திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2012 | பெரிய திருமொழி || (11-7–நீள் நாகம்) - (எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அமுதம் கொண்டுகந்த- பிறருக்கு உபகரித்தானாய் இராதே தன் பேறாக உகந்தான் – இப்படிச் செய்கிறது -உடையவன் ஆகையாலே – பூணார மார்வனைப்-இவர் தம்முடைய -அம்ருதம் –சர்வாபரண பூஷிதனாய் பெரிய திருவடி தோளில் இருந்த இருப்பு – ஒரு பொன் மலை மேலே ஒரு பொன் மலை இருந்தாப் போலே – இதுக்கு முன்பு கண்டவை என்றும் கண் அல்ல –ஷேபமாகக் கண்டோமே -என்கிறார் முதல் பாசுரத்தில்) 1 | நீணாகம் சுற்றி நெடு வரை நட்டு ஆழ் கடலைப்
பேணான் கடைந்து அமுதம் கொண்டுகந்த பெம்மானைப்
பூணார மார்வனைப் புள்ளூரும் பொன் மலையைக்
காணாதார் கண் என்றும் கண் அல்ல கண்டாமே –11-7-1 | பதவுரை Show / Hideநீள் நாகம், Neel Naagam - நீண்ட வாஸுகி நாகத்தை சுற்றி, Suttri - (கடைகயிறாகச்) சுற்றி நெடு வரை, Nedu Varai - பெரிய (மந்தர) மலையை நட்டு, Nattu - (மத்தாக) நாட்டி ஆழ் கடலை, Aaz Kadhalai - ஆழ்ந்த கடலை பேணான், Penaan - மதியாதவனாகி கடைந்து, Kadaindhu - கடைந்து அமுதம், Amudham - அம்ருத்த்தை கொண்டு, Kondhu - தேவர்கட்கு எடுத்துத்தந்து உகந்த, Ugantha - திருவுள்ளமுவந்த பெம்மானை, Pemmanaai - பெருமானும், ஆரம் பூண் மார்வனை, Aaram Poon Maarvanai - ஹாரங்களையணிந்த திருமார்பையுடையனும் புள் ஊரும், Pul Oorum - பெரிய திருவடியை ஏறிச்செலுத்துகின்ற பொன்மலையை, Ponmalaiyai - பொன் மலைபோன்றவனுமான ஸர்வேச்வரனை காணாதார், Kaanadhaarkal - ஸேவிக்கப் பெறாதவர்களுடைய கண், Kan - கண்களானவை என்றும், Endrum - ஒருநாளும் கண் அல்ல, Kan Alla - கண்களே அல்ல கண்டாம், Kandam - (இதைநாம் நன்கு) அறிவோம் |
| 2013 | பெரிய திருமொழி || (11-7–நீள் நாகம்) - (எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உன்னைப் பிரமாணித்தார் பெற்ற பேறு –இரண்டாம் திருவந்தாதி -என்று ஆஸ்ரிதர் ஈடுபட்டு நெஞ்சிலே எப்போதும் அனுபவித்து இருக்குமவனுடைய கீர்த்தி கேட்க வென்றால் கேளோம் என்னுமவர் செவி -செவி அல்ல – கேட்டோமே –ஷேபம்) 2 | நீள் வான் குறளுருவாய் நின்றிரந்து மாவலி மண்
தாளால் அளவிட்ட தக்கணைக்கு மிக்கானை
தோளாத மா மணியைத் தொண்டர்க்கு இனியானை
கேளாச் செவிகள் செவியல்ல கேட்டாமே –11-7-2 | பதவுரை Show / Hideநீள்வான், Neelvaan - நீண்டு வளர்வதற்காக குறள் உரு ஆய், Kural Uru Aay - வாமநலேஷதாரியாய் நின்று, Ninru - (யஜ்ஞசாலையிலேவந்து) நின்று மாவலி, Mavali - மஹாபலியினிடத்தில் மண், Man - (மூவடி) மண்ணை இரந்து, Irantu - யாசித்து தாளால், Thaalal - திருவடிகளாலே அளவு இடம், Alavu Idam - அளந்து கொண்டவனும் தக்கணைக்கு மிக்கானை, Thakkanaiyku Mikkaanai - அக்ரதாம்பலமளிப்பதற்குச் சிறந்தவனும் தோளத மா மணியை, Tholadha Maa Maniyai - துளைபட்டு ஒளிமழுங்காத நீலமணி போன்றவனும் தொண்டர்க்கு இனியானை, Thondarkku Iniyanai - பக்தர்களுக்குப் போக்யனுமான எம்பெருமானை கேளா, Kela - கேட்கப்பெறாத செவிகள், Sevigal - காதுகள் செவி அல்ல, Sevi Alla - காதுகளேயல்ல கேட்டோம், Kettom - (இதை நாம் பெரியோரிடத்துக்) கேட்டிருக்கின்றோம். |
