திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 11-5 மானமரும் (10 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1992பெரிய திருமொழி || (11-5–மானமரும்) (திருச்சாழல்) - (எம்பெருமானது எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிரெதிராகக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (காணேடீ — தோழமையால் ஏடீ -என்கிறது ஆதல் – பிராட்டியைக் கண்ட ப்ரீதியாலே ததிமுகனை குத்தினால் போலேஹர்ஷத்தாலே சொல்லுகிறாள் ஆதல் – இப்படி தன் ஸ்வரூபத்தை அழிய மாறி ஆஸ்ரித ரஷணத்துக்காக கிலேசப் பட்டவன் ஆனால் இவ்வாத்மாவுக்கு ஒரு குறை உண்டோ – அவன் நிரதிசய ஆநந்த பரி பூர்ணனாய் இருக்கிறது நமக்காகவாய் இருந்த பின்பு இவ்வாத்மாவுக்கு ஒரு குறை உண்டோ) 1
மானமரும் மென்னோக்கி வைதேவியின் துணையா கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்தான் காணேடீ கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த பொன்னடிகள் வானவர் தம் சென்னி மலர் கண்டாய் சாழலே –11-5-1
பதவுரை Show / Hide
ஏ, E - தோழீ! (- (நீ ஏத்திச் சொல்லுகிற புருஷன்) (என்று ஒருத்திசொல்ல) (மற்றொருத்தி அதற்கு மறுமாற்ற முரைக்கிறாள்))
மான் அமரும், Maan Amarum - மானையொத்த
மெல் நோக்கி, Mel Nookki - மென்மையான கண்களை யுடையவளான
கைதேவி, Kaithevi - விதேஹராஜவம்சத்துப் பிறந்தவளான ஸீதையை
இன் துணை ஆ, In Thunai Aa - இனிய துணைவியாகக் கொண்டு
கான் அமரும், Kaan Amarum - காட்டிலே பொருந்திய
போய், Poi - போய்
காடு, Kaadu - காடுகளிலே
உறைந்தான் காண், Uraindhaan Kaan - வாஸம்பண்ணினான் காண்
சாழலே, Saalale - தோழீ!
கான் அமரும் கல் அதர் போய், Kaan Amarum Kal Adhar Poi - காட்டிலே பொருந்திய கல்நிலைந்தவழியே சென்று
காடு, Kaadu - காடுகளிலே
உறைந்த, Uraindha - ஸஞ்சரித்த
பொன் அடிகள், Pon Adigal - திருவடிகளானவை
வானவர் தம், Vaanavar Tham - தேவர்களினுடைய
சென்னி, Sennai - முடியில் (அணியத்தக்க)
மலர் கண்டாய், Malar Kandaai - புஷ்பங்களாயிராநின்றன காண்.
1993பெரிய திருமொழி || (11-5–மானமரும்) (திருச்சாழல்) - (எம்பெருமானது எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிரெதிராகக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ராமன் சௌலப்யம் அனுபவித்தார் முதல் பாசுரத்தில் இது முதல் எட்டாம் பாசுரம் வரை ஸ்ரீ கிருஷ்ணன் சௌலப்யம் அனுபவிக்கிறார் – கர்ம வஸ்யர் உடைய ரஷணத்துக்கு வந்து பிறக்குமவன் ஆகையாலும் அவன் தான் சர்வ காரண பூதன் ஆகையாலும்-நமக்கு ஓர் குறை உண்டோ -என்கிறது) 2
தந்தை தளை கழலத் தோன்றிப் போய் ஆய்ப்பாடி நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் காணேடீ நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் நான் முகற்கு தந்தை காண் எந்தை பெருமான் காண் சாழலே –11-5-2
பதவுரை Show / Hide
ஏடீ, Eadi - தோழீ!
தந்தை, Thandai - தந்தையாகிய வஸுதேவருடைய
தளை, Thalai - கால்விலங்கு
கழல, Kazhala - கழன்று விழும்படியாக
தோன்றி, Thonri - அவதரித்து
போய், Poi - மதுரையில் நின்றும் பெயர்ந்து போய்
ஆய்ப்பாடி, Aayppadi - திருவாய்ப்பாடியில்
நந்தன், Nandan - நந்தகோபருடைய
குலம், Kulam - குலத்திற்கு (க்கொழுந்தான)
மதலை ஆய், Madalai Aay - பிள்ளையாய்
வளர்ந்தான் காண், Valarnthaan Kaan - வளர்ந்தானன்றோ
சாழலே, Saalale - தோழீ!
