Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: பட்டி மேய்ந்தோர் (10 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
637நாச்சியார் திருமொழி || 14 - பட்டி மேய்ந்தோர் (விருந்தாவனத்தே பரமனைக் கண்டமை கூறுதல்) 1
பட்டி மேய்ந்தோர் காரேறு பலதேவற்கோர் கீழ்க் கன்றாய்
இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே
இட்டமான பசுக்களை யினிது மறித்து நீரூட்டி
விட்டுக் கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே
ஓர் கார் ஏறு, Oor Kaar eru - (கண்ண பிரானென்கிற) கறுத்த காளை யொன்று
பட்டி மேய்ந்து, Patti Meindhu - காவலில்லாமல் யதேச்சமாய்த் திரிந்து கொண்டும்
பல தேவற்கு, Pala Dhevarku - பல ராமனுக்கு
ஓர் கீழ் கன்று ஆய், Oor Keezh Kanru Aay - ஒப்பற்ற தம்பியாய்
இட்டீறிட்டு, Itteeritu - ஸந்தோஷத்துக்குப் போக்கு வீடாகப் பலவகையான கோலா ஹலங்களைப் பண்ணி
விளையாடி, Vilaiyaadi - விளையாடிக் கொண்டு
இங்கே போத, Inge Podha - இப்படி வர
கண்டீரே, Kandire - பார்த்தீர்களோ?
இட்டம் ஆன, Ittam Aana - (தனக்கு) இஷ்டமான
பசுக்களை, Pasukalai - பசுக்களை
இனிது, Inidhu - த்ருப்தியாக
மறித்து, Marithu - மடக்கி மேயத்து
நீர் ஊட்டி, Neer Ootti - தண்ணீர் குடிப்பித்து
விட்டுக் கொண்டு, Vittu Kondu - (இப்படியாக) அவற்றை மேய விட்டுக் கொண்டு
விளையாட, Vilaiyaada - (அப் பெருமான்) விளையாட நிற்க
விருந்தாவனத்தே, Virundhavanathe - ப்ருந்தாவனத்திலே
கண்டோம், Kandom - ஸேவித்தோம்
638நாச்சியார் திருமொழி || 14 - பட்டி மேய்ந்தோர் (விருந்தாவனத்தே பரமனைக் கண்டமை கூறுதல்) 2
அனுங்க வென்னைப் பிரிவு செய்து ஆயர்பாடி கவர்ந்துண்ணும்
குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே
கணங்களோடு மின் மேகம் கலந்தால் போலே வனமாலை
மினுங்க நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே
அனுங்க, Anunga - நான் வருந்தும்படியாக
என்னை பிரிவு செய்து, Ennai Pirivu Seydhu - என்னைப் பிரிய விட்டுப் போய்
ஆயர்பாடி, Aayarpaadi - திருவாய்ப் பாடியை
கவர்ந்து, Kavarnthu - ஆக்ரமித்து
உண்ணும், Unnum - அநுபவிக்கின்றவனாய்
குணுங்கு நாளி, Kunungu Naali - வெண்ணெய் மொச்ச நாள்ளம் நாறுமவனாய்
குட்டேற்றை, Kutetrai - இளைய ரிஷபம் போன்றவனான
கோவர்த்தனனை, Govardhananai - கண்ண பிரானை
கண்டீரே, Kandire - கண்டீரே
மின் மேகம், Min Megam - மின்னலும் மேகமும்
கலந்தால் போல், Kalanthaal Pol - ஒன்றோடொன்று சேர்ந்தாற்போலே
வனமாலை மினுங்க நின்று, Vanamaalai Minunga Nindru - (கறுத்த திருமேனியிலே மின்னல் போன்ற) வனமாலை திகழப் பெற்று
கணங்களோடு, Kanangalodu - (தோழன்மாருடைய) கூட்டங்களோடு கூட
விளையாட, Vilaiyaada - விளையாடா நிற்க
விருந்தாவனத்தே கண்டோம், Virundhavanathe Kandom - விருந்தாவனத்தே கண்டோம்
639நாச்சியார் திருமொழி || 14 - பட்டி மேய்ந்தோர் (விருந்தாவனத்தே பரமனைக் கண்டமை கூறுதல்) 3
மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்கள் உரைப்பானை இங்கே போதக் கண்டீரே
மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகு என்னும்
மேலாப்பின் கீழ் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே
மால் ஆய் பிறந்த நம்பியை, Maal aay Pirandha Nambiyai - பெண்கள் பக்கலுண்டான வ்யாமோஹமே ஒரு வடிவாய்க் கொண்டு பிறந்த தென்னலாம்படியான பெருமானாய்
மாலே செய்யும் மணாளனை, Maale Seiyum Manalanai - வ்யாமோஹத்தையே செய்கிற மணவாளப் பிள்ளையாய்
ஏலா பொய்கள் உரைப்பானை, Eala poikal uraipanai - பொருந்தாத பொய்களைச் சொல்லுமவனான கண்ண பிரானை
இங்கே போதக் கண்டீரே?, Inge Podha Kandire? - இங்கே போதக் கண்டீரே?
