Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: நண்ணாதார் முறுவலிப்ப (11 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3013திருவாய்மொழி || (4-9-நண்ணாதார் முறுவலிப்ப) (உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) (ஆழ்வாருடைய ஆர்த்திதீரும்படி பரமபதத்திலிருப்பைக காட்டிக் கொடுக்க, அதுகண்டு தாம் களித்தமை கூறுகின்றது இப்பாசுரம்.) 9
கூட்டுதி நின் குரை கழல்கள்; இமையோரும் தொழா வகை செய்து,
ஆட்டுதி நீ; அரவணையாய்! அடியேனும் அஃது அறிவன்;
வேட்கை எலாம் விடுத்து எனை உன் திருவடியே சுமந்து உழலக்
கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே.–4-9-9
அரவு அணையாய்,Aravu anaiyaay - சேஷசாயியான பெருமானே!,
நீ,Nee - நீ
நின் குரை கழல்கள்,Nin kurai kazhalkal - (அபிமதரான சிலரை) ஆபரணத்வநி பொருந்திய உனது திருவடிகளிலே
கூட்டுதி,Kootuthi - சேர்த்துக் கொள்ளுகிறாய்;
இமையோரும்,Imayorum - (திருவுள்ள மில்லையாகில்) (ஞானசக்திகள் நிறைந்திருக்கப் பெற்ற) தேவர்களும்
தொழா வகை செய்து,Thoza vakai seydhu - கண்டு அநுபவியாதபடி பண்ணி
ஆட்டுதி,Aattuthi - அலைக்கின்றாய்;
அஃது,Ahdhu - இப்படி எளியனாயும் அரியனாயுமிருக்குந் தன்மையை
அடியேனும்,Adiyenum - நானும்
அறிவன்,Arivan - அறிந்தேயிருக்கின்றேன்;
என்னை,Ennai - எனக்குண்டான
வேட்கை எல்லாம் விடுத்து,Vedkai ellaam viduthu - விஷயாந்தர விருப்பங்களெல்லாவற்றையும் கழித்து
உன் திரு அடியே,Un thiru ade - உனது திருவடிகளையே
சுமந்து உழல,Sumanthu uzhal - நான் தலையால் சுமந்து திரியும்படி
கூட்ட அரிய திரு அடிக்கண்,Kootu ariya thiru adikkan - துர்லபமான திருவடிகளிலே
கூட்டினை,Koottinai - சேர்த்துக் கொண்டாய்;
நான் கண்டேன்,Naan kandeen - இதை ப்ரத்யக்ஷமாக அநுபவித்தேன்
3014திருவாய்மொழி || (4-9-நண்ணாதார் முறுவலிப்ப) (உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) (கீழ்ப் பாசுரத்தில் ப்ரஸங்கித்த பேற்றை உகப்பின் மிகுதியாலே இன்னமும் பன்னி யுரைக்கின்றாரிதில்.) 10
கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி
கண்ட இன்பம், தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்,
ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப,
கண்ட சதிர் கண்டொழிந்தேன்; அடைந்தேன் உன் திருவடியே.–4-9-10
ஒண் தொடியாள்,On thodiyal - அழகிய கைகளையுடையளாகிய
திரு மகளும்,Thiru magalum - பெரிய பிராட்டியாரும்
நீயுமே,Neeyume - அவளுடைய நாயகனான நீயுமே
நிலா நிற்ப கண்ட சதிர்,Nila nirpa kanda sadhir - களித்து வாழ்கிற அழகிய இருப்பை
கண்டு,Kandu - இப்போது காணப்பெற்று
கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி கண்ட இன்பம்,Kandu kettu urru mondu undu uzhalum aingaruvi kanda inbam - காண்பது கேட்பது தொடுவது மோருவது உட்கொள்ளுவதாகிற வேலைகளைச் செய்துகொண்டு அலைகின்ற பஞ்சேந்திரியங்களுக்கும் வாய்த்த விஷய சுகங்களையும்
தெரிவு அரிய அளவு இல்லா சிறு இன்பம்,Therivu ariya alavu illa siru inbam - கைவல்ய ஸூகத்தையும்
ஒழிந்தேன்,Ozhindhen - தவிர்க்கப் பெற்றேன்;
உன் திரு அடியே அடைந்தேன்,Un thiru ade adaindhen - உனது திருவடிகளை அடையவும் பெற்றேன்.