நந்தன் குலம் மதலை ஆய் வளர்ந்தான், Nandan Kulam Madalai Aay Valarnthaan - இடைப்பிள்ளையாய் வளர்ந்தவன்
நான் முகற்கு, Naan Mugarku - நான் முகனுக்கு
தந்தை காண், Thandai Kaan - தகப்பன் காண்
எந்தை பெருமான் காண், Endhai Perumaan Kaan - என்னுடைய குலநாதன் காண்
1994பெரிய திருமொழி || (11-5–மானமரும்) (திருச்சாழல்) - (எம்பெருமானது எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிரெதிராகக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யம் நேரே கிடையா விட்டால் களவு கண்டாகிலும் ஜீவிக்குமவன் ஆகையாலும் ரஷணத்தில் பர்யாப்தி பிறந்து இராதவன் ஆகிலும் நமக்கு ஒரு குறை உண்டோ) 3
ஆழ் கடல் சூழ் வையகத்தார் ஏசப் போய் ஆய்ப்பாடித் தாழ் குழலார் வைத்த தயிர் உண்டான் காணேடீ தாழ் குழலார் வைத்த தயிர் உண்ட பொன் வயிற்று இவ் வேழ் உலகும் உண்டு இடமுடைத்தால் சாழலே –11-5-3
பதவுரை Show / Hide
ஏடீ, Eadi - தோழீ!
ஆழ்கடல் சூழ் வையகத்தார், Aazhkaadal Sooz Vayakaththaar - ஆழ்ந்தகடலால் சூழப்பட்ட பூமியிலுள்ளாரெல்லாரும்
ஏச, Eesa - ஏசும்படியாக
ஆய்ப்பாடி, Aayppadi - ஏசும்படியாக
தாழ் குழலார் வைத்த, Thaal Kuzhalaar Vaiththa - தாழ்ந்த கூந்தலையுடைய இடைப்பெண்கள் சேமித்து வைத்திருந்த
தயிர், Thayir - தயிரை
உண்டான் காண், Undaan Kaan - வயிறா உட்கொண்டவன்ன்றோ
சாழலே, Saalale - தோழீ!
தாழ் குழலார் வைத்த தயிர் உண்டபொன் வயிறு, Thaal Kuzhalaar Vaiththa Thayir Undapon Vayiru - இடைச்சிகள் வைத்திருந்த தயிரை உட்கொண்ட திருவயிறானது
இஏழ் உலகும் உண்டும், Iyaazh Ulakum Undum - இவ்வுலகங்களை யெல்லாம் அமுது செய்தவளவிலும்
இடம் உடைத்து, Idam Udaiththu - இனன்மும் அவகாசத்தை யுடையதாயிருக்கின்றது.
ஆல், Aal - ஆச்சரியம்
1995பெரிய திருமொழி || (11-5–மானமரும்) (திருச்சாழல்) - (எம்பெருமானது எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிரெதிராகக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் ப்ரவணர் ஆகையாலே அது பின்னாட்டுகிறபடி – மனுஷ்யத்வே பரத்வம் அறியாதார்க்கு தயிரை வருந்திக் கடைந்து உறியிலே சேமித்து வைத்த அன்று கடைந்த வெண்ணெயை உண்டு உகந்தான் – சம்சாரிக்கு பகவல் லாபம் போலே அவனுக்கு இது – இவ் வயிற்றுக்கு கடல் சூழ்ந்த லோகம் அடையப் போராது காண்) 4
அறியாதார்க்கு ஆனாயனாகிப் போய் ஆய்ப்பாடி உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்தான் காணேடீ உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்த பொன் வயிற்றுக்கு ஏறி நீர் உலகனைத்தும் எய்தாதால் சாழலே –11-5-4
பதவுரை Show / Hide
ஏடீ, Eadi - தோழீ!
அறியா தார்க்கு, Ariyaa Thaarakku - ஒன்றுமறியாதவர்களுக்குள்ளே
ஆன் ஆயன் ஆகி, Aan Aayan Aagi - மாடுமேய்க்குமிடைக்குலத்தவனாய்
ஆய்ப்பாடி, Aayppadi - இடைச்சேரியிலே
உறி ஆர், Uri Aar - உறிகளிலே பொருந்தின
நறு வெண்ணெய், Naru Vennyei - மணம்மிக்க வெண்ணெயை
உண்டு, Undu - (களவுசெய்து) உட்கொண்டு
உகந்தான் காண், Uganthaan Kaan - ஸந்தோஷதித்தான் காண்
சாழலே, Saalale - தோழீ!