| 2014 | பெரிய திருமொழி || (11-7–நீள் நாகம்) - (எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கீழ் இரண்டு பாட்டாலே ஞாநேந்த்ரியன்களை நிரசித்த்தார் இனி மூன்று பாட்டாலே கர்மேந்திரியங்களை நிரசிக்கிறார் – இதில் அவனுடைய கீர்த்திகளை ஒழிய பேசுமவை கடலோசை பேச்சாய் இருக்கச் செய்தேயும் – அர்த்தம் இன்றிக்கே இருக்கிறாப் போலே – கேட்டுத் திரிகிறிகோள் இறே -என்று ஷேபம்) 3 | தூயானைத் தூய மறையானைத் தென்னாலி
மேயானை மேவாள் உயிர் உண்டு அமுது உண்ட
வாயானை மாலை வணங்கி யவன் பெருமை
பேசாதார் பேச்சு என்றும் பேச்சல்ல கேட்டாமே –11-7-3 | பதவுரை Show / Hideதுயானை, Thuyanaik - பரமபவித்திரனும் தூய மறையானை, Thuya Maraiyanai - பரிசுத்தமான வேதங்களினால் பிரதிபாதிக்கப்படுபவனும் தென் ஆலி மேயானை, Then Aali Meyaanai - அழகிய திருவாலிப்பதியிலே பொருந்தி வாழ்பவனும் மேவாள் உயிர் உண்டு அமுது உண்டவாயானை, Mevaal Uyir Undu Amuthu Undavayanai - பொருத்தமற்றவளான பூதனையினுடைய உயிரை உறிஞ்சியுண்டு (அந்த விஷத்திற்குமாற்றாகத் தாயின்) முலைப்பாலமுதை உண்ட வாயையுடையவனுமான மாலை, Malai - திருமாலை வணங்கி, Vanangi - அடிபணிந்து அவன், Avan - அப்பெருமானுடைய பெருமை, Perumai - பெருமேன்மையை பேசாதார், Pesathar - பேசப்பெறாதவர்களுடைய பேச்சு, Peetchu - பேச்சுக்களானவை என்றும், Endrum - ஒருகாலும் பேச்சு அல்ல, Peetchu Alla - பேச்சுக்களாகமாட்டா கேட்டோம், Kettom - (இதனை நாம் பெரியோர்களிடத்துக்) கேட்டிருக்கின்றோம். |
| 2015 | பெரிய திருமொழி || (11-7–நீள் நாகம்) - (எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சிறுக்கனுக்கு விரோதியைப் போக்கி மாலை இட்டு இருந்தவனை –பிரேம பரவசராய் பாடும் பாட்டு அல்லது பாட்டு அல்ல) 4 | கூடா விரணியனைக் கூருகிரால் மார்விடந்த
ஓடா வடலரியை யும்பரார் கோமானைத்
தோடார் நறுந்துழாய் மார்வனை யார்வத்தால்
பாடாதார் பாட்டு என்றும் பாட்டல்ல கேட்டாமோ –11-7-4 | பதவுரை Show / Hideகூடா, Kooda - பகைவனான இரணியனை, Iraniyanai - ஹிரண்யாஸுரனுடைய மார்வு, Maarvu - மார்பை கூர் உகிரால், Koora Ugral - கூர்மைபொருந்திய நகங்களாலே இடந்த, Idantha - கீண்டருளின ஓடா, Oda - (அவ்விரண்யனுக்குப் பின்வாங்காத அடல், Adal - வீரம்பொருந்திய அரியை, Ariyai - நாசிங்கமூர்த்தியானவனும் உம்பரார் கோமானை, Umbarar Komanai - நித்யஸூரிகட்குத் தலைவனும் தோடு ஆர் நறு துழலாய் மார்வனை, Thodu Ar Naru Thuzhalai Maarvanai - இதழ்கள் மிக்க நறுந்துளப மாலையணிந்த திருமார்பையுடையனுமான எம்பெருமானை ஆர்வத்தால், Aarvaththal - அன்புடனே பாடாதார், Paadathar - பாடப்பெறாதவர்களுடைய பாட்டு, Paatu - பாட்டுக்களானவை என்றும், Endrum - ஒருநாளும் பாட்டு அல்ல, Paatu Alla - பாட்டுக்களாகமாட்டா கேட்டோம், Kettom - (என்று நாம் பெரியோர்களிடத்தில்) கேட்டிருக்கிறோம் |