3015திருவாய்மொழி || (4-9-நண்ணாதார் முறுவலிப்ப) (உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) (இத்திருவாய்மொழியானது, தன்னைக் தற்பவர்களை அவன் திருவடிகளோடே சேர்விக்கும் என்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது.) 11
திருவடியை நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரைத்
திருவடி சேர்வது கருதிச் செழுங் குருகூர்ச் சடகோபன்
திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமினே.–4-9-11
திரு அடியை,Thiru adiyai - ஸர்வாமியாய்
காரணனை,Kaarananai - நாராயணானாய்
கேசவனை,Kaeshavanai - பரஞ்சோதியாயிருக்கிற எம்பெருமானை
திரு அடி சேர்வது கருதி,Thiru adi saervadhu karuthi - கிட்டியநுபவிக்க விரும்பி
செழு குருகூர் சடகோபன்;,Sezhu kurukoor sadagopan - செழு குருகூர் சடகோபன்;
திரு அடி மேல்,Thiru adi mel - அவனது திருவடிகளின் மீது
உரைத்த,Uraitha - அருளிச்செய்த
தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்;,Thamil aayiraththul ippattum - தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்;
திரு அடியே,Thiru adiye - அந்தத் திருவடிகளையே
அடைவிக்கும்,Adaivikkum - அடையப்பண்ணும்;
திரு அடி சேர்ந்து,Thiru adi serndhu - (ஆதலால், நீங்கள்) அந்தத் திருவடிகளைக் கிட்டி
ஒன்றுமின்,Ondrumin - பொருந்தியிருக்கப் பாருங்கள்
3095திருவாய்மொழி || (4-9-நண்ணாதார் முறுவலிப்ப) (உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) (எம்பெருமானே! ஸர்வரக்ஷண ஸமர்த்தனாய் ஸர்வ நிர்வாஹகனாய் நீ யிருக்க, இந்த ஸம்ஸாரிகள் அளவுகடந்த துயரங்களை யநுபவித்துத் கொண்டிருக்குமிருப்பு கண்டு என்னால் பொருத்திருக்க முடியவில்லை; இவர்களுடைய ஆர்த்தியைத் தீர்ப்பதோ, அன்றி இவர்களுடைய இழவை நான் சிந்திக்க வொண்ணாதபடி என்னை முடிப்பதோ செய்யவேணும் என்கிறார்.) 1
நண்ணாதார் முறுவலிப்ப, நல்லுற்றார் கரைந்துஏங்க,
எண்ணாராத் துயர்விளைக்கும் இவைஎன்ன உலகியற்கை?
கண்ணாளா! கடல்கடைந்தாய்! உனகழற்கே வரும்பரிசு,
தண்ணாவாது அடியேனைப் பணிகண்டாய் சாமாறே.–4-9-1
நண்ணாதார்,Nannaathaar - பகைவர்கள்
முறுவலிப்ப,Muruvalippa - மகிழ்ந்து சிரிக்கவும்
நல் உற்றார்,Nal uttraar - நல்ல உறவினர்கள்
தரைந்து ஏங்க,Taraithu aengka - மனமுருகிவருந்தவும்
எண்ஆரா துயர் விளைக்கும்,Enumaara thuyar vilaiyum - எண்ணமுடியாத துன்பங்களை விளைக்கின்ற வையான
இவை உலகு இயற்கை,Ivai ulagu iyarkai - இந்த லோகயாத்ரைகள்
என்ன,Enna - என்ன!;
கண் ஆளா,Kan aalaa - தாயாளுவே!
கடல் கநை;தாய்,Kadal kanaithaay - (தேவர்களுக்கு அமுத மளிக்கக்) கடலைக் கடைந்தவனே!
