திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1962 | பெரிய திருமொழி || (11-2–குன்றமெடுத்து) - (தலைவி பிரிவு ஆற்றாத வருந்திக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத்தால் சொல்லிற்று ஆயிற்று என் என் அவனை என் முலையோடு கொடு வந்து சேர்க்க வல்லார் இல்லையோ -என்கிறாள்) 1 | குன்றம் எடுத்து மழை தடுத்து இளையரோடும்
மன்றில் குரவை பிணைந்த மால் என்னை மால் செய்தான்
முன்றில் தனி நின்ற பெண்ணை மேல் கிடந்தீர்கின்ற
அன்றிலின் கூட்டைப் பிரிக்க கிற்பவர் ஆர் கொலோ –11-2-1 | பதவுரை Show / Hideகுன்றம், Kundram - கோவர்த்தனமலையை எடுத்து, Eduthu - குடையாக வெடுத்துப்பிடித்து மழை தடுத்து, Mazhai Thaduthu - மழையைத்தடை செய்தவனாயும் இளையாரொடும், Ilaiyarodum - இளம் பெண்களோடே மன்றில், Manril - நாற்சந்தியிலே குரவை பிணைந்த, Kuravai Pinaintha - கைகோத்துக் குரவைக் கூத்தாடினவனாயுமுள்ள மால், Maal - கண்ணபிரான் என்னை மால் செய்தான், Ennai Maal Seithaan - என்னை மதிமயங்கப் பண்ணிவிட்டான் முன்றில், Munril - வாசலிலே தனி நின்ற, Thani Nindra - தனியேநின்ற பெண்ணைமேல், Pennai Mel - பனைமரத்தின் மீது கிடந்து, Kidandhu - இருந்துகொண்டு ஈர்கின்ற, Eerkingira - ஹிம்ஸிக்கின்ற அன்றிலை, Anrilai - அன்றிற்பறவையை கூட்டின், Koottin - கூட்டில் நின்றும் பிரிக்ககிற்பவர் ஆர்கொலோ, Pirikkakirbavar Arkoloo - பிரித்துவிடவல்லவர் யாரோ? (அறியேன்) |
| 1963 | பெரிய திருமொழி || (11-2–குன்றமெடுத்து) - (தலைவி பிரிவு ஆற்றாத வருந்திக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இந்த இடையனானவன் வாயிலே வைத்து-ஸ்த்தானே சத்தான நின்று ஏங்கி ஊதுகிற குழலானது என்னோடே பாலிசமான வியாபாரங்களை பண்ணா நின்றது) 2 | பூங்குருந்து ஒசித்தானை காய்ந்தரிமா செகுத்து
ஆங்கு வேழத்தின் கொம்பு கொண்டு வன் பேய் முலை
வாங்கி யுண்ட வவ்வாயன் நிற்க விவ்வாயன் வாய்
ஏங்கு வேய்ங்குழல் என்னோடு ஆடும் இளைமையே –11-2-2 | பதவுரை Show / Hideபூ குருந்து ஓசித்து, Poo Kurunthu Osiththu - பூத்திருந்த குருந்தமரத்தை முறித்தொழித்தவனாயும் ஆனை காய்ந்து, Aanaik Kaayndhu - ரிஷபங்களைச் சீறிமுடித்தவனாயும் அரி மா, Ari Maa - (கேசியென்ற) சத்துருவான குதிரையை செகுத்து, Sekuthu - கொன்றவனாயும் ஆங்கு, Aangu - கம்ஸனது அரண்மனை வாசலிலே வேழத்தின், Vezhaththin - குவலயாபீடமென்கிற யானையினுடைய கொம்பு கொண்டு, Kombu Kondo - தந்தத்தைப் பறித்தெறிந்தவனாயும் வன்பேய், Vanpei - (பூதனையென்னும்) வலிய பேய்ச்சியினுடைய முலை, Mulai - (நஞ்சு தீற்றிய) முலையை வாங்கி, Vaangi - கையிற்பிடித்து உண்ட அவ் வாயன், Unda Av