திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 5-8 ஆரா அமுதே (11 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3194திருவாய்மொழி || (5-8–ஆரா அமுதே) - ((ஆராவமுதே.) இத்திருவாய்மொழியிலே நம் பூருவர்கள் பொரவும் ஈடுபட்டிருப்பர்களாயிற்று.) 1
ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற நெடுமாலே! சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே–5-8-1
பதவுரை Show / Hide
ஆரா அமுதே,ara amuthe - எவ்வளவு அநுபவித்தாலும் திருப்தியிறவாத அமுதமாகிய
எம்மானே,emmane - எம்பெருமானே!
அடியேன் உடலம்,adiyen udalam - என்னுடைய சரீரமானது
நின்பால்,ninpaal - உன் திறத்தில்
அன்பு ஆய் ஏ,anbu aay e - அன்புதானே வடிவெடுத்ததாகி
நீர் ஆய் அலைந்து,neer aay alainthu - நீர்ப்பண்டமாக உருகி வியாகுலப்பட்டு
கரைய,karaiya - கரையும்படியாக
உருக்குகின்ற நெடுமாலே,urukkukindra netumale - உருகப்பண்ணாநிற்கிற ஸர்வேச்வரனே!
சீர் ஆர் செந்நெல்,seer ar sennel - சீர்மைமிக்க செந்நெற்பயிர்கள்
சவரி வீசும்,savari veesum - சாமரம்போல் வீசப்பெற்று
செழுநீர்,sezhuneer - செழுமைதங்கிய தீர்த்தங்களையுடைத்தான
திருகுடந்தை,thirukudandhai - திருக்குடந்தையிலே
ஏர் ஆர் கோலம் திகழ,er ar kolam thigazha - அழகு பொருந்திய திருமேனி விளங்க
கிடந்தாய்,kitandhai - சாய்ந்தருளினாய் (அவ்வழகை)
கண்டேன்,kanden - ஸேவிக்கப் பெற்றேன்
3195திருவாய்மொழி || (5-8–ஆரா அமுதே) - ((எம்மானே!) கீழ்ப்பாட்டில் “கண்டேனெம்மானை!” என்ற ஆழ்வாருடைய கருத்து- பிரானே! உன்னை உலகத்தார் காண்கிற ரீதியிலே நானும் காணுமித்தனையேயோ? எனக்காக எழுந்திருத்தல், இருத்தல், உலாவுதல், குசலப்ரச்னம் பண்ணியருளுதல், அணைத்தல் தெய்தருள வேண்டாவோ? என்று கேட்பதாம்.) 2
எம்மானே! என் வெள்ளை மூர்த்தி! என்னை ஆள்வானே எம்மா உருவும் வேண்டு மாற்றால் ஆவாய்! எழிலேறே! செம்மா கமலம் செழுநீர் மிசைக் கண் மலரும் திருக் குடந்தை அம்மா மலர்க் கண் வளர்கின்றானே! என் நான் செய்கேனே?–5-8-2
பதவுரை Show / Hide
எம்மானே,emmane - எல்லாவிதத்திலும் மஹானானவனே!
என் வெள்ளை மூர்த்தி,en vellai moorthi - என்னை ஈடுபடுத்திக்கொண்ட பரிசுத்த ஸ்வரூபனே!
என்னை ஆள்வானே,ennai aalvane - என்னை அடிமை கொள்பவனே!
வேண்டும் ஆற்றால்,vendum aatral - திருவுள்ளமானபடியே
எம் மா உருவும் ஆவாய்,em ma uruvum aavay - எப்படிப்ப்ட அவதார விக்ரஹங்களையும் பரிக்ரஹிப்பவனே!
மா செம் கமலம்,ma sem kamalam - பெரிய செந்தாமரைகள்
செழுநீர் மிசை,cezhuneer misai - அழகிய நீரினிடத்து
கண்,kan - கண்டவிடமெங்கும்
மலரும்,malarum - மலரப்பெற்ற
திருகுடந்தை,thirukudandhai - திருக்குடந்தையிலே
அ மா மலர்,a ma malar - அப்படிப்பட்ட சிந்த மலர்போன்ற திருக்கண்கள் துயில்பவனே!
