| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 75 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 1 | மாணிக்கக் கிண்கிணி யார்ப்ப மருங்கின் மேல் ஆணிப் பொன் னால் செய்த ஆய் பொன்னுடை மணி பேணிப் பவள வாய் முத்திலங்க பண்டு காணி கொண்ட கைகளால் சப்பாணி கருங்குழல் குட்டனே சப்பாணி–1-6-1 | ஆணிப் பொன்னால் செய்த,Aanip Ponnal Seytha - மாற்றுயர்ந்த பொன்னால் செய்த ஆய்,Aay - (வேலைப் பாட்டிற் குறைவில்லாதபடி) ஆராய்ந்து செய்த பொன் மணி,Pon Mani - பொன் மணிக் கோவையை உடைய,Udaiya - உடைய மருங்கின் மேல்,Marungin Mel - இடுப்பின் மேலே மாணிக்கம் கிண்கிணி,Manikkam Kinkini - (உள்ளே) மாணிக்கத்தை யிட்ட அரைச் சதங்கை ஆர்ப்ப,Aarppa - ஒலி செய்யவும் பவளம்,Pavalam - பவழம் போன்ற வாய்,Vaai - வாயிலே முத்து,Muthu - முத்துப் போன்ற பற்கள் இலங்க,Ilanga - விளங்கவும் பண்டு,Pandu - முற்காலத்திலேயே காணி,Kaani - பூமியை கொண்ட,Konda - (புவிச் சக்ரவர்த்தியினிடத்தில் நின்றும்) வாங்கிக் கொண்ட கைகளால்,Kaigalal - திருக் கைகளாலே பேணி,Peni - விரும்பி சப்பாணி,Sappani - சப்பாணி கொட்டி யருள வேணும்; கரு,Karu - கரு நிறமான குழல்,Kuzhal - கூந்தலை யுடைய குட்டனே,Kuttane - பிள்ளாய்! சப்பாணி,Sappani - சப்பாணி கொட்டியருள வேணும். |
| 76 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 2 | பொன்னரை நாணொடு மாணிக்கக் கிண்கிணி தன்னரை யாடத் தனிச் சுட்டி தாழ்ந்தாட என்னரை மேல் நின்றிழிந்து உங்க ளாயர் தம் மன்னரை மேல் கொட்டாய் சப்பாணி மாயவனே கொட்டாய் சப்பாணி–1-6-2 | பொன்,Pon - ஸ்வர்ண மயமான அரை நாணொடு,Arai Naanodu - அரை நாணோடு கூட மாணிக்கம் கிண்கிணி,Manikkam Kinkin - (உள்ளே) மாணிக்கமிட்ட அரைச் சதங்கையும் தன் அரை,Than Arai - தனக்கு உரிய இடமாகிய அரையிலே ஆட,Aada - அசைந்து ஒலிக்கவும் தனி,Thani - ஒப்பற்ற சுட்டி,Sutti - சுட்டியானது தாழ்ந்து,Thazhnthu - (திருநெற்றியில்) தொங்கி ஆட,Aada - அசையவும் என் அரை மேல் நின்று,En Arai Mel Ninru - என்னுடைய மடியிலிருந்து இழிந்து,Izhinthu - இறங்கிப் போய் உங்கள்,Ungal - உன்னுடைய (பிதாவான) ஆயர் தம் மன்,Aayar Tham Man - இடையர்கட்கெல்லாம் தலைவரான நந்த கோபருடைய அரை மேல்,Arai Mel - மடியிலிருந்து கொட்டாய் சப்பாணி,Kottai Sappani - சப்பாணி கொட்டாய் மாயவனே,Maayavane - அற்புதமான செயல்களை யுடையவனே! சப்பாணி கொட்டாய்-;,Sappani Kottai - சப்பாணி கொட்டியருள வேணும். |