| 2016 | பெரிய திருமொழி || (11-7–நீள் நாகம்) - (எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒன்றைச் சொல்லி இன்னது உபமானம் என்ன ஒண்ணாத வடிவு – சொல்லும் இடத்தில் உபமானம் கொண்டு இழிய வேணும் – அவை தான் இதுக்குப் போராவாய் இருக்கும் – காமினிக்கு காந்தனுடைய தேஹமும் –ஸ்ரீ ஆழ்வார்கள் எல்லாருக்கும் படி – சங்கேந்தும் கையானைக் –தொழுகைக்கு இவன் கை போலே-தொழுவித்துக் கொள்ளுகைக்கு அவன் கை – தமச பரம -இத்யாதி – கை தொழாக் கையல்ல கண்டாமே –-தொழாக் கை கை யல்ல -என்று அந்வயம்) 5 | மையார் கடலும் மணி வரையும் மா முகிலும்
கொய்யார் குவளையும் காயாவும் போன்று இருண்ட
மெய்யானை மெய்ய மலையானைச் சங்கேந்தும்
கையானைக் கை தொழாக் கையல்ல கண்டாமே –11-7-5 | பதவுரை Show / Hideமைஆர் கடலும், Maiar Kadalum - கருங்கடலையும் மணிவரையும், Manivaraim - நீலமணிமயமான மலையையும் மா முகிலும், Maa Mugilum - காளமேகத்தையும் கொய் ஆர் குவளையும், Koyi Ar Kuvalaiyum - பறிக்கவேணுமென்று விரும்பத்தக்க நீலோற்பலத்தையும் காயாவும், Kaayavum - காயாம்பூவையும் போன்று, Poondru - ஒத்து இருண்ட, Irunda - கறுத்த மெய்யானை, Meyyanaai - திருமேனியையுடையவனும் மெய்யம் மலையானை, Meyyam Malaiyanaai - திருமெய்யமலையில்கோயில் கொண்டிருப்பவனும் சங்கு ஏந்தும் கையானை, Sangu Aendhum Kaianaai - திருச்சங்கை ஏந்திக்கொண்டிருக்கின்ற திருக்கையையுடையனுமான பெருமானை தொழா, Thozha - அஞ்சலிபண்ணாத கை, Kai - கைகளானவை கை அல்ல, Kai Alla - கைகளேயல்ல கண்டாம், Kandam - (இதனை நாம் நன்கு) அறிவோம். |
| 2017 | பெரிய திருமொழி || (11-7–நீள் நாகம்) - (எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவனுக்கு என்று இராத-ஞான இத்ரியங்கள்-கர்ம இந்த்ரியங்கள் அனைத்துக்கும் நிர்வாஹகமான மனஸ்ஸை இரண்டு பாசுரங்களால் நிரசித்து அருளுகிறார் – தான் நினைக்கும் அவை ஒழிய நினைக்குமவை ஹிருதயம் அன்று -என்கிறார் – ரத்ன பரிஷகன் கையிலே புகுந்து இவன் விலை இட்டால் இறே விலை பெறுவது) 6 | கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும்
முள்ளார் முளரியும் ஆம்பலும் முன் கண்டக்கால்
புள்ளாய் ஓர் ஏனமாய்ப் புக்கிடந்தான் பொன்னடிக்கு என்று
உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாக் கொள்ளோமே –11-7-6 | பதவுரை Show / Hideகள் ஆர், Kal Aar - தேன்பொருந்திய துழாயும், Thuzhayum - திருத்துழாயையும் கணவலரும், Kanavalarum - அலரியும் கூவிளையும், Koovilaiyum - பில்வபத்திரத்தையும் முள் ஆர், Mul Aar - முட்கள் நிரம்பிய முளரியும், Mulariyum - தாமரைப் பூவையும் ஆம்பலும், Aampalum - ஆம்பல் மலரையும் முன், Mun - கண்ணெதிரில் கண்டக்கால், Kandakkaal - பார்த்தால் புள் ஆய் ஓர் எனம் ஆய் புக்கு இடந்தான் பொன் அடிக்கு என்று, Pul Aayi Oor Enam Aayi Pukku Idanthan Pon Adikku Endru - ஹாம்ஸரூபியாய் அவதரித்தவனும் வராஹ ரூபியாயவதரித்துப் பூமியைப் பேதித்தெடுத்தவனுமான எம்பெருமானுடைய திருவடிகளுக்கு உரியவையென்று உள்ளாதார், Ulladhaarkal - நினையாதவர்களுடைய உள்ளத்தை, Ullathai - நெஞ்சை உள்ளம் ஆ கொள்ளோம், Ullam Aa Kollom - நெஞ்சாகக் கொள்ள மாட்டோம் |