தான் என் செய்கேன்,than en seykayn - நான் என்ன பண்ணுலேன்! (இவ்வழகு கண்டு என்னால் தரிக்கப்போகிறதில்லையே’
3196திருவாய்மொழி || (5-8–ஆரா அமுதே) - ((என்னால் செய்கேள்.) இப்படி துடித்துக் கூப்பிட்ட விடத்திலும் குளிர நோக்குதல் குசலப்ரச்னம் பண்ணுதல் ஒன்றும் செய்யாமையாலே, ‘நாம் பேற்றுக்கு ஏதேனும் உபாயம் அனுட்டிக்கவேணும் என்று எம்பெருமான் திருவுள்ளம் பற்றியிருக்கிறான்போலும்’ என்று கொண்டு) 3
என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய் உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அரு வாணாள் செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3
பதவுரை Show / Hide
நான் என் செய்கேன்,naan en seykayn - அடியேன் என்ன செய்வேன்!
களைகண் யாரே,kalai kan yaare - ரக்ஷகராவார் யாவர்!
என்னை என் செய்கின்றாய்,ennai en seykinraay - என்னை என்ன செய்வதாக இருக்கிறாய்?
உன்னால் அல்லால்,unnal allaal - உன்னைத் தவிர்த்து
யாவராலும்,yaavaraalum - வேறு ஒருவிதமான உபாயத்தாலும்
குறை ஒன்றும் வேண்டேன்,kurai onrum venden - சிறிதும் அபேக்ஷையடையேனல்லேன்
கன் ஆர் மதில் சூழ் குடந்தை கிடந்தாய்,kan ar madil soozh kudandhai kitandhay - வேலைப்பாடு பொருந்திய மதிள்சூழ்ந்த திருக்குடந்தையிலே சயனித்தருள்பவனே!
அடியேன்,adiyen - அடியேனுடைய
அரு,aru - ஆத்மாவானது
வாழ்நாள்,vaalnaal - வாழும் காலத்தில்
செல் நாள் எ நாள்,sel naal e naal - கழிகின்ற நாள்கள் எத்தனைநாளோ
அ நான்,a naan - அந்த நாள்களெல்லாம்
உன் தாய் பிடித்தே,un thay pitithey - உனது திருவடிகளைப் பற்றிக்கொண்டே
செல,cel - நடக்கும்படி
காண்,kaan - நடாக்ஷித்தருளவேணும்.
3197திருவாய்மொழி || (5-8–ஆரா அமுதே) - ((செலக்காண்கிற்பார்.) பிரானே! என்போல்வார்க்காக நீ திருக்குடந்தையிலே ஸன்னிதி பண்ணியிருந்தும் நினைத்தபடி பரிமாற்றம் கிடையாமையாலே நான் நோவுபடாநின்றே னென்கிறார்.) 4
செலக் காண்கிற்பார் காணு மளவும் செல்லும் கீர்த்தியாய்! உலப்பிலானே! எல்லா உலகு முடைய ஒருமூர்த்தி! நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்! உன்னைக் காண்பான் நான் அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே.–5-8-4
பதவுரை Show / Hide
செல காண்கிற்பார்,cel kaankirpar - மேலே மேலே காணவல்லவர்கள்
காணும் அளவும்,kaanum alavum - எவ்வளவு காண்பர்பளோ அவ்வளவும்
செல்லும் கீர்த்தியாய்,cellum keertiyay - வளர்ந்துசெல்கின்ற திருக்குணங்களையுடையவனே!
கிடந்தாய்,kitandhay - சயனித்தருள்பவனே!
