திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1558 | பெரிய திருமொழி || (7-2–புள்ளாய் ஏனமுமாய்) (திரு நறையூர் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இனி வேறே நூறாயிரம் இதர விஷயங்கள் முகம் காட்டினாலும் அவற்றோடு செறியேன் – நான் நோவு படுகிற சம்சாரத்தில் நீயே முற்பாடனாய் வந்து நின்ற பின்பு அவற்றோடு பொருந்துமோ – ப்ரீதி அதிசயத்தாலே -ஒ -என்கிறார்) 1 | புள்ளாய் ஏனமுமாய் புகுந்து என்னை உள்ளம் கொண்ட
கள்வா என்றலும் என் கண்கள் நீர்கள் சோர்தருமால்
உள்ளே நின்று உருகி நெஞ்சம் உன்னை உள்ளியக்கால்
நள்ளேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-1 | பதவுரை Show / Hideபுள் ஆய் ஏனமும் ஆய் புகுந்து, Pul Aay Yenamum Aay Pugundhu - ‘ஹம்ஸரூபியாயும் வராஹ ரூபியாயும் என்னுள்ளே பிரவேசித்து (- (ஓ நறையூர் நின்ற நம்பீ!)) என்னை உள்ளம் கொண்ட கள்வா என்றலும், Ennai Ullam Konda Kalvaa Endralum - என உள்ளத்தைக் கவர்ந்து கொண்ட கள்வனே!’ என்று சொன்னவுடனே என் கண்கள், En Kangkal - எனது கண்களில் நின்றும் நீர்கள் சோர்தரும், Neerga Sortharum - கண்ணீர் பெருகுகின்றது : ஆல், Aal - அந்தோ!; நெஞ்சம், Nenjam - என்மனமானது உன்னை, Unnai - எம்பெருமானான உன்னை உள்ளியக்கால், Ulliyakkal - அநுஸந்திக்கப் புகுந்தால் உள்ளே நின்று உருகி, Ulle Nindru Urugi - உள்ளே பிடித்து நீராக உருகிப்போவதனால் உன்னை அல்லால், Unnai Allaal - (இப்படிப்பட்ட அன்புக்கு இலக்கான உன்னைத் தவிர்த்து (வேறொருவரையும்) நள்ளேன், Nalleen - நேசிக்கமாட்டேன். |
| 1559 | பெரிய திருமொழி || (7-2–புள்ளாய் ஏனமுமாய்) (திரு நறையூர் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (புள்ளாய் ஏனமுமாய் புகுந்து -என்றார் கீழே –தாழ்ந்த ஜன்மத்தில் வேணுமாகில் பிறக்கிறாய் – நாட்டார் பிறக்கும் பிறவிகளில் பிறக்கல் ஆகாதோ – நாட்டில் நடையாடாத படியான நரசிம்ஹ ரூபத்தை யுடையையாய் – ஸ்ரீ நரசிம்ஹ வேஷ பரிக்ரஹம் பண்ணின அன்று தொடங்கி இவர் உடைய ஹிருதயத்திலே காணும் கிட்டுவது) 2 | ஓடா வாளரியின் உருவாய் மருவி என்தன்
மாடே வந்து அடியேன் மனம் கொள்ள வல்ல மைந்தா
பாடேன் தொண்டர் தம்மைக் கவிதை பனுவல் கொண்டு
நாடேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-2 | பதவுரை Show / Hideஓடா, Odaa - நாட்டில் எங்கும் நடையாடாத (- (ஓ நறையூர் நின்ற நம்பீ!- ;)) ஆள் அரியின் உரு ஆய், Aal Ariyin Uru Aay - நரஸிம்ஹரூபியாய் என்றன் மாடே வந்து மருவி, Endran Maade Vandu Maruvi - என் பக்கல்வந்து பொருந்தி அடியேன், Adiyen - அடியேனுடைய மனம், Manam - மனத்தை கொள்ள வல்ல மைந்தா, Kolla Valla Mainthaa - கவர்ந்து கொள்ளக் கூடிய மிடுக்கையுடையவனே! பனுவல் கவிதை கொண்டு, Panoval Kavithai Kondo - இலக்கணம் வழுவாத கவிகளைக்கொண்டு தொண்டர் தம்மை, Thondar Thammai - நீசர்களை பாடேன், Paadeen - பாடுவது தவிர்ந்தேன்; உன்னை அல்லால், Unnai Allaal - உன்னைத்தவிர (வேறொரு வரைக் கவிபாட) நாடேன், Naadeen - முயலமாட்டேன். |