| 2018 | பெரிய திருமொழி || (11-7–நீள் நாகம்) - (எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உபமானம் இல்லை என்று பேசாதே இருக்க மாட்டாரே – திவ்ய விக்ரஹத்துக்கு உபமானம் அபூமியானால் ஆத்மா குணங்களுக்கு உள்ளுப் போகார் இறே- இனி அவனுக்கு இது சேஷம் -என்னும் இத்தை இசையும் இத்தனை – நினைவுக்கு அநதிஷ்டமான நெஞ்சு -நெஞ்சு அல்ல) 7 | கனையார் கடலும் கரு விளையும் காயாவும்
அனையானை அன்பினால் ஆர்வத்தால் என்றும்
சுனையார் மலரிட்டுத் தொண்டராய் நின்று
நினையாதார் நெஞ்சு என்றும் நெஞ்சல்ல கண்டோமே –11-7-7 | பதவுரை Show / Hideகனை ஆர் கடலும், Kanai Ar Kadhalum - ஒலிமிக்க கடலையும் கருவிளையும், Karuvilaiyum - கருவிளைப்பூபையும் காயாவும், Kaayavum - காயாம்பூவையும் அனையானை, Anaiyanai - ஒத்திருக்கின்ற எம்பெருமானை அன்பினால் ஆர்வத்தால், Anbinal Arvaththal - அன்போடும் ஆற்றாமையொடும் சுனை அர் மலர் இட்டு, Sunai Ar Malar Ittu - தடாகங்களில் நிரம்பிய பூக்களைக் கொணர்ந்து ஸமர்ப்பித்து தொண்டர் ஆய் நின்று, Thondar Aayi Nindru - தொண்டர்களாயிருந்து கொண்டு என்றும், Endrum - எப்போதும் நினையாதார், Ninaiyathaar - நினைக்கப்பெறாதவர்களினுடைய நெஞ்சு, Nenju - நெஞ்சானது என்னும், Ennum - ஒருநாளும் நெஞ்சு அல்ல, Nenju Alla - நெஞ்சாகமாட்டாது கண்டாம், Kandam - (இதனை நாம் நன்கு) அறிவோம். |
| 2019 | பெரிய திருமொழி || (11-7–நீள் நாகம்) - (எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரிதர்க்கு இப்படி எளியனாய் – மேன்மையால் குறையற்று சிவந்த கண்களை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை – நினைத்து அறியாதவர்கள் –இங்குத்தை எளிமையும் மேன்மையும்-இரண்டையும் அறியாதவர்கள்) 8 | வெறியார் கரும் கூந்தல் ஆய்ச்சியர் வைத்த
உறியார் நறு வெண்ணெய் தான் உகந்து உண்ட
சிறியானைச் செங்கண் நெடியானைச் சிந்தித்து
அறியாதார் என்றும் அறியாதார் கண்டாமோ –11-7-8 | பதவுரை Show / Hideவெறி ஆர், Veri Ar - பரிமளம் மிக்க கரு கூந்தல், Karuk Koondhal - கரிய கூந்தலையுடைய ஆய்ச்சியர், Aaychiyar - இடைச்சிகளாலே வைத்த, Vaiththa - சேமித்துவைக்கப்பட்டதாய் உறி ஆர், Uri Aar - உறிகளிலே பொருந்தியதாய் நறு, Naru - மணம்மிக்கதான வெண்ணெய், Vennaiy - வெண்ணெயை தான் உகந்து உண்ட, Thaan Ugandhu Unda - தான் விரும்பி யமுதுசெய்த சிறியானை, Siriya Anai - சிறியவனும் செம் கண், Sem Kan - சிவந்த திருக்கண்களையுடையனுமான நெடியானை, Nediyaanai - ஸர்வேச்வரனை சிந்தித்து அறியாதார், Sindhiththu Ariyathaar - நெஞ்சாலும் நினைத்தறியாதவர்கள் என்றும், Endrum - எப்போதும் அறியாதார், Ariyathaar - அவிவேகிகளேயாவர் கண்டாம், Kandam - நன்கு அறிவோம் |
