Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 4-2 அலம்பாவெருட்டா (11 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
338ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 1
அலம்பா வெருட்டாக் கொன்று திரியும் அரக்கரை
குலம் பாழ் படுத்துக் குல விளக்காய் நின்ற கோன் மலை
சிலம்பார்க்க வந்து தெய்வ மகளிர்களாடும் சீர்
சிலம்பாறு பாயும் தென் திரு மாலிருஞ் சோலையே-4-2-1
தெய்வம் மகளிர்கள்,Deivam Magalirgala - தேவ ஸ்திரீகள்
சிலம்பு ஆர்க்க ,Silambu Aarka - (நமது) பாதச் சிலம்புகள் ஒலிக்கும் படி
வந்து ,Vandhu - (பூலோகத்தில்) வந்து
ஆடும் சீர்,Aadu Seer - நீராடும்படியான பெருமையை யுடைய
சிலம்பு ஆறு,Silambu Aaru - நூபுர கங்கையானது
பாயும்,Paayum - (இடைவிடாமல்) பெருகப் பெற்றுள்ள
தென் திருமாலிருஞ் சோலை,Then Thirumaalirun Cholai - அழகிய திருமாலிருஞ் சோலையானது,
அலம்பா,Alampaa - பிராணிகளை அலையச் செய்தும்
வெருட்டா,Veruttaa - பயப்படுத்தியும்
கொன்று,Konru - உயிர்க் கொலை செய்தும்
திரியும்,Thiriyum - திரிந்து கொண்டிருந்த
அரக்கரை,Arakkarai - ராக்ஷஸர்களை
குலம் பாழ் படுத்து,Kulam Paazh Paduthu - ஸ குடும்பமாகப் பாழாக்கி
குலம் விளக்கு ஆய் நின்றகோன்,Kulam Vilakku Aay Nintragon - (இக்ஷ்வாகு வம்சத்துக்கு விளக்காய் நின்ற பெருமான் (எழுந்தருளியிருக்குமிடமான)
மலை,Malai - திருமலையாம்.
339ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 2
வல்லாளன் தோளும் வாளரக்கன் முடியும் தங்கை
பொல்லாத மூக்கும் போக்குவித்தான் பொருந்தும் மலை
எல்லா விடத்திலும் எங்கும் பரந்து பல்லாண்டொலி
செல்லா நிற்கும் சீர்த் தென் திருமாலிருஞ் சோலையே–4-2-2
பல்லாண்டு ஒலி,Pallandu Oli - மங்களசான கோஷமானது
எல்லா இடத்திலும்,Ella Idathilum - எல்லா யிடங்களிலும்
எங்கும்,Engum - திருமலையின் பரப்பெங்கும்
பரந்து செல்லா நிற்கும் சீர்,Parandhu Sella Nirkum Seer - பரவிச் செல்லும் படியான பெருமையை யுடைய
தென் திருமாலிருஞ்சோலை,Then Thirumaaliruncholai - தென் திருமாலிருஞ்சோலை
வல் ஆளன்,Val Aalan - வலிய ஆண்மையை யுடையவனும்
வாள்,Vaal - (சிவனிடத்துப் பெற்ற) வாளை யுடையவனுமான
அரக்கன்,Arakkan - ராவணனுடைய
தோளும் முடியும்,Tholum Mudiyum - தோள்களும், தலைகளும்
தங்கை,Thangai - (அவனது) தங்கையாகிய சூர்ப்பணகையினது
பொல்லாத மூக்கும்,Pollaadha Mookkum - கொடிய மூக்கும்
போக்குவித்தான்,Pookkuvithaan - அறுப்புண்டு போம்படி பண்ணின எம்பெருமான்
பொருந்தும்,Porundhum - பொருந்தி எழுந்தருளி யிருக்குமிடமான
மலை,Malai - திருமலையாம்.
340ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 3
தக்கார் மிக்கார்களைச் சஞ்சலம் செய்யும் சலவரை
தெக்கா நெறியே போக்குவிக்கும் செல்வன் பொன் மலை
எக்காலமும் சென்று சேவித்திருக்கும் அடியரை
அக் கானெறியை மாற்றும் தண் மாலிருஞ் சோலையே-4-2-3
எக் காலமும்,Ek Kaalamum - எப்போதும்
சென்று,Senru - போய்
சேவித்திருக்கும்,Sevithirukkum - திருவடி தொழா நின்றுள்ள
அடியரை,Adiyarai - பாகவதர்களை
அக் கான் நெறியை மாற்றும்,Ak Kaan Neriya Maatrum - அப்படிப்பட்ட (கொடுமையான) (பாவக்)காட்டு வழியில் நின்றும் விலக்கக் கடவதும்
தண்,Than - தாப ஹரமுமான
மாலிருஞ்சோலை,Maaliruncholai - மாலிருஞ்சோலை
தக்கார் மிகார்களை,Thakkar Migargalai - (க்ருபா விஷயத்தில்) எம்பெருமான் ஒத்தவர்களும் (அவனிலும்) மேற்பட்டவர்களுமாயுள்ள மஹாத்மாக்களை
சஞ்சலம் செய்யும்,Sanchalam Seyyum - அலைத்து வருந்தா நின்றுள்ள
சலவரை,Salavarai - க்ருத்ரிமப் பயல்களை
தெக்கு ஆம் நெறியே,Thekku Aam Neriye - தென் திசையிலுள்ள நரக மார்க்கத்திலே
போக்கு விக்கும்,Pookku Vikkum - போகும் படி பண்ணா நின்ற
செல்வன்,Selvan - ச்ரிய பதியான எம்பெருமான் (எழுந்தருளி யிருக்குமிடமான)
பொன் மலை,Pon Malai - அழகிய திருமலையாம்
341ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 4
ஆனாயர் கூடி அமைத்த விழவை அமரர் தம்
கோனார்க் கொழியக் கோவர்த்தனத்துச் செய்தான் மலை
வானாட்டில் நின்று மா மலர்க் கற்பகத் தொத்திழி
தேனாறு பாயும் தென் திரு மாலிருஞ் சோலையே–4-2-4
வான் நாட்டில்,Vaan Naatil - ஸ்வர்க்க லோகத்திலுள்ள
மா மலர்,Maa Malar - பெரிய பூக்களை யுடைய
கற்பகம்,Karpagam - கல்ப வ்ருக்ஷத்தினுடைய
தொத்தில் நின்று,Thottil Ninru - பூங்கொத்தில் நின்றும்
இழி,Izhi - பெருகா நின்ற
தேன்,Then - தேனானது
ஆறு பாயும்,Aaru Paayum - ஆறாய்க் கொண்டு ஓடா நிற்கிற
தென்,Then - அழகை யுடைய திருமாலிருஞ்சோலை
ஆன் ஆயர்,Aan Aayar - பசுக்களுக்குத் தலைவரான இடையர்கள்
கூடி,Koodi - ஒன்று சேர்ந்து
அமைத்து,Amaiththu - (இந்திரனுக்காக) ஏற்படுத்தின
விழவை,Vizhavai - ஸமாராதனையை
அமரர் தம் கோனார்க்கு ஒழிய,Amarar Tham Konarkku Ozhia - (அந்த) தேவேந்திரனுக்குச் சேர வொட்டாமல் தடுத்து
கோவர்த்தனத்து,Govarthanathu - கோவர்த்தன மலைக்குச் (சேரும் படி)
செய்தான் மலை,Seithaan Malai - செய்தருளின கண்ண பிரானுடைய திருமலையாம்.
342ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 5
ஒரு வாரணம் பணி கொண்டவன் பொய்கையில் கஞ்சன் தன்
ஒரு வாரணம் உயிருண்டவன் சென்றுறையும் மலை
கரு வாரணம் தன் பிடி துறந்தோட கடல் வண்ணன்
திரு வாணை கூறத் திரியும் தண் மாலிருஞ் சோலையே–4-2-5
ஒரு வாரணம்,Oru Varanam - (ஸ்ரீகஜேந்திராழ்வானாகிற ஒரு யானையினிடத்து
பணி,Pani - கைங்கர்யத்தை
கொண்டவன்,Kondavan - ஸ்வீகரித்தருளினவனும்
கஞ்சன் தன்,Kanjan Than - கம்ஸனுடைய
ஒரு வாரணம்,Oru Varanam - (குவலயாபீடமென்ற) ஒரு யானையினுடைய
உயிர்,Uyir - உயிரை
உண்டவன்,Undavan - முடித்தவனுமான கண்ணபிரான்
சென்று,Senru - எழுந்தருளி
உறையும்,Uraiyum - நித்ய வாஸம் பண்ணப் பெற்ற
மலை,Malai - மலையாவது:
கரு வாரணம்,Karu Varanam - கறுத்ததொரு யானை,
தன் பிடி,Than Pidi - தன்னுடைய பேடை யானது
துறந்து ஓட,Thurandhu Oda - (பிரணய ரோஷத்தினால்) தன்னை விட்டிட்டு ஓடப்புக,
(அதுகண்ட அவ்வானையானது) கடல் வண்ணன் திரு ஆணை கூற,Athukanda Avvaanaiyanadhu Kadal Vannan Thiru Aanai Koora - “கடல் போன்ற நிறமுடைய அழகர் மேலாணை” என்று சொல்ல
திரியும்,Thiriyum - (அப்பேடை யானது அவ்வாணைக்குக் கட்டுப்பட்டு அப்புறம் போக மாட்டாமல்) மீளா நின்றுள்ள
தண்,Than - குளிர்ந்த
மாலிருஞ்சோலை,Maaliruncholai - திருமாலிருஞ் சோலை மலையாம்.
343ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 6
ஏவிற்றுச் செய்வான் ஏன்றெதிர்ந்து வந்த மல்லரை
சாவத் தகர்த்த சாந்தணி தோள் சதுரன் மலை
ஆவத்தன மென்று அமரர்களும் நன் முனிவரும்
சேவித்திருக்கும் தென் திரு மாலிருஞ் சோலையே–4-2-6
ஏலிற்று,Elitru - (கம்ஸன்) ஏவின காரியங்களை
செய்வான்,Seivaan - செய்து முடிப்பதற்காக
ஏன்று எதிர்த்து வந்த,Enru Edhirththu Vanda - துணிந்து எதிரிட்டுவந்த
மல்லரை,Mallarai - (சாணுரன் முதலிய) மல்லர்களை
சாவ தகர்த்து,Saava Thagarththu - முடியும்படியாக நோக்கினவனும்
சாந்து,Santhu - (கூனி யிட்ட) சாந்தை
அணி,Ani - அணிந்து கொண்டுள்ள
தோள்,Thol - தோள்களை யுடையவனும்
சதுரன்,Sathuran - ஸமர்த்தனுமான கண்ணபிரான் (எழுந்தருளியிருக்கிற)
மலை,Malai - மலையாவது:
அமரர்களும்,Amarargalum - (பிரமன் முதலிய) தேவர்களும்
நல் முனிவரும்,Nal Munivaram - (ஸனகர் முதலிய மஹர்ஷிகளும்)
ஆவத்து தனம் என்று,Aavathu Thanam Endru - ஆபத்துக் காலத்துக்குத் துணையாயிருக்குமிடமென்று (நினைத்து)
சேவித்து இருக்கும்,Seviththu Irukkum - ஸேவித்துக் கொண்டு இருக்குமிடமான தென் திருமாலிருஞ்சோலை
344ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 7
மன்னர் மறுக மைத்துனன் மார்க்கு ஒரு தேரின் மேல்
முன்னங்கு நின்று மோழை யெழுவித்தவன் மலை
கொன்னவில் கூர் வேற் கோன் நெடு மாறன் தென் கூடற்கோன்
தென்னன் கொண்டாடும் தென் திரு மாலிருஞ் சோலையே–4-2-7
மன்னர்,Mannar - (குரு தேசத்து) அரசர்கள்
மறுக,Maruga - குடல் குழம்பும்படி
மைத்துணன் மார்க்கு,Maiththunan Maarkku - மைத்துனன்மாரான பாண்டவர்களுக்கு (த் துணையாகி)