Vayan - உறிஞசியுண்ட அப்படிப்பட்ட திருப்பவளத்தை யுடையவனாயுமிருக்கிற கண்ணபிரான் நிற்க, Nirka - உதாஸீநனாயிருக்க ஆயன், Aayan - அந்த கோபாலகிருஷ்ணனுடைய வாய், Vaai - வாயிலே ஏங்கு, Aengu - ஒலிக்கின்ற இ வேய் குழல், I Vei Kuzhal - இந்த வேய்ங்குழலானது என்னோடு, Ennodu - என்திறத்திலே இளைமை ஆடும், Ilaiyai Aadum - சில சிறுச்சேவகங்கள் செய்யாநின்றது! |
| 1964 | பெரிய திருமொழி || (11-2–குன்றமெடுத்து) - (தலைவி பிரிவு ஆற்றாத வருந்திக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அப்போது இட்ட வெற்றி மாலையை பெற வேணும் என்று ஆசைப் பட்டத்தையே நினைத்துக் கொண்டு இருக்கிற என்னை – சந்த்யா சமயத்திலே தென்றல் ஆனது வந்து நலியா நின்றது –அதுக்கு மேலே – வெளி நிலத்தில் நாகைத் தொடர்ந்து-அது கை புகுந்தால் அல்லது மீளாத படி இருக்கிற வ்ருஷத்தின் உடைய கழுத்தில் மணி யோசையானது ஆராட்சி இல்லாத இடத்தில் செயலைச் செய்யா நின்றது) 3 | மல்லொடு கஞ்சனும் துஞ்ச வென்ற மணி வண்ணன்
அல்லி மலர்த் தண் துழாயை நினைந்து இருந்தேனையே
எல்லியின் மாருதம் வந்தடும் அதுவன்றியும்
கொல்லை வல்லேற்றின் மணியும் கோயின்மை செய்யுமே –11-2-3 | பதவுரை Show / Hideமல்லொடு, Mallodu - மல்லர்களும் கஞ்சனும், Kanjanum - கம்ஸனும் துஞ்ச, Thunja - முடியும்படி வென்ற, Vendru - வெற்றிபெற்ற மணி வண்ணன், Mani Vannan - நீலமணிவண்ணனான கண்ணபிரானுடைய அல்லி தண் துழாய் மலரையே, Alli Than Thuzhai Malaraie - இதழ்களை யுடையதாய்க்குளி திருந்துள்ள திருத்துழாய் மாலையையே நினைந்திருந்தேனை, Ninaindhirundhenai - சிந்தித்துக்கொண்டிருக்கின்ற என்னை எல்லியில் மாருதம், Elliyil Maarudham - அந்திப்போதில் வீசும் காற்றானது வந்து, Vandhu - நானிருக்குமிடத்தில்வந்து வீசி அடும், Adum - நலிகின்றது அது அன்றியும், Athu Anriyum - அதுவுந்தவிர கொல்லை வல் ஏற்றின் மணியும், Kollai Val Aetrin Maniyum - வெளி நிலங்களில் நின்றும் மீண்டுவருகிற வலியகாளைகளின் கழுத்து மணியோசையும் கோயின்மை செய்யும், Koyinmai Seyyum - தெந்தரவுபடுத்தாநின்றது. |
| 1965 | பெரிய திருமொழி || (11-2–குன்றமெடுத்து) - (தலைவி பிரிவு ஆற்றாத வருந்திக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவருடைய ஐஸ்வர்ய பிரகாசமான திருவடிகளை அனுசந்திக்கும் போது எல்லாம் – கறுத்த தன்மையை உடைத்தாய் இருக்கிற கடல் ராத்ரியிலே என் எளிமை கண்டு மிகைத்து கூப்பிடா நிற்கும் – அதுக்கு மேலே –நான் வருந்தும் படியாக பலவானாய் இருக்கிற வாடையானது வாரா நின்றது – ஓர் அபலை இதுக்கு கடகிடவோ) 4 | பொருந்து மா மரம் ஏழு எய்த புனிதனார்
திருந்து சேவடி என் மனத்து நினைதொறும்
