திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 534 | நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 1 | தெள்ளியார் பலர் கைந்தொழும் தேவனார்
வள்ளல் மாலிரும் சோலை மணாளனார்
பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட
கொள்ளுமாகில் நீ கூடிடு கூடிலே | பதவுரை Show / Hideகூடலே, Koodale - கூடல் தெய்வமே! தெள்ளியார் பலர், Thelliyar palar - தெளிவுடைய பக்தர்கள் பலர் கை தொழும், Kai thozhum - கைகளார வணங்கப் பெற்ற தேவனார், Thevanaar - ஸ்வாமியாய் வள்ளல், Vallal - பரமோதாரனாய் மாலிருஞ்சோலை மணாளனார், Maalirunjolai manaalanar - திருமாலிருஞ் சோலையிலே எழுந்தருளி யிருக்கிற மணவாளப் பிள்ளையாகிய பரம புருஷன் பள்ளி கொள்ளும் இடத்து, Palli kollum idathu - பள்ளி கொண்டருளுமிடத்திலே அடி கொட்டிட, Adi kottit - (அவனுடைய) திருவடிகளை நான் பிடிக்கும்படியாக கொள்ளும் ஆகில், Kollum aagil - (அவன்) திருவுள்ளம் பற்றுவனாகில் நீ கூடிடு, Nee koodidu - நீ கூட வேணும் |
| 535 | நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 2 | காட்டில் வேங்கடம் கண்ணபுரநகர்
வாட்டமின்றி மகிழ்ந்துறை வாமனன்
ஓட்டரா வந்து என் கைப்பற்றி தன்னோடும்
கூட்டுமாகில் நீ கூடிடு கூடலே | பதவுரை Show / Hideகூடலே, Koodale - கூடல் தெய்வமே! காட்டில் வேங்கடம், Kaatil vengadam - காட்டிலுள்ள திருவேங்கடமலையில நகர் கண்ணபுரம், Nagar kannapuram - நகரமாகிய திருக்கண்ண புரத்திலும் வாட்டம் இன்றி, Vaatam indri - மனக் குறை யில்லாமல் மகிழ்ந்து, Magizhndhu - திருவுள்ளமுகந்து உறை, Urai - நித்ய வாஸம் செய்தருளுகிற வாமனன், Vaamanan - வாமநாவதாரம் செய்தருளிய எம்பெருமான் ஒட்டரா வந்து, Ottaraa vandhu - ஓடி வந்து என் கை பற்றி, En kai patri - என்னுடைய கையைப் பிடித்து தன்னொடும், Thanodum - தன்னொடு கூட்டும் ஆகில், Kootum aagil - அணைத்துக் கொள்வனாகில் நீ கூடிடு, Nee koodidu - நீ கூடவேணும் |
| 536 | நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 3 | பூ மகன் புகழ் வானவர் போற்றுதற்கு
ஆமகன் அணி வாணுதல் தேவகி
மாமகன் மிகு சீர் வசுதேவர் தம்
கோமகன் வரில் கூடிடு கூடலே | பதவுரை Show / Hideபூ மகன், Poo magan - பூலிற் பிறந்த பிரமனும் வானவர், Vaanavar - நித்யஸூரிகளும் புகழ் போற்றுதற்கு, Pugazh potrudharku - கீர்த்தியைப் பாடித் துதிப்பதற்கு ஆம், Aam - தகுந்த மகன், Magan - புருஷோத்தமனாய், அணி வாள் நுதல் தேவகி, Ani vaal nuthal Dhevaki - மிகவும் அழகிய நெற்றியையுடைய தேவகியினுடைய மா மகன், Maa magan - சிறந்த புத்திரனாய், மிகு சீர் வசுதேவர் தம், Migu seer Vasudevar tham - மிகுந்த, நற் குணங்களை யுடையரான வசுதேவருடைய கோ மகன், Ko magan - மாட்சிமை தங்கிய புத்திரனான கண்ணபிரான் வரில், Varil - (என்னை அணைக்க) வருவானாகில் கூடலே, Koodale - கூடல் தெய்வமே! நீ கூடிடு, Nee koodidu - நீ கூடவேணும் |
| 537 | நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 4 | ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட
பூத்த நீள் கடம்பேறிப் புகப் பாய்ந்து
வாய்த்த காளியன் மேல் நடமாடிய
கூத்தனார் வரில் கூடிடு கூடலே | பதவுரை Show / Hideஆய்ச்சிமார்களும், Aaichimaargalum - இடைச்சிகளும் ஆயரும், Aayarum - இடையரும் அஞ்சிட, Anjida - பயப்படும்படியாக பூத்த நீள் கடம்பு ஏறி, Pootha neel kadambu eri - புஷ்பித்ததாய் உயர்ந்திருந்த கடப்ப மரத்தின் மேல் ஏறி புக பாய்ந்து, Puga paaindhu - அங்கு நின்றும் எழும்பிக் குதித்து வாய்த்த காளியன் மேல் நடம் ஆடிய, Vaaitha kaaliyan mel nadam aadiya - பாக்கியசாலியான காளியநாகத்தின் மேல் நாட்ய சாஸ்த்ர நிபுணனான நர்த்தனஞ் செய்த கூத்தனார் வரில், Koothanaar varil - கண்ணபிரான் வரக்கூடுமாகில் கூடலே, Koodale - கூடல் தெய்வமே! நீ கூடிடு, Nee koodidu - நீ கூடவேணும் |
