திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1208 | பெரிய திருமொழி || (3-7–கள்வன் கொல்) (திருவாலி 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இருவரும் இரண்டு முக்தர் ஆயிற்று –மாயா மிருகத்தை பிடித்து தா என்பாரும்-அதைப் பிடிப்பதாக அதன் பின்னே போவாரும் – லங்கத்வாரத்திலே சென்று நிற்கலாகாதோ என்று நில்லாதே-உத்தேச்ய பூமியிலே புக்கார்களோ அல்லர்களோ இருவரும் ஒருவருக்கு ஒருவராய் ஆழல் ஆயிற்று) 1 | கள்வன் கொல் யான் அறியேன் கரியான் ஒரு காளை வந்து
வள்ளி மருங்குல் என்தன் மடமானினைப் போதாவென்று
வெள்ளி வளைக்கை பற்றப் பெற்ற தாயாரை விட்டகன்று
அள்ளலம் பூங்கழனி அணி யாலி புகுவர் கொலோ –3-7-1 | பதவுரை Show / Hideகள்வன் கொல்யான் அறியேன், Kalvan Kolyaan Ariyeen - (வந்து அழைத்துக் கொண்டு போனவன்) திருடனோ? (அன்றி உடையவன் தானோ?) எனக்குத் தொயிவில்லை; (- (இப்படி தம்பதிகளாகப்போன விவர்கள்)) கரியான் ஒரு காளை வந்து, Kariyaan Oru Kaalai Vandu - கருநிறத்தவனான ஒரு யௌவன புருஷன் வந்து, வள்ளி மருங்குல், Valli Marungul - கொடி போல் நுட்பமான இடையை யுடையளாய் என்தன் மடம் மானினை, Enthan Madham Maaninai - இள மான் போன்றவளான எனது மகளை போத என்று, Podha Endru - வா வா என்றழைத்து, வெள்ளி வளை கை பற்ற, Velli Valai Kai Patra - வெள்ளை வளைகளணிந்துள்ள கையைப் பிடிக்க, (உடனே அவள்) பெற்ற தாயாரை இட்டு அகன்று, Petra Thaayaarai Ittu Aghandru - பெற்ற வளர்த்த தாயாகிய என்னையும் உபேக்ஷித்து விட்டொழிந்து(போய் விட்டாள்;) அள்ளல் அம் பூ கழனி அணி, Allal Am Poo Kazhani Ani - சேற்று நிலங்களிலே அழகிய பூக்கள் நிறைந்த கழனிகளாலே அலங்கரிக்கப்பட்ட ஆலி, Aali - திருவாலியிலே புகுவர் கொலோ, Pughuvar Koloo - சென்று சேருவர்களோ? |
| 1209 | பெரிய திருமொழி || (3-7–கள்வன் கொல்) (திருவாலி 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (காணாம்ருதமான அம்மான்பொடியை இட்டு கொண்டு போன படி- கண்ணால் கேட்டு கேளாதவற்றை வாயாலே கேட்டு -அவனுக்கு முன்னோக்கிப் போக ஒண்ணாதபடி அவன் பின்னே நடந்து ந சபுன ஆவர்த்ததே என்று புகுந்து-திர்யக்குகளும் கூட மீளாத ஊரிலே புகுவர் கொலோ) 2 | பண்டு இவன் ஆயன் நங்காய் ! படிறன் புகுந்து என் மகள் தன்
தொண்டை யஞ் செங்கனிவாய் நுகர்ந்தானை உகந்து அவன் பின்
கெண்டை யொண் கண் மிளிரக் கிளி போல் மிழற்றி நடந்து