| 1560 | பெரிய திருமொழி || (7-2–புள்ளாய் ஏனமுமாய்) (திரு நறையூர் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அஞ்சனம் போலே ஸ்ரமஹரமான வடிவை உடைய உன்னை அல்லது புறம்பே சிலரை – இப்போது புறம்பாக நினைக்கிறது -புறம்புற்றை திருப்பதிகளை – எத்தனை வேணும் என்று ப்ரேரித்தாலும் ப்ரீதி புரஸ் சரமாக ஏத்துமது இல்லை) 3 | எம்மானும் எம் அம்மனையும் என்னைப் பெற்று ஒழிந்ததன் பின்
அம்மானும் அம்மனையும் அடியேனுக்காகி நின்ற
நல் மான ஒண் சுடரே நறையூர் நின்ற நம்பீ உன்
மைம்மான வண்ணம் அல்லால் மகிழ்ந்து ஏத்த மாட்டேனே –7-2-3 | பதவுரை Show / Hideஎம்மானும், Emmaanum - என் தகப்பனும் (- (நறையூர் நின்ற நம்பீ!- ;)) எம் அனையும், Em Anaiyum - என் தாயும் என்னை பெற்று, Ennai Petru - என்னைப் பிரஸவித்துவிட்டு ஒழிந்ததன் பின், Ozhindadhan Pin - நீங்கிய பின்பு அடியேனுக்கு, Adiyenukku - அடியேனுக்கு அம்மானும், Ammanum - தகப்பனும் அம்மனையும், Ammanaiyum - தாயும் ஆகி நின்ற, Aagi Nindra - தானேயாய்நின்ற நல், Nal - விலக்ஷணமாய் மானம், Maanam - பெருமைபொருந்தி ஒண், On - அழகியதான சுடரே, Sudare - தேஜஸ் ஸ்வரூபியே!, உன், Un - உன்னுடைய மை மானம், Mai Maanam - மைபோன்ற வண்ணம் அல்லால், Vannam Allal - திருமேனி நிறத்தையல்லது (வேறொன்றையும்) மகிழ்ந்து, Magizhndu - மனமுவந்து ஏத்த மாட்டேன், Aetha Maatten - துதிக்கமாட்டேன். |
| 1561 | பெரிய திருமொழி || (7-2–புள்ளாய் ஏனமுமாய்) (திரு நறையூர் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சேராச் சேர்த்தியாக என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்து அவ் வாலந்தளிர் அளவன்றிக்கே ஸ்ரீ பரம பதம் போலே இடம் பெற இருந்து என்னை உனக்காக்கிக் கொண்ட இம் மகோ உபகாரத்தை அறியாதே நான் க்ருத்க்னனாய் இருக்கிறேன் அல்லேன் – அவ்விடை யாட்டமும் அறிந்தே இருக்கிறேன் -உனக்கு உறைவிடம் இல்லாமை தான் செய்தாயோ நீ – உனக்கு அசங்குசிதமாக வர்த்திகைக்கு ஒரு ஸ்தானம் இல்லையோ -இத் தேசத்தை உடைய உனக்கு) 4 | சிறியாய் ஓர் பிள்ளையுமாய் யுலகு உண்டு ஓர் ஆலிலை மேல்
உறைவாய் என் நெஞ்சின் உள்ளே உறைவாய் உறைந்தது தான்
அறியாது இருந்தறியேன் அடியேன் அணி வண்டு கிண்டும்