மேலால், Melaal - மேலே
பரந்த, Parandha - பரவின
வெயில், veyil - வெய்யிலை
காப்பான், kapan - (திருமேனியில் படாமல்) தடுப்பதற்காக
வினதை சிறுவன் சிறகு என்னும் மேலாப்பின்கீழ் வருவானை, Vinathai Siruvan Siragu Enum Melapinkeezh Varuvaanai - கருடனுடைய சிறகாகிற விதானத்தின் கீழ் எழுந்தருளா நின்ற அப் பெருமானை
விருந்தாவனத்தே கண்டோம், Virundhavanathe Kandom - விருந்தாவனத்தே கண்டோம்
640நாச்சியார் திருமொழி || 14 - பட்டி மேய்ந்தோர் (விருந்தாவனத்தே பரமனைக் கண்டமை கூறுதல்) 4
காரத்தண் கமலக் கண் என்னும் நெடுங்கயிறு படுத்து என்னை
ஈர்த்துக் கொண்டு விளையாடும் ஈசன் தன்னைக் கண்டீரே
போர்த்த முத்தின் குப்பாயப் புகர் மால் யானைக் கன்றே போல்
வேர்த்து நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே
கார், Kaar - காளமேகத்திலே
தண், Than - குளிர்ந்த
கமலம், Kamalam - தாமரை பூத்தாற் போன்றுள்ள
கண் என்றும், Kan Endrum - திருக் கண்கள் என்கிற
நெடு கயிறு, Nedu Kayiru - பெரிய பாசத்திலே
என்னை படுத்தி, Ennai Paduthi - என்னை அசப்படுத்தி
ஈர்த்துக் கொண்டு, Eerthu Kondu - (தான் போமிடமெங்கும் என்னெஞ்சையும் கூடவே) இழுத்துக் கொண்டு போய்
விளையாடும் ஈசன் தன்னைக் கண்டீரே?, Vilaiyaadum Eesan Thannai Kandire? - விளையாடும் ஈசன் தன்னைக் கண்டீரே?