நான் உன்னை காண்பான் அலப்பு ஆய்,naan unnai kaanpaan alappu aay - என் உன்னைக்காண வேண்டி அமைந்து
உலப்பு இலானே,ulappu ilaane - அந்தத் திருக்குணங்கட்கு முடிவு இல்லாதவனே!
எல்லா உலகும் உடைய,ella ulagum udaiya - எல்லாவுலகங்களுக்கும் ஸ்வாமியான
ஒரு மூர்த்தி,oru moorthi - ஒப்பற்ற தலைவனே!
நலத்தால் மிக்கார் குடந்தை,nalathaal mikkar kudandai - பக்திமிகுந்தவர்கள் வாழ்கின்ற திருக்குடந்தையிலே
ஆகாசத்தை நோக்கி,aakaasathai nokki - (நீ வருதற்குரிய) வானத்தைப்பார்த்து
அழுவன் தொழுவன்,azhuvan thozhuvan - அழுவதும் தொழுவதும் செய்யாநின்றேன்.
3198திருவாய்மொழி || (5-8–ஆரா அமுதே) - ((அழுவன் தொழுவன்.) பிராவே! உன் கண்ணழகிலே யீடுபட்டுப் பலவகை ப்ரவ்ருத்திகளும் பண்ணின விடத்திலும் பயன் பெற்றிலேன்; உன் திருவடிகளைச் சேரும்படி நீயே பார்த்தருள வேணுமென்கிறார்.) 5
அழுவன் தொழுவன் ஆடிக் காண்பான் பாடி அலற்றுவன் தழுவல் வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன் செழு வொண் பழனக் குடந்தைக் கிடந்தாய்! செந்தாமரைக் கண்ணா! தொழுவனேனை உன தாள் சேரும் வகையே சூழ் கண்டாய்.–5-8-5
பதவுரை Show / Hide
செழு ஒண் பழனம்,sezu on palanam - செழுமைதங்கிய நீர்நிலங்களையுடைய
குடந்தை கிடந்தாய்,kudandai kitandhay - திருக்குடந்தையிலே சயனித்தருள்பவனே!
செம் தாமரை கண்ணா,sem thaamarai kannaa - செந்தாமரை மலர்போன்ற திருக்கண்களையுடையவனே!
அழுவன் தொழுவன்,azhuvan thozhuvan - அழுவேன் தொழுவேன்;
ஆடி காண் பன்,aadi kaan pan - கடனம் செய்து பார்ப்பேன்;
பாடி அலற்றுவன்,Paadi alattruvan - வாயாரப்பாடிப் பிரலாபனம் செய்வேன்;
தழு வல்வினையால்,thazhu valvinaiyaal - என்னைத் தழுவிக்கொண்டிருக்கிற வலிய பாவத்தினாலே
பக்கம் நோக்கி,pakkam nokki - (எந்தப்பக்கமாக நீவருகிறாயோவென்று) பக்கந்தோறும் பார்த்து (எங்கும் வரக்காணாமையாலே)
காணி கவிழ்ந்து இருப்பன் தொழுவனேனை,kaani kavilnthu iruppan thozhuvane'nai - வெட்கப்பட்டுத் தலைகவிழ்ந்திருப்பேன்;
உன தாள் சேரும் வகையே,un thaal serum vakaiye - உன் திருவடியடையமாறு
சூழ் கண்டாய்,soozh kandai - உபாயசிந்தை பண்ணவேணும்.
3199திருவாய்மொழி || (5-8–ஆரா அமுதே) - ((சூழ்கண்டாய்.) பிரானே! உன்னுடைய போக்யதையிலே அகப்பட்டிருந்துள்ள வெனக்கு ஓர் உபகாரம் செய்தருளவேணும்; உன்னைப் பெறுதற்கு இடையூறான தொல்லைவினைகளை யெல்லாம் தொலைத்தருளி உன்னைப் பெறுவதொரு நல்விரகு பார்த்தருள வேணும் என்கிறார்.) 6
சூழ் கண்டாய் என் தொல்லை வினையை அறுத்துன்னடி சேறும் ஊழ் கண்டிருந்தே தூராக் குழி தூர்த்து எனை நாளகன்றிருப்பன் வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்! வானோர் கோமானே! யாழி னிசையே! அமுதே! அறிவின் பயனே! அரிஏறே!–5-8-6
பதவுரை Show / Hide
வாழ் தொல் புகழார் குடந்தை,vaal thol pugazhaar kudandhai - விளங்குகின்ற அகாதியான புகழையுடையார் வர்த்திக்கிற திருக்குடந்தையிலே
கிடந்தாய்,kitandhay - சயனித்தருள்பவனே!
