திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 10-4 சார்வேதவநெறி (11 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3700திருவாய்மொழி || (10-4—சார்வேதவநெறி) (ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல்) (உபய விபூதி நாதனாயிருந்துவைத்துப் பத்துடையடியவர்க் கெளிப்பனான எம்பெருமானுடைய திருவடிகள் பக்தியோக ஸுலபமென்கிறார்.) 1
சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள் கார்மேக வண்ணன் கமல நயனத்தன் நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான் பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே–10-4-1
பதவுரை Show / Hide
கார்மேகம் வண்ணன்,Kaarmegam vannnan - காளமேக நிறத்தனாய்
கமலம் நயனத்தன்,Kamalam nayanathan - செந்தாமரைக் கண்ணாய்
தமோதரன்,Damodharan - தம்பாலே கட்டுண்டு அடியவர்க்கெளியனானவனுடைய
நீர்வானம் மண் எர் கால் ஆய் நின்ற,Neervaanam man er kaal aay nindra - பஞ்பூதஸவரூபியாய்
நேமியான்,Nemiyann - திருமொழியை யுடையனாய்
தாள்கள்,Thaalgal - திருவடிகளானவை
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையன்,Per vaanavargal pithattrum perumaiyan - பெரிய வானவர்களான நத்திய ஸூதிகள் வாய்வெருவும்படியான பெருமையை யுடையனாய் ( இப்படி உபய விபூ நாதனாய் வைத்து)
தவ நெறிக்கு,Thava nerikku - பக்தி மார்க்கத்திற்கு.
சார்வே,Saarve - எளியனவாம்
3701திருவாய்மொழி || (10-4—சார்வேதவநெறி) (ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல்) (கீழ்ப்பாட்டில் தாள்கள் தவநெறிக்குச் சார்வே * என்று பொதுப்படையாக அருளிச் செய்தார்; அது தம்மளவில் பலித்தபடியை யருளிச்செய்கிறார் இப்பாட்டுத் தொடங்கி.) 2
பெருமையனே வானத்து இமையோர்க்கும் காண்டற் கருமையனே ஆகத் தணை யாதார்க்கு என்றும் திரு மெய்யுறைகின்ற செங்கண் மால் நாளும் இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றானே–10-4-2
பதவுரை Show / Hide
வனத்து இமையோர்க்கும் பெருமையன்,Vanathu imaiyorkkum perumaiyan - மேலுலகங்களிலுள்ள பிரமன் முதலானாரினும் பெருமை பெற்றவனாய்
என்றும் திருமெய் உறைகின்ற,Endrum thirumey uraiginra - எப்போதும் பிராட்டியானவள் தன் திருமேனியிலேயே வாழப் பெற்ற புண்டழீகாக்ஷன்
ஆகத்து அணையாதார்க்கு,Aagathu anaiyaadhaarkku - அவன் திருவுள்ளத்திலே கொள்ளப் பெறாதவர்ககு
செம் கண் மால் இங்கு இருமைவினை கடிந்து,Sem kan maal ingu irumaivinai kadindhu - இவ்விபதியிலே புண்யபாப ரூப உபய கருமளையும் போக்கி
காண்டற்கு அருமையன்,Kaandarku arumaiyan - காண முடியாதிருப்பவனாய்
நாளும் என்னை ஆள்கின்றான்,Naalum ennai aalkinraan - நாடோறும் என்னை அடிமைகொள்ளா நின்றான்
3702திருவாய்மொழி || (10-4—சார்வேதவநெறி) (ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல்) (எம்பெருமானுடைய திருவடிகளைச் சென்னிக்கணியாகக் கொண்டு அநுபவிக்கப் பெறேன்; இன ஸம்ஸாரம் மறுவலிடாது; என்னகுறை யுண்டென்கிறார்.) 3
ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறை உடையம் மீள்கின்றதில்லை பிறவித் துயர் கடிந்தோம் வாள் கெண்டை ஒண் கண் மடப்பின்னை தன் கேள்வன் தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே–10-4-3
பதவுரை Show / Hide
ஆழியான் ஆழ்கின்றான்,Aazhiyaan aazhinraan - கையுந் திருவாழியுமான பெருமாள் காத்தருளா நின்றான்;
வாள் கெண்டை ஒண் கண்,Vaal kendai on kan - ஒளியையுடைய கெண்டை போன்றழகிய கணகளையுடையளாய்
பிறவி துயர் கடிந்தோம் (அதனாலே),Piravi thuyar kadindom (adhanaale) - பிறவித் துன்பங்கள் தொலையப் பெற்றோம்;
மடம் பின்னை தன் கேள்வன்,Madam pinnai than kelvan - குணவதியான நப்பின்னைக்கு நாயகனானவனுடைய
மீள்கின்றது இல்லை,Meelginrathu illai - இன ஸம்ஸார ஸம்பந்தம் மறுவலிடாது;
தாள் கண்டு கொண்டு,Thaal kandu kondu - திருவடிகளை ஸாக்ஷாத்கர்த்து
ஆரால் குறை உடையம்,Araal kurai udaiyam - இன ஆரைக் கொண்டு காரிய முடையோம்.