வண்டமர் கானல் மல்கும் வயலாலி புகுவர் கொலோ ? –3-7-2 | பதவுரை Show / Hideநங்காய், Nangai - பெண்ணே!, (- (அயல் வீட்டுப் பெண்களில் ஒருத்தியை நோக்கி சொல்லுகிறாள்) (அப்படிப்பட்டவிவன் இப்போது) (தம்பதிகளாய்ச் சேர்ந்துகொண்ட அவ்விருவரும்)) இவன், Ivan - என் மகளைக்கொண்டுபோன விவன் பண்டு, Pandhu - முன்பெல்லாம் படிறன், Padiran - (பெண்களைத் திருடுவது முதலான) தீம்புகளைச் செய்கிற ஆயன், Aayaan - இடையனாயிருந்தவன் புகுந்து, Pugunthu - (என் வீட்டிலே ப்ரத்யக்ஷமாக) வந்து நுழைந்து என் மகள்தன், En Magalthan - என் பெண்ணினுடைய அம் செம்தொண்டை கனி வாய், Am Semthondai Kani Vaai - அழகிய சிவந்த ஆதொண்டைப் பழம் போன்ற அதரத்தை நுகர்ந்தானை, Nugarnthaanai - (பானம் பண்ணினான்) அப்படி பானம்பண்ணின இவனை உகந்து, Uganthu - (என் பெண்) விரும்பி கொண்டை ஒரு கண் மிளிர, Kondai Oru Kan Milira - கொண்டைமீன் போலே அழகிய கண்கள் ஒளிவிட கிளி போல் மிழற்றி, Kili Pol Mizhatri - கிளிபோலே மழலைச் சொற்கள் பேசிக்கொண்டு அவன் பின் நடந்து, Avan Pin Nadandhu - அவன் பின்னே நடந்துபோய் வண்டு அமர், Vandu Amar - வண்டுகள்படிந்த கானல்மல்கும், Kaanalmalgum - கடற்கரைச் சோலை சூழ்ந்த வயல், Vayal - கழனிகளையுடைய ஆலி, Aali - திருவாலியிலே புகுவர் கொலோ, Pughuvar Kollo - சென்று சேருவர்களோ? |
| 1210 | பெரிய திருமொழி || (3-7–கள்வன் கொல்) (திருவாலி 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ பட்டர் இப்பாட்டை அருளிச் செய்து-ஒரு ஸ்திரியை விரூபை ஆக்கினவன் உடைய திறம் கேட்கில் அஞ்சுவன் என்கையாலே – இத்தலைக்கு ஒரு ஹானியாய் தோற்றா நின்றது –இது ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்யக் கூடாது இது எங்கனே சேரும்படி -என்று ஸ்ரீ ஆச்சானைக் கேட்க துடிப்பு இருக்க கை வேக வேணுமோ-ஸ்ரீ எம்பெருமானார் தானே அருளிச் செய்து வைத்தார் இறே -என்ன அருளிச் செய்த படி என்ன -என்று கேட்க – முன்பு ஒரு புணர்ந்து விட போக்கிலே பிறந்த பிரமாதத்தை கேட்டு அத்தை நினைத்து இப்பொழுது பயப்படுகிறாள் -என்று அருளிச் செய்தார்) 3 | அஞ்சுவன் வெஞ்சொல் நங்காய் ! அரக்கர் குலப்பாவை தன்னை
வெஞ்சின மூக்கரிந்த விறலோன் திறம் கேட்கில் மெய்யே
பஞ்சிய மெல்லடி எம் பணைத் தோளி பரக்கழிந்து
வஞ்சி யந்தண் பணை சூழ் வயலாலி புகுவர் கொலோ ? –3-7-3 | பதவுரை Show / Hideவெம் சொல் நங்காய், Vem Sol Nangkaai - விரும்பத்தக்க வாய் மொழியையுடைய (அயல் வீட்டுப்) பெண்ணே! அரக்கர் குலம் பாவை தன்னை மூக்கு, Arakkar Kulam Paavai Thannai Mooku - ராக்ஷஸகுலத்துப் பதுமை போன்ற சூர்ப்பணகையினுடைய மூக்கை வெம் சினம், Vem Sinam - கடுங்கோபத்தாலே அரிந்த, Arintha - அறுத்தொழித்த விறலோன், Viralon - மிடுக்கையுடையனான அந்த யௌவந புருஷனுடைய திறம், Thiram - தன்மையை கேட்கில், Kaetkil - கேள்விப்படுமளவில் மெய்யே அஞ்சுவன், Meyye Anjuvan - உண்மையாக அஞ்சுகிறேன்! பஞ்சிய மெல் அடி, Panjiy Mel Adi - பஞ்சுபோன்ற மிருதுவான அடியையுடையவனும் எம் பணை தோளி, Em Panai Tholi - மூங்கில்போன்ற தோள்களை யுடையவளுமான என் மகள் பாக்க்க்கழிந்து, Paakkazhindhu - பெரும்பழிக்கு இடமாகி (அவனோடு செல்ல, அவ்விருவரும்) வஞ்சி அம் தண் பணை சூழ், Vanchi Am Than Panai Soozh - வஞ்சிக் கொடிகளாலழகிய குளிர்ந்த நீர் நிலகள் சூழ்ந்த வயல், Vayal - கழனிகளையுடைய ஆலி, Aali - திருவாலியிலே புகுவர் கொலோ, Pughuvar Koloo - சென்று சேர்ந்திருப்பர்களோ? |