| 77 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 3 | பன் மணி முத்து இன் பவளம் பதித்தன்ன என் மணி வண்ணன் இலங்கு பொற் றோட்டின் மேல் நின் மணி வாய் முத் திலங்க நின்னம்மை தன் அம்மணி மேல் கொட்டாய் சப்பாணி ஆழியங் கையனே சப்பாணி–1-6-3 | என்,En - என்னுடைய மணிவண்ணன்,ManiVannan - நீல மணி போன்ற நிறமுடையவனே! பல்,Pal - பலவகைப் பட்ட மணி,Mani - சதகங்களையும் முத்து,Muthu - முத்துக்களையும் இன் பவளம்,In Pavalam - இனிய பவழத்தையும் பதித்த,Pathitha - அழுத்திச் செய்யப் பட்டதும் அன்ன,Anna - அப்படிப்பட்டதுமான (அழகியதுமான) இலங்கு,Ilangu - விளங்குகின்ற பொன் தோட்டின் மேல்,Pon Thottin Mel - பொன்னாற் செய்த தோடென்னும் காதணியினழகுக்கு மேலே நின் மணி வாய் முத்து,Nin Mani Vaai Muthu - உன்னுடைய அழகிய வாயிலே முத்துப் போன்ற பற்கள் இலங்க,Ilanga - விளங்கும்படி (சிரித்துக் கொண்டு) நின் அம்மை தன்,Nin Ammaithan - உன் தாயினுடைய அம்மணி மேல்,Ammani Mel - இடையிலிருந்து கொட்டாய் சப்பாணி,Kottai Sappani - சப்பாணி கொட்டாய்-; ஆழி,Aazhi - திருவாழி மோதிரத்தை அம் கையனே,Am Kaiyane - அழகிய கையிலுடையவனே! சப்பாணி-;,Sappani - சப்பாணி கொட்டியருள வேணும். |
| 78 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 4 | தூ நிலா முற்றத்தே போந்து விளையாட வானிலா அம்புலீ சந்திரா வா வென்று நீநிலா நின் புகழா நின்ற ஆயர் தம் கோ நிலாவக் கொட்டாய் சப்பாணி குடந்தைக் கிடந்தானே சப்பாணி–1-6-4 | வான்,Vaan - ஆகாசத்திலே நிலா,Nila - விளங்குகின்ற அம்புலி,Ambuli - அம்புலியே! சந்திரா,Chandira - சந்திரனே! தூ,Thoo - வெண்மையான நிலா,Nila - நிலாவையுடைய முற்றத்தே,Mutraththae - முற்றத்திலே போந்து,Poanthu - வந்து நீ,Nee - நீ விளையாட,Vilaiyaada - (நான்) விளையாடும்படி வா,Vaa - வருவாயாக என்று,Endru - என்று (சந்திரனை அழைத்து) நிலா,Nila - நின்று கொண்டு நின்,Nin - உன்னை புகழாநின்ற,Pugazhaninra - புகழ்கின்ற ஆயர் தம்,Aayar Tham - இடையர்களுடைய கோ,Ko - தலைவராகிய நந்த கோபர் நிலாவ,Nilaava - மனம் மகிழும்படி சப்பாணி கொட்டாய்-;,Sappani Kottai - சப்பாணி கொட்டி யருள வேணும்; குடந்தை கிடந்தானே! சப்பாணி-.,Kudanthai Kidanthane!Sappani - குடந்தை கிடந்தானே! சப்பாணி-. |
| 79 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 5 | புட்டியில் சேறும் புழுதியும் கொண்டு வந்து அட்டி யமுக்கி அகம் புக் கறியாமே சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயும் உண் பட்டிக்கன்றே கொட்டாய் சப்பாணி பற்பநாபா கொட்டாய் சப்பாணி–1-6-5 | புட்டியில்,Puttiyil - திருவரையிற் படிந்த சேறும்,Serum - சேற்றையும் புழுதியும்,Puzhiyum - புழுதி மண்ணையும் கொண்டு