திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1678 | பெரிய திருமொழி || (8-4–விண்ணவர் தங்கள்) (திரு கண்ணபுரம் 4) - (கோல்தும்பி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சீல குணம் சத் கார்ய வாதம் கொண்டு அறிய வேண்டும்படியாய் இருக்கும் –அங்கு பிரமாணங்கள் சொல்ல அறியும் இத்தனை – இங்கு எத்தனையேனும் தாழ்ந்தாருக்கும் முகம் கொடுத்துக் கொண்டு நிற்கிற நிலையைக் கண்ணாலே காண்கையாலே அது ஸ்பஷ்டம் ஆவது இங்கே யாயிற்று – கோல்களிலும் பணை களிலும் வைத்த மதுவை பானம் பண்ணக் கடவ உன்னை சர்வரச -என்கிற வஸ்துவைப் போய் அனுபவி என்று அன்றோ சொல்கிறது – ஸ்வாபதேசம்-சப்தாதி விஷய நிச்சாரதையும் –-பகவத் அனுபவ நிரதிசய சாரத்தையும் சிஷ்யருக்கு அறிவிக்கிறார்) 1 | விண்ணவர் தங்கள் பெருமான் திரு மார்வன்
மண்ணவ ரெல்லாம் வணங்கும் மலி புகழ் சேர்
கண்ண புரத் தெம்பெருமான் கதிர் முடி மேல்
வண்ண நறுந்துழாய் வந்தூதாய் கோல்தும்பீ –8-4-1 | பதவுரை Show / Hideகோல் தும்பி, Kool Thumbi - கொம்புகளில் திரிகின்றவண்டே! விண்ணவர் தங்கள் பெருமான், Vinnavar Thangal Perumaan - நித்ய ஸூரிகளுக்குத் தலைவனும் திரு மார்வன், Thiru Maarvan - பிராட்டியைத் திருமார்பிற் கொண்டவனும் மண்ணவர் எல்லாம் வணங்கும், Mannavar Ellam Vanangum - இந்நிலத்திலுள்ளார் எல்லாராலும் வணங்கப் படுபவனும் மலி புகழ் சேர், Mali Pugazh Ser - நிறைந்த கீர்த்தியை யுடையவனும் கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருப்பவனுமான எம்பெருமான், Emperumaan - ஸ்வாமியினுடைய கதிர் முடிமேல், Kathir Mudimael - ஒளிபொருந்திய திருமுடியின் மீதுள்ள வண்ணம் நறு துழாய், Vannam Naru Thuzhai - அழகியதும் மணத்ததுமான திருத்துழாயைக் கொண்டு வந்து, Vandhu - இங்கே வந்து ஊதாய், Oodhai - நீ ஊது. |
| 1679 | பெரிய திருமொழி || (8-4–விண்ணவர் தங்கள்) (திரு கண்ணபுரம் 4) - (கோல்தும்பி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திருவடிகளை அக்ரமமாக ஏத்தி அதிலே விழுந்து எல்லாரும் ஸ்தோத்ரம் பண்ணி ஸ்நேஹத்தைப் பண்ணுகிற நிதித்யாசிதவ்ய -என்று விதிக்கிற விஷயத்தில் அன்றோ நான் உன்னைப் பற்றச் சொல்லுகிறது) 2 | வேத முதல்வன் விளங்கு புரி நூலன்
பாதம் பரவிப் பலரும் பணிந்தேத்தி
காதன்மை செய்யும் கண்ண புரத் தெம்பெருமான்
தாது நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ –8-4-2 | பதவுரை Show / Hideவேதம் முதல் வன், Vedham Mudhal Van - வேதங்களால் முழு முதற் கடவுளாகப் பிரதிபாதிக்கப்படுபவனும் (- (கண்ணபுரத்தெம்பெருமானுடைய,-) (அந்த நறுமணத்தைக் கொணர்ந்து)- (ஊதாய் கோல் தும்பீ!-.)) விளங்கு, Vilangu - (திருமேனியில்) விளங்குகின்ற புரி நூலன், Puri Noolan - யஜ்ஞோபவீதத்தையுடையவனும் பலரும், Palarum - எல்லாரும் பாதம், Paadham - திருவடிகளை பரவி பணிந்து ஏத்தி, Paravi Paninthu Aethi - ஆச்ரயித்து வணங்கித் துதித்து காதன்மை செய்யும், Kaadhanmai Seyyum - பக்தி பண்ணுதற்கு உரியனான தாது, Thaadu - தாதுகளையுடைத்தாய் நறு, Naru - மணம்மிக்கதான துழாய், Thuzhai - திருத்துழாயிலே தாழ்ந்து, Thaazhnthu - படிந்து |