என் தலை மேல் பினைந்தேன்,En thalai mel pinaindean - ( அத் திருவடிகளை) என் தலை மீது அணியப் பெற்றேன்.
3703திருவாய்மொழி || (10-4—சார்வேதவநெறி) (ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல்) (அவன் திருவடிகளை நான் தலைமேல் பிணைந்தபடி கிடக்கட்டும்; அவன்றான் என் ஹ்ருதயத்திஎட்ளளே வந்து புகுகைக்கு க்ருஷி பண்ணின படியையும் அந்த’க்ருஷி பலித்தவாறே அவன் க்ருத’ருத்யனாயிருக்கிறபடியையும் கண்டு நான் களிக்கின்றே னென்கிறார்.) 4
தலை மேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின் இலைமேல் துயின்றான் இமையோர் வணங்க மலைமேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை நிலை பேர்க்கல் ஆகாமை நிச்சித்து இருந்தேனே–10-4-4
பதவுரை Show / Hide
சரணங்கள் தலை மேல் புனைந்தேன்,Saranangal thalai mel punaindean - அவன் திருவடிகளை என் தலை மேலணிந்து கொண்டேன்;
என் மனத்துள் இருந்தானை,En manathul irundhaanai - என்னெஞ்சினுள்ளே புகுந்திருப்பவனுமான எம்பெருமானை
ஆலின் இலை மேல் துயின்றான்,Aalin ilai mel thuyindraan - ஆலிலையில் கண் வளர்ந்தவனும்,
நிலை பேர்க்கல் ஆகாமை,Nilai perkall aakamaai - இந்நிலையில் நின்றும் மாற்ற வொண்ணாமையை
இமையோர் வணங்க மலை மேல் தான் நின்று,Imaiiyor vananga malai mel thaan nindru - நித்யஸூரிகள் வணங்கும்படி திருமலையிலெழுந்தருளி நின்று (ஸமயம் பார்த்து)
நிச்சித்திருந்தேன,Nischithirundhean - திணணமாக வெண்ணியிரா நின்றேன்.
3704திருவாய்மொழி || (10-4—சார்வேதவநெறி) (ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல்) (இப்பாட்டில் “கள்வம் பெரிதுடையன்” என்பது உயிர்நிலையான வாசகமாயிருக்கும். அப்பெருமான் என்திறத்தில் செய்தருள நினைத்திருக்குமவை ஒரு வராலறியப்போமோ? என்கிறார்.) 5
நிச்சித்து இருந்தேன் என் நெஞ்சம் கழியாமை கைச் சக்கரத்து அண்ணல் கள்வம் பெரிது உடையவன் மெச்சப் படான் பிறர்க்கு மெய் போலும் பொய் வல்லன் நச்சப் படும் நமக்கு நாகத்து அணையானே–10-4-5
பதவுரை Show / Hide
என நெஞ்சம் கழியாமை,Ena nenjam kazhiyaamai - எனது நெஞ்சைவிட்டு அகலாதபடியான தன்மையை
பிறர்க்கு மெச்சப்படான்,Pirarkku mechappadaan - பிறர்க்குத் தனது குணங்களைக் காட்டிக் கொடாதவனாய்
நிச்சித்திருந்தேன்,Nischithirundhean - நிச்சயித்திருந்தேன்
கை சக்கரத்து அண்ணல,Kai sakkarathu annala - திருக்கையிலே திருவாழியைக் கொண்ட ஸ்வாமி
மெய் போலும் பொய் வல்லன்,Mey polum poy vallan - மெய் செய்வாரைப்போலே பொய் செய்ய வல்வலனாய்
கள்வம் பெரிது உடையன்,Kalvam peridhu udaiyan - நாமறியாதன பலவும் பாரியா நின்றான்
நாகத்து அணை யான் நமக்கு நச்சப்படும்,Naagathu anai yaan namakku nachchappadum - சேஷசாயியானவன் நமக்கு ப்ராப்யனாவன்.