ஒரு தேரின் மேல்,Oru Therin Mel - ஒரு தேரிலே
முன் அங்கு நின்று,Mun Angu Ninru - முற் புறத்திலே நின்று கொண்டு
மோழை யெழுவித்தவன் மலை,Mozhai Ezhuviththavan Malai - (நீர் நரம்பில் விட்ட வாருணாஸ்த்ரத்தின் வழியே) கீழுண்டான குமிழி யெறிந்து கிளரும்படி பண்ணின கண்ணபிரான் (எழுந்தருளியிருக்கிற) மலையாவது
கொன்னவில்,Konnavil - கொலையையே தொழிலாக வுடைய
கூர்,Koor - கூர்மை பொருந்திய
வேல்,Vel - வேலை யுடையவனும்
கோன்,Kon - ராஜ நீதியை வழுவற நடத்துமவனும்
நெடு,Nedu - பெருமை பொருந்தியவனும்
மாறன்,Maaran - ‘மாறன்‘ என்னும் பெயருடையவனும்
தென்,Then - அழகிய
கூடல்,Koodal - ‘நான் மாடக் கூடல்‘ என்ற பெயரை யுடைய மதுரைக்கு
தென்னன்,Thennan - பாண்டி நாட்டுத் தலைவனுமான மலயத்வஸ ராஜனாலே
கொண்டாடும்,Kondaadum - கொண்டாடப் பெற்ற
தென் திருமாலிருஞ்சோலை,Then Thirumaaliruncholai - தென் திருமாலிருஞ்சோலை
345ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 8
குறுகாத மன்னரைக் கூடு கலக்கி வெங் கானிடைச்
சிறு கால் நெறியே போக்கு விக்கும் செல்வன் பொன் மலை
அறு கால் வரி வண்டுகள் ஆயிர நாமம் சொல்லி
சிறு காலைப் பாடும் தென் திரு மாலிருஞ் சோலையே–4-2-8
குறுகாத,Kurugaadha - திருமலையைக் கிட்டி அநுகூலாய் வாழலாமாயிருக்க, அது செய்யாமல் விலகுகின்ற
மன்னரை,Mannarai - அரசர்களுடைய
கூடு,Koodu - இருப்பிடத்தை
கலக்கி,Kalakki - குலைத்து (அழித்து)
வெம்,Vem - தீஷணமான
கானிடை,Kaanidai - காட்டிலே
சிறு கால் நெறியே ,Siru Kaal Neriye - சிறந்த வழியில்
போக்குவிக்கும்,Pookkuvikkum - (அவ் வரசர்களை) ஓட்டுகின்ற
செல்வன்,Selvan - திருமால் (எழுந்தருளியிருக்கிற)
பொன் மலை,Pon Malai - சிறந்த மலையை யுடையவன்
அறுகால்,Arukaal - ஆறு கால்களை யுடைய
வரி வண்டுகள்,Vari Vandugal - அழகிய வண்டுகளானவை
ஆயிரம் நாமம் சொல்லி,Aayiram Naamam Solli - (எம்பெருமானுடைய) ஸஹஸ்ர நாமங்களை ஆளாத்தி வைத்து
சிறு காலைப் பாடும்,Siru Kaalaip Paadum - சிற்றஞ் சிறு காலையில் அடி பணியுமாற்றைக் கூறியவாறு பாடுமிடமான
தென் திருமாலிருஞ்சோலை,Then Thirumaaliruncholai - தென் திருமாலிருஞ்சோலை
346ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 9
சிந்தப் புடைத்துச் செங்குருதி கொண்டு பூதங்கள்
அந்திப் பலி கொடுத்து ஆவத் தனம் செய் அப்பன் மலை
இந்திர கோபங்கள் எம்பெருமான் கனி வாயொப்பான்
சிந்தும் புறவில் தென் திரு மாலிருஞ் சோலையே–4-2-9
பூதங்கள்,Boothangal - ஸ்ரீ வைஷ்ணவ பூதங்களானவை (தேக அபாஷணமே பண்ணிக் கொண்டு திரியும் நாஸ்திரிகர்களைக் கண்டால், அவர்களை)
சிந்தப் புடைத்து,Sindhap Pudaiththu - (அவயங்கள்) சிதறும்படி அடித்துக் கொன்று
செம் குருதி கொண்டு,Sem Kurudhi Kondu - (அதனால் அவர்களுடலினின்று புறப்படுகிற) சிவந்த ரத்தத்தைக் கொண்டு
அந்தி,Andhi - அந்திப் பொழுதிலே
பலி கொடுத்து,Pali Koduththu - (எம்பெருமானுக்கு) ஆராதந ரூபமாக ஸமர்ப்பித்து
