திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 4-தெள்ளியார் (11 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
534நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 1
தெள்ளியார் பலர் கைந்தொழும் தேவனார் வள்ளல் மாலிரும் சோலை மணாளனார் பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட கொள்ளுமாகில் நீ கூடிடு கூடிலே
பதவுரை Show / Hide
கூடலே, Koodale - கூடல் தெய்வமே!
தெள்ளியார் பலர், Thelliyar palar - தெளிவுடைய பக்தர்கள் பலர்
கை தொழும், Kai thozhum - கைகளார வணங்கப் பெற்ற
தேவனார், Thevanaar - ஸ்வாமியாய்
வள்ளல், Vallal - பரமோதாரனாய்
மாலிருஞ்சோலை மணாளனார், Maalirunjolai manaalanar - திருமாலிருஞ் சோலையிலே எழுந்தருளி யிருக்கிற மணவாளப் பிள்ளையாகிய பரம புருஷன்
பள்ளி கொள்ளும் இடத்து, Palli kollum idathu - பள்ளி கொண்டருளுமிடத்திலே
அடி கொட்டிட, Adi kottit - (அவனுடைய) திருவடிகளை நான் பிடிக்கும்படியாக
கொள்ளும் ஆகில், Kollum aagil - (அவன்) திருவுள்ளம் பற்றுவனாகில்
நீ கூடிடு, Nee koodidu - நீ கூட வேணும்
535நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 2
காட்டில் வேங்கடம் கண்ணபுரநகர் வாட்டமின்றி மகிழ்ந்துறை வாமனன் ஓட்டரா வந்து என் கைப்பற்றி தன்னோடும் கூட்டுமாகில் நீ கூடிடு கூடலே
பதவுரை Show / Hide
கூடலே, Koodale - கூடல் தெய்வமே!
காட்டில் வேங்கடம், Kaatil vengadam - காட்டிலுள்ள திருவேங்கடமலையில
நகர் கண்ணபுரம், Nagar kannapuram - நகரமாகிய திருக்கண்ண புரத்திலும்
வாட்டம் இன்றி, Vaatam indri - மனக் குறை யில்லாமல்
மகிழ்ந்து, Magizhndhu - திருவுள்ளமுகந்து
உறை, Urai - நித்ய வாஸம் செய்தருளுகிற
வாமனன், Vaamanan - வாமநாவதாரம் செய்தருளிய எம்பெருமான்
ஒட்டரா வந்து, Ottaraa vandhu - ஓடி வந்து
என் கை பற்றி, En kai patri - என்னுடைய கையைப் பிடித்து
தன்னொடும், Thanodum - தன்னொடு
கூட்டும் ஆகில், Kootum aagil - அணைத்துக் கொள்வனாகில்
நீ கூடிடு, Nee koodidu - நீ கூடவேணும்
536நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 3
பூ மகன் புகழ் வானவர் போற்றுதற்கு ஆமகன் அணி வாணுதல் தேவகி மாமகன் மிகு சீர் வசுதேவர் தம் கோமகன் வரில் கூடிடு கூடலே
பதவுரை Show / Hide
பூ மகன், Poo magan - பூலிற் பிறந்த பிரமனும்
வானவர், Vaanavar - நித்யஸூரிகளும்
புகழ் போற்றுதற்கு, Pugazh potrudharku - கீர்த்தியைப் பாடித் துதிப்பதற்கு
ஆம், Aam - தகுந்த
மகன், Magan - புருஷோத்தமனாய்,
அணி வாள் நுதல் தேவகி, Ani vaal nuthal Dhevaki - மிகவும் அழகிய நெற்றியையுடைய தேவகியினுடைய
மா மகன், Maa magan - சிறந்த புத்திரனாய்,
மிகு சீர் வசுதேவர் தம், Migu seer Vasudevar tham - மிகுந்த, நற் குணங்களை யுடையரான வசுதேவருடைய
கோ மகன், Ko magan - மாட்சிமை தங்கிய புத்திரனான கண்ணபிரான்
வரில், Varil - (என்னை அணைக்க) வருவானாகில்
கூடலே, Koodale - கூடல் தெய்வமே!
நீ கூடிடு, Nee koodidu - நீ கூடவேணும்
537நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 4
ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட பூத்த நீள் கடம்பேறிப் புகப் பாய்ந்து வாய்த்த காளியன் மேல் நடமாடிய கூத்தனார் வரில் கூடிடு கூடலே
பதவுரை Show / Hide
ஆய்ச்சிமார்களும், Aaichimaargalum - இடைச்சிகளும்
ஆயரும், Aayarum - இடையரும்
அஞ்சிட, Anjida - பயப்படும்படியாக
பூத்த நீள் கடம்பு ஏறி, Pootha neel kadambu eri - புஷ்பித்ததாய் உயர்ந்திருந்த கடப்ப மரத்தின் மேல் ஏறி
புக பாய்ந்து, Puga paaindhu - அங்கு நின்றும் எழும்பிக் குதித்து
வாய்த்த காளியன் மேல் நடம் ஆடிய, Vaaitha kaaliyan mel nadam aadiya - பாக்கியசாலியான காளியநாகத்தின் மேல் நாட்ய சாஸ்த்ர நிபுணனான நர்த்தனஞ் செய்த
கூத்தனார் வரில், Koothanaar varil - கண்ணபிரான் வரக்கூடுமாகில்
கூடலே, Koodale - கூடல் தெய்வமே!