3705திருவாய்மொழி || (10-4—சார்வேதவநெறி) (ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல்) (இன்று வந்து அடிமைபுக்காரையும் “அல்வழக்கொன்று மில்லாவணி கோட்டியர் கோனபிமானதுங்கன் செல்வனைப் போலத் திருமாலே நானுமுனக்குப் பழவடியேன்” என்று சொல்லும்படி நித்யாச்ர்தரைப் போலே விஷயீகாரிக்குமவன் திருவடிகளிலே விழப்பெற்றே னென்கிறார். 6
நாகத்து அணையானை நாள்தோறும் ஞானத்தால் ஆகத்து அணைப்பார்க்கு அருள் செய்யும் அம்மானை மாகத்து இளம் மதியம் சேரும் சடையானைப் பாகத்து வைத்தான் தன் பாதம் பணிந்தேனே–10-4-6
பதவுரை Show / Hide
நாகம் அணையானை,Naagam anaiyaanai - சேஷசயன்னாய்
மாகத்து இளமதியம் சேரும் சடையானை,Maagathu ilamadhiyam serum sadaiyaanai - ஆகாசத்திலுள்ள இளம் பிறை தங்குகின்ற சடையையுடைய சிவனை
ஞானத்தால் ஆகத்து அணைப்பார்க்கு,Gnaanathaal aagathu anaipparkku - பக்தியாக வடிவெடுத்த ஞானத்தினால் நெஞ்சிலே வைத்து அநுபவிக்கும் முமுக்ஷீக்களுக்கு
பாகத்து வைத்தான் தன்,Paagathu vaiththaan than - தன் திருமேனியிலொரு பக்கத்திலே வைத்தவனான பகவானுடைய
நாள்தோறும்,Naalthorum - எப்போதும்
அருள் செய்யும்,Arul seyyum - அருள்செய்கின்ற ஸ்வாமியாய்
பாதம் பணிந்தேன்,Paadham panindean - திருவடிகளை வணங்கப் பெற்றேன்
3706திருவாய்மொழி || (10-4—சார்வேதவநெறி) (ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல்) (நம் விரோதிகளைப் போக்கி அடிமை கொள்ளுமவனான அப்பெருமானை இடைவீடின்றியநுவிக்குமாறு திருவுள்ளத்தை நோக்கி யருளிச் செய்கிறார்.) 7
பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும் மணி நின்ற சோதி மது சூதன் என் அம்மான் அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே–10-4-7
பதவுரை Show / Hide
மணிநின்ற சோதி,Maninindra sothi - நீலரத்னத்தை யொத்த தேஜஸ்ஸை யுடையனாய்
பிறவி கெடுத்து ஆளும்,Piravi kedutthu aalum - நம்பிறவித் துன்பத்தைப் போக்கி அடிமை கொண்டருள்பவன்
மதுசூதன்,Madhusoodhan - விரோதி நிரஸந சீலனாய்
என் அம்மான்,En ammaan - அஸ்மத் ஸ்வாமியாய்
அணி நின்ற செம்பொன் அடல் ஆழியான்,Ani nindra sempon adal aazhiyaan - தானே ஆபரணமாகப் போரும்படியாய்ச் சிவந்த பொன்போலே ஸ்ப்ருஹணீயனாய் மிடுக்கையுடையனான திருவாழியாழ்வானைக் கையிலேந்தினவனான பெருமான்
பிணி ஒன்றும் சாரா,Pini ondrum saaraa - ஸம்ஸாரக்லேசமொன்றும் தட்டாது
பரமபரம்பரணை நெஞ்சே நாளும் பணி,Paramaparamparanai nenje naalum pani - (ஆன பின்பு) அப்பரமபுருஷனை நெஞ்சமே! நித்யமும் வணங்கி யநுபவி