| 2020 | பெரிய திருமொழி || (11-7–நீள் நாகம்) - (எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் தன்னைப் பேணாது ஒழிய தங்களைப் பேணித் திரியுமவர்கள மானிடவர் அல்லர் – பிரித்து அவயவங்களைச் சொல்லுகிறது என் – கட்டடங்க மனுஷ்யர் அல்லர் – என்று என் மனத்தே வைத்தேனே –ஸ்ரீ சர்வேஸ்வரன் குற்றங்களும் பொறுக்கும் இறே – அவன் கழித்த வன்றும் கிருபை பண்ணுமவர் இறே ஸ்ரீ ஆழ்வார் இருவரும் அகப்பட கை விடும்படி யானார்கள் – மித்ர பௌ பிகம் கர்த்தும் -என்னும் அவளிலும் இவருக்கு வாசி உண்டு – தலை தான் போனது அவனுக்கு ஸ்வரூபம் நசிக்கும் இவனுக்கு) 9 | தேனோடு வண்டாலும் திருமால் இருஞ்சோலை
தானிடமாக்கிக் கொண்டான் தட மலர்க் கண்ணிக்காய்
ஆன் விடை ஏழ் அன்று அடர்த்தார்க்கு ஆளானார் அல்லாத
மானிடவர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே –11-7-9 | பதவுரை Show / Hideவண்டு, Vandu - வண்டுகளானவை தேனொடு, Thenodu - வாயில் தேனோடே ஆலும், Alum - ஆரவாரிக்கின்ற திருமாலிருஞ் சோலை, Thirumaliruncholai - திருமாலிருஞ்சோலை மலையை தான் இடம் ஆ கொண்டான், Thaan Idam Aa Kondaaan - தனக்கு இருப்பிடமாக அமைத்துக் கொண்டவனும் அன்று, Anru - முன்பொருகாலத்தில் தட, Thada - விசாலமாய் மலர், Malar - குவளைமலர்போன்ற கண்ணிக்காய், Kannikkai - கண்களையுடையளான நப்பின்னைப்பிராட்டிக்காக ஆன் விடை ஏழ், Aan Vidai Ezh - ஏழுரிஷபங்களை அடர்த்தாற்கு, Adarthaarkku - வலியடக்கின பெருமானுக்கு ஆள் ஆனார் அல்லாதார், Aal Aanaar Alladhaar - அடிமைப்பட்டவர்கள் தவிர மற்றையோர் மானடவர் அல்லர் என்று, Maanadavar Allar Endru - மநுஷ்யகோடியில் சேர்ந்தவர்களல்ல ரென்று என் மனத்து, En Manathu - என்னெஞ்சிலே வைத்தேன், Vaithen - உறுதியாகநாட்டினேன் |
| 2021 | பெரிய திருமொழி || (11-7–நீள் நாகம்) - (எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (எல்லாரையும் ஆக்கிக் கொள்ளும் திருவடிகள் –திருவடிகளுக்கு ஆகாதார் இல்லை – இத் திருவடிகளைச் சூடும் ஸ்ரீ ஆழ்வார் –சேஷித்வத்துக்கு அவன் ஸ்ரீ திரு வாழியைப் பிடித்தால் போலே சேஷத்த்வத்துக்கு இவர் வேலைப் பிடித்த படி- முன்பே பாசுரம் இட்டுத் தந்தோம் – இனி சரீரத்தால் உள்ள விநியோகம் கொள்ளுங்கோள்) 10 | மெய்நின்ற பாவம் அகலத் திருமாலைக்
கைநின்ற ஆழியான் சூழும் கழல் சூடி
கைந்நின்ற வேற்க் கை கலியன் ஒலி மாலை
ஐ ஒன்றும் ஐந்தும் இவை பாடி ஆடுமினே –11-7-10 | பதவுரை Show / Hideமெய்நின்ற, Mei Nindra - பிரகிருதியிலே அநுபவிக்க வேண்டிநின்ற பாவம், Paavam - பாவங்கள் அகல, Akala - ஒழிவதற்காக கை நின்ற ஆழியான், Kai Nindra Azhiyan - திருக்கையில் பொருந்திய திருவாழியையுடையனான திரு மாலை, Thiru Maalai - திருமகள் கொழுநனுடைய சூழும் கழல், Soolum Kazhal - ஸர்வ்வ்யாபியான திருவடிகளை சூடி, Soodi - முடிமேற்கொள்ளுமவராய் கை நின்ற வேல் கை, Kai Nindra Vel Kai - கையும் வேற்படையுமாய் நிற்பவரான கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார் ஒலி, Oli - அருளிச்செய்த மாலை, Malai - சொல்மாலையாகிய ஐ ஒன்றும் ஐந்தும் இவை, Ai Ondrum Aindhum Ivai - இப்பத்துப்பாசுரங்களையும் பாடி, Paadi - வாயாரப்பாடி ஆடுமின், Aadumin - நர்த்தனம் பண்ணுங்கோள் |