உன கழற்கே,Una kazharkae - உனது திருவடி வாரத்திலேயே
வரும் பரிசு,Varum parisu - நான் வந்து சேரும்படி
தண்ணாவாது,Thannaavaadhu - காலதாமதமின்றியில்
அடியேனே,Adiyene - அடியேனே
சாம்ஆறு,Saamaaru - மரணமடையும் படி
பணி,Pani - அருள் செய்யவேணும்; (கண்டாய் - முன்னிலையசை)
3096திருவாய்மொழி || (4-9-நண்ணாதார் முறுவலிப்ப) (உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) (கீழ்ப்பாட்டில் “எண்ணுராத்துயர்” என்று ஸமுதாயமாகச் சொன்னதைச் சிறிது விவரித்து, இப்படி இவர்கள் படுகிற துக்கங்களைப் போக்கி யருள மாட்டாயாகில், என்னை யாவது உன் திருவடிவாரத்திலே அழைத்துக் கொண்டருள வேணுமென்கிறர்.) 2
சாமாறும் கெடுமாறும் தமர் உற்றார் தலைத் தலைப் பெய்து
ஏமாறிக் கிடந்து அலற்றும் இவை என்ன உலகியற்கை?
ஆமாறு ஒன்று அறியேன் நான், அரவணையாய்? அம்மானே!
கூமாறே விரை கண்டாய் அடியேனைக் குறிக்கொண்டே.–4-9-2
சாம் ஆறும்,Saam aarum - திடீரென்று மரண மடைவதும்
கெடும் ஆறும்,Kedum aarum - பலவகைக்கஷ்டங்களையடைவதும் (இதுகாரணமாக)
தமர்,Thamar - தாயாதிகளும்
உற்றார்,Urraar - உறவினர்களும்
தலைத்தலைப்பெய்து,Thalai thalaipeythu - ஒருவர்க்கொருவர் மேல் விழுந்து
நான்காம்பத்து ஒன்பதாந்திருர்ய்மொழி,Naankaam pathu onpathaandhirury mozhii - நண்ணுதாத்முறுலலிப்ப
ஏமாறி கிடந்து அலற்றும் இவை உலகு இயற்கை என்ன,Emaari kidaanthu alatrum ivai ulagu iyarkai enna - ஏங்கிக்கிடந்து கதலும் படியான இந்த லோக யாத்ரைகள் என்னே!
அரவு அணையாய் அம்மானே!,Aravu anaiyaam ammaane! - சேஷசாயியான ஸ்வாமியே!
நான்,Naan - அடியேன்
ஆம் ஆறு ஒன்று அறியேன்,Aam aarum ondru ariyen - உய்யும்வகையைச் சிறிது மறிகின்றிலேன்;
அடியேனை குறிக்கொண்டு கூம் ஆறு,Adiyenai kuri kondhu koom aarum - இப்படிப்பட்ட அடியேனை திருவுள்ளம் பற்றி (திருவடிவாரத்திலே) அழைத்துக்கொள்ளும்படி
விரை,Virai - விலைந்தருயவேணும்.
3097திருவாய்மொழி || (4-9-நண்ணாதார் முறுவலிப்ப) (உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –4-9-3- ஜந்துக்கள் ஆபிஜாத் யாதிகள் எல்லாம் கிடக்க முடிகிறபடியைக் கண்டு ஒன்றும் பொறுக்க மாட்டு கிறி லேன் -இத்துக்கங்களை அனுசந்திக்க வேண்டாதே உன் திருவடிகளில் அழைத்து அடிமை கொள்ள வேணும் என்கிறார்) (இப்பாசுரத்திற்கு ஈடு முப்பத்தயறயிரப்படி ஸ்ரீஸூக்திகள் இன்சுவையே வடிவெடுத்தவை.) 3
கொண்டாட்டும் குலம் புனைவும் தமர் உற்றார் விழு நிதியும்
வண்டு ஆர் பூங் குழலாளும் மனை ஒழிய, உயிர் மாய்தல்
கண்டு ஆற்றேன் உலகியற்கை! கடல் வண்ணா! அடியேனைப்
பண்டே போல் கருதாது,உன் அடிக்கே கூய்ப் பணி கொள்ளே.–4-9-3
கொண்டாட்டும்,Kondaatum - (புதிதாகச் சிலர்ஏறிட்டுச்செய்கிற) கொண்டாட்டமும்
குலம் புனைவும்,Kulam punaivum - இல்லாத குலத்தை ஏறிட்டுக்கொண்டு அஹங்கரிப்பதும்
தமர்,Thamar - தாயாதிகளும்
உற்றர்,Utrar - உறவினரும்
விழு நிதியும்,Vizhu nidhiyum - அளவற்ற செல்லமும்
வண்டு ஆர் பூ குழலாளும்,Vantu aar poo kuzhalalum - வண்டுகள் படிந்த பூக்கள் நிறைந்த கூந்தலையுடைய மனைவியும்
மனை,Manai - வீடும் (ஆகிய இவை)
ஒழிய,Ozhia - தன்னைவிட்டு நீங்க
உயிர் மாய்தல்,Uyir maaydhal - (தீடீரென்று) இறந்து போவதாகிற
உலகு இயற்கை கண்டு,Ulagu iyarkai kandu - இந்த லோகயாத்திரையைக்கண்டு
ஆற்றேன்,Aatren - ஸஹிக்கமாட்டேன்;
கடல் வண்ணு,Kadal vannu - கடல் வண்ணனான எம்பெருமானே!