உறி ஆர் நறுவெண்ணெய் உண்டு உகந்த, Uri Aar Naruvennyei Undu Ugantha - உறிகளிலே பொருந்திய நறுவெண்ணெயை உட்கொண்டு உவந்த
பொன் வயிற்றுக்கு, Pon Vayirukku - திருவயிற்றுக்கு
எறி நீர் உலகு அனைத்தும், Eri Neer Ulagu Anaiththum - கடல்சூழ்ந்த லோகங்களெல்லாம்
எய்தாது, Eydhaadhu - போதாது
ஆல், Aal - ஆச்சரியம்
1996பெரிய திருமொழி || (11-5–மானமரும்) (திருச்சாழல்) - (எம்பெருமானது எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிரெதிராகக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இடைச்சிக்கு பரிச்சின்னனாய் இருந்தானே ஆகிலும் ஸ்வ யத்னத்தால் அறியும் ப்ரஹ்மாதிகளுக்கு அபரிச்சின்னனாய் இருக்கும்) 5
வண்ணக் கருங்குழல் ஆய்ச்சியால் மொத்துண்டு கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் காணேடீ கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும் எண்ணற்கு அரியன் இமையோர்க்கும் சாழலே –11-5-5
பதவுரை Show / Hide
ஏடீ, Eadi - தோழீ! (- (கண்ணி குறு கயிற்றால் கண்டுண்டான் ஆகிலும்))
வண்ணம், Vannam - அழகியதாய்
கரு, Karuu - கறுத்த
குழல், Kuzhal - கூந்தலையுடைய
ஆய்ச்சியால், Aaychiyal - யசோதைப்பிராட்டியாலே
மொத்துண்டு, Moththundu - அடியுண்டு
கண்ணி குறு கயிற்றால், Kannni Kuru Kayittraal - முடிகளையுடைத்தாய் (எட்டம்போராதபடி) குறியதான கயிற்றினால்
கண்டுண்டான் காண், Kandundaan Kaan - கட்டுண்டு கிடந்தான்காண்
சாழலே, Saalale - தோழீ!
இமையோர்க்கும், Imaiyorkkum - தேவர்களுக்கும்
எண்ணற்கு, Ennarkku - நெஞ்சால் நினைப்பதற்கும்
1997பெரிய திருமொழி || (11-5–மானமரும்) (திருச்சாழல்) - (எம்பெருமானது எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிரெதிராகக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கேட்டார் நெஞ்சு ஈரும் படி த்வனிக்க இடையர் மனஸ் களிப்ப மன்றிலே மரத்தைக் காலிலே கட்டி ஆடினான் காண் – இப்படி இடையர் கண் வட்டத்திலே நிற்கிற வஸ்துவை ப்ரஹ்மாதிகள் கண் வட்டத்திலே கண்டு அறிவார் இல்லை) 6
கன்றப் பறை கறங்கக் கண்டவர் தம் கண் களிப்ப மன்றில் மரக்கால் கூத்தாடினான் காணேடீ மன்றில் மரக்கால் கூத்தாடினான் ஆகிலும் என்றும் அரியன் இமையோர்க்கும் சாழலே –11-5-6
பதவுரை Show / Hide
ஏடீ, Eadi - தோழீ! (- (மன்றில் மரக்கால்கூத்து ஆடினான் ஆகிலும்))
கன்ற, Kanru - (விரோதிகளின் நெஞ்சு) கன்றும்படியாக
பறை கறங்க, Parai Karangka - பறைகள் ஒலிக்கவும்
கண்டவர் தம், Kandavar Tham - பார்த்தவர்களினுடைய
கண், Kan - கண்களானவை
களிப்ப, Kalippa - கனிக்கவும்
மன்றில், Manril - நாற்சந்திகளிலே
மரக்கால் கூத்து ஆடினான் காண், Marakkaal Koothu Aadinan Kaan - மரத்தைக் காலிலேகட்டி யாடுவதொரு கூத்தை ஆடினானன்றோ?
சாழலே, Saalale - தோழீ!