நறைவாரும் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-4 | பதவுரை Show / Hideஅணி வண்டு, Ani Vandu - அழகிய வண்டுகள் (- (நறையூர், நின்ற நம்பீயோ!- ;)) கிண்டும், Kindum - குடையப்பெற்றதும் நறை வாரும், Nirai Vaarum - தேன் பெருகப்பெற்றதுமான பொழில், Pozhil - சோலையாலே சூழ், Sool - சூழப்பட்ட சிறியாயோர் பிள்ளையும் ஆய், Siriyaayor Pillaiyum Aay - மிகச் சிறுகுழந்தையாய் உலகு உண்டு, Ulaku Undu - உலகங்களை உட்கொண்டு ஓர் ஆல் இலை மேல், Or Aal Ilai Mel - ஒரு ஆலந்தளிரிலே உறைவாய், Uraivaay - பொருந்தியிருந்தவனே! என் நெஞ்சின் உள்ளே உளைவாய், En Nenjin Ullae Ulaivaay - எனது நெஞ்சுக்குள்ளே வஸிப்பவனே! உறைந்தது தான், Uraindhadhu Thaan - (நீ இப்படி என்னெஞ்சினுள்ளே) வாஸஞ்செய்தருள்வதை அடியேன், Adiyen - அடியேன் அறியா திருந்தறியேன், Ariyaa Thirundhariyeen - தெரிந்துகொள்ளாமலிருக்கவில்லை |
| 1562 | பெரிய திருமொழி || (7-2–புள்ளாய் ஏனமுமாய்) (திரு நறையூர் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (என்னையும் அடிமையில் மூட்டுகைகாக என்னுடைய ஹிருதயத்திலே புகுந்த உன்னைப் போக ஒட்டுவேனோ சேஷ பூதராவார் சேஷி செய்தபடி செய்யக் கண்டு இருக்குமவர்கள் அன்றோ ஒட்டேன் என்று நிர்பந்திக்கை உம்முடைய ஸ்வரூபத்துக்குப் போருமோ -என்ன – மடல் எடுக்க நினைப்பார் இது ஆம் இது ஆகாது என்று கார்யம் பார்த்தோ செய்வது – நீயோ சால நாண் உடையையாய் இருக்கிறாய் –-நீ முந்துற மடல் எடுத்து பின்னை அன்றோ மடல் எடுப்பித்தது – அவன் மடல் எடுக்கை யாகிறது -முற்பாடனாய் வர நிற்கை இறே) 5 | நீண்டாயை வானவர்கள் நினைந்து ஏத்திக் காண்பது அரிதால்
ஆண்டாய் என்று ஆதரிக்கப் படுவாய்க்கு நான் அடிமை
பூண்டேன் என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயை போகல ஒட்டேன்
நாண் தான் உனக்கு ஒழிந்தேன் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-5 | பதவுரை Show / Hideநீண்டாயை, Neendaayai - நெடுமாலாகிய உன்னை (- (நறையூர் நின்ற நம்பீயோ!- ;)) வானவர்கள், Vaanavarkal - பிரமன் முதலியோர்கள் நினைந்து, Ninaindhu - தியானித்து ஏத்தி, Aethi - தோத்திரம்பண்ணி காண்பு அரிது, Kaanbu Aridhu - காண்பதானது அஸாத்யமான காரியம் ஆண்டாய் என்று ஆதரிக்கப் படுவாய்க்கு, Aandai Enru Aadharikkap Paduvaaykku - ‘எம்பெருமானே!’ என்று (தேவர்களால்) ஆதரித்துத் துதிக்கப்படுகின்ற உன்விஷயத்தில் நான் அடிமை பூண்டேன், Naan Adimai Poondhen - நான் அடிமைத் தொழில் செய்யப்பெற்றேன்; என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயை, En Nenjin Ullae Pugundhaayai - எனது மனத்திலுள்ளே புகுந்திருக்கிற உன்னை போகல் ஒட்டேன், Pokal Ottaen - இனி வேறோரிடம் போக வொட்டேன்; உனக்கு, Unakku - உன் விஷயத்திலே நாண் தான் ஒழிந்தேன், Naan Thaan Ozhindhen - வெட்கமற்றவனானேன். |