ஆபத்து தனம் செய்,Aapaththu Dhanam Sei - ஆபத் காலத்துக்குத் துணையாமிடமென்று ஸேவிக்குமிடமும்
அப்பன்,Appan - ஸ்வாமி (எழுந்தருளியிருக்க மிடமுமான)
மலை,Malai - மலையாவது,
இந்திர கோபங்கள்,Indhira Gobangal - பட்டுப் பூச்சிகளானவை
எம் பெருமான்,Em Perumaan - அனைவர்க்கும் ஸ்வாமியான அழகருடைய
கனி வாய்,Kani Vaai - (கொவ்வைக்) கனி போன்ற திரு வதரத்திற்கு
ஒப்பான்,Oppaan - போலியாக
சிந்தும்,Sindhum - (கண்ட விடமெங்கும்) சிதறிப் பறக்கப் பெற்ற
புறவில்,Puravil - தாழ்வரையை யுடைய
தென் திருமாலிருஞ்சோலை.,Then Thirumaalirunjolai - தென் திருமாலிருஞ்சோலை
347ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 10
எட்டுத் திசையும் எண்ணிறந்த பெருந் தேவிமார்
விட்டு விளங்க வீற்றிருந்த விமலன் மலை
பட்டிப் பிடிகள் பகடுறிஞ்சிச் சென்று மாலை வாய்த்
தெட்டித் திளைக்கும் தென் திரு மாலிருஞ் சோலையே–4-2-10
எண்ணிறந்த,Ennirandha - எண் இறந்த கணக்கிட முடியாதவர்களும்
பெரு,Peru - பெருமை பொருந்தியவர்களுமான
தேவிமார்,Devimaar - தேவியானவர்கள்
எட்டு திசையும்,Ettu Thisaiyum - எட்டுத் திக்குகளிலும்
விட்டு விளங்க,Vittu Vilangha - மிகவும் பிரகாசிக்க (அவர்கள் நடுவே)
வீற்றிருந்த,Veeetrirundha - பெருமை தோற்ற எழுந்தருளி யிருந்த
விமலன் மலை,Vimalan Malai - நிர்மலான கண்ணபிரான் (எழுந்தருளி யிருக்கிற) மலையானது;
பட்டி,Patti - வேண்டினபடி திரியும் மலையான
பிடிகள்,Pidigal - யானைப் பேடைகளானவை
மாலைவாய்,Maalai Vaai - இரவிலே
பகடு,Pagadu - ஆண் யானை மேல்
உரிஞ்சி சென்று,Urinji Sendru - ஸம்லேஷித்துப்போய்
தெட்டித் திளைக்கும்,Thetti Thilaikkum - அந்த ஸம்லேஷித்துப் போய் முற்றிக் களியா நிற்கும்
348ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 11
மருதப் பொழிலணி மாலிருஞ் சோலை மலை தன்னை
கருதி யுறைகின்ற கார்க் கடல் வண்ண னம்மான் தன்னை
விரதம் கொண்டேத்தும் வில்லி புத்தூர் விட்டு சித்தன் சொல்
கருதி யுரைப்பவர் கண்ணன் கழலிணை காண்பார்களே–4-2-11
மருதம் பொழில்,Marudham Pozhil - மருதஞ் சோலைகளை
அணி,Ani - அலங்காரமாக வுடைய
மாலிருஞ்சோலை மலை தன்னை,Maalirunjolai Malai Thannai - திருமாலிருஞ்சோலை மலையை
கருதி,Karudhi - விரும்பி
உறைகின்ற,Uraiginra - (அதில்) எழுந்தருளி யிருக்கின்ற
கார் கடல் வண்ணன்,Kaar Kadal Vannan - கருங்கடல் போன்ற நிறத்தை யுடைய
அம்மான் தன்னை,Ammaan Thannai - அழகப் பிரனாரை
விரதம் கொண்டு,Viradham Kondu - மங்கள விரதமாகக் கொண்டு
ஏத்தும்,Eaththum - துதிக்குமாறும்
வில்லிபுத்தூர்,Villipuththur - ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தவருமான
விட்டுசித்தன்,Vittuchiththan - பெரியாழ்வார்.
சொல்,Sol - அருளிச் செய்த இவற்றை
கருதி,Karudhi - விரும்பி
உரைப்பவர்,Uraippavar - ஓதுமவர்கள்
கண்ணன்,Kannan - கண்ண பிரானுடைய
கழல் இணை,Kazhal Inai - திருவடிகளை
காண்பர்கள்,Kaanbargal - ஸேவிக்கப் பெறுவார்கள்.