அடியேனை,Adiyenai - அடியனான என்னை
பண்டே போல் கருதாது,Pande pol karuthaadhu - இத்தனை நாளும்போல் நினைத்திராமல்
உன் அடிக்கே கூய் பணி கொள்,Un adikke koo pani kol - உன் திருவடிவாரத்திலே அழைத்துக் கொண்டு அடிமை கொண்டருளவேணும்.
3098திருவாய்மொழி || (4-9-நண்ணாதார் முறுவலிப்ப) (உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) ((கொள்ளென்று கிளர்ந்து.) ஐச்வர்யமானது அநர்த்த ஹேது என்பதைக் கட் கூடாகக் காணா நிற்கச்செய்தேயும், பின்னையும் மேல் விழுந்து அதிலே நசை பண்ணிப் போருகிற லோக யாத்ரையைக் காணப் போகிறதில்லையே! என்கிறார்.) 4
கொள் என்று கிளர்ந்து எழுந்து பெருஞ் செல்வம் நெருப்பாகக்
கொள் என்று தமம் மூடும்; இவை என்ன உலகியற்கை!
வள்ளலே! மணி வண்ணா! உனகழற்கே வரும்பரிசு,
வள்ளல் செய்து அடியேனை உனது அருளால் வாங்காயே.–4-9-4
கொள் என்று கிளர்ந்து எழுந்த,Kol endru kilarndhu ezundhu - ‘என்னைக்கொள் என்னைக்கொள்’ என்று மேன்மேலும் பெருகித்தோற்றுகிற
பெரு செல்வம்,Peru selvam - பெரிய செல்வமானது
நெருப்பு ஆக,Neruppu aga - நெருப்புப்போல் ஸமூல நாசம் பண்ணு நிற்கச் செய்தேயும்
கொள் என்று,Kol endru - (அதில் நசை யொழியாமல்) அந்தச்செல்வத்தையே மேன் மேலும் கொள்ளும்படியாக
தமம் மூடும் இவை உலகு இயற்கை என்ன,Tamam moodum Ivai ulagu iyarkai enna - தமோ குணம் மேலிட்டுச் செல்லுகின்ற இந்த லோகஸ்வபான மிருந்தபடி என்னே!
வள்ளலே,Vallale - மஹாதாரனே!
மணி வண்ணா,Mani vanna - நீலமணிவண்ணனே;
உன கழற்கே வரும் பரிசு,Un kazarke varum parisu - உன் திருவடிவாரத்திலேயே வந்து சேரும்படி
அடியேனே,Adiyene - அடியேன் விஷயத்தில்
வள்ளல் செய்து,Vallal seydhu - ஔதார்யத்தைக் காட்டி
உனது அருளால்,Unathu arulaal - உனது பரம க்ருபையாலே கைக்கொண்டருளவேணும்.
3099திருவாய்மொழி || (4-9-நண்ணாதார் முறுவலிப்ப) (உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) (பிறப்பது மிறப்பதுமாய் நோவு பட்டுத் திரிகிற இந்த ஸம்ஸாரிக்ள நடுவில்நின்றும் இத் துன்பம் நடையாடாத தேச விசேஷத்திலே யென்னை யழைத்துக் கொண்டருள வேணுமென்கிறார்.) 5
வாங்கு நீர் மலர் உலகில் நிற்பனவும் திரிவனவும்
ஆங்கு உயிர்கள் பிறப்பிறப்புப் பிணி மூப்பால் தகர்ப் புண்ணும்;
ஈங்கு இதன் மேல் வெந் நரகம்; இவை என்ன உலகியற்கை!