| 1211 | பெரிய திருமொழி || (3-7–கள்வன் கொல்) (திருவாலி 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஷத்ரிய ஜன்மத்திலே பிறந்தார் என்று ஆசைப்படுவார்-இடையனை பிறந்தான் என்று ஆசைப் படுவாராய் ஆசைப்படா நின்றீர் கோள்-எனக்கு இரண்டும் தோற்றுகிறது இல்லை – மாதவன் தன் துணையா நடந்தாள்-ஆழம் காலை மிதப் பெற்று புத்தி பண்ணினாள் அளவுடையவர்கள் அகப்பட்ட விஷயம் என்றால்-தனக்கு நிலம் அன்று என்று மீள அறியாதே போனாள்) 4 | ஏது அவன் தொல் பிறப்பு ? இளையவன் வளை யூதி மன்னர்
தூதுவனாயவனூர் சொல்லுவீர்காள் ! சொலீர் அறியேன்
மாதவன் தன் துணையா நடந்தாள் தடம் சூழ் புறவில்
போது வண்டாடு செம்மல் புனலாளி புகுவர் கொலோ ? –3-7-4 | பதவுரை Show / Hideஅவன், Avan - (என்மகளைக் கொண்டு போன) அவனுடைய (- (என்மகளோ வென்னில்) (சென்ற இருவரும்)) தொல் பிறப்பு, Thol Pirappu - பழைய ஜன்மம் ஏது, Aethu - க்ஷத்ரிய ஜன்மமோ? இடைச்சன்மமோ? யாது கொல்? அறியேன், Ariyen - நானறிகின்றிலேன்; இளையவன், Ilaiyavan - குமரனாயும் வளை ஊதி, Valai Oothi - சங்கை ஊதுமவனாயும் மன்னர் தாதுவனாயவன், Mannar Thadhuvanayavan - பாண்டவர்களுக்காகத் தாதுசென்றவனாயுள்ள அவனுடைய ஊர், Oor - ஊரையும் அறியேன், Ariyen - அறிகின்றிலேன்; சொல்லுவீர், Solluveer - சொல்லத் தெரிந்தவர்களே! சொல்லீர், Sollir - சொல்லுங்கள்; மாதவன் தன் துணை ஆ, Madhavan Than Thunai Aa - திருமால் தனக்குத் துணையாகப் பெற்று நடந்தாள், Nadandhaal - (அவனோடு கூடச்) சென்றாள்; தடம் சூழ் புறவின், Thadam Soozh Puravin - தடாகங்கள் சூழ்ந்த சோலைகளை யுடையதும் போது, Podhu - பூக்களிலே வண்டு ஆடு, Vandu Aadu - வண்டுகள் களித்துக் கூத்தாடப் பெற்ற செம்மல், Semmal - பெருமைதங்கிய புனல், Punal - தீர்த்தங்களையுடையதுமான ஆலி, Aali - திருவாலியிலே புகுவர் கொலோ, Pughuvar Koloo - சென்று சேருவர்களோ? |
| 1212 | பெரிய திருமொழி || (3-7–கள்வன் கொல்) (திருவாலி 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவனுடைய சர்வ அங்க சௌந்தர்யமும்-இவள் உடைய தோள் அழகு ஒன்றுக்கும் போரும் அத்தனை – இருவரும் கூட ஜல கிரீடை பண்ணி வர்த்திக்கலாம் தேசத்தில் புகுவர் கொலோ) 5 | தாய் எனை என்று இரங்காள் தடந்தோளி தனக்கமைந்த
மாயனை மாதவனை மதித்து என்னை யகன்ற இவள்
வேயன தோள் விசிறிப் பெடையன்ன மென நடந்து