வானோர் கோமானே,vaanoor komaane - நித்யஸூரிகாதனே!
யாழின் இசையே,yaazhin isaiye - வீணாகானம்போலே பரம் போக்யனானவனே!
அமுதே,amuthe - அமிருதம் போன்றவனே!
அறிவின் பயனே,arivin payane - அறிவுக்கும் பலனானவனே!
அரி ஏறே,Ari ere - சிங்கமும் கஇடபமும் போன்று சிறந்தவனே!
உன் அடி சேரும் ஊழ் கண்டு இருந்தே,un adi serum ooz kandu irunthe - நான் உனது திருவடிகளையடையும்படியான முறைமையைக் கண்டிருந்தும்
தூரா குழி தூர்த்து,thura kuzhi thuruthu - ஒருநாளும் தூர்க்கவொண்ணாத இந்திரியக்குழிகளை நிறைத்துக்கொண்டு
எனை நாள்,enai naal - எத்தனை காலம்
அகன்று இருப்பன்,agandru iruppan - உன்னைவிட்டுப் பிரிந்திருப்பேன்!
எளன் தொல்லை வினையை அறுத்து,elan tollai vinaiyai aruthu - (இப்படி அகன்றிருக்கைக்குக்காரணமான) எனது அநாதி பாபங்களைத் தொலைத்து
சூழ் கண்டாய்,soozh kandai - என்னை ஸ்வீகரித்தருள வேணும்.
3200திருவாய்மொழி || (5-8–ஆரா அமுதே) - (பிரானே! உன்னுடைய வைலக்ஷண்யத்தை நீயே காட்டித்தந்து அடிமையிலே என்னை ஊன்ற வைத்தாயான பின்பு) 7
அரியேறே! என்னம் பொற் சுடரே! செங்கட் கருமுகிலே! எரியேய் பவளக்குன்றே! நால்தோள் எந்தாய்! உனதருளே பிரியா அடிமை என்னைக் கொண்டாய்! குடந்தைத் திருமாலே! தரியேன் இனி உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே.–5-8-7
பதவுரை Show / Hide
அரி ஏறே,Ari ere - சிறந்த சிங்கமே!
ஏன்,en - நான் அனுபவித்தற்குரிய
அம் பொன் சுடரே,am pon sudare - அழகிய பொன்போன்ற ஒளியுருவனே!
செம் கண் கரு முகிலே,sem kan karu mugile - சிவந்த கண்களையுடைய காளமேகம் போன்றவனே!
எரி ஏய் பவளம் குன்றே,eri aye pavalam kunre - நக்ஷத்திர மண்டலத்தளவும் ஓங்கின பவளமலைபோன்றவனே!
நால் தோள் எந்தாய்,nal thol endhay - சதுர்ப்புஜ ஸ்வாமியே!
உனது அருகே,unathu aruke - உனது கிருபையினாலர்
என்னை பீரியா அடிமை கொண்டாய்,ennai peeriya adimai kondai - என்னை அத்தாணிச் சேவகங் கொண்டவனே!
குடந்தை திருமாலே,kudandai thirumale - திருக்குடந்தையில் வாழும் திருமாலே!
இனி தரியேன்,ini thariyane - இனிமேல் தரித்திருக்ககில்லேன்!