3707திருவாய்மொழி || (10-4—சார்வேதவநெறி) (ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல்) (கீழ்ப்பாட்டில் “பணி நெஞ்சே! நாளும்” என்றவாறே உகந்திருந்தது நெஞ்சு; அதனைக் கொண்டாடி அவனை இடைவிடாதே அநுபவியென்கிறார்.) 8
ஆழியான் ஆழி யமரர்க்கும் அப்பாலான் ஊழியான் ஊழி படைத்தான் நிரை மேய்த்தான் பாழி யம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள் வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய்–10-4-8
பதவுரை Show / Hide
ஆழியான்,Aazhiyaan - சக்ரபாணியாய்
ஆழி அமரர்க்கும் அப்பாலான்,Aazi amararkkum appaalaan - கம்பீரர்களான நித்யஸூரிகளுக்கும் நிலமல்லாத மேன்மையையுடையனாய்
பாழிஅம் தோளால் வரை எடுத்தான்,Paazhiam tholaal varai eduththaan - (அப்பசுக்களுக்கு ஆபத்து வந்தபோது) மிடுக்குடைய அழகிய திருத்தோளாலே மலயை யெடுத்துக் காத்தவனான பெருமானுடைய
ஊழியான்,Oozhiyaan - ப்ரளயகாலத்தில் தானொரு வனெயுளனாய்
பாதங்கள்,Paadhangal - திருவடிகளை
ஊழிபடைத்தான்,Oozhipadaiththaan - காலம் முதலிய சகல பதார்த்தங்களையும் ஸங்கல்பித்தவனாய்
என் நெஞ்சே மற வாது வாழ் கண்டாய்,En nenje mara vaadhu vaazh kandaai - என் மனமே! ஒரு போதும் மறவாமல் நித்யாநுபவம் பண்ணி வாழ்வாயாக.
நிரைமேய்த்தான் பசுக்களை ரஷித்தவனாய்,Niraimeiththaan pasukkalai rashiththavanaai - வாழி இவ்வாழ்ச்சி நித்யமாயிடுக
3708திருவாய்மொழி || (10-4—சார்வேதவநெறி) (ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல்) (“ஜந்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோஜ்ஞாநஸமாதிபி:, நாராணாம் ஷிணபாபாநாம் க்ருஷ்ணே பக்தி: ப்ரஜாயதே” என்றும், “ஒன்றியொன்ற நற்றவஞ்செய்து ஊழியூழிதோறெலாம் நின்று நின்றவன் குணங்களுள்ளி யுள்ளந் தூயராய், சென்று சென்று தேவதேவர் ளும்பரும்பரும்பராய், அன்றி யெங்கள் செங்கண் மாலை யாவர்காண வல்லரே” என்றும் சொல்லுகிறபடியே நெடுங்காலம் பாரிச்ரமப்பட்டுப் பெறவேண்டுமவனை அவருடைய நிர்ஹேதுக க்ருபையாலே காணப்பெற்றே னென்கிறார்.) 9
கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம் தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக பண்டே பரமன் பணித்த பணி வகையே–10-4-9
பதவுரை Show / Hide
தொண்டே செய்து,Thonde seydhu - பரபக்தி முதலியவற்றைப் பண்ணி
கமலம்மலர்பாதம் கண்டேன்,Kamalammalarpaadham kandean - (அவனன்றனது) பாதாரவிந் தங்களைக்காணப்பெற்றேன்
என்று தொழுது வழியெழுக,Endru thozhudhu vazhiyezhuga - நித்ய கைங்காரியத்தைச் செய்து அதுவே யாத்திரையாய்ச் சொல்லும்படி
காண்டலுமே,Kaandalumae - கண்டபோதே
பண்டே,Pande - ஏற்கனவே (கீதாசாரியனானவப் போதே)
வினை ஆயின எல்லாம்,Vinai aayina ellaam - விரோதியேன்று பேர் பெற்றவை யெல்லாம்
