடு குறிப் பெயர் பெற்ற கை வளையை
தாமும், thaamum - அவர் தாம்
கழல் வளையை ஆக்கினர், kazhal valaiyai aakinar - “கழன்றொழிகிறவளை“ என்று காரணப் பெயர் பெற்ற வளையாக ஆக்கினார்
609நாச்சியார் திருமொழி || 11 - தாமுகக்கும் (தலைவி திருவரங்கன் செய்கைக்கு மனம்பொறாது தாய்மார் முதலியோரை நோக்கி வருந்திக் கூறுதல்) 3
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்
அங்காதும் சோராமே ஆள்கின்ற வெம்பெருமான்
செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார்
எங்கோல் வளையால் இடர் தீர்வர் ஆகாதே
பொங்கு, Pongu - அலை யெறியா நின்றுள்ள
ஓதம், Odham - கடலாலே
சூழ்ந்த, Soozhndha - சூழப்பட்ட
புவனியும், Buvaniyum - இப் பூ மண்டலமும்
விண் உலகும், Vin ulagum - பரம பதமும்
ஆதும் சோராமே, Aathum sorame - சிறிதும் குறைவு படாதபடி
ஆள்கின்ற, Aalkinra - நிர்வஹித்துக் கொண்டு போருகிற
எம் பெருமான், Em perumaan - ஸ்வாமியாய்
செங்கோல் உடைய, Sengol udaiya - செங்கோல் செலுத்த வல்லவராய்
திரு அரங்கம் செல்வனார், Thiru arangam selvanaar - கோயிலிலே பள்ளி கொண்டிருப்பவரான மஹாநுபாவர்
என், En - என்னுடைய
கோல் வளையால், Kol valaiyaal - கை வளையாலே
இடர் தீர்வர் ஆகாதே, Idar theervar aagaadhe - தம் குறைகளெல்லாம் தீர்ந்து நிறைவு பெறுவரன்றோ (அப்படியே என் வளையைக் கொள்ளை கொண்டு அவர் நிறைவு பெற்று போகட்டும் என்றபடி)
610நாச்சியார் திருமொழி || 11 - தாமுகக்கும் (தலைவி திருவரங்கன் செய்கைக்கு மனம்பொறாது தாய்மார் முதலியோரை நோக்கி வருந்திக் கூறுதல்) 4
மச்சணி மாட மதிள் அரங்கர் வாமனனார்
பச்சைப் பசும் தேவர் தாம் பண்டு நீர் ஏற்ற
பிச்சைக் குறையாகி என்னுடைய பெய் வளை மேல்
இச்சை யுடையரேல் இத்தெருவே போதாரே
மச்சு, Machu - மேல் தளங்களாலே
அணி, Ani - அலங்கரிக்கப் பட்ட
மாடம், Maadam - மாடங்களையும்
மதிள், Madhil - மதிள்களையுமுடைய
அரங்கர், Arangar - திருவரங்கத்திலே எழுந்தருளி யிருப்பவராய்
வாமனனார், Vaamananar - (முன்பு) வாமநாவதாரம் செய்தருளினவராய்
பச்சைப் பசுந்தேவர், Pachai Pachundhevar - பசுமை தங்கிய தேவரான பெரிய பெருமான்
தாம், Thaam - தாம்
பண்டு, Pandu - முன்பு (மஹாபலி யிடத்தில்)
நீர் ஏற்ற பிச்சை குறை ஆகி, Neer yetra Pichchai Kurai aagi - உதக தாரா பூர்வகமாகப் பெற்ற பிச்சையிலே குறை யுண்டாகி (அக்குறையைத் தீர்ப்பதற்காக)
என்னுடைய, Ennudaiya - என்னுடைய
பெய் வளை மேல், Pei Valai Mel - (கையில்) இடப்பட்டுள்ள வளை மேல்
இச்சை உடையர் ஏல், Ichai Udaiyar el - விருப்பமுடையவராகில்
இத் தெருவே, Ith Theruve - இத் தெரு வழியாக
போதாரே, Podhaare - எழுந்தருள மாட்டாரோ?