போர்த்த முத்தின் குப்பாயம், Portha Muthin Kuppayam - போர்வையாகப் போர்த்த முத்துச் சட்டையை யுடையதாய்
புகர், Pugar - தேஜஸ்ஸை யுடையதாய்
மால், Maal - பெரிதான
யானை கன்று போல், Yaanai Kanru Pol - யானைக் குட்டி போலே
வேர்த்து நின்று விளையாட, Verthu Nindru Vilaiyaada - வேர்வையுற்று நின்று விளையாட
விருந்தாவனத்தே கண்டோம், Virundhavanathe Kandom - விருந்தாவனத்தே கண்டோம்
641நாச்சியார் திருமொழி || 14 - பட்டி மேய்ந்தோர் (விருந்தாவனத்தே பரமனைக் கண்டமை கூறுதல்) 5
மாதவன் என் மணியினை வலையில் பிழைத்த பன்றி போல்
ஏதுமொன்றும் கொளத்தாரா ஈசன் தன்னைக் கண்டீரோ
பீதக வாடை யுடை தாழப் பெருங்கார் மேகக் கன்றே போல்
வீதியார வருவானை விருந்தா வனத்தே கண்டோமே
மாதவன், Madhavan - ஸ்ரீய: பதியாய்
என் மணியினை, En Maniyinai - எனக்கு நீல ரத்னம் போலே பரம போக்யனாய்
வலையில் பிழைத்த பன்றி போல், Valaiyil Pizhaitha Panri Pol - வலையில் நின்றும் தப்பிப் பிழைதத்தொரு பன்றி போலே (செருக்குற்று)
ஏதும் ஒன்றும், Edhum Ondrum - (தன் பக்கலுள்ள) யாதொன்றையும்
கொள தாரா, Kola Thaaraa - பிறர் கொள்ளும்படி தாராதவனான (ஒருவர் கைக்கும் எட்டாதவனான)
ஈசன் தன்னை கண்டீரே?, Eesan Thannai Kandire? - ஈசன் தன்னை கண்டீரே?
பீதகம் ஆடை, Peedhagam Aadai - திருப் பீதாம்பரமாகிற
உடை, Udai - திருப் பரிவட்டமானது
தாழ, Thaazha - தொங்கத் தொங்க விளங்க
பெரு கார் மேகம் கன்று போல், Peru Kaar Megam Kanru Pol - பெருத்துக் கறுத்துதொரு மேகக் குட்டி போலே
வீதி ஆர வருவானை, Veethi Aara Varuvaanai - திரு வீதி நிறைய எழுந்தருளும் பெருமானை
விருந்தாவனத்தே கண்டோம், Virundhavanathe Kandom - விருந்தாவனத்தே கண்டோம்
642நாச்சியார் திருமொழி || 14 - பட்டி மேய்ந்தோர் (விருந்தாவனத்தே பரமனைக் கண்டமை கூறுதல்) 6
தருமம் அறியா குறும்பனைத் தன கைச் சார்ங்கமதுவே போல்
புருவம் வட்ட மழகிய பொருத்த மிலியைக் கண்டீரே
வுருவு கரிதாய் முகம் செய்தாய் உதய பருப் பதத்தின் மேல்
விரியும் கதிரே போல்வானை விருந்தாவனத்தே கண்டோமே
தருமம் அறியா, Tharumam Ariyaa - இரக்கமென்பது அறியாதவனாய்
குறும்பனை, Kurumbanai - குறும்புகளையே செய்யுமவனாய்
தன் கை சார்ங்கம் அதுவே போல், Than Kai Saarngam Athuve Pol - தனது திருக்கையிலுள்ள சார்ங்க வில்லைப் போன்ற
புருவ வட்டம், Puruva Vattam - திருப் புருவ வட்டங்களாலே
அழகிய, Azhagiya - அழகு பெற்றவனாய்
பொருத்தம் இலியை, Porutham Iliyai - (அவ்விழகை அன்பர்கட்டு அநுபவிக்கக் கொடுத்து) பொருந்தி வாழப் பெறாதவனான பெருமானை
கண்டீரே?, kandeere? - கண்டீரே?