இமை யோர்க்கும், Imai Yorkkum - தேவர்களுக்கும்
என்றும், Endrum - என்றைக்கும்
அரியன், Ariyan - அருமைப்பட்டவன் காண்.
1998பெரிய திருமொழி || (11-5–மானமரும்) (திருச்சாழல்) - (எம்பெருமானது எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிரெதிராகக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (துர் உக்தி பண்ணுவதற்கு ஒருவரும் இல்லாத சமயத்தில் துர்யோதனில் குறைந்தார் இல்லாத இஜ் ஜகத்தை வயிற்றிலே வைத்து ரஷிததான் காண்) 7
கோதை வேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான் தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் காணேடீ தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் வாகிலும் ஓத நீர் வையகம் முன் உண்டு உமிந்தான் சாழலே –11-5-7
பதவுரை Show / Hide
ஏடீ, Eadi - தோழீ! (- (தூதன் ஆய் மன்னவனால் கொல்லுண்டான் ஆகிலும்))
கோதை வேல் ஐவர்க்கு ஆய், Kothai Vel Aivarkku Aay - (அரசர்க்குரிய) பூமாலையையும் வேற்படையையும் உடையவரான பஞ்சுபாண்டவர்களுக்கு விதேயனாய்
மண் அகலம் கூறு இடுவான், Man Akalam Kooru Idhuvan - குரு பாண்டவாகட்குப் பூமியைப் பங்கிட்டுக் கொடுத்து சந்தி செய்வதற்காக
தூதன் ஆய், Thoodhan Aay - தூதுசென்றவனாய்
மன்னவனால், Mannavanaiyil - துரியோதனனென்னும் அரசனாயல்
சொல் உண்டான் காண், Sol Undaan Kaan - இழிவான சொற்களைச்சொல்லப் பெற்றானன்றோ?
சாழலே, Saalale - தோழீ!
முன், Mun - முன்பொருகால்
ஓதம் நீர் வையகம், Otham Neer Vayagam - கடல் சூழ்ந்த உலகத்தையெல்லாம்
உண்டு உமிழ்ந்தான், Undu Umizhndhaan - (பிரளயங்கொள்ளாதபடி) வயிற்றிலே வைத்து நோக்கி வெளிப்படுத்தினான்காண்க.
1999பெரிய திருமொழி || (11-5–மானமரும்) (திருச்சாழல்) - (எம்பெருமானது எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிரெதிராகக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்படி தாழ்வு செய்தவன் லோகத்தில் ராஜாக்கள் ஆனார் முடி மேல் மாலையிலே காண் திருவடிகளை வைத்துக் கொண்டு இருப்பது – ராஜாதி ராஜ சர்வேஷாம் -இத்யாதி) 8
பார் மன்னர் மங்கப் படை தொட்டு வெஞ்சமத்துத் தேர் மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான் காணேடீ தேர் மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான்ஆகிலும் தார் மன்னர் தங்கள் தலை மேலான் சாழலே –11-5-8
பதவுரை Show / Hide
ஏடீ, Eadi - தோழீ! (- (தேர் மன்னற்கு ஆய் அன்று தேர் ஊர்ந்தான்))
அன்று, Anru - பாரதப்போர்நிகழ்ந்த அக்காலத்தில்
பார், Paar - பூமியிலுள்ள
மன்னர், Mannar - அரசாகள் யாவரும்
மங்க, Manga - மாளும்படியாக
வெம் சமத்து, Vem Samathu - வெவ்விய போர்க்களத்திலே
படைதொட்டு, Padaithottu - (பிரதிஜ்ஞைக்குமாறாக)ஆயுதமெடுத்து
தேர்மன்னற்கு, Thermannarku - தேர்வீரனான அரிஜுனனுக்கு
ஆய், Aai - துணையாய்(ஸராதியாகி)
தேர் ஊர்ந்தான் காண், Ther Oornthaan Kaan - தேரைநடத்தினான் காண்.
சாழலே, Saalale - தோழீ!
தார் மன்னர் தங்கள், Thaar Mannar Thangal - வெற்றி மாலைபுனையும் அரசர்களுக்கெல்லாம்
தலை மேலான், Thalai Melan - தலைமேல் வீற்றிருப்பவன் காண்.