611நாச்சியார் திருமொழி || 11 - தாமுகக்கும் (தலைவி திருவரங்கன் செய்கைக்கு மனம்பொறாது தாய்மார் முதலியோரை நோக்கி வருந்திக் கூறுதல்) 5
பொல்லாக் குறள் உருவாய் பொற் கையால்நீர் ஏற்று
எல்லா வுலகும் அளந்து கொண்ட வெம்பெருமான்
நல்லார்கள் வாழும் நளிரரங்க நாகணையான்
இல்லாதோம் கைப்பொருளும் எய்துவான் ஒத்து உளனே
பொல்லா குறள் உரு ஆய், Polla Kural Uru Aay - விலக்ஷண வாமந ருபியாய்
பொன் கையில், Pon Kaiyil - அழகிய கையாலே
நீர் ஏற்று, Neer Yetru - பிக்ஷை பெற்று
எல்லா உலகும், Ella Ulakum - ஸகல லோகங்களையும்
அளந்து கொண்ட, Alanthu Konda - தன் வசப் படுத்திக் கொண்ட
எம் பெருமான், Em Perumaan - ஸ்வாமியாய்
நல்லார்கள் வாழும், Nallaarkal Vaazhum - நன்மை மிக்க மஹான்கள் வாழ்கிற
நளிர் அரங்கம், Nalir Arangam - ஸர்வ தாப ஹரமான திருவரங்கத்தில்
நாக அணையான், Naaga Anaiyaan - திருவனந்தாழ்வானைப் படுக்கையாக வுடையரான பெரிய பெருமாள்
இல்லாதோம், Illaadhom - அகிஞ்சநையான என்னுடைய
கைப் பொருளும், Kai Porulum - கைம் முதலான வஸ்துவையும் (சரீரத்தையும்)
எய்துவான் ஒத்து உளன், Eidhuvaan Othu Ulan - கொள்ளை கொள்வான் போலிரா நின்றான்
612நாச்சியார் திருமொழி || 11 - தாமுகக்கும் (தலைவி திருவரங்கன் செய்கைக்கு மனம்பொறாது தாய்மார் முதலியோரை நோக்கி வருந்திக் கூறுதல்) 6
கைப்பொருள்கள் முன்னமே கைக் கொண்டார் காவிரிநீர்
செய் புரள வோடும் திருவரங்கச் செல்வனார்
எப்பொருட்கும் நின்றார்க்கும் எய்தாது நான்மறையின்
சொற்பொருளாய் நின்றார் என் மெய்ப் பொருளும் கொண்டாரே
காவிரி நீர், Kaveri Neer - காவேரியின் தீர்த்தமானது
செய் புரள ஓடும், Sey Purala oodum - பயிர் நிலங்களிலெலாம் ஓடிப் புரளும் படியான நீர் வளம் மிகுந்த
திரு அரங்கம், Thiru Arangam - திருவரங்கத்தில் எழுந்தருளி யிருக்கிற
செல்வனார், Selvanaar - ஸ்ரீமானாயும்
எப் பொருட்கும் நின்று, Epporutkum Nindru - எல்லாப் பொருள்களிலும் அந்தராத்மாவாய் நின்று
ஆர்க்கும் எய்தாது, Aarkum Eydhaadhu - ஒருவர்க்கும் கைப் படாமல்
நால் மறையின் சொல் பொருள் ஆய் நின்றார், Naal Maraiyin Sol Porul Aay Nindraar - நான்கு வேதங்களிலுள்ள சொற்களுக்கும் பொருளாய் நிற்பவருமான பெரிய பெருமாள்
முன்னமே, Munname - ஏற்கனவே
கைப் பொருள்கள், Kai Porulkal - கையிலுள்ள பொருள்களை யெல்லாம்
கைக் கொண்டார், Kaikondar - கொள்ளை கொண்டவராயிருந்து வைத்து (இப்போது)
என் மெய் பொருளும், En Mei Porulum - எனது சரீரமாகிற வஸ்துவையும்
கொண்டார், Kondaar - கொள்ளை கொண்டார்