உன் சரணம் தந்து,un sarannam thandu - உனது திருவடிகளைக் கொடுத்தருளி
என் சன்மம் களையாய்,en sanmam kalaiyaay - எனது சரீரத்தொடர்பைத் தவிர்த்தருளவேணும்.
3201திருவாய்மொழி || (5-8–ஆரா அமுதே) - (ப்ரபந்நர்கட்கு ஆகிஞ்சன்யம், அநந்ய கதித்வம் என்ற இரண்டும் குலையாதிருக்கவேணும்.) 8
களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன் வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா! தளரா உடலம் என தாவி சரிந்து போம் போது இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே.–5-8-8
பதவுரை Show / Hide
வளைவாய் நேமிபடையாய்,valaivay nemipadaiyaay - வளைந்த வாயையுடைய திருவாழியை ஆயுதமாகவுடையவனே!
குடந்தை கிடந்த,kudandai kitandha - திருக்குடந்தையிலே சயனித்தருள்கின்ற
மா மாயா,ma maaya - மஹாச்சர்யரூபனே!
துன்பம் களைவாய்,thunbam kalivaay - எனது துன்பங்களை நீ களைந்தாலும் சரி
களைமா தொழிவாய்,kalaimaa thozhivaay - களையாவிட்டாலும் சரி
களைகண் மற்று இலேன்,kalaikan matru ilen - வேறு சரணமுடையேனல்லேன்;
உடலும் தளரா,udalum thalarā - உடல் தளர்ந்து
எனது ஆவி,enathu aavi - என் உயிரானது
சரிந்து பொம் போது,sarindhu pom podhu - நிலைகுலைந்து உத்க்ரமணமடையும்போது
இளையாது,ilaiyathu - மெலியாமல்
உன் தான்,un thaan - உன் திருவடிகளையே
ஒருங்க பிடிந்து போது,orungga pitinthu pothu - ஒருமிக்கப் பிடித்துப் போகும்படி
நீயே இசை,neeye isai - நீயே திருவுள்ளம்பற்ற வேணும்.
3202திருவாய்மொழி || (5-8–ஆரா அமுதே) - ((இசைவித்தென்னை.) கண்ணாலே காணலாம்படி வரவேணு மென்கிறார்.) 9
இசைவித் தென்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே! அசைவில் அமரர் தலைவர் தலைவா! ஆதிப் பெரு மூர்த்தி! திசைவில் வீசும் செழுமா மணிகள் சேரும் திருக்குடந்தை அசைவில் உலகம் பரவக் கிடந்தாய்! காண வாராயே.–5-8-9
பதவுரை Show / Hide
என்னை,ennai - நெடுநாள் விமுகனாயிருன்னத வென்னை
இசைவித்து,isaivithu - அடிமைக்கு இசையும்படி செய்து
உன் தாள் இணை கீழ்,un thaal inai keel - உனது உபயபாதங்களின் கீழே
இருந்தும் அம்மானே,irundhum ammaane - தங்கும்படி செய்தருளின ஸ்வாமியே!
அசைவு இல் அமரர் தலைவர்,asaivu il amarar thalaivar - நித்யஸூரிகளுக்குள் தலைவரான அநந்தகருடவிஷ்வக்ஸேனர்களுக்கும்
தலைவா,thalaiva - முதல்வனே!
ஆதி பெரு மூர்த்தி,aadhi peru moorthi - ஸகலஜகத்காரணபூசமான திவ்ய விக்ரஹத்தையுடையவனே!
திசை வில் வீசும் செழுமா மனிகள் சேரும்,disai vil veesum sezuma maniḵaḷ cerum - எங்கம் ஒளிவீசுகின்ற மிகச்சிறந்த ரத்னங்கள் சேருமிடமான
திரு குடந்தை,tiru kutantai - திக்குடந்தையிலே
அசைவு இல்,asaivu il - ஓய்வில்லாதபடி (அவதாரம்)
உலகம் பரவ,ulagam parava - உலகமெல்லாம் துதிக்கும் படி
கிடந்தாய்,kitandhay - சயனித்தருள்பவனே!