வாங்கு எனை நீ, மணிவண்ணா! அடியேனை மறுக்கேலே.–4-9-5
வாங்கும்,Vaangum - உலகங்களை யெல்லாம் பிறகு தன் பக்கலிலே ஸம்ஹரித்துக் கொள்ள வல்லதான
நீர்,Neer - நீரிலே
மலர்,Malar - மலர்ந்த
நிற்பனவும்,Nirpanavum - ஸ்தாவரங்களும்
திரிவனவும்,Thirivanavum - ஜங்கமங்களுமான
ஆங்கு,Aangu - அவ்வவ்விடங்களிலுள்ள
உயிர்கள்,Uyirkal - பிராணிகள்
ஈங்கு,Eenggu - இப்புவியில்
பிறப்பு இறப்பு பிணி மூப்பால்,Pirappu irappu pinimubal - பிறப்பது இறப்பது வியாதி கொண்டிருப்பது கிழத்தன மடைவது ஆகிய இவற்றாலே
தகர்ப்புண்ணும்,Thakarppunnum - வருந்திக்கிடக்கும்;
இதன் மேல்,Idhan mel - இறந்தொழிந்தபின்போ வென்னில்
வெம் நரகம்,Vem naragam - கொடிய நரக வேதனையாம்; (இவை என்ன உலகு இயற்கை!;)
நீ,Nee - நீ
எனை,Enai - இத்துயரம் பொறுக்க மாட்டாத என்னை
வாங்கு,Vaanggu - அங்கீகரித்தருளவேணும்
அடியனே,Adiyanee - உன்னடியனான என்னை
மறுக்கேல்,Marukel - கலங்கப் பண்ண வேண்டா.
3100திருவாய்மொழி || (4-9-நண்ணாதார் முறுவலிப்ப) (உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) (பரமஹிம்ஸையே போதுபோக்கான இந்த லோக யாத்ரையை நான் காணாதபடி என்னை யழைத்துக் கொண்டருளவேணுமென்கிறார். ஆழ்வார் திருப்புளியாழ்வாரடியிலே திருக்கண்களை மூடிக்கொண்டு எழுந்தருளியிரா நிற்கச் செய்தேயும் லோக யாத்ரை யுள்ளது உள்ளபடி யுணர்ந்து பேசுகிறது என்னே! என்று வியக்க வேண்டும் படியிராநின்றது.) 6
மறுக்கி வல் வலைப்படுத்திக் குமைத்திட்டுக் கொன்றுண்பர்;
அறப் பொருளை அறிந்து ஓரார்; இவை என்ன உலகியற்கை!
வெறித் துளவ முடியானே! வினையேனே உனக்கு அடிமை
அறக் கொண்டாய் இனி என்னாரமுதே!கூய் அருளாயே.–4-9-6
மறுக்கி,Marukki - பயமூட்டி
வல் வலைபடுத்தி,Val valaipaduthi - தங்களது கொடிய வலையிலே சிக்கிக்கொள்ளும்படி செய்து
குமைத்திட்டு கொன்று,Kumaittu konru - சித்ரவதம் பண்ணி
உண்பர்,Unpar - தங்கள் வயிற்றை வளர்ப்பர்கள்;
அறம் பொருளை அறிந்து ஓரார்,Aram porulai arindhu orar - தருமதத்துவத்தை யறிந்து கவனிப்பாரில்லை; (இவை என்ன உலகு இயற்கை!)
வெறி துவளம் முடியானே,Veri thuvulam mudiyane - பரிமளம்மிக்க திருத்துழாயைத் திருமுடியிலணிந்துள்ளவனே ((இப்படிப்பட்ட ஒப்பனையழகைக்காட்டி)
வினையேனை,Vinaiyene - பாவியான என்னை
உனக்கு அற,Unakku ara - உன் விஷயத்திலேயே அற்றுத் தீரும்படி
அடிமை கொண்டாய்,Adimai kondai - ஏற்கனவே அடிமைகொண்டிருப்பவனே!
என் ஆர் அமுதே,En ar amudhe - எனக்கு பரிபூர்ணமான அமுதமே!
இனி,Ini - உடனே
கூய் அருளாய்,Kuy arulaye - அழைத்துக் கொண்டருள வேணும்.