உருது கரிது ஆய், Uruthu Karidhu Aay - திருமேனியில் கருமை பெற்றும்
முகம் செய்து ஆய், Mukam Seidhu Aay - திரு முகத்தில் செம்மை பெற்றும் இருப்பதாலே
உதயம் பருப்பதத்தின் மேல் விரியும் கதிர் போல்வானை, Udhayam Parupathathin Mel Viriyum Kathir Polvaanai - உதய பர்வதத்தின் மேலே விரிகின்ற சூரியன் போல் விளங்கும் அப்பெருமானை
விருந்தாவனத்தே கண்டோமே, Virundhavanathe Kandome - விருந்தாவனத்தே கண்டோமே
643நாச்சியார் திருமொழி || 14 - பட்டி மேய்ந்தோர் (விருந்தாவனத்தே பரமனைக் கண்டமை கூறுதல்) 7
பொருத்த முடைய நம்பியைப் புறம் போல் உள்ளும் கரியானை
கருத்தைப் பிழைத்து நின்ற அக்கரு மா முகிலைக் கண்டீரே
அருத்தி தாரா கணங்களால் ஆரப் பெருகு வானம் போல்
விருத்தம் பெரிதாய் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே
பொருத்தம் உடைய நம்பியை, Porutham Udaya Nambiyai - பொருத்தமுடைய ஸ்வாமியாய்
புறம் போல் உள்ளும் கரியானை, Puram Pol Ullum Kariyaanai - உடம்பு போலே உள்ளமும் கறுத்திரா நின்றவனாய்
கருத்தை பிழைத்து நின்ற, Karuthai Pizhaithu Nindra - நான் எண்ணும் எண்ணத்தைத் தப்பி நிற்பவனாய்
அக் கரு மா முகிலை, ak karu maa mukilai - கறுத்துப் பெருத்த முகில் போன்றவனான அக் கண்ணபிரானை
கண்டீரே?, Kandire? - கண்டீரே?
அருத்தி, Aruthi - விரும்பப் பெறுகின்ற
தாரா கணங்களால், Thaaraa Kanangalal - நக்ஷத்ர ஸமூஹங்களாலே
ஆர பெருகு, Aara Perugu - மிகவும் நிறைந்திருந்துள்ள
வானம் போல், vanam pol - ஆகாசம் போல்
வானம் போல் விருத்தம் பெரிது ஆய், Virutham Peridhu Aay - பெருங்கூட்டமாய்
வருவானை, varuvanai - எழுந்தருளா நின்ற அப் பெருமானை
விருந்தாவனத்தே கண்டோமே, Virundhavanathe Kandome - விருந்தாவனத்தே கண்டோமே
644நாச்சியார் திருமொழி || 14 - பட்டி மேய்ந்தோர் (விருந்தாவனத்தே பரமனைக் கண்டமை கூறுதல்) 8
வெளிய சங்கு ஓன்று உடையானைப் பீதவாடை யுடையானை
அளி நன்குடை திருமாலை ஆழியானைக் கண்டீரே
களி வண்டும் கலந்தால் போல் கமழ் பூங்குழல்கள் தடந்தோள் மேல்
மிளிர நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே
வெளிய சங்கு ஒன்று உடையானை, Veliya Sangu Ondru Udaiyaanai - வெளுத்த ஸ்ரீபாஞசயன மொன்றை வுடையனாய்
பீதகம் ஆடை உடையானை, Peethagam Aadai Udaiyaanai - பீதாம்பரத்தை உடையாகக் கொண்டவனாய்
நன்கு அளி உடைய, Nangu Ali Udaya - நன்றாகக் கிருபை யுடையவனாய்
ஆழியானை, Aazhiyaanai - திருவாழியாழ்வானை யுடையவனாய்
திருமாலை, Thirumaalai - ஸ்ரீய: பதியான கண்ணனை
கண்டீரே?, kandeere? - கண்டீரே?