| 538 | நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 5 | மாட மாளிகை சூழ் மதுரைப் பதி
நாடி நந்தெருவின் நடுவே வந்திட்டு
ஓடை மா மதயானை யுதைத்தவன்
கூடுமாகில் நீ கூடிடு கூடலே | பதவுரை Show / Hideஓடை, Odai - நெற்றிப் பட்டத்தை யுடைத்தாய் மா மதம், Maa madham - மிக்க மதத்தை யுடைத்தான யானை, Yaanai - (குவலயா பீடமென்னும்) யானையை உதைத்தவன், Udhaithavan - உதைத்து முடித்த கண்ண பிரான் மாடம் மாளிகை சூழ் மதுரை பதி, Maadam maaligai soozh mathurai pathi - மாடங்களுடைய மாளிகைகளாலே சூழப்பட்ட மதுரை மாநகரிலே நாடி, Naadi - (நம் வீட்டைத்) தேடிக் கொண்டு நம் தெருவின் நடுவே வந்திட்டு, Nam theruvin naduve vandhitu - நம்முடைய வீதியின் நடுவிலே வந்து கூடும் ஆகில், Koodum aagil - (நம்மோடு) கட்டுவானாகில் கூடலே, Koodale - கூடல் தெய்வமே! நீ கூடிடு, Nee koodidu - நீ கூடவேணும் |
| 539 | நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 6 | அற்றவன் மருத முறிய நடை
கற்றவன் கஞ்சனை வஞ்சனையில்
செற்றவன் திகழும் மதுரைப்பதி
கொற்றவன் வரில் கூடிடு கூடலே | பதவுரை Show / Hideஅற்றவன், Attravan - (ஏற்கனவே எனக்கு) அற்றத் தீர்ந்தவனாய் மருதம் முறிய, Marutham muriya - (யமளார்ஜுந மென்னும்) மருத மாங்களானவை முறிந்து விழும்படியாக நடை கற்றவன், Nadai katravan - தவழ் நடை நடக்கக் கற்றவனாய் கஞ்சனை, Kanjanai - கம்சனை வஞ்சனையில், Vanjanaiyil - வஞ்சனையிலே செற்றவன், Setravan - கொன்று முடித்தவனாய் திகழும் மதுரை பதி கொற்றவன், Thigazhum mathurai pathi kotravan - விளங்குகின்ற மதுரைமா நகர்க்கு அரசனான கண்ணபிரான் வரில், Varil - வந்திடுவானாகில் கூடலே, Koodale - கூடல் தெய்வமே! நீ கூடிடு, Nee koodidu - நீ கூடவேணும் |
| 540 | நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 7 | அன்று இன்னாதான செய் சிசுபாலனும்
நின்ற நீள் மருதும் எருதும் புள்ளும்
வென்றி வேல் விறல் கஞ்சனும் வீழ முன்
கொன்றவன் வரில் கூடிடு கூடலே | பதவுரை Show / Hideஅன்று, Andru - முற் காலத்தில் இன்னாதன செய் சிசுபாலனும், Inaadhana sei sisubalanum - வெறுக்கக் கூடிய கெட்ட காரியங்களையே செய்து வந்த சிசுபாலனும் நின்ற நீள் மருதும், Nindra neel marudhum - வழியிடையே நின்ற பெரிய இரட்டை மருத மரங்களும் எருதும், Erudhum - ஏழு ரிஷபங்களும் புள்ளும், Pullum - பகாஸுரனும் வென்றி வேல் விறல் கஞ்சனும், Vendri vel viral kanjanum - வெற்றியை விளைவிக்க வல்ல வேலாயுத மென்ன (அதைப் பிடிக்கத்தக்க) மிடுக்ககென்ன இவற்றை யுடையவனான் கம்சனும் வீழ, Veezha - முடிந்து விழும்படியாக முன், Mun - எல்லார் கண்ணெதிரிலும் கொன்றவன், Kondravan - கொன்றொழித்த கண்ண பிரான் வரில், Varil - வரக்கூடுமாகில் கூடலே, Koodale - கூடல் தெய்வமே! நீ கூடிடு, Nee koodidu - நீ கூடவேணும் |
| 541 | நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 8 | ஆவலன்புடையார் தம் மனத்தன்றி
மேவலன் விரை சூழ் துவராபதிக்
காவலன் கன்று மேய்த்துவிளையாடும்