போயின பூங்கொடியாள் புனலாலி புகுவர் கொலோ ? –3-7-5 | பதவுரை Show / Hideதட தோளி இவள், Thada Tholi Ival - பெரிய தோள்களையுடைய என் மகள் எனை, Enai - என் விஷயத்தில் தாய் என்று இரங்காள், Thaai Endru Irangaal - பெற்றதாய் என்றும் இரக்கங்கொள்ளவில்லை; தனக்கு அமைந்த, Thanakku Amaindha - தனக்குத் தகுந்த மாயனை, Maayanai - ஆச்சரியனான திருமாலை மதித்து, Mathiththu - கொண்டாடிக் கொண்டு என்னை அகன்ற என்னை விட்டு நீங்கினவளாய் வேய் அன தோள் விசிறி, Vey Ana Thol Vichiri - மூங்கில் போன்ற தோள்களை வீசிக்கொண்டு பெடை அன்னம் என நடந்து போயின, Pedai Annan Ena Nadandhu Poyina - அன்னப் பேடைபோல் நடந்து சென்ற பூகொடியாள், Pookodiyal - அழகிய கொடிபோன்ற என் மகளும் (அவனும்) புனல் ஆலி, Punal Aali - நீர்வளம்மிகுந்த திருவாலியிலே புகுவர்கொலோ, Puguvarkolo - சென்று சேருவர்களோ? |
| 1213 | பெரிய திருமொழி || (3-7–கள்வன் கொல்) (திருவாலி 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நிரதிசய போக்யனுமாய்-சுலபனுமாய்-ரஷகனுமானவன் உடன் கூட-ராவண வதம் பண்ணி மீண்டு எழுந்து அருளுகிற போது ஸ்ரீ திரு அயோத்யை கோடித்தாற் போலே ஸ்ரீ திரு வாலியையும் கோடிக்கப் பண்ணி புகுகிறார்கள் இறே) 6 | என் துணை என்று எடுத்தேற்கு இறையேனும் இரங்கிற்றிலள்
தன் துணையாய் என் தன் தனிமைக்கும் இரங்கிற்றிலள்
வன் துணை வானவர்க்காய் வரம் செற்று அரங்கத்து உறையும்
இன் துணைவனோடும் போய் எழில் ஆலி புகுவர் கொலோ ? –3-7-6 | பதவுரை Show / Hideஎன் துணை என்று எடுத்தேற்கு, En Thunai Endru Eduthetku - ‘இவள் நமக்கு உதவியாயிருப்பள்’ என்று வளர்த்து வந்த என் விஷயத்தில் (- (என் மகளானவள்) (இலங்கைக்குச் சென்று) (இருவரும்) (எழில் ஆலி புகுவர்கொலோ-.)) இறையேனும், Irayeenum - கொஞ்சமாகிலும் இரங்கிற்றிலன், Irangittrilan - இரக்கங்கொண்டாளில்லை; தன் துணை ஆய என்தன் தனிகைக்கும், Than Thunai Aay Enthan Thanikaikkum - (இதுவரையில்) தனக்கு உதவியாயிருந்த நான் தனியே யிருப்பதற்காகவும் இரங்கிற்றிலள், Irangittrilal - இரக்கங் கொண்டாளில்லை; வானவர்க்கு, Vaanavarkku - தேவர்களுக்கு வன் துணை ஆய், Van Thunai Aay - சிறந்த துணையாய் அரங்கத்து உறையும், Arangathu Uraiyum - கோயிலிலே கண் வளர்ந்தருளுகிற இன் துணைவனொடும் போய், In Thunaivanodum Poy - நல்ல துணைவனான திருமாலோடே சென்று |
| 1214 | பெரிய திருமொழி || (3-7–கள்வன் கொல்) (திருவாலி 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இங்கே இருவரைக் கை விட்டால்-அங்கே இருவரைப் பற்ற வேணும் இறே) 7 | அன்னையும் அத்தனும் என்று அடியோமுக்கு இரங்கிற்றிலள்
பின்னை தன் காதலன் தன் பெரும் தோள் நலம் பேணினளால்
மின்னியும் வஞ்சியையும் வென்றிலங்கும் இடையாள் நடந்து