காண வாராய்,kaana vaaraay - நான்கண்டு அநுபவிக்கும்படி வரவேணும்
3203திருவாய்மொழி || (5-8–ஆரா அமுதே) - (திருக்குடந்தையிலே புகவே நம் அபேக்ஷிதங்களெல்லாம் பெறலாமென்று புக்க ஆழ்வார்) 10
வாரா அருவாய் வரும் என் மாயா! மாயா மூர்த்தியாய்! ஆரா வமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்! தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக்குடந்தை ஊராய்! உனக் காட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ?–5-8-10
பதவுரை Show / Hide
வாரா,vaara - திருவுருவத்தோடு வாராமல்
அரு ஆய் வரும்,aru aay varum - அரூபியாய் உள்ளேவந்து தோன்றுகின்ற
என் மாயா,en maaya - என் மாயவனே!
மாயா மூர்த்தியார்,maaya moorthiyaar - ஒருநாளும் அழியாத திவ்ய மங்கள விக்ரஹத்தையுடையவனே!
ஆரா அமுது ஆய்,ara amuthu aay - எவ்வளவு அனுபவித்தாலும் திருப்திபிறவாத அமிருதமாய்க் கொண்டு
அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்,adiyen aavi agame tittipai - என் உள்ளுக்குள்ளே தித்தித்திருக்குமவனே!
தீரா வினைகள் தீர,teera vingal teera - தொலையாத பாவங்களும் தொலையும்படியாக
என்னை ஆண்டாய்,ennai aandaay - அடியேனை ஆண்டருளினவனே!
திரு குடந்தை ஊரா,tiru kutantai oora - திருக்குடந்தைப்பதியோளே!
அடியேன்,adiyen - அடியேன்
உனக்கு ஆள்பட்டும்,unakku aalpattum - உனக்கு அடிமைப்பட்டும்
இன்னம் உழல்வேனோ,innam uzhalveno - இன்னமும் கிலேப்படுவேனோ!
3204திருவாய்மொழி || (5-8–ஆரா அமுதே) - (இப்பதிகம் பழூதறக் கற்கவல்லார் காமிநிகளுக்குக் காமுகர்போலே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு யோக்யராவர் என்று பலனுரைத்துத் தலைக்கட்டுகிறார்) 11
உழலை என்பில் பேய்ச்சி முலை யூடு அவளை உயிர் உண்டான் கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன் குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும் மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே.–5-8-11
பதவுரை Show / Hide
உழலை என் பின் பேய்ச்சி,uzhalai en pin peyschi - உழல்தடிபோன்ற எலும்புகளையுடைளான பூதனையினுடைய
முலை ஊடு,mulai oodu - முலை வழியாக
அவள் உயிரை உண்டான்,aval uyirai undaan - அவளது உயிரை முடித்த பெருமானுடைய
கழல்கள் அவையே,kazalkal avaiye - திருவடிகளையே
சரண் ஆக கொண்ட,saran aka konda - சரணமாகப்பற்றின
குகூர் சடகோபன்,kukoor sadagopan - ஆழ்வார்
குழலின் மலிய,kulalin maliya - குழலோசையித் காட்டிலும் இனிதாக
சொன்ன,sonna - அருளிச்செய்த
ஓர் ஆயிரத்துள்,or aayirattu - ஒப்பற்ற ஆயிரத்தினுள்ளே
இ பத்தும்,i pattum - இப்பதிகத்தை
மழலை தீர,malalai teera - தமது அறியாமை தொலையும்படி
வல்லார்,vallaar - அதிகரிக்கவல்லவர்கள்
மான் ஏய் நோக்கியர்க்கு,maan aay nokkiyarkku - மான்போன்ற நோக்கையுடைய திவ்யாப்ஸரன்ஸுக்களுக்கு
காமர்,kaamar - ஆதரிக்கத்தக்கவராவர்.