Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 4-3 உருப்பிணிநங்கை (11 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
349ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 1
உருப்பிணி நங்கை தன்னை மீட்பான் தொடர்ந் தோடிச் சென்ற
உருப்பனை யோட்டிக் கொண்டிட்டு உறைத்திட்ட உறைப்பன் மலை
பொருப்பிடைக் கொன்றை நின்று முறி யாழியும் காசும் கொண்டு
விருப்பொடு பொன் வழங்கும் வியன் மாலிருஞ் சோலையதே–4-3-1
உருப்பிணி நங்கை தன்னை,Uruppini Nangai Thannai - ருக்மிணிப் பிராட்டியை
மீட்பான்,Meetpaan - கண்ணனுடைய தேரில் நின்றும்) திருப்பிக் கொண்டு போவதற்காக
தொடர்ந்து,Thodarnthu - (அத் தேரைப்) பின் தொடர்ந்து கொண்டு
ஓடிச் சென்ற,Odi Senra - ஓடி வந்த
உருப்பனை,Uruppanai - உருப்பன் என்றவனை
ஓட்டிக் கொண்டு இட்டு,Ottik Kondu Ittu - ஓட்டிப் பிடித்துக் கொண்டு (தேர்த் தட்டிலே) இருத்தி
உறைத்திட்ட,Uraiththitta - (அவனைப்) பரிபவப் படுத்தின
உறைப்பன் மலை,Uraippan Malai - மிடுக்கை உடைய கண்ண பிரான் (எழுந்தருளு யிருக்கிற)மலையாவது
கொன்றை,Kondrai - கொன்றை மரங்களானவை
பொருப்பு இடை நின்று,Poruppu Idai Nindru - மலையிலே நின்று
முறி,Muri - முறிந்து
பொன்,Pon - பொன் மயமான
ஆழியும்,Aazhi Yum - மோதிரங்கள் போன்ற பூ நரம்புகளையும்
காசும்,Kaasum - (பொற்காசு)போன்ற பூ விதழ்களையும்
கொண்டு,Kondu - வாரிக் கொண்டு
விருப்பொடு வழங்கும்,Viruppodu Vazhanguum - ஆதரத்துடனே (பிறர்க்குக்)கொடுப்பவை போன்றிருக்கப் பெற்ற
வியன்,Viyan - ஆச்சரியமான
மாலிருஞ்சோலை அதே,Maalirunjolai Adhe - அந்தத் திருமாலிருஞ்சோலையே யாம்.
350ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 2
கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும்
வஞ்சனையில் மடிய வளர்ந்த மணி வண்ணன் மலை
நஞ்சுமிழ் நாகமெழுந் தணவி நளிர் மா மதியை செஞ்சுடர்
நா வளைக்கும் திருமாலிருஞ் சோலையதே–4-3-2
கஞ்சனும்,Kanjanum - கம்ஸனும்
காளியனும்,Kaaliyanum - காளிய நாகமும்
களிறும்,Kalirum - (குவலயாபீடமென்ற) யானையும்
மருதும்,Maruthum - இரட்டை மருத மரங்களும்
எருதும்,Eruthum - (அரிஷ்டாஸுரனாகிற) ரிஷபமும்
வஞ்சனையின்,Vanjanaiyin - (தந்தாமுடைய) வஞ்சனைகளாலே
மடிய,Madiya - (தாம் தாம்) முடியும்படி
வளர்ந்த,Valarntha - (திருவாய்ப்பாடியில்) வளர்ந்தருளினவனும்
மணி வண்ணன் மலை,Mani Vannan Malai - நீல மணி போன்ற நிறமுடையவனுமான கண்ணபிரான் (எழுந்தருளியிருக்கும்) மலையாவது:
நஞ்சு,Nanju - விஷத்தை
உமிழ்,Umizh - உமிழா நின்றுள்ள
காகம்,Kaagam - (மலைப்) பாம்பானவை
நளிர்,Nalir - குளிர்ந்த
மா மதியை,Maa Mathiyai - (மலைச் சிகரத்தின் மேல் தவழுகின்ற)
பூர்ணச்சந்திரனை,Poornachandiranai - (தமக்கு உணவாக நினைத்து)
எழுந்து,Ezhnthu - (படமெடுத்துக்) கிளர்ந்து
அணலி,Anali - கிட்டி
செம் சுடர்,Sem Sudar - சிவந்த தேஜஸ்ஸை யுடைய
நா,Naa - (தனது) நாக்கினால்
அளைக்கும்,Alaikkum - (சந்திரனை) அளையா நிற்குமிடமான
திருமாலிருஞ்சோலை அதே.,Thirumaalirunjolai Adhe - திருமாலிருஞ்சோலை அதே.
351ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 3
மன்னு நரகன் தன்னைச் சூழ் போகி வளைத்தெறிந்து
கன்னி மகளிர் தம்மைக் கவர்ந்த கடல் வண்ணன் மலை
புன்னை செருந்தியொடு புன வேங்கையும் கோங்கும் நின்று
பொன்னரி மாலைகள் சூழ் பொழில் மாலிருஞ் சோலையதே–4-3-3
மன்னு,Mannu - (தன்னை அழிவற்றவனாக நினைத்துப்) பொருந்திக் கிடந்த
நரகன் தன்னை ,Naragan Thannai - நரகாஸுரனை
சூழ்போகி,Soolpoghi - கொல்லும் வகைகளை ஆராய்ந்து
வளைத்து,Valaiththu - (அவனைத் தப்பிப்போக முடியாதபடி)வளைத்துக் கொண்டு
எறிந்து,Erinthu - (திரு வாழியாலே) நிரஸித்து
கன்னி மகளிர் தம்மை,Kanni Magalir Thammai - (அவனால் சிறையிலடைத்து வைக்கப்பட்டிருந்த பதினாறாயிரத் தொரு நூறு) கன்னிகளையும்
கவர்ந்த,Kavarntha - தான் கொள்ளை கொண்ட
கடல் வண்ணன்,Kadal Vannan - கடல் போன்ற நிறமுடையவனான கண்ண பிரான் (எழுந்தருளியிருக்கிற)
மலை,Malai - மலையாவது:
புன்னை,Punnai - புன்னை மரங்களும்
செந்தியொடு,Sendhiyodu - சுர புன்னை மரங்களும்
புனம் வேங்கையும்,Punam Vengaiyum - புனத்திலுண்டாகிற வேங்கை மரங்களும்
கோங்கும்,Kongum - கோங்கு மரங்களும்
நின்று,Ninru - (புஷ்பங்களால் நிறைந்த ஒழுங்கு பட) நின்று
பொன்னரி மலைகள் சூழ்,Ponnari Malaigal Sool - (திருமலைக்குப்) பொன்னரி மாலைகள் சுற்றினாற் போலே யிருக்கப் பெற்ற
பொழில்,Pozhil - சோலைகளை யுடைய
மாலிருஞ்சோலை அதே,Maalirunjolai Adhe - திருமாலிருஞ்சோலை அதே.
352ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 4
மாவலி தன்னுடைய மகன் வாணன் மகளிருந்த
காவலைக் கட்டழித்த தனிக் காளை கருதும் மலை
கோவலர் கோவிந்தனைக் குற மாதர்கள் பண் குறிஞ்சிப்
பாவொலி பாடி நடம் பயில் மாலிருஞ் சோலையதே–4-3-4
மா வலி தன்னுடைய,Maa Vali Thannudaiya - மஹாபலியினுடைய
மகன் வாணன்,Mahan Vaanan - புத்திரனாகிய பாணாஸுரனுடைய
மகள் இருந்த,Magal Irundha - மகளான உஷை இருந்து
காவலை,Kaavalai - சிறைக் கூடத்தை
கட்டு அழித்த,Kattu Azhitha - அரனோடே அழித்தருளினவனும்
தனி காளை,Thani Kaalai - ஒப்பற்ற யுவாவுமான கண்ணபிரான்
கருதும் மலை,Karudhum Malai - விரும்புகிற மலையாவது;
கோவலர்,Kovalar - இடையர்களுக்கும்
கோவிந்தனை,Govindhanai - கோவிந்தாபிஷேகம் பண்ணப் பெற்ற கண்ணபிரான் விஷயமாக
குற மாதர்கள்,Kura Maathargal - குறத்திகளானவர்கள்
குறிஞ்சி மலர்,Kurinji Malar - குறிஞ்சி ராகத்தோடு கூடின
பா,Paa - பாட்டுக்களை
ஒலி பாடி,Oli Paadi - இசை பெறப் பாடிக் கொண்டு (அப் பாட்டுக்குத் தகுதியான)
நடம் பயில்,Nadam Payil - கூத்தாடுமிடமான மாலிருஞ்சோலை அதே
353ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 5
பல பல நாழம் சொல்லிப் பழித்த சிசு பாலன் தன்னை
அலவலைமை தவிர்த்த அழகன் அலங் காரன் மலை
குலமலை கோல மலை குளிர் மா மலை கொற்ற மலை
நிலமலை நீண்ட மலை திருமாலிருஞ் சோலையதே–4-3-5
பலபல நாழம்,Palapala Naazham - பலபல குற்றங்களை
சொல்லி,Solli - சொல்லி
பழித்த,Pazhitha - தூஷித்த
சிசு பாலன் தன்னை,Sisu Balan Thannai - சிசுபாலனுடைய
அலவலைமை,Alavalaimai - அற்பத் தனத்தை
தவிர்த்த,Thavirtha - (சாம தசையில்) போக்கி யருளின
அழகன்,Azhagan - அழகை யுடையவனும்
அலங்காரன்,Alangaaran - அலங்காரத்தை யுடையவனுமான கண்ண பிரான் (எழுந்தருளி
மலை,Malai - மலையானது:
குலம் மலை,Kulam Malai - தொண்டர் குலத்துக்குத் தலையான மலையும்
கோலம் மலை,Kolam Malai - அழகை யுடைய மலையும்
குளிர் மா மலை,Kulir Maa Malai - குளிர்ந்த பெரிய மலைகள்
கொற்றம் மலை,Kotram Malai - ஜயத்தை யுடைய மலையும்
நிலம் மலை,Nilam Malai - (நல்ல மரங்கள் முளைக்கும் பாங்கான) நிலத்தை யுடைய
நீண்ட மலை,Neenda Malai - நீட்சியை யுடைய மலையுமான
திருமாலிருஞ்சோலை அதே.,Thirumaaliruncholai Adhe - திருமாலிருஞ்சோலை அதே.
354ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 6
பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கமெல்லாம்
ஆண்டு அங்கு நூற்றுவர் தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை
பாண்டகு வண்டினங்கள் பண்கள் பாடி மதுப் பருக
தோண்ட லுடைய மலை தொல்லை மாலிருஞ் சோலையதே–4-3-6
பாண்டவர் தம்முடைய,Paandavar Thammudaiya - பஞ்சபாண்டவர்களுடைய (மனைவியாகிய)
பாஞ்சாலி,Paanchaali - த்ரௌபதியினுடைய
மறுக்கமெல்லாம்,Marukkam Ellam - மனக் குழப்பத்தை யெல்லாம்
ஆண்டு,Aandu - (தன்) திருவுள்ளத்திற்கொண்டு,
அங்கு,Angu - (அவள் பரிபவப்பட்ட) அப்போது (அத் துன்பங்களை யெல்லாம்)
நூற்றுவர் தம்,Nootruvar Tham - (துரியோதநாதிகள்) தூற்றுவருடைய
பெண்டிர் மேல்,Pendir Mel - மனைவியர்களின் மேல்
வைத்த,Vaitha - சுமத்தின
அப்பன்,Appan - ஸ்வாமியான கண்ண பிரான் (எழுந்தருளி யிருக்கிற)
மலை,Malai - மலையானது :
பாண் தரு,Paan Tharu - பாட்டுக்குத் தகுதியான (ஜன்மத்தை யுடைய)
வண்டு இனங்கள்,Vandu Inangal - வண்டு திரளானவை
பண்கள்,Pangal - ராகங்களை
பாடி,Paadi - பாடிக் கொண்டு
மது,Madu - தேனை
பருக,Paruga - குடிப்பதற்குப் பாங்காக (ச் சோலைகள் வாடாமல் வளர)
தோண்டல்,Thondal - ஊற்றுக்களை யுடைய மலையாகிய
தொல்லை மாலிருஞ் சோலை அதே,Thollai Maaliruncholai Adhe - அநாதியான அந்த மாலிருஞ் சோலையேயாம்.
355ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 7
கனங் குழையாள் பொருட்டாக் கணை பாரித்து அரக்கர் தங்கள்
இனம் கழு வேற்றுவித்த எழில் தோள் எம்பிரான் மலை
கனம் கொழி தெள்ளருவி வந்து சூழ்ந்து அகல் ஞாலமெல்லாம்
இனம் குழு வாடும் மலை எழில் மாலிருஞ் சோலையதே–4-3-7
கனம்,Kanam - ஸ்வர்ண மயமான
குழையாள் பொருட்டா,Kuzhaiyaal Porutaa - காதணியை யுடையாளான
கணை,Kanai - அம்புகளை
பாரித்து,Paariththu - பிரயோகித்து
அரக்கர்கள் இனம்,Arakkargal Inam - ராஷஸ குலத்தை
கழு ஏற்றுவித்து,Kazhuertruviththu - குலத்தின் மேல் ஏற்றின வனும்
எழில் தோள்?,Ezil Thol - அழகிய தோள்களை யுடையவனுமான
இராமன்,Raaman - இராமபிரான் (எழுந்தருளி யிருக்கிற)
மலை,Malai - மலையான
கனம்,Kanam - பொன்களை
கொழி,Kozhi - கொழித்துக் கொண்டு வருகின்ற
தெள் அருவி,TheL Aruvi - தெளிந்த அருவிகளிலே
இனக்குழு,Inakuzhu - அறிஞர்கள் எல்லாம்
அகல் ஞாலமெல்லாம்,Agal Gnaalam Ellam - விசாலமான பூமியிலுள்ளா ரெல்லாரும்
வந்து சூழ்ந்த,Vandhu Soozhntha - வந்து சூழ்ந்து கொண்டு
ஆடும்,Aadum - நீராடப் பெற்ற
எழில்,Ezil - அழகிய
மாலிருஞ் சோலையிலே அதே,Maaliruncholaiyile Adhe - திருமாலிருஞ்சோலை அதே.
356ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 8
எரி சிதறும் சரத்தால் இலங்கையினை தன்னுடைய
வரி சிலை வாயில் பெய்து வாய்க்கோட்டம் தவிர்த்துகந்த
அரையனமரும் மலை அமரரொடு கோனும் சென்று
திரி சுடர் சூழும் மலை திருமாலிருஞ் சோலையதே–4-3-8
எரி,Eri - நெருப்பை
சிதறும்,Sitharum - சொரியா நின்றுள்ள
சரத்தால்,Saraththaal - அம்புகளினால்
இலங்கையினை,Ilangkaiyinai - இலங்கைக் காரனான ராவணனை
தன்னுடைய,Thannudaiya - தன்னுடைய
வரி சிலை வாயில் பெய்து,Vari Silai Vaa yil Peydhu - நீண்ட வில்லின் வாயிலே புகுரச் செய்து
காய் நோட்டம்,Kaai Nottam - (அவனுடைய) வாக்கின் அநீதியை
தவிர்த்து,Thavirthu - குலைத்து
உகந்த,Ugantha - (தான் வெற்றி பெற்றமையாலே) மகிழ்ந்தருளின
அரையன்,Araiyan - ஸ்வாமியான இராமபிரான்
அமரும்,Amarum - எழுந்தருளி யிருக்கிற
மலை,Malai - மலையாவது:
அமரரொடு,Amararodu - தேவர்களோடு கூட
கோனும்,Konum - (அவர்களுக்கு) தலைவனான இந்திரனும்
திரி,Thiri - (இரவும் பகலும்) திரியா நின்ற
சுடர்,Sudar - சந்த்ர ஸூர்யர்களும்
சென்று,Sendru - வந்து
சூழூம்,Soozhoom - பிரதக்ஷிணம் பண்ணப் பெற்ற
திருமாலிருஞ்சோலை மலை அதே,Thirumaaliruncholai Malai Adhe - திருமாலிருஞ்சோலை மலை அதே
357ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 9
கோட்டு மண் கொண்டிடந்து குடங்கையில் மண் கொண்டளந்து
மீட்டு மதுண்டு மிழ்ந்து விளையாடு விமலன் மலை
ஈட்டிய பல் பொருள்கள் எம்பிரானுக்கு அடியுறை யென்று
ஓட்டரும் தண் சிலம்பாறுடை மாலிருஞ் சோலையதே–4-3-9
மண்,Mann - (ஹிரண்யாக்ஷனாலே பாயாகச் சுருட்டிக் கொண்டு போகப்பட்ட) பூமியை
இடந்து,Edandhu - (வராஹர மாய் அவதரித்து) (அண்ட பித்தியில் நின்றும்) ஒட்டு லிடுவித்தெடுத்து
கோடு,Kodu - (தனது) திரு வயிற்றிலே
கொண்டு,Kondu - என்று கொண்டும்,
மண்,Mann - (மஹாபலியினால் தன் வசமாக்கிக் கொள்ளப்பட்ட) பூமியை
குடங் கையில்,Kudang Kaiyil - (வாமந ரூபியாய் அவதரித்து) அகங்கையில்
கொண்டு,Kondu - (நீரேற்று) வாங்கிக் கொண்டு
அளந்து,Alandhu - அளந்தருளியும்
மீட்டும்,Meettum - மறுபடியும் (அவாந்தர ப்ரளயத்திலே அந்தப் பூமி அழியப் புக.)
அது,Adhu - அப் பூமியை
உண்டு,Undu - திரு வயிற்றில் வைத்து நோக்கி
உமிழ்ந்து,Umizhndhu - (பிம்பு பிரளங் கழித்தவாறே) (அதனை) வெளிப் படுத்தியும்
விளையாடும்,Vilaiyaadum - (இப்படிப்பட்ட ஆச்சரியச் செயல்களாலே) விளையாடா நின்றுள்ள
விமலன்,Vimalan - நிர்மல ஸ்வரூபியான எம்பெருமான் (எழுந்தருளி யிருக்கிற)
மலை,Malai - மலையாவது;
ஈட்டிய,Eettiya - (பெருகி வரும் போது) வாரிக் கொண்டு வரப் பெற்ற
பல் பொருள்கள்,Pal Porulgal - பல தரப் பட்ட பொன், முத்து, அகில் முதலிய பொருள்கள்
எம் பிரானுக்கு,Em Piraanukku - எம் பெருமானுக்கு
அடியுரை என்று,Adiyurai Endru - ஸ்ரீபாத காணிக்கை யென்று
ஒட்டரும்,Ottarum - (பெருகி) ஒடி வாரா நின்றுள்ள
தண்,Than - குளிர்ந்த
சிலம்பாறு உடை,Silambaaru Udai - நூபுர கங்கையை யுடைய
மாலிருஞ் சோலை அதே,Maaliruncholai Adhe - திருமாலிருஞ்சோலை மலை அதே
358ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 10
ஆயிரம் தோள் பரப்பி முடியாயிரம் மின்னிலக
ஆயிரம் பைந்தலைய அனந்த சயனன் ஆளும் மலை
ஆயிர மாறுகளும் சுனைகள் பல வாயிரமும்
ஆயிரம் பூம் பொழிலுமுடை மாலிருஞ் சோலையதே-4-3-10
ஆயிரம்,Aayiram - பலவாயிருந்துள்ள
தோள்,Thol - திருத் தோள்களை
பரப்பு,Parappu - பரப்பிக் கொண்டும்.