புன்னையும் அன்னமும் சூழ் புனலாலி புகுவர் கொலோ ? –3-7-7 | பதவுரை Show / Hideமின்மையும், Minmaiyum - மின்னற் கொடியையும் (- (அவ்விருவரும்) (புகுவர் கொலோ சென்று சேருவர்களோ?)) வஞ்சியையும், Vanjiyaiyum - வஞ்சிக் கொடியையும் வென்று, Vendru - தோற்கடித்து இலங்கும், Ilankum - (மிகவும் ஸூக்ஷ்மமாக)விளங்காநின்ற இடையாள், Idaiyal - இடையை யுடையளான என் மகள், அன்னையும் அத்தனும் என்று, Annaiyum Aththanum Endru - தாய் தகப்பனென்று கூட அடியோமுக்கு, Adiyomukku - எங்கள் விஷயத்தில் இரங்கிற்றிலள், Irangittrilal - தயை பண்ணினாளில்லை; பின்னை தன் காதலன் தன், Pinnai Than Kaadhalan Than - திருமாலினது பெரு தோள் நலம் பேணினள், Peru Thol Nalam Peeninal - பெருமை தங்கிய தோள்களோடே அணைந்துபெறும் ஸுகத்தையே விரும்பின வளாய் நடந்து, Nadandhu - (அவனோடு கூட) நடந்து செல்ல, புன்னையும் அன்னமும் சூழ், Punnaiyum Annanum Soozh - புன்னைப் பொழிலும் அன்னப் பறவைகளும் சூழ்ந்த புனல், Punal - நீர்வளம் பொருந்திய ஆலி, Aali - திருவாலியிலே |
| 1215 | பெரிய திருமொழி || (3-7–கள்வன் கொல்) (திருவாலி 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (செழும் கோதை-லிலோ உபகரணங்களை விட்டு-அவனைப் பற்றின பின்பு உடம்பிலே பிறந்த பௌஷ்கல்யம்- தன்னைக் காண்பார்க்கு காட்சிக்கு கொடுக்க இடம் உள்ள தேசத்தில் புகுமோ) 8 | முற்றிலும் பைங்கிளியும் பந்தும் ஊசலும் பேசுகின்ற
சிற்றில் மென் பூவையும் விட்டகன்ற செழும் கோதை தன்னைப்
பெற்றிலேன் முற்றிழையை பிறப்பிலி பின்னே நடந்து
மற்றெல்லாம் கை தொழப் போய் வயலாலி புகுவர் கொலோ ? –3-7-8 | பதவுரை Show / Hideமுற்றிலும், Muttirulum - (வினையாட்டுக் கருவியான சிறுமுறத்தையும் (- (இருவரும்) (வயல் ஆலி புகுவர்கொலோ-.)) பைங்கிளியும், Paingiliyum - பச்சைக் கிளியையும் பந்தும், Pandhum - பந்தையும் ஊசலும், Oosalum - ஊஞ்சலையும் சிற்றில்பேசுகின்ற, Sitrilpesugirn - சிறிய கூட்டிலிருந்து பேசுகிற மென் பூவையும், Men Poovaiyum - மெல்லிய நாகணவாய்ப ; பறவையையும் விட்டு அகன்ற, Vittu Aghandra - விட்டிட்டு வெளியேறின செழு கோதை தன்னை, Sezhu Kothai Thannai - அழகிய பூமாலை போன்றவளும் முற்று இழையை, Muttru Izhaiyai - நிறைந்த ஆபரணங்களையிணந்த வளுமான என் மகளே பெற்றிலேன், Petrilein - நான் கண்ணால் காணப்பெற்றிலேன்; மற்று எல்லாம் கைதொழ, Mattru Ellam Kaithozha - எல்லோருங் கண்டு ஸேவிக்கும் படியாக பிறப்பு இலிபின்னே நடந்து போய், Pirappu Ilipinnai Nadandhu Poi - நித்யனான எம்பெருமான் பின்னே நடந்துசென்று. |
| 1216 | பெரிய திருமொழி || (3-7–கள்வன் கொல்) (திருவாலி 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ஈஸ்வரனைக் காட்டில் ஸ்ரீ பிராட்டி-அஸி தேஷணை-என்னும் ஏற்றத்தை உடையாள் ஆனாப் போலே ஸ்ரீ பிராட்டியில் ஏற்றம் இவளுக்கு -காவியங்கண்ணி -என்று இருவரையும் சேர அனுபவிக்கிற கண் இறே இவளுடைய கண்கள்) 9 | காவியங்கண்ணி எண்ணில் கடி மா மலர்ப்பாவை யொப்பாள்