கரும் தண் மா கடல் கங்குல் ஆர்க்கும் அதுவன்றி
வருந்த வாடை வரும் இதற்கு இனி என் செய்கேன் –11-2-4 | பதவுரை Show / Hideபொருந்து, Porundhu - தம்மில்தாம் பொருந்திநின்ற மாமரம் ஏழும் எய்த, Mamaram Ezham Eytha - பெரிய ஸாலவ்ருக்ஷங்களேழையும் அம்புசெலுத்தித் துளைபடுத்தின புனிதனார், Punithanar - பரமபாரிசுத்தரான பெருமாளுடைய திரு உந்து, Thiru Unthu - ஐச்வர்ய ப்ரகாசமான சே அடி, Sae Adi - திருவடிகளை என் மனத்து, En Manathu - என் நெஞ்சிலே நினை தொறும், Ninai Thorum - அநுஸந்திக்கும் போதெல்லாம் கரு தண்மா கடல், Karuthu Thanma Kadhal - கறுத்துக் குளிர்ந்து பெரிதான கடலானது கங்குல், Kangul - இரவுமுற்றும் ஆர்க்கும், Aarkkum - ஆரவாரிக்கும் அது அன்றியும், Athu Anriyum - அதுவுந் தவிர வாடை, Vadai - வாடைக் காற்றும் வருந்த, Varuntha - நான் பரிதபிக்கும்படியாக வரும், Varum - வந்து வீசுகின்றது இதற்கு, Idharku - இதற்குப் பாரிஹாரமாக இனி என் செய்கேன், Ini En Seyken - இனி என்ன பண்ண வல்லேன் |
| 1966 | பெரிய திருமொழி || (11-2–குன்றமெடுத்து) - (தலைவி பிரிவு ஆற்றாத வருந்திக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்கு வல்லபரான அவர் இடையாட்டாத்தோமான பின்பு இறே இவை நமக்கு இப்படியாகப் புகுந்தது – அவருடைய பிரணயித்வம் கண்டு நாம் அகப்பட்ட பின்பு இறே- இவை நமக்குப் பாதகமாகப் புக்கது – பூர்வ அபராதங்களுக்கு சேர்த்தி போராதாகிலும் ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் -பின்னை மணாளன் திறத்தோம் ஆன பின்பு அன்றோ-இவை இப்படி யாயிற்று – சாமான்யன் என்று ஈடும் ஈடெல்லாம் இட அமையும் என்பாரைப் போலே அவளோடு ஒரு சம்பந்தம் சொல்லி நலிகிறவை நலிந்தால் என்-என்பாராம்) 5 | அன்னை முனிவதும் அன்றிலின் குரல் ஈர்வதும்
மன்னு மறி கடல் ஆர்ப்பதும் வளை சோர்வதும்
பொன்னம் கலை அல்குல் அன்னம் மென்னடைப் பூங்குழல்
பின்னை மணாளர் திறத்த மாயின பின்னையே –11-2-5 | பதவுரை Show / Hideஅன்னை முனிவதும், Annai Munivadhum - பெற்றதாய் சீறிச் சொல்லுவதும் (- (அதற்கு முன்பு இல்லை)) அன்றிலின் குரல் ஈர்வதும், Anrilin Kural Eirvadhum - அன்றிற்பறவையின்குரல் ஹிம்ஸிப்பதும் மன்னு மறிகடல் ஆர்ப்பதும், Mannu Marikadal Aarpadhum - எப்போதும் அலைமடியப் பெற்ற கடல் கோஷிப்பதும் வளை சோர்வதும், Valai Soorvadhum - கைவளைக்ள கழல்வதும் (ஆகிய இவையெல்லாம்) அம், Am - அழகிய பொன் கலை, Pon Kalai - பொன்னாடையணிந்த அல்குல், Alkul - நிதம்பத்தையுடையவளும் அன்னம் மென் நடை, Annam Men Nadai - அன்னத்தின்நடை போன்று அழகிய நடையையுடையவளும் பூ குழல், Poo Kuzhal - பூவணிந்த கூந்தலை யுடையவளுமான பின்னை, Pinnai - நப்பின்னைப் பிராட்டியின் மணாளர், Manalar - நாயகரான கண்ணபிரானுடைய திறத்தம் ஆயின பின்னையே, Thiraththam Aayin Pinnaiye - விஷயத்தில் ஈடுபட்டோ மானபிறகே |