613நாச்சியார் திருமொழி || 11 - தாமுகக்கும் (தலைவி திருவரங்கன் செய்கைக்கு மனம்பொறாது தாய்மார் முதலியோரை நோக்கி வருந்திக் கூறுதல்) 7
உண்ணாது உறங்காது ஒலி கடலை யூடறுத்து
பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்றபேதெல்லாம்
திண்ணார் மதிள் சூழ் திருவரங்கச் செல்வனார்
எண்ணாதே நம்முடைய நன்மைகளே எண்ணுவரே
திண் ஆர் மதிள் சூழ, Thin Ar Mathil Soozha - (மஹா ப்ரளயத்துக்கும் அழியாதபடி) திண்மை பொருந்திய மதிள்களாலே சூழப்பட்ட
திரு அரங்கம், Thiru Arangam - கோயிலிலே எழுந்தருளியிருக்கிற
செல்வனார், Selvanaar - ச்ரிய யதியான பெருமாள் (ஸ்ரீராமனாய்த் திருவவதரித்த போது)
பெண் ஆக்கை, Pen Aakkai - சீதையென்சிற வொரு பெண்ணின் சரீரத்தில் ஆசைக்குக் கட்டுப்பட்டு
உண்ணாது, Unnaadhu - உண்ணாமலும்
உறங்காது, Urankaadhu - உறங்காமலும் (வருந்தி)
ஒலி கடலை, Oli Kadalai - (திரைக் கிளப்பத்தாலே) கோஷிக்கின்ற கடலை
ஊடு அறுத்து, Oodu Aruthu - இடையறும்படி பண்ணி (அணை கட்டி)
தாம் உற்ற, Thaam Utra - (இப்படி) தாம் அடைந்த
பேது எல்லாம், Pedhu Ellaam - பைத்தியத்தை யெல்லாம்
எண்ணாது, Ennaadhu - மறந்து போய் (இப்போது)
தம்முடைய, Thammudaiya - தம்முடைய
நன்மைகளே, Nanmaikale - பெருமைகளையே
எண்ணுவர்,Ennuvar - எண்ணா நின்றார்
614நாச்சியார் திருமொழி || 11 - தாமுகக்கும் (தலைவி திருவரங்கன் செய்கைக்கு மனம்பொறாது தாய்மார் முதலியோரை நோக்கி வருந்திக் கூறுதல்) 8
பாசி தூரத்துக் கிடந்த பார் மகட்குப் பண்டு ஒரு நாள்
மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராதே
பண்டு ஒரு நாள், Pandu Oru Naal - முன்னொரு காலத்தில்
பாசி தூர்த்து கிடந்த, Paasi Thoorthu Kidandha - பாசி படர்ந்து கிடந்த
பார் மகட்டு, Paar Magattu - ஸ்ரீ பூமிப் பிராட்டிக்காக
மாசு உடம்பில் நீர் வாரா மானம் இலா பன்றி ஆம், Maasu Udambil Neer Vaaraa Maanam Ila Panri Aam - அழுக்கேறின சரீரத்தில் ஜலம் ஒழுகா நிற்கும் ஹேயமான தொரு வராஹ வடிவு கொண்ட
தேசு உடைய தேவர், Dhesu Udaya Dhevar - தேஜஸ்ஸை யுடைய கடவுளாகிய
திரு அரங்கம் செல்வனார், Thiru Arangam Selvanaar - ஸ்ரீரங்கநாதன்
பேசி இருப்பனகள், Pesi Irupanakal - (முன்பு) சொல்லி யிருக்கும் பேச்சுக்களானவை
பேர்க்கவும் பேரா, Perkkavum Pera - (நெஞ்சில்நின்றும்) பேர்க்கப் பார்த்தாலும் பேர மாட்டாதவை
615நாச்சியார் திருமொழி || 11 - தாமுகக்கும் (தலைவி திருவரங்கன் செய்கைக்கு மனம்பொறாது தாய்மார் முதலியோரை நோக்கி வருந்திக் கூறுதல்) 9
கண்ணாலம் கோடித்து கன்னி தன்னைக் கைபிடிப்பான்