பாவியேன் பெற்றமையால் பணைத் தோளி பரக்கழிந்து
தூவி சேர் அன்னம் அன்ன நடையாள் நெடுமாலொடும் போய்
வாவி யந்தண் பணை சூழ் வயலாலி புகுவர் கொலோ ? –3-7-9 | பதவுரை Show / Hideரவி அம் கண்ணி, Ravi Am Kannni - நீலோற்பலமலர்போன்று அழகிய கண்களையுடையவளும், (- (இருவரும்) (வயல் ஆலி புகுவர்கொலோ-.)) யெண்ணில் கடி மா மலர்பாவை ஒப்பாள், Yennil Kadi Maa Malarpavai Oppaal - ஆலோசிக்குமிடத்தில், பெரிய பிராட்டியாரோடு ஒப்பாகச் சொல்லத் தகுந்தவளும் தாவிசேர்அன்னம் அன்னத் நடையாள், Thavicheraannam Annath Nadayaal - இறகையுடைய அன்னப்பேடையின் நடைபோன்ற நடையையுடையவளும் ஈடு பணை தோளி, Eedu Panai Tholi - மூங்கில் போன்ற தோள்களையவளுமான என் மகள் பாவியேன் பெற்றமையால், Paaviyen Petramaiyaal - பாவியான என்னுடையவயிற்றிற் பிறந்த குற்றத்தினால் பரக்கழிந்து, Parakazhindhu - பெரும்பழிக்கு இலக்காகி நெடுமாலொடும் போய், Nedumaalodum Poi - ஸர்வேச்வரனோடு கூடச் சென்று வாவி, Vaavi - நடைவாவிகளும் அம் தண் பணை, Am Than Panai - அழகிய குளிர்ந்த தடாகங்களும் சூழ், Sool - சூழ்ந்த |
| 1217 | பெரிய திருமொழி || (3-7–கள்வன் கொல்) (திருவாலி 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்பத்தும் சஹ்ருதயமாக கற்க வல்லாருக்கு பரம பதம் நிச்சிதம் –தாயார் தனி வழியே போனாள் என்று பயப்பட வேண்டா – ஆதி வாஹிக கணத்தோடு தானே வழி காட்டிப் போம்) 10 | தாய் மனம் நின்று இரங்கத் தனியே நெடுமால் துணையா
போயின பூங்கொடியாள் புனலாலி புகுவர் என்று
காய்சின வேல் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை பத்தும்
மேவிய நெஞ்சுடையார் தஞ்சமாவது விண்ணுலகே –3-7-10 | பதவுரை Show / Hideதாய், Thaai - தாயானவள் நின்று மனம் இரங்க, Ninru Manam Irangka - வயிறொயி நிற்க தனியே, Thaniye - தாயினிடம் சொல்லாமல் தன் இஷ்டப்படியே நெடு மால் துணை ஆ, Nedu Maal Thunai Aa - ஸர்வேச்வரனைத் துணையாகக் கொண்டு போயின, Poyin - புறப்பட்டுப் போன பூ கொடியாள், Poo Kodiyal - அழகிய கொடிபோன்ற என் மகளும் (அவனும் ஆகிய இருவரும்) புனல் ஆலி, Punal Aali - நீர்வளம் மிக்க திருவாலியிலே புருவர் என்று, Puruvaar Endru - சென்று சேர்ந்திருப்பர்களோ என்று சிந்தைப்படுவதாக காய் சினம் வேல் கலியன், Kaai Sinam Vel Kalyan - எதிரிகளைத் தபிக்கச் செய்கின்ற கோபத்தையும் வேலையுமுடையரான திருமங்கையாழ்வார் ஒலிசெய், Olisei - அருளிச்செய்த தமிழ் மாலை பத்தும், Tamil Maalai Pathum - இத்தமிழ்ப் பாமாலை பத்தையும் மேவிய நெஞ்சு உடையார், Meviya Nenju Udaiyaar - (கற்க) விரும்பும் மனமுடைய வர்கட்கு விண் உலகு, Vin Ulagu - பரமபதம் தஞ்சம் ஆவது, Thanjam Aavathu - ப்ராப்யபூமியாம். |