2000பெரிய திருமொழி || (11-5–மானமரும்) (திருச்சாழல்) - (எம்பெருமானது எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிரெதிராகக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வடிவு அழகாலும் வரையாதே தீண்டும் படி யாலும் ஆஸ்ரிதர்க்கு தாழ்வு செய்யும்படியாலும் – கிருஷணாவதாரத்தோடு போலியாய் இறே ஸ்ரீ வாமன அவதாரம் இருப்பது – உதாரனாய் இருக்கிற மஹா பலி யஞ்ஞ பூமியிலே அவன் கண் வட்டத்துக்கு உள்ளே நின்று மூன்றடி மண் இரந்தான் காண் – அவன் கண் வட்டத்தே நின்ற இவனை நாட்டில் கண்டவர் இல்லை கிடாய்) 9
கண்டார் இரங்கக் கழியக் குறள் உருவாய் வண்டாரான் வேள்வியில் மண்ணிரந்தான் காணேடீ வண்டாரான் வேள்வியில் மண்ணிரந்தான் ஆகிலும் விண்டு ஏழ் உலகுக்கும் மிக்கான் காண் சாழலே –11-5-9
பதவுரை Show / Hide
ஏடீ, Eadi - தோழீ! (- (வண்தாரான் வேள்வியில் மண் இரந்தான் ஆகிலும்))
கண்டார், Kandaar - பார்த்தவர்களெல்லாரும்
இரங்க, Iranga - மனமிரங்கும்படி
கழிய குறள் உரு ஆய், Kazhiya Kurai Uru Aai - மிகக் குள்ளவடிவுடையவனாய்க் கொண்டு
வண்தாரான், Vandthaaran - வள்ளல்தனத்தைக் காட்டுகின்ற தனிமாலையையணிந்த மாவலியினுடைய
வேள்வியில், Velviyil - யாகபூமியிலே
மண் இரந்தாண் காண, Man Irandhaan Kaan - மண்ணையாசித்தானன்றோ
சாழலே, Saalale - தோழீ!
விண்டு, Vindhu - விஷ்ணுவாய்
ஏழ் உலகுக்கும் மிக்கான் காண், Ezhu Ulagukkum Mikkaan Kaan - எல்லாவுலகத்தினும் மேம்பட்டவன் காண்
2001பெரிய திருமொழி || (11-5–மானமரும்) (திருச்சாழல்) - (எம்பெருமானது எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிரெதிராகக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கிரித்ரிம வேஷத்தைக் கொண்டு சிலருக்குச் சென்று கிட்ட ஒண்ணாத படி ஸ்ரீ திருப் பாற் கடலிலே காண் அவன் கிடப்பது – சடக்கெனெ சென்று காண ஒண்ணாத படி ஸ்ரீ திருமலையிலே காண் அவன் நிற்பது -என்பார்கள் காண் அப்படி இருக்கிறவன் காண் ஆழ்வார் ஹிருதயத்தில் நின்றும் புறப்படத் தள்ளினாலும் புறப்படாதே கிடக்கிறான்) 10
கள்ளத்தால் மாவலியை மூவடி மண் கொண்டு அளந்தான் வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காணேடீ வெள்ளத்தான் வேங்கடத்தான் ஏலும் கலி கன்றி உள்ளத்தின் உள்ளே யுளன் கண்டாய் சாழலே –11-5-10
பதவுரை Show / Hide
ஏடீ, Eadi - தோழீ! (- (ஒருவர்க்கும் எளியவனாகாதபடி))
கள்ளத்தால், Kallathaal - கபடவேடித்தினால்
மாவலியை, Mavalaiya - மாவலியிடத்தில்
மூ அடி மண் கோண்டு, Moo Adi Man Koondhu - மூன்றடிமண்ணை இரந்து பெற்று
அளந்தான், Alandhaan - அளந்துகொண்டவன்
வெள்ளத்தான், Vellaththaan - திருப்பாற்கடலிலே உள்ளான்
வேங்கடத்தான், Vengadaththaan - திருமலையிலே உள்ளான்
என்பர்காண், Enpar Kaan - என்று சொல்லுகிறார்களன்றோ?
சாழலே, Saalale - தோழீ!
வெள்ளத்தான் வேங்கடத்தான் ஏலும், Vellaththaan Vengadaththaan Aelum - திருப்பாற்கடலிலும் திருமலையிலும் அருமைப்படவுள்ளவனே யாகிலும்
கலிகன்றி, Kalikanri - கலியனுடைய
உள்ளத்தின் உள்ளே, Ullaththin Ullae - ஹ்ருதயத்தினுள்ளே