களி வண்டு, Kali Vandu - (மதுபானத்தாலே) களித்துள்ள வண்டுகளானவை
எங்கும், engum - எப் புறத்திலும்
கலந்தால், kalandhal - பரம்பினாற்போலே
கமழ் பூங்குழல்கள், Kamazh Poonguzhalkal - பரிமளிக்கின்ற அழகிய திருக் குழல்களானவை
தடதோள்மேல், Thada thol mel - பெரிய திருத் தோள்களின் மேலே
மிளிர நின்று விளையாட, Milira Nindru Vilaiyaada - (தாழ்ந்து) விளங்க நின்று விளையாட
விருந்தாவனத்தே கண்டோமே, Virundhavanathe Kandome - விருந்தாவனத்தே கண்டோமே
645நாச்சியார் திருமொழி || 14 - பட்டி மேய்ந்தோர் (விருந்தாவனத்தே பரமனைக் கண்டமை கூறுதல்) 9
நாட்டைப் படை என்று அயன் முதலா தந்த நளிர் மா மலருந்தி
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் தன்னைக் கண்டீரே
காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய
வேட்டை யாடி வருவானை விருந்தாவனத்தே கண்டோமே
நாட்டை படை என்று, Natai Padai Endru - உலகங்களை ஸ்ருஷ்டி என்று
அயன் முதலா, Ayan Mudhalaa - பிரமன் முதலான பிரஜாபதிகளை
தந்த, thandha - உண்டாக்கின
நளிர் மா மலர் உந்தி வீட்டை பண்ணி, Nalir Maa malar Undhi Veetai Panni - குளிர்ந்த பெரிய மலரை யுடைத்தான திருநாபி யாகிற வீட்டை யுண்டாக்கி
விளையாடும், vilaiyaadum - இப்படியாக லீலா ரஸம் அநுபவிக்கிற
விமலன் தன்னை, Vimalan Thannai - பரம பாவனனான பெருமானை
கண்டீரே?, kandire? - கண்டீரே?
தேனுகனும், Thenukanum - தேநுகாஸுரனும்
களிறும், kalirum - குவலயாபீட யானையும்
புள்ளும், pullum - பகாஸுரனும்
உடன் மடிய, udan madiya - உடனே மாளும்படியாக
காட்டை நாடி வேட்டை ஆடி வருவானை, kaatai naadi vettai aadi varuvaanai - காட்டிற் சென்று வேட்டையாடி வரும் அப் பெருமானை
விருந்தாவனத்தே கண்டோமே, Virundhavanathe Kandome - விருந்தாவனத்தே கண்டோமே
646நாச்சியார் திருமொழி || 14 - பட்டி மேய்ந்தோர் (விருந்தாவனத்தே பரமனைக் கண்டமை கூறுதல்) 10
பருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னைப் பாரின் மேல்
விருந்தா வனத்தே கண்டமை விட்டு சித்தன் கோதை சொல்
மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்
பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ் பிரியாது என்றும் இருப்பரே
பரு தாள் களிற்றுக்கு, Paru Thaal Kalitruku - பருத்த கால்களை யுடைய கஜேந்திராழ்வானுக்கு
அருள் செய்த, Arul Seidha - க்ருபை பண்ணின
பரமன் தன்னை, Paraman thannai - திருமாலை
பாரின் மேல், paarin mel - இந் நிலத்திலே
விருந்தாவனத்தே கண்டமை, Virundaavanathe Kandamai - ஸ்ரீ ப்ருந்தாவனத்திலே ஸேவிக்கப் பெற்றமையைப் பற்றி
விட்டு சித்தன் கோதை சொல், Vittu Chithan Kodhai sol - பெரியாழ்வார் திருமகளான ஆண்டாளருளிச் செய்த இப் பாசுரங்களை
மருந்து ஆம் என்று, Marundhu aam endru - (பிறவி நோய்க்கு) மருந்தாகக் கொண்டு
தம் மனத்தே, tham Manathe - தங்கள் சிந்தையிலே
வைத்துக் கொண்டு வாழ்வார்கள், Vaithu kondu Vaazhvaarkal - அநுஸந்தித்துக் கொண்டு வாழுமவர்கள்
பெரு தாள் உடைய பிரான் அடி கீழ், Peru Thaal Udaya Piran Adi Keezh - பெருமை பொருந்திய திருவடிகளை யுடைய எம்பெருமானுடைய திருவடிகளின் கீழே
என்றும், Endrum - எந்நாளும்
பிரியாது இருப்பார், Piriyadhu Iruppar - பிரியாமலிருந்து நித்யாநுபவம் பண்ணப் பெறுவர்கள்