3101திருவாய்மொழி || (4-9-நண்ணாதார் முறுவலிப்ப) (உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) (ஆழ்வீர்! உம்மை நானழைத்துக்கொள்வதென்று ஒன்றுண்டோ? பேறு உம்மதான பின்பு நீர்தாமே முயற்சிசெய்து வந்து சேரக்கட வீரத்தனை” என்று எம்பெருமான் திருவுள்ளமானதாகக் கொண்டு, ஸகல பதார்த்தங்களும் நீயிட்ட வழக்கான பின்பு நீயே யுன்னைக் கிட்டும் வழி பார்த்தருள வேணமென்கிறார்.) 7
ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும்
நீயே மற்று ஒரு பொருளும் இன்றி நீ நின்றமையால்
நோயே மூப்பு இறப்பிறப்புப் பிணியே என்றிவை ஒழியக்
கூயே கொள் அடியேனைக் கொடு உலகம் காட்டேலே.–4-9-7
இ உலகத்து,I ulagathu - இந்த லோகத்தில்
நிற்பனவும்,Nir panavum - ஸ்தாவரப் பொருள்களும்
திரிவனவும்,Thirivanavum - ஜங்கமப் பொருள்களும்
நீயே ஆய்,Neeye aay - நீயாகவே யிருந்து
மற்று ஒரு பொருளும் இன்றி,Matru oru porulum indri - நீயல்லாத பொருள் வேறொன்றுமில்லாதபடி
நீ நின்றமையால்,Ne ninradamaiyal - நீயிருப்பதனாலே
நோய் மூப்பு பிறப்பு இறப்பு பிணி என்ற இவை ஒழிய,Noy moopu pirappu irappu pini enra ivai ozhiya - மனோவியாதி, கிழத்தனம், ஜனனமரணங்கள், சரீரபீடைகள் எனப்படுகிற இவை தொலையும்படி
அடியேனை,Adiyenai - அடியனான வென்னை
கூயே கொள்,Kuye kol - அழைத்துக் கொண்டருள வேணும்;
கொடு உலகம்,Kodu ulagam - கொடிய இவ்வுலகத்தை
காட்டேல்,Kaattele - இனிமேலும் காட்டவேண்டா.
3102திருவாய்மொழி || (4-9-நண்ணாதார் முறுவலிப்ப) (உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) (‘ஆழ்வீர்! நீர் விரும்பியபடியே நாம் செய்கிறோம் என்று எம்பெருமான் அருளிச் செய்ய, அது என்றைக்குச் செய்வதாகத் திருவுள்ளமோ? என்கிறார்.) 8
காட்டி நீ கரந்து உமிழும் நிலம் நீர் தீ விசும்பு கால்
ஈட்டி நீ வைத்து அமைத்த இமையோர் வாழ் தனி முட்டைக்
கோட்டையினிற் கழித்து எனை உன் கொழுஞ்சோதி உயரத்துக்
கூட்டரிய திருவடிக்கள் எஞ்ஞான்று கூட்டுதியே?–4-9-8
நீ,Nee - நீ (எம்பெருமானே)
காட்டி,Kaatti - படைக்கும்போது பிரகாசிப்பித்து
கரந்து,Karandhu - (பிரளய காலத்திலே) உள்ளே மறைத்து
உமிழுத்,Uzhuth - மறுபடியும் வெளிப்படுத்துகின்ற
நிலம் நீர் தீ விசும்பு கால்,Nilam neer thee visumbu kaal - பஞ்ச பூதங்களையும்
ஈட்டி வைத்து,Eetti vaithu - ஒன்றாகத் திரட்டி வைத்து
அமைத்த,Amaitha - ஒழுங்கு படுத்திய
இமையோர் வாழ தனி முட்டை,Imayor vaazha thani muttai - பிரமாண்டமாகிற
கோட்டையினில்,Kottaiyinil - கோட்டையில் நின்றும்
என்னை கழித்து,Ennai kuzhithu - என்னை அப்புறப்படுத்தி
உன்,Un - உன்னுடைய
கொடு சோதி உயரத்து,Kodu sothi uyarathu - மிக்க வொளியுருவமாய் எல்லாவற்றினும் உயர்ந்ததான் திருநாட்டிலே
கூட்டு அரிய,Kootu ariya - கூடுதற்கரியான
திருவடிக்கண்,Thiruvadikkan - திருவடிகளிலே
எஞ்ஞான்று,Yennyantru - என்றைக்கு
கூட்டுதி,Kootuthi - கூட்டிக்கொள்வாய்!