கோவலன் வரில் கூடிடு கூடலே | பதவுரை Show / Hideஆவல் அன்பு உடையார் தம், Aaval anbu udaiyaar tham - ஆவலையும் அன்பையும் உடையவர்களுடைய மனத்து அன்றி மேவலன், Manathu andri mevalan - நெஞ்சு தவிர மற்றோரிடத்திலும் பொருந்தாதவனும் விரை சூழ் துவராபதி காவலன், Virai soozh Dhuvaraapathi kaavalan - நல்ல வாஸனை சூழ்ந்த த்வாரகாபுரிக்கு நிர்வாஹகனும் கன்று மேய்த்து விளையாடும் கோவலன், Kanru meithu vilaiyaadum kovalan - கன்றுகளை மேய்த்து விளையாடும் கோபாலனுமாகிய கண்ணபிரான் வரில், Varil - வரக் கூடுமாகில் கூடலே, Koodale - கூடல் தெய்வமே! நீ கூடிடு, Nee koodidu - நீ கூடவேணும் |
| 542 | நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 9 | கொண்ட கோலக் குறள் உருவாய்ச் சென்று
பண்டு மா வலி தன் -பெரு வேள்வியில்
அண்டமும் நிலனும் அடி யொன்றினால்
கொண்டவன் வரில் கூடிடு கூடலே | பதவுரை Show / Hideபண்டு, Pandu - முற் காலத்திலே கோலம் கொண்ட குறள் உரு ஆய், Kolam konda kural uru aai - (முப்புரி நூலும் க்ருஷ்ணாஜிநமும் முஞ்ஜியும் பவித்ரமும் தண்டுமான) கோலம் பூண்ட வாமந ரூபியாய் மாவலி தன், Maavali than - பெரு வேள்வியில் சென்று அண்டமும், Andamum - மேலுலகங்களையும் நிலனும், Nilanum - கீழுலகங்களையும் அடி ஒன்றினால், Adi ondrinaal - ஒவ்வோரடியாலே கொண்டவன், Kondavan - அளந்து கொண்ட த்ரிவிக்ரமன் வரில், Varil - வருவானாகில் கூடலே, Koodale - கூடல் தெய்வமே! நீ கூடிடு, Nee koodidu - நீ கூடவேணும் |
| 543 | நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 10 | பழகு நான் மறையின் பொருளாய் மத
மொழுகு வாரணம் உய்ய வளித்த எம்
அழகனார் அணி ஆய்ச்சியர் சிந்தையுள்
குழகனார் வரில் கூடிடு கூடலே | பதவுரை Show / Hideபழகு நால்மறையின் பொருள் ஆய, Pazhagu naalmaraiyin porul aaya - அநாதியான சதுர் வேதங்களின் உட்பொருளாயிருக்கு மவனாய் மதம் ஒழுகு வாரணம் உய்ய அளித்த, Madham ozhugu vaaranam uyya alitha - மத ஜலம் பெருகா நின்ற கஜேந்த்ராழ்வான் (துயர் நீங்கி) வாழும்படி க்ருபை செய்தருளினவனாய் எம் அழகனார், Em azhaganaar - எம்மை ஈடுபடுத்த வல்ல அழகை யுடையனாய் அணி ஆய்ச்சியர் சிந்தையுள் குழகனார், Ani aaichiyar sindhaiyul kuzhaganaar - அழகிய கோபிமார்களின் நெஞ்சினுள்ளே குழைந்திருக்கு மவனான கண்ணபிரான் வரில், Varil - வரக் கூடுமாகில் கூடலே, Koodale - கூடல் தெய்வமே! நீ கூடிடு, Nee koodidu - நீ கூடவேணும் |
| 544 | நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 11 | ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை
நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர்
கூடலைக் குழல் கோதை முன் கூறிய
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே | பதவுரை Show / Hideஊடல் கூடல், Oodal koodal - ஊடலோடே கூடியிருக்கை யென்ன, (அதாவது ப்ரணய ரோஷஸஹிதைகளா யிருக்கை யென்ன) உணர்தல், Uṇardhal - குறைகளை உணர்த்துகை யென்ன புணர்தல், Puṇardhal - (பிறகு) ஸம்ச்லேஷிக்கை யென்ன (இப்படிப் பட்ட காரியங்களிலே) முன், Muṉ - அநாதி காலமாக நீடு நின்ற, Needu nindra - நீடித்துப் பொருந்தி நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர் கூடலை, Nirai pugazh aaichiyar koodalai - நிறைந்த புகழையுடைய ஆய்ப் பெண்கள் (இழைத்த) கூடலைப் பற்றி குழல் கோதை, Kuzhal kothai - அழகிய மயிர் முடியை யுடையனான ஆண்டாள் கூறிய , Kooriya - அருளிச் செய்த பாடல் பத்தும், paadal pathum - பத்துப் பாட்டுக்களையும் வல்லார்க்கு, vallarkku - ஓத வல்லவர்களுக்கு பாவம் இல்லை, paavam illai - (எம்பெருமானைப் பிரிந்து துக்கிக்கும்படியான) பாவம் இல்லையாம் |