பரமன் பணித்த பணி வகையே,Paraman panitha pani vagaiyae - ஸர்வேச்வரன் (ஸர்வஸாதாரணமாக) அருளிச் செய்த பாசுலரத்தின்படியே
விண்டே ஒழிந்த,Vindae ozhindhu - வாஸனையோடே விட்டுப் போயின
3709திருவாய்மொழி || (10-4—சார்வேதவநெறி) (ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல்) (ப்ரயோஜநாந்தரரர்களோ, உபாயாந்தர நிஷ்டர்களோ, ப்ரபந்தர்களோ யாராயினும் யாவாக்கும் எம்பெருமானே உபாயமென்று தலைக்கட்டுகிறார்.) 10
வகையால் மனம் ஒன்றி மாதவனை நாளும் புகையால் விளக்கால் புது மலரால் நீரால் திசை தோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற தகையான் சரணம் தமர்கட்கு ஓர் பற்றே–10-4-10
பதவுரை Show / Hide
வகையால் மனம் ஒன்றி,Vagaiyaal manam onri - சாஸ்திரங்களிற் சொல்லுகிறபடியே நெஞ்சையொருங்கப் பிடித்து
திசை தோறு அமரர்கள் சென்று இறைஞ்சநின்ற,Thisai thoaru amarargal sendru irainjanindra - நின்ற நின்ற திக்குக்கள் தோறும் பிரமன் முதலிய தேவர்கள் வந்து பணியும் படியான,
மாதவனை,Maadhavanai - திருமாலான தன்னை
நாளும்,Naalum - காலந்தோறும்
தகையான்,Thagaiyaan - ஸ்வபாவத்தையுடையனான எம்பெருமானுடைய
புது புகையால் விளக்கால் மலரால் நீரால்,Puthu pugaiyaal vilakkaal malaraal neeraal - விலக்ஷணமான தூப தீப புஷ்ப தீர்த்தங்களாலே
சரணம்தமர்கட்கு ஓர் பற்று,Saranamthamar kadku or patru - திருவடிகள் பக்தர்களுக்குச் சிறந்த புகலிடம்
3710திருவாய்மொழி || (10-4—சார்வேதவநெறி) (ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல்) (இத் திருவாய்மொழியைக் கற்றார்க்கு எம்பெருமான் திருவடிகள் ஸுலபமாமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11
பற்று என்று பற்றி பரம பரம்பரனை மல் திண் தோள் மாலை வழுதி வள நாடன் சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும் கற்றார்க்கு ஓர் பற்றாகும் கண்ணன் கழலிணையே–10-4-11
பதவுரை Show / Hide
பரம பரம்பரனை,Parama paramparanai - பராத்பரனையும்
தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள்,Thodai anthaadhi or aayirathul - அந்தாதித் தொடையான ஆயிரத்தினுள்
மல் திண் தோள்,Mal thin thol - மிடுக்குப் பொருந்திய திருத்தோள்களை யுடையனாயிமிருக்கிற
இப் பத்தும் கற்றார்க்கு,Ip paththum katraarkku - இப்பதிகத்தைப் பயின்றவர்களுக்கு
மாலை,Maalai - ஸர்வேச்வரனை
பற்று என்று பற்றி,Patru endru patri - தமக்குப் புகலாக வுறுதி யிட்டு
கண்ணன் கழல் இணை ஓர் பற்று,Kannan kazhal inai or patru - கண்ணனது உபயபாதங்கள்
வழுதி வளநாடன் சொல்,Vazhudhi valanaadan sol - ஆழ்வார் அருளிச்செய்த
ஆகும்,Aagum - ஒப்பற்ற ப்ராப்யமாகும்.