| 1563 | பெரிய திருமொழி || (7-2–புள்ளாய் ஏனமுமாய்) (திரு நறையூர் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நீ போகாதே கொள் -என்று காலைக் கட்டி வளைக்கலாம் படி என் பக்கலிலே அருளைப் பண்ணின ஸ்ரீ திரு நறையூரிலே வந்து நின்று ஆய்த்து-இவருக்கு அருளிற்று) 6 | எந்தாதை தாதை அப்பால் எழுவார் பழ வடிமை
வந்தார் என் நெஞ்சினுள்ளே வந்தாயைப் போகல் ஒட்டேன்
அந்தோ என் ஆர் உயிரே அரசே அருள் எனக்கு
நந்தாமைத் தந்த வெந்தாய் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-6 | பதவுரை Show / Hideஎன் ஆர் உயிரே, En Aar Uyire - எனது அருமையான உயிர் போன்றவனே! (- (நறையூர் நின்ற நம்பீயோ!- ;) (ஆகப் பத்துத்தலைமுறையாக)) அரசே, Arase - என்னை ஆள்பவனே! எனக்கு அருள் நந்தாமல் தந்த எந்தாய், Enakku Arul Nandamal Thanda Endathai - என் திறத்தில் கிருபையைக் குறைவின்றிச் செய்தருளின எம்பெருமானே! எம் தாதை தாதை, Em Thathai Thathai - நானும் என் தகப்பனும் அவன் தகப்பனும் அப்பால், Appaal - அவனுக்கு முன்புண்டான எழுவர், Ezhvar - ஸப்த புருஷர்களும் பழவடிமை வந்தார், Pazhavadi Mai Vandhaar - இயற்கையான அடிமையைச் செய்து வந்தவர்கள்; என் நெஞ்சின் உள்ளே, En Nenjin Ullae - எனது மனத்தினுள்ளே வந்தாயை, Vandhaayai - வந்து சேர்ந்த உன்னை போகல் ஒட்டேன், Pokal Ottaen - இனி வேறிடம் போக வொட்டேன் |
| 1564 | பெரிய திருமொழி || (7-2–புள்ளாய் ஏனமுமாய்) (திரு நறையூர் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நீ போகில் நான் முடிவன் -என்கிறார் – இத்தலை இழக்க வரும் அளவில் -இட்ட அடி பேர்க்க மாட்டான் – நீர் வளைக்கிறது என்ன மிடுக்கு கொண்டு என்ன – நீர் குற்றம் கண்டு கை விடப் பார்க்கும் அன்றும்ந கச்சின் ந அபராத்யதி -என்னும் அவள் அன்றோ அருகே இருக்கிறாள்) 7 | மன்னஞ்ச வாயிரம் தோள் மழுவில் துணித்த மைந்தா
எந்நெஞ்சத்து உள்ளிருந்து இங்கு இனிப் போய் பிறர் ஒருவர்
வன்னெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன் வளைத்து வைத்தேன்
நன்னெஞ்சம் அன்னம் மன்னும் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-7 | பதவுரை Show / Hideநல் நெஞ்சம், Nal Nenjam - (அடியார் திறத்தில்) நல்ல ஹ்ருதயத்தை யுடையளான (- (நறையூர், நின்ற நம்பீயோ!- ;)) அன்னம், Annam - அன்ன மென்னடையாளான பிராட்டி மன்னும், Mannum - பொருந்தி வாழ்கிற மன் அஞ்ச, Man Anja - க்ஷத்திரியர்களெல்லாரும் அஞ்சும்படியாக ஆயிரம் தோள், Aayiram Thol - (கார்த்த வீரியார்ஜுநனுடைய) ஆயிரந் தோள்களையும் மழுவின், Mazhuvin - கோடாவிப்படையினால் துணித்த, Thuniththa - அறுத்தொழித்த மைந்தா, Maindha - மிடுக்கனே? என் நெஞ்சத்துள், En Nenjaththul - எனது நெஞ்சினுள்ளே இருந்து, Irundhu - இருந்து வைத்து இனி, Ini - இனிமேல் இங்கு போய், Ingu Poi - இங்கு நின்றும் வேறோரிடம்போய் பிறர் ஒருவர், Piraar Oruthar - வேறொருவருடைய வல் நெஞ்சம், Val Nenjam - கடினமான நெஞ்சிலே புக்கு இருக்க, Pukku Irukka - புகுந்திருக்க ஒட்டேன், Ottaein - ஸம்மதிக்கமாட்டேன்; வளைத்துவைக்கேன், Valaithuvaikken - தடைசெய்கின்றேன். |