| 1967 | பெரிய திருமொழி || (11-2–குன்றமெடுத்து) - (தலைவி பிரிவு ஆற்றாத வருந்திக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கோழியும் கூகின்றது இல்லை –விடிவுக்கு பிராப்தமான இதுவும் கூட அரிதாக நின்றது – கூர் இருள் ஆயிற்றே –விடிந்த பின்பும் இருள் கால் வாங்குகிறது இல்லை) 6 | ஆழியும் சங்கும் உடைய நாங்கள் அடிகள் தாம்
பாழிமையான கனவில் நம்மைப் பகர்வித்தார்
தோழியும் நானும் ஒழிய வையம் துயின்றது
கோழியும் கூகின்றது இல்லை கூர் இருள் ஆயிற்றே –11-2-6 | பதவுரை Show / Hideஆழியும் சுங்கும் உடைய, Azhiyum Sungum Udaiya - திருவாழி திருச்சங்குகளை யுடையரான நங்கள் அடிகள் தாம், Nangal Adigal Thaam - அஸ்மத்ஸ்வாமியான ஸர்வேச்வரன் நம்மை, Nammai - நம்மை பாழிமையான கனவின், Pazhimaiyana Kanavin - மிகப்பெரிதாய் ஸ்வப்நதுல்யமான ஸம்ச்லேஷத்தினால் பகர்வித்தர், Pakarviththar - இப்படி கூப்பிடும்படியாகச் செய்துவிட்டார் தோழியும் நானும் ஒழிய, Thozhiyum Naanum Ozhiy - தோழியும் நானும் தவிர வையம், Vaiyam - மற்ற உலகத்தாரெல்லாரும் துயின்றது, Thuyinrathu - உறங்கிவிட்டார்க்ள் கோழியும், Kozhiyum - கோழிகூட கூகின்றது இல்லை, Kookindrathu Illai - (விடிவுக்கு அறிகுறியாகக்) கூவுகினறதில்லை கூர்இருள் ஆயிற்றே இன்னமும், Koorairul Aayitree Innamum - நள்ளிருளா யிருக்கின்றதே! |
| 1968 | பெரிய திருமொழி || (11-2–குன்றமெடுத்து) - (தலைவி பிரிவு ஆற்றாத வருந்திக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அந்த காமன் -எனக்கு நன் மகன் –சாமங்கள் தோறும் காமாக்னியை தூவா நின்றான் – தனக்கு நான் அனுவர்த்த நீயையான ஆகாரம் கிடக்கச் செய்தே என்னுடைய இம்முலைகள் தாம் அவனுக்கு என்றே யாயிற்று வளருகிறது) 7 | காமன் தனக்கு முறை யல்லேன் கடல் வண்ணனார்
மா மணவாளர் எனக்குத் தான் மகன் சொல்லில்
யாமங்கள் தோறும் எரி வீசும் என்னிளம் கொங்கைகள்
மா மணி வண்ணர் திறத்தவாய் வளர்கின்றவே –11-2-7 | பதவுரை Show / Hideகாமன் தனக்கு முறை அல்லேன், Kaaman Thanakku Murai Allae - மன்மதனால் நான் நலியப்பெறுதற்கு முறையுடையே னல்லேன் சொல்லில், Sollil - ஏனென்னில் கடல் வண்ணனார், Kadal Vannanaar - கடல்வண்ணரான கண்ணபிரான் எனக்கு மா மணவாளர், Enakku Maa Manavaalar - எனக்குச்சிறந்த நாயகராயிருக்கின்றார் (இவ்வழியாலே) தான், Thaan - அந்த மன்மதன் தான் எனக்கு மகன், Enakku Magan - எனக்கு மகனாகப் பெற்றான் (அப்படியிருந்தும்) யாமங்கள் தோறு, Yaamangal Thoru - எப்போதும் எரி வீசும், Eri Veesum - நெருப்பைத் தூவுகின்றாள் என் இள கொங்கைகள், En Ilai Kongkaigal - எனது இளமுலைகளோ வென்னில் மா மணி வண்ணர் திறத்த ஆய்வளர்கின்ற, Maa Mani Vannaar Thiratha Aayvalarkindra - நீலமணிவண்ணரான அப்பெருமாளை நோக்கியே வளர்கின்றனவாயுள்ளன |