திண்ணார்ந்து இருந்த சிசுபாலன் தேசு அழிந்து
அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளைக் கை பிடித்து
பெண்ணாளன் பேணுமூர் பேரும் அரங்கமே
கண்ணாலம் கோடித்து, Kannaalam Kodithu - கல்யாண ஸந்நாஹங்களை யெல்லாம் பரிஷ்காரமாகச் செய்து முடித்து
கன்னி தன்னை, Kanni Thannai - கல்யாணப் பெண்ணான ருக்மிணிப் பிராட்டியை
கை பிடிப்பான், Kai Pidipaan - பாணி க்ரஹணம் செய்து கொள்ளப் போவதாக
திண் ஆர்ந்து இருந்த, Thin Aarndhu Irundha - ஸம்சயமில்லாமல் நிச்சயமாக நினைத்திருந்த
சிசுபாலன், Sisubalan - சிசுபாலனானவன்
தேசு அழிந்து, Dhesu Azhinthu - அவமானப்பட்டு
அண்ணாந்திருக்க ஆங்கு, Annandhirukka aangu - ஆகாசத்தை நோக்கிக் கிடக்கும் படியாக நேர்ந்த அச் சமயத்திலே
அவளை, Avalai - அந்த ருக்மிணிப் பிராட்டியை
கை பிடித்த, Kai Piditha - பாணி க்ரஹணம் செய்தருளினவனாய்
பெண்ணாளன், Pennaalan - பெண்பிறந்தார்க் கெல்லாம் துணைவன் என்று ப்ரஹித்தனான பெருமான்
பேணும், Penum - விரும்பி எழுந்தருளி யிருக்கிற
ஊர், Oor - திவ்ய தேசத்தினுடைய
பேரும், Perum - திரு நாமமும்
அரங்கம், Arangam - திருவரங்கமாம்
616நாச்சியார் திருமொழி || 11 - தாமுகக்கும் (தலைவி திருவரங்கன் செய்கைக்கு மனம்பொறாது தாய்மார் முதலியோரை நோக்கி வருந்திக் கூறுதல்) 10
செம்மை யுடைய திருவரங்கர் தாம் பணித்த
மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டிருப்பார்
தம்மை யுகப்பாரைத் தாம் உகப்பர் என்னும் சொல்
தம்மிடையே பொய்யானால் சாதிப்பார் ஆர் இனியே
செம்மை உடைய, Semmai Udaya - (மன மொழி மெய்கள் மூன்றும் ஒருபடிப் பட்டிருக்கை யாகிற) செம்மைக் குணமுடைய
திரு அரங்கர், Thiru Arangar - ஸ்ரீரங்கநாதர்
தாம் பணித்த, Thaam Panitha - (முன்பு) தம் வாயாலே அருளிச் செய்த
மெய்ம்மை, meimai - ஸத்யமானதும்
பெரு, peru - பெருமை பொருந்தியதுமான
வார்த்தை, vaarthai - சரம ச்லோக ரூபமான வார்த்தையை
விட்டு சித்தர், Vittu Chithar - (என் திருத் தகப்பனாரான) பெரியாழ்வார்
கேட்டு இருப்பர், Ketu Irupar - (குரு முகமாகக்) கேட்டுற (அதில் சொல்லி யிருக்கிறபடி) நிர்ப் பரராயிப்பர்
தம்மை உகப்பாரை தாம் உகப்பர் என்னும் சொல், Thammai Ukapaarai Thaam Ukapar Ennum Sol - “தம்மை விரும்பினவர்களைத் தாமும் விரும்புவர்“ என்ற பழமொழியனது
தம் இடையே, tham Idaiye - தம்மிடத்திலேயே
பொய் ஆனால், poi aanal - பொய்யாய்ப் போய் விட்டால்
இனி, ini - அதற்கு மேல்
சாதிப்பார் ஆர், saadhipar aar - (அவர் தம்தை) நியமிப்பார் ஆர்? (யாருமில்லை)