நீ கூடிடு, Nee koodidu - நீ கூடவேணும்
538நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 5
மாட மாளிகை சூழ் மதுரைப் பதி நாடி நந்தெருவின் நடுவே வந்திட்டு ஓடை மா மதயானை யுதைத்தவன் கூடுமாகில் நீ கூடிடு கூடலே
பதவுரை Show / Hide
ஓடை, Odai - நெற்றிப் பட்டத்தை யுடைத்தாய்
மா மதம், Maa madham - மிக்க மதத்தை யுடைத்தான
யானை, Yaanai - (குவலயா பீடமென்னும்) யானையை
உதைத்தவன், Udhaithavan - உதைத்து முடித்த கண்ண பிரான்
மாடம் மாளிகை சூழ் மதுரை பதி, Maadam maaligai soozh mathurai pathi - மாடங்களுடைய மாளிகைகளாலே சூழப்பட்ட மதுரை மாநகரிலே
நாடி, Naadi - (நம் வீட்டைத்) தேடிக் கொண்டு
நம் தெருவின் நடுவே வந்திட்டு, Nam theruvin naduve vandhitu - நம்முடைய வீதியின் நடுவிலே வந்து
கூடும் ஆகில், Koodum aagil - (நம்மோடு) கட்டுவானாகில்
கூடலே, Koodale - கூடல் தெய்வமே!
நீ கூடிடு, Nee koodidu - நீ கூடவேணும்
539நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 6
அற்றவன் மருத முறிய நடை கற்றவன் கஞ்சனை வஞ்சனையில் செற்றவன் திகழும் மதுரைப்பதி கொற்றவன் வரில் கூடிடு கூடலே
பதவுரை Show / Hide
அற்றவன், Attravan - (ஏற்கனவே எனக்கு) அற்றத் தீர்ந்தவனாய்
மருதம் முறிய, Marutham muriya - (யமளார்ஜுந மென்னும்) மருத மாங்களானவை முறிந்து விழும்படியாக
நடை கற்றவன், Nadai katravan - தவழ் நடை நடக்கக் கற்றவனாய்
கஞ்சனை, Kanjanai - கம்சனை
வஞ்சனையில், Vanjanaiyil - வஞ்சனையிலே
செற்றவன், Setravan - கொன்று முடித்தவனாய்
திகழும் மதுரை பதி கொற்றவன், Thigazhum mathurai pathi kotravan - விளங்குகின்ற மதுரைமா நகர்க்கு அரசனான கண்ணபிரான்
வரில், Varil - வந்திடுவானாகில்
கூடலே, Koodale - கூடல் தெய்வமே!
நீ கூடிடு, Nee koodidu - நீ கூடவேணும்
540நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 7
அன்று இன்னாதான செய் சிசுபாலனும் நின்ற நீள் மருதும் எருதும் புள்ளும் வென்றி வேல் விறல் கஞ்சனும் வீழ முன் கொன்றவன் வரில் கூடிடு கூடலே
பதவுரை Show / Hide
அன்று, Andru - முற் காலத்தில்
இன்னாதன செய் சிசுபாலனும், Inaadhana sei sisubalanum - வெறுக்கக் கூடிய கெட்ட காரியங்களையே செய்து வந்த சிசுபாலனும்
நின்ற நீள் மருதும், Nindra neel marudhum - வழியிடையே நின்ற பெரிய இரட்டை மருத மரங்களும்
எருதும், Erudhum - ஏழு ரிஷபங்களும்
புள்ளும், Pullum - பகாஸுரனும்
வென்றி வேல் விறல் கஞ்சனும், Vendri vel viral kanjanum - வெற்றியை விளைவிக்க வல்ல வேலாயுத மென்ன (அதைப் பிடிக்கத்தக்க) மிடுக்ககென்ன இவற்றை யுடையவனான் கம்சனும்
வீழ, Veezha - முடிந்து விழும்படியாக
முன், Mun - எல்லார் கண்ணெதிரிலும்
கொன்றவன், Kondravan - கொன்றொழித்த கண்ண பிரான்
வரில், Varil - வரக்கூடுமாகில்
கூடலே, Koodale - கூடல் தெய்வமே!