| 1969 | பெரிய திருமொழி || (11-2–குன்றமெடுத்து) - (தலைவி பிரிவு ஆற்றாத வருந்திக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ரஷகன் பாதகன் ஆனவாறே அவன் பரிகரமும் பாதகமாம் அத்தனை ஆகாதே – அவன் பாதகனாய் புக்கவாறே அவனை அனுவர்த்தித்த அவன் பரிகரமும் பாதகமாகப் புக்கது – இவள் சன்னதியிலே வர்த்திக்கில் இவளை அனுவர்த்தித்துக் கொண்டு பிராப்த காலத்தில் விடிய வேணும் என்று நினைத்து அது செய்யாத போன விடம் தெரியாத படி போனான் – இனி இருந்த படியாலே சரீரமானது சிதிலமாய் முடிந்து பிழைக்கும் இத்தனை போக்கி இனி நமக்கு ஜீவிக்கை என்று ஒரு பொருள் இல்லை யாகாதே) 8 | மஞ்சுறு மாலிருஞ்சோலை நின்ற மணாளனார்
நெஞ்சு நிறை கொண்டு போயினர் நினைக்கின்றிலர்
வெஞ்சுடர் போய் விடியாமல் எவ்விடம் புக்கதோ
நைஞ்சுடலம் துயின்றால் நமக்கு இனி நல்லதே –11-2-8 | பதவுரை Show / Hideமஞ்சு உறு, Manju Uru - மேகமண்டலத்தைக் கிட்டி ஓங்கின (சிகரத்தையுடைய) மாலிருஞ் சோலை, Maalirunj Cholai - திருமாலிருஞ் சோலைமலையிலே நின்ற, Nindra - நித்யவாஸம் பண்ணுகிற மணாளனார், Manaalanar - எம்பெருமான் நெஞ்சம், Nenjam - (எனது) நெஞ்சிலுள்ள நின்ற, Nindra - அடக்கத்தை கொண்டு போயினார், Kondu Poyinaar - அபஹாரித்துக்கொண்டு போனவராய் நினைகின்றிலர், Ninaikindrilar - (இத்தலையை) மறந்தொழிந்தார் வெம் சுடர், Vem Sudar - ஸூர்யனானவன் போய், Poi - அஸ்தமித்துப்போய் விடியாமல், Vidiyamal - மறபடியும் உதியாமல் எவ்விடம் புக்கதோ, Evvidam Pukkatho - எங்கே புகுந்தொனித்தாலே இனி, Ini - இப்படியான பின்பு நமக்கு, Namkku - நம்முடைய உடலம், Udalam - சரீரமானது நஞ்சு, Nanju - சிதிலமாகி துயினறால், Thuyinraal - முடிந்துபோமாகில் நல்லது, Nallathu - நன்றாகும் |
| 1970 | பெரிய திருமொழி || (11-2–குன்றமெடுத்து) - (தலைவி பிரிவு ஆற்றாத வருந்திக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் முறை தப்பி நின்றான் – அவன் பரிகரமும் முறை தப்பி நின்றது – இனி நாமும் முறை தப்பி நின்றாகிலும் ஜீவிக்கும் அத்தனை – என்கிறாள்) 9 | காமன் கணைக்கு ஓர் இலக்கமாய் நலத்தின் மிகு
பூமரு கோல நம் பெண்மை சிந்தித்து இராது போய்
தூ மலர் நீர் கொடு தோழி நாம் தொழுது ஏத்தினால்