வந்து,Kondu Vandu - கொணர்ந்து வந்து அட்டி,Atti - (என் மேல்) இட்டு அமுக்கி,Amukki - உறைக்கப் பூசி அகம் புக்கு,Agam Pukku - வீட்டினில் புகுந்து அறியாமே,Ariyamae - (எனக்கு நீ) தெரியாதபடி சட்டி தயிரும்,Satti Thairum - சட்டியில் வைத்திருக்கும் தயிரையும் தடாவினில்,Thadavinil - மிடாக்களிலிருக்கிற வெண்ணெயும்,Vennaiyum - வெண்ணெயையும் உண்,Un - உண்ணுகின்ற பட்டி கன்றே,Patti Kanrae - பட்டி மேய்ந்து திரியும் கன்று போன்றவனே! சப்பாணி கொட்டாய்-;,Sappani Kottai - சப்பாணி கொட்டாய்-; பற்ப நாபா,Parpa Naaba - ப்ரஜாபதி பிறப்பதற்குக் காரணமான தாமரைப் பூவைக்கொண்ட நாபியை யுடையவனே! சப்பாணி கொட்டாய்-.,Sappani Kottai - சப்பாணி கொட்டாய்-; |
| 80 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 6 | தாரித்து நூற்றுவர் தந்தை சொல் கொள்ளாது போருத்து வந்து புகுந்தவர் மண்ணாள பாரித்த மன்னர் படப் பஞ்சவர்க்கு அன்று தேருய்த்த கைகளால் சப்பாணி தேவகி சிங்கமே சப்பாணி–1-6-6 | தந்தை,Thandai - (எல்லார்க்கும்) பிதாவாகிய உனது சொல்,Sol - பேச்சை தாரித்து கொள்ளாது,Thariththu Kollaathu - (மனத்திற்) கொண்டு அங்கீகரியாமல் போர் உய்த்து வந்து,Poar Uyiththu Vandu - யுத்தத்தை நடத்துவதாக (க்கருவத்துடன்) வந்து புகுந்தவர்,Pugunthavar - (போர்க்களத்தில்) ப்ரவேசித்தவரும் மண்,Mann - ராஜ்யத்தை ஆள,Aala - (தாமே) அரசாளுவதற்கு பாரித்த,Paariththa - முயற்சி செய்த மன்னர்,Mannar - அரசர்களுமாகிய நூற்றுவர்,Noorruvar - நூற்றுக் கணக்காயிருந்த துரியோதநாதிகள் பட,Pada - மாண்டு போகும்படி அன்று,Andru - (பாரத யுத்தம் நிடந்த) அக் காலத்திலே பஞ்சவர்க்கு,Panjavarkku - பஞ்ச பாண்டவர்களுக்கு (வெற்றி உண்டாக) தேர் உய்த்த,Ther Uyiththa - (பார்த்தஸாரதியாய் நின்று) தேரை ஓட்டின கைகளால்,Kaigalal - திருக்கைகளாலே சப்பாணி-;,Sappani - சப்பாணி கொட்டியருள வேணும். தேவகி சிங்கமே,Devaki Singamae - தேவகியின் வயிற்றிற் பிறந்த சிங்கக்குட்டி போன்றவனே! சப்பாணி-.,Sappani - சப்பாணி கொட்டியருள வேணும். |
| 81 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 7 | பரந்திட்டு நின்ற படு கடல் தன்னை இரந்திட்ட கைம் மேல் எறி திரை மோத கரந்திட்டு நின்ற கடலைக் கலங்க சரந்தொட்ட கைகளால் சப்பாணி சார்ங்கவிற் கையனே சப்பாணி–1-6-7 | பரந்திட்டு நின்ற,Parandhittu Nindra - (எல்லை காண வொண்ணாதபடி) பரவியுள்ள படு கடல்,Padu Kadal - ஆழமான ஸமுத்ரமானது தன்னை இரந்திட்ட,Thannai Irandhitta - (வழி விடுவதற்காகத்)தன்னை யாசித்த கை மேல்,Kai Mel - கையின் மேலே எறி திரை,Eri Thirai - வீசுகின்ற அலைகளினால் மோத,Modha - மோதி யடிக்க கரந்திட்டு நின்ற,Karandhittu Nindra - (முகங் காட்டாமல்) மறைந்து கிடந்த கடல்,Kadal - அக் கடலுக்கு உரிய தேவதையான வருணன் கலங்க,Kalanga - கலங்கி விடும்படி சரம்,Saram - அம்புகளை தொட்ட,Thotta - தொடுத்து விட்ட கைகளால் சப்பாணி-;,Kaigalal Sappani - திருக்கைகளாலே சப்பாணி கொட்டியருள வேணும். சார்ங்கம் வில்,Sargam Vil - ஸ்ரீசார்ங்கமென்னும் தநுஸ்ஸை கையனே,Kaiyane - (அப்போது) கையில் தரித்தவனே! சப்பாணி-;,Sappani - சப்பாணி கொட்டியருள வேணும். |
| 82 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 8 | குரக்கினத்தாலே குரை கடல் தன்னை நெருக்கி அணை கட்டி நீள் நீரிலங்கை அரக்கர் அவிய அடு கணையாலே நெருக்கிய கைகளால் சப்பாணி நேமி யங் கையனே சப்பாணி–1-6-8 | குரை,Kurai - கோக்ஷியா நின்ற கடல் தன்னை,Kadal Thannai - ஸமுத்ரத்தை நெருக்கி,Nerukki - (இரண்டு பக்கத்திலும்) தேங்கும்படி செய்து குரங்கு,Kurangu - குரங்குகளினுடைய இனத்தாலே,Inaththaalai - கூட்டங்களைக் கொண்டு அணை கட்டி,Anai Katti - ஸேதுவைக் கட்டி முடித்து நீள் நீர்,Neel Neer - பரந்துள்ள ஸமுத்ரத்தினால் சூழப்பட்ட இலங்கை,Ilangai - லங்கையிலுள்ள அரக்கர்,Arakkar - ராக்ஷஸர்களெல்லாம் அலிய,Aliya - அழிந்து போம்படி அடு கணையாலே,Adu Kanaiyaale - கொல்லும் தன்மையை யுடைய அம்புகளைக் கொண்டு நெருக்கிய,Nerukkiya - நெருங்கப் போர் செய்த கைகளால் சப்பாணி-;,Kaigalal Sappani - திருக்கைகளாலே சப்பாணி கொட்டியருள வேணும். நேமி,Nemi - திருவாழி ஆழ்வானை அம் கையனே,Am Kaiyane - அழகிய கையிலேந்தினவனே! சப்பாணி-.,Sappani - சப்பாணி கொட்டியருள வேணும். |
| 83 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 9 | அளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கே வளர்ந்திட்டு வாளுகிர்ச் சிங்க வுருவாய் உளந்தொட் டிரணியன் ஒண் மார்வகலம் பிளந்திட்ட கைகளால் சப்பாணி பேய் முலை யுண்டானே சப்பாணி–1-6-9 | தூணை,Thoona - கம்பத்தை அவன்,Avan - அந்த ஹிரண்யாஸுரன் (தானே) தட்ட,Thatta - புடைக்க ஆங்கே,Aange - (அவன் புடைத்த) அந்த இடத்திலேயே வான் உகிர்,Vaan Ukir - கூர்மையான நகங்களை யுடைய சிங்கம் உருஆய்,Singam Uruaai - நரஸிம்ஹ மூர்த்தியாய் வளர்ந்திட்டு,Valarnthittu - வளர்ந்த வடிவத்துடன் தோன்றி உளம்,Ulam - (அவ்விரணியனது) மநஸ்ஸு (ஒருகால் இவ்விரணியனும் அநுகூலனாகக் கூடுமோ! என்று) தொட்டு,Thotta - பரிசோதித்துப் பார்த்து (பின்பு) இரணியன்,Iraaniyan - அவ்விரணியனுடைய ஒளி,Oli - ஒளி பொருந்திய மார்பு அகலம்,Maaarbu Akalam - மார்பின் பரப்படங்கலும் பிளந்திட்ட,Pilandhitta - (நகத்தாற்) பிளந்த கைகளால் சப்பாணி,Kaigalal Sappani - திருக்கைகளாலே சப்பாணி கொட்டியருள வேணும். பேய்,Paey - பூதனையின் முலை,Mulai - முலையை உண்டானே,Undaane - உண்டவனே! சப்பாணி-;,Sappani - சப்பாணி கொட்டியருள வேணும். |