| 1565 | பெரிய திருமொழி || (7-2–புள்ளாய் ஏனமுமாய்) (திரு நறையூர் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விலஷணமான புஷ்பங்களிலே வண்டுகள் ஆனவை குடைந்து வண்டு உண்ணும் -என்கிறபடியே உள்ளே உள்ளே அவஹாகிக்கும் அத்தனை போக்கி வேறு ஒன்றில் போக ஒண்ணாத படி போக்யமான தேசத்தை வாசஸ் ஸ்தானமாக உடையவனே- அவ் ஊரில் அவஹாகித்தாருக்கு வேறேயும் ஓர் இடம் தேடித் போகலாம் படியோ அவ் ஊரில் போக்யதை இருப்பது) 8 | எப்போதும் பொன் மலர் இட்டு இமையோர் தொழுது தங்கள்
கைப் போது கொண்டு இறைஞ்சிக் கழல் மேல் வணங்க நின்றாய்
இப்போது என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்
நற்போது வண்டு கிண்டும் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-8 | பதவுரை Show / Hideநல் போது, Nal Podhu - நல்ல புஷ்பங்களிலே (- (நறையூர், நின்ற நம்பீயோ!- ;)) வண்டு கிண்டும், Vandu Kintum - வண்டுகள் குடையப்பெற்ற இமையோர், Imaiyor - நித்யஸூரிகள் எப்போதும், Eppodhum - எக்காலத்திலும் பொன்மலர் இட்டு, Ponmalar Ittu - நல்ல பூக்களை ஸமர்ப்பித்து தொழுது, Thozhudhu - வணங்கி தங்கள், Thangal - தங்களுடைய கை போது கொண்டு இறைஞ்சி, Kai Podhu Kondu Irainji - புஷ்பம் போன்ற கைகளினால் அஞ்ஜலிசெய்து கழல் மேல், Kazhal Mel - திருவடிகளிலே வணங்க நின்றாய், Vananga Nindraai - ஆச்ரயிக்குமாறு நிற்பவனே! இப்போது, Ipodhu - இன்று என் நெஞ்சின் உள்ளே, En Nenjin Ullae - எனது மனத்துள்ளே புகுந்தாயை, Pugundhaayi - வந்துபுகுந்த வுன்னை போகல் ஒட்டேன், Pokal Ottaen - வேறிடம் போகவொட்டேன் |
| 1566 | பெரிய திருமொழி || (7-2–புள்ளாய் ஏனமுமாய்) (திரு நறையூர் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தம்முடைய ஹிருதயத்திலே வந்து புகுந்து கலந்த படியை அனுசந்திக்க அனுசந்திக்க தமக்கு இனிதாக நின்றது –எனக்கு சர்வ வித போக்யமுமாய் உள்ளவனே – வேறு ஒரு சரீர பரிக்ரஹம் பண்ணி அது கொண்டு பெற இருக்கை அன்றிக்கே இந்த சரீரம் தன்னையே கொண்டு பிராபிக்கப் பெற்றேன் – அது செய்த படி தான் எங்கனே என்ன –நீ வர நிற்கையாலே நான் இப் பேறு பெற்றேன்) 9 | ஊனேர் ஆக்கை தன்னை உழந்து ஓம்பி வைத்தமையால்
யானாய் என் தனக்காய் அடியேன் மனம் புகுந்த
தேனே தீன் கரும்பின் தெளிவே என் சிந்தை தன்னால்