கார் முகில் வண்ணரைக் கண்களால் காணலாம் கொலோ –11-2-9 | பதவுரை Show / Hideதோழி, Thozhi - வாராய்தோழீ காமன்கணைக்கு, Kaamankanaikku - மன்மதபாணங்களுக்கு ஓர்இலக்கம் ஆய், Oorilakkam Aay - இலக்காகி யிருப்பதனாலே நலத்தின் மிகு, Nalaththin Migu - நன்மைமிக்கதாய் பூமரு, Poomaru - விரும்பத்தக்கதாய் கோலம், Kolam - அழகியதான நம் பெண்மை, Nam Penmai - நமது பெண்மைக்குணத்தை சிந்தித்து, Sindhithu - நினைத்துக்கொண்டு இராது, Irathu - இவ்விடத்திலேயே இருந்திடாமல் போய், Poi - புறப்பட்டுப்போய் கார்முகில் வண்ணரை, Kaarmugil Vannarai - காளமேகச்யாமரான பெருமாளை தூ மலர் நீர் கொடு, Thoo Malai Neer Kodu - பரிசுத்தமான புஷ்பங்களையும் தீர்த்தங்களையும் கொண்டு நாம் தொழுது ஏத்தினால், Naam Thozhudhu Aethinaal - நாம் வணங்கித் துதித்தால் கண்களால் காணல் ஆம் கொலோ, Kangkalal Kaanal Aam Kolo - (அவரை) கண்ணாலே ஸேவிக்கப் பெறலாமோ? |
| 1971 | பெரிய திருமொழி || (11-2–குன்றமெடுத்து) - (தலைவி பிரிவு ஆற்றாத வருந்திக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிராப்தி பிரதிபந்தகமான கர்மங்கள் சில நாள் போய் சில நாள் நிற்கை அன்றிக்கே ஒரு நாளும் ஒன்றும் நில்லாது –இவ்வளவு அன்றிக்கே மேல் பெறப் புகுகிற பேற்றின் கனத்தைச் சொல்லப் புகில் – வருந்தி பனை நிழல் போலே தங்கள் அளவிலே போகை அன்றிக்கே இவர்கள் இருந்த தேசத்திலும் கூட இன்றிக்கே ஒழியும் – பாதக பதார்த்தங்களின் கையிலே நோவு படாதே அவை தானே அனுகூலமாம் படி அவனோடு நித்ய சம்ச்லேஷம் பண்ணப் பெறுவர்) 10 | வென்று விடை யுடன் ஏழு அடர்த்த வடிகளை
மன்றின் மலி புகழ் மங்கை மன் கலி கன்றி சொல்
ஓன்று நின்ற ஒன்பதும் உரைப்பவர் தங்கள் மேல்
என்றும் நில்லா வினை யொன்றும் சொல்லில் உலகிலே –11-2-10 | பதவுரை Show / Hideவென்றி, Vendri - வெற்றியைத் தொழிலாகவுடைய (- (வினை ஒன்றும் நில்லா)) விடை ஏழ், Vidai Ezh - ஏழு ரிஷபங்களை உடன், Udan - உடனே அடர்த்த, Adarttha - திரஸ்காரித்த அடிகளை, Adigalai - எம்பெருமான் விஷயமாக மன்றில் மலி புகழ், Manril Mali Pugazh - நாற்சந்திகளிலே நிறைந்த புகழையுடையரும் மங்கை மன், Mangai Man - திருமங்கை நாட்டுக்குத் தலைவருமான கலிகன்றி, Kalikanri - ஆழ்வார் சொல், Sol - அருளிச்செய்த ஒன்று நின்ற ஒன்பது, Onru Nindra Onbathu - ஒன்றோடே கூடி நின்ற ஒன்பது பாட்டாகிய இத்திருமொழியை உரைப்பவர் தங்கள்மேல், Uraippavar Thangalmel - அநுஸந்திப்பவாக்ளிடத்திலே வினை ஒன்றும், Vinai Onrum - ஒருவகையான கருமமும் என்றும், Endrum - ஒருநாளும் நில்லா, Nilla - நிற்கமாட்டாது சொல்லில், Sollil - இன்னமும்பலனை விவாரித்து சொல்லப்புக்கால் உலகிலே, Ulagile - அவாக்ளிருந்ததேசத்திலுங்கூட |