முடி ஆயிரம்,Mudi Aayiram - ஆயிரந் திருமுடிகளும்
மின் இசை,Min Isai - (திருவபிஷேகத்திலுள்ள சத்தங்களினால்) மிகவும் விளங்கும்படியாகவும்
பை,Pai - பரந்த
ஆயிரம் தலைய,Aayiram Thalaiya - ஆயிரந்தலைகளை யுடைய
அனந்தன்,Ananthan - திருவந்தாழ்வான் மீது
சயனன்,Sayanan - பள்ளி கொண்டருளுமவனான எம்பெருமான்
ஆளும்,Aalum - ஆளுகின்ற
மலை,Malai - மலையாவது,
ஆயிரம் ஆறுகளும்,Aayiram Aarugalum - பல நதிகளையும்
பல ஆயிரம் சுனைகளும்,Pala Aayiram Sunaigalum - அனேகமாயிரந் தடாகங்களையும்
ஆயிரம் பொழிலும் உடை,Aayiram Pozhilum Udai - பல பூஞ்சோலைகளையுமுடைய
359ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 11
மாலிருஞ் சோலை யென்னும் மலையை யுடைய மலையை
நாலிரு மூர்த்தி தன்னை நால் வேதக் கடலமுதை
மேலிருங் கற்பகத்தை வேதாந்த விழுப் பொருளில்
மேலிருந்த விளக்கை விட்டு சித்தன் விரித்தனவே–4-3-11
மாலிருஞ்சோலை என்னும்,Maaliruncholai Ennum - திருமாலிருஞ்சோலை என்கிற
மலையை,Malaiyai - திருமலையை
உடைய,Udaiya - (தனக்கு இருப்பிடமாக) உடையவனும்
மலையை,Malaiyai - ஒரு மலை சாய்ந்தாற்போன்றுள்ளவனும்
கால் இரு மூர்த்தி தன்னை,Kaal Iru Moorththi Thannai - திருவஷ்டாக்ஷர ஸ்வரூபி யானவனும்
நால் வேதம் கடல் அமுதை,Naal Vedham Kadal Amudhai - நான்கு வேதங்களாகிய கடலில் ஸாரமான அம்ருதம் போன்றவனும்
மேல் இருங் கற்பகத்தை,Mel Irung Karppagaththai - (ஸ்வர்க்க லோகத்திலுள்ள கல்ப வ்ருக்ஷத் தினம்) மேற்பட்டதும் பெரிதுமான கல்பங்ருஷமாயிருப்பவனும்
வேதாந்தம்,Vedhaantham - வேதாந்தங்களிற் கூறப்படுகின்ற
விழுப்பொருளில்,Vizhupporulil - சிறந்த அர்த்தங்களுள்
மேல் இருந்த,Mel Irundha - மேற்பட்ட அர்த்தமாயிருப்பவனும்
விளக்கை,Vilakkai - தனக்குத் தானே விளங்குபவனுமான எம்பெருமானைக் குறித்து
விட்டுசித்தன்,Vittuchiththan - பெரியாழ்வார்
விரித்தன,Viriththana - அருளிச் செய்தவை இப் பாசுரங்கள்.