நானே எய்தப் பெற்றேன் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-9 | பதவுரை Show / Hideயான் ஆய், Yaan Aayi - எனக்கு அந்தராத்மாவாய் (- (நறையூர் நின்ற நம்பீயோ!- ;)) என் தனக்கு ஆய், En Thanakku Aayi - எனக்கு விதேயனாய்க் கொண்டு அடியேன் மனம் புகுந்து, Adiyein Manam Pugundhu - அடியேனுடைய மனத்தினுட் பிரவேசித்த தெனே, Thene - தேன்போல் இனியவனே! தீம் கரும்பின் தெளிவே, Theem Karumbin Thelivae - இனிமையான கரும்பின் சாறுபோன்றவனே! ஊன் ஏர் ஆக்கை தன்னை, Oon Aer Aakkai Thannai - மாம்ஸமயமான சரீரத்தை உழந்து, Uzhandhu - (பலவகைகளாலும்) சிரமப்பட்டு ஓம்பி வைத்தமையால், Oombi Vaiththamaiyaal - பேணிவைத்துக்கொண்டிருந்ததனால் என் சிந்தை தன்னால், En Sindhai Thannal - என்னுடைய மனத்தினால் நானே எய்த பெற்றேன், Naane Eytha Pettraen - (இப்போது உன்னை) நானே வந்தடையப்பெற்றேன். |
| 1567 | பெரிய திருமொழி || (7-2–புள்ளாய் ஏனமுமாய்) (திரு நறையூர் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத்தை அனுசந்தித்தார்க்கு -இது ஒரு சப்தமே -என்று கொண்டாடும் இதுவே ஸ்வ பாவமாம் படி இருக்கிற சொல் தொடையைச் சொல்லும் அவர்கள்-இத்தை சொல்லுகையே போரும் ஆய்த்து பிரயோஜனம் – அதுக்கு மேலே-போக பூமிகளிலே மேலாய் இருக்கிற ஸ்ரீ பரம பதத்திலே போய் இவ் வாத்மாவின் உடைய ஸ்வரூப அனுரூபமான முறையாலே நிரதிசய ஸ்வரூபா நந்திகளாய் பின்னை ஒரு நாளும் புநரா வ்ருத்தி இல்லாத பேற்றைப் பெறுவார்கள்) 10 | நன்னீர் வயல் புடை சூழ் நறையூர் நின்ற நம்பியைக்
கன்னீர் மால் வரைத் தோள் கலிகன்றி மங்கையர் கோன்
சொன்னீர் சொல் மாலை சொல்லுவார்கள் சூழ் விசும்பில்
நன்னீர்மையால் மகிழ்ந்து நெடும் காலம் வாழ்வாரே –7-2-10 | பதவுரை Show / Hideநல் நீர் வயல் புடை சூழ் நறையூர், Nal Neer Vayal Pudai Soozh Naraiyoor - நல்ல நீரையுடைய கழனிகளாலே நாற்புறமுஞ் சூழப்பட்ட திருநறையூரில் நின்ற, Nindra - நித்யாவஸம் செய்தருள்கின்ற நம்பியை, Nambiyai - எம்பெருமான் விஷயமாக, கல் நீர மால் வரை தோள், Kal Neera Maal Varai Thol - ஒலிக்கின்ற அருவிநீரையுடைய பெரிய மலைபோன்ற திருத்தோள்களை யுடையவரும் மங்கையர் கோன், Mangaiyar Koon - திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவருமான கலிகன்றி, Kalikanri - திருமங்கையாழ்வார் (அருளிச்செய்த) சொல் நீர, Sol Neera - கொண்டாடிச் சொல்ல வேண்டுவதையே ஸ்வபாவமாகவுடைய சொல் மாலை, Sol Maalai - இச்சொல் மாலைகளை சொல்லுவார்கள், Solluvaargal - கற்பவர்கள் சூழ் விசும்பில், Sozh Vizhumbil - பெரிய திருநாட்டில் நல் நீர்மையால், Nal Neermaiyaal - (நித்தியகைங்கர்யமாகிற) சிறந்த ஸ்வபாவத்தோடு கூடி நெடுங்காலம், Nedungkaalam - சாச்வதாமாக மகிழ்ந்து வாழ்வார், Magizhndhu Vaazvaar - பரமாநந்தங்கொண்டு வாழப்பெறுவர். |