நீ கூடிடு, Nee koodidu - நீ கூடவேணும்
541நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 8
ஆவலன்புடையார் தம் மனத்தன்றி மேவலன் விரை சூழ் துவராபதிக் காவலன் கன்று மேய்த்துவிளையாடும் கோவலன் வரில் கூடிடு கூடலே
பதவுரை Show / Hide
ஆவல் அன்பு உடையார் தம், Aaval anbu udaiyaar tham - ஆவலையும் அன்பையும் உடையவர்களுடைய
மனத்து அன்றி மேவலன், Manathu andri mevalan - நெஞ்சு தவிர மற்றோரிடத்திலும் பொருந்தாதவனும்
விரை சூழ் துவராபதி காவலன், Virai soozh Dhuvaraapathi kaavalan - நல்ல வாஸனை சூழ்ந்த த்வாரகாபுரிக்கு நிர்வாஹகனும்
கன்று மேய்த்து விளையாடும் கோவலன், Kanru meithu vilaiyaadum kovalan - கன்றுகளை மேய்த்து விளையாடும் கோபாலனுமாகிய கண்ணபிரான்
வரில், Varil - வரக் கூடுமாகில்
கூடலே, Koodale - கூடல் தெய்வமே!
நீ கூடிடு, Nee koodidu - நீ கூடவேணும்
542நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 9
கொண்ட கோலக் குறள் உருவாய்ச் சென்று பண்டு மா வலி தன் -பெரு வேள்வியில் அண்டமும் நிலனும் அடி யொன்றினால் கொண்டவன் வரில் கூடிடு கூடலே
பதவுரை Show / Hide
பண்டு, Pandu - முற் காலத்திலே
கோலம் கொண்ட குறள் உரு ஆய், Kolam konda kural uru aai - (முப்புரி நூலும் க்ருஷ்ணாஜிநமும் முஞ்ஜியும் பவித்ரமும் தண்டுமான) கோலம் பூண்ட வாமந ரூபியாய்
மாவலி தன், Maavali than - பெரு வேள்வியில் சென்று
அண்டமும், Andamum - மேலுலகங்களையும்
நிலனும், Nilanum - கீழுலகங்களையும்
அடி ஒன்றினால், Adi ondrinaal - ஒவ்வோரடியாலே
கொண்டவன், Kondavan - அளந்து கொண்ட த்ரிவிக்ரமன்
வரில், Varil - வருவானாகில்
கூடலே, Koodale - கூடல் தெய்வமே!
நீ கூடிடு, Nee koodidu - நீ கூடவேணும்
543நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 10
பழகு நான் மறையின் பொருளாய் மத மொழுகு வாரணம் உய்ய வளித்த எம் அழகனார் அணி ஆய்ச்சியர் சிந்தையுள் குழகனார் வரில் கூடிடு கூடலே
பதவுரை Show / Hide
பழகு நால்மறையின் பொருள் ஆய, Pazhagu naalmaraiyin porul aaya - அநாதியான சதுர் வேதங்களின் உட்பொருளாயிருக்கு மவனாய்
மதம் ஒழுகு வாரணம் உய்ய அளித்த, Madham ozhugu vaaranam uyya alitha - மத ஜலம் பெருகா நின்ற கஜேந்த்ராழ்வான் (துயர் நீங்கி) வாழும்படி க்ருபை செய்தருளினவனாய்
எம் அழகனார், Em azhaganaar - எம்மை ஈடுபடுத்த வல்ல அழகை யுடையனாய்
அணி ஆய்ச்சியர் சிந்தையுள் குழகனார், Ani aaichiyar sindhaiyul kuzhaganaar - அழகிய கோபிமார்களின் நெஞ்சினுள்ளே குழைந்திருக்கு மவனான கண்ணபிரான்
வரில், Varil - வரக் கூடுமாகில்
கூடலே, Koodale - கூடல் தெய்வமே!
நீ கூடிடு, Nee koodidu - நீ கூடவேணும்
544நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 11
ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர் கூடலைக் குழல் கோதை முன் கூறிய பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே
பதவுரை Show / Hide
ஊடல் கூடல், Oodal koodal - ஊடலோடே கூடியிருக்கை யென்ன, (அதாவது ப்ரணய ரோஷஸஹிதைகளா யிருக்கை யென்ன)
உணர்தல், Uṇardhal - குறைகளை உணர்த்துகை யென்ன
புணர்தல், Puṇardhal - (பிறகு) ஸம்ச்லேஷிக்கை யென்ன (இப்படிப் பட்ட காரியங்களிலே)
முன், Muṉ - அநாதி காலமாக
நீடு நின்ற, Needu nindra - நீடித்துப் பொருந்தி நின்ற
நிறை புகழ் ஆய்ச்சியர் கூடலை, Nirai pugazh aaichiyar koodalai - நிறைந்த புகழையுடைய ஆய்ப் பெண்கள் (இழைத்த) கூடலைப் பற்றி
குழல் கோதை, Kuzhal kothai - அழகிய மயிர் முடியை யுடையனான ஆண்டாள்
கூறிய , Kooriya - அருளிச் செய்த
பாடல் பத்தும், paadal pathum - பத்துப் பாட்டுக்களையும்
வல்லார்க்கு, vallarkku - ஓத வல்லவர்களுக்கு
பாவம் இல்லை, paavam illai - (எம்பெருமானைப் பிரிந்து துக்கிக்கும்படியான) பாவம் இல்லையாம்