| 84 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 10 | அடைந்திட்டு அமரர்கள் ஆழ் கடல் தன்னை மிடைந்திட்டு மந்தரம் மத்தாக நாட்டி வடம் சுற்றி வாசுகி வன் கயிறாகக் கடைந்திட்ட கைகளால் சப்பாணி கார் முகில் வண்ணனே சப்பாணி–1-6-10 | அமரர்கள்,Amarar - தேவர்கள் (துர்வாச முனி சாபத்தினால் தாம் இழந்த ஐச்வர்யத்தைப் பெறுதற்காக) அடைந்திட்டு,Adainthittu - (உன்னைச்) சரணமடைய (நீ) ஆழ்கடல் தன்னை,Aazh Kadal Thannai - ஆழமான க்ஷிராப்தியை (உன்னுடைய படுக்குமிடமென்று பாராமல்) விடைந்திட்டு,Vidaindhittu - நெருங்கி மந்தரம்,Mantharam - மந்தர பர்வதத்தை மத்து ஆக,Maththu Aaga - (கடைவதற்குரிய) மத்தாகும்படி கூட்டி,Kooti - நேராக நிறுத்தி வாசுகி,Vaasuki - வாசுகியென்னும் பாம்பாகிய வன்வடம்,Vanvadham - வலிய கயிற்றை கயிறு ஆக சுற்றி,Kayiru Aaga Sutri - (அந்த மந்தரமலையாகிற மத்திலே) கடை கயிறாகச் சுற்றி கடைந்திட்ட,Kadaiynthitta - கடைந்த கைகளால் சப்பாணி-;,Kaigalal Sappani - திருக்கைகளாலே சப்பாணி கொட்டியருள வேணும். கார்முகில் வண்ணனே,Kaarmugil Vannanae - காளமேகம் போன்ற நிறமுடையவனே! சப்பாணி-;,Sappani - சப்பாணி கொட்டியருள வேணும். |
| 85 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 11 | ஆட் கொள்ளத் தோன்றிய ஆயர் தங் கோவினை நாட் கமழ் பூம் பொழில் வில்லி புத்தூர்ப் பட்டன் வேட்கையினால் சொன்ன சப்பாணி ஈரைந்தும் வேட்கையினால் சொல்லுவார் வினை போமே–1-6-11 | ஆள் கொள்ள,Aal Kolla - (அனைவரையும்) அடிமை கொள்வதற்காக தோன்றிய,Thonriya - திருவவதரித்த ஆயர் தம் கோவினை,Aayar Tham Kovinai - இடையர்களுக்குத் தலைவனான கண்ணனிடத்தில் வேட்கையினால்,Vetchaiyinaal - ஆசையினால் நாள்,Naal - எந்நாளிலும் கமழ்,Kamazh - மணம் வீசுகின்ற பூ,Poo - புஷ்பங்கள் வீசுகின்ற பொழில்,Pozhil - சோலைகளை யுடைய வில்லிபுத்தூர்,Villipuththur - ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த பட்டன்,Pattan - பெரியாழ்வார் சொன்ன,Sonna - அருளிச் செய்த சப்பாணி ஈர் ஐந்தும்,Sappani Eer Aindhum - சப்பாணி கொட்டுதலைக் கூறிய பத்துப் பாசுரங்களையும் வேட்கையினால்,Vetchaiyinaal - இஷ்டத்தோடு சொல்லுவார்,Solluvaar - ஓதுகிறவர்களுடைய வினை,Vinai - பாபங்கள் போம்,Pom - அழிந்து போம். |