| 1680 | பெரிய திருமொழி || (8-4–விண்ணவர் தங்கள்) (திரு கண்ணபுரம் 4) - (கோல்தும்பி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தங்களை ஆஸ்ரயணீயராக நினைத்து இறுமாந்து இருக்கிறவர்கள் எல்லாரும் அவ்விறுமாப்பைப் பொகட்டு திருவடிகளிலே ஆஸ்ரயிக்கும் படி ஸ்ரீ திருக் கண்ண புரத்திலே நிற்கிறவன் – சஜாதீயர் உடைய யாத்ரை அமையாதோ உனக்கு) 3 | விண்ட மலரெல்லாம் ஊதி நீ என் பெறுதி
அண்ட முதல்வன் அமரர்கள் எல்லாரும்
கண்டு வணங்கும் கண்ண புரத் தெம்பெருமான்
வண்டு நறுந்துழாய் வந்தூதாய் கோல்தும்பீ –8-4-3 | பதவுரை Show / Hideநீ, Nee - நீ (- (கோல் தும்பீ!-) (கண்ணபுரத்தெம்பெருமானுடைய,-) (வந்து ஊதாய்-)) விண்ட மலர் எல்லாம், Vindha Malai Ellam - விகஸித்த புஷ்பங்களி லெல்லாம் ஊதி, Oothi - ஒலிசெய்து என் பெறுதி, En Peruthi - என்னபேறு பெறுகின்றாய்? (ஒன்றுமில்லை) அண்டம் முதல்வன், Andam Muthalvan - பரமபதத்துக்கு நிர்வாஹகனும் அமருர்கள் எல்லாரும் பண்டு வணங்கும், Amarurgal Ellaarum Pandu Vanangum - தேவர்களெல்லாரும் (தங்கள் அஹங்காரந் தொலைந்து) ஸேவித்து வணங்கப் பெற்றவனுமான வண்டு நறு துழாய், Vandu Naru Thuzhai - வண்டுகள் படிந்து பரிமளம் மிக்க திருத்துழாயைக் கொண்டு |
| 1681 | பெரிய திருமொழி || (8-4–விண்ணவர் தங்கள்) (திரு கண்ணபுரம் 4) - (கோல்தும்பி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (எல்லாருக்கும் மேல் விழுந்து பற்ற வேண்டும்படியான வடிவை உடையனுமாய்க் கொண்டு ஸ்ரீ திருக் கண்ண புரத்திலே நிற்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனை அன்றோ பற்றச் சொல்லுகிறது) 4 | நீர் மலிகின்றதோர் மீனாய் ஓர் ஆமையுமாய்
சீர் மலின்ற தோர் சிங்க வுருவாகிக்
கார்மலி வண்ணன் கண்ண புரத் தெம்பெருமான்
தார்மலி தண்டுழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ –8-4-4 | பதவுரை Show / Hideநீர்மலிகின்றது, Neermalikinrathu - ஸமுத்ரத்திலே வியாபித்த (- (கோல் தும்பீ-) (கண்ணபுரத் தெம்பெருமானுடைய-;)) ஓர் மீன் ஆய், Oru Meen Aayi - அத்விதீயமான மத்ஸ்யாவதாரமெடுத்தவனும் ஓர் ஆமையும் ஆய், Oru Aamaiyum Aayi - விலக்ஷணமான கூர்மாவதார மெடுத்தவனும் சீர் மலிகின்றது ஓர் சிங்கம் உரு ஆகி, Seer Malikinrathu Oru Singam Uru Aagi - சீர்மை மிகுந்த நரஸிம்ஹாவதார மெடுத்தவனும் கார் மலி வண்ணன், Kaar Mali Vannan - மேகத்திற்காட்டிலும் சிறந்த வடிவு பெற்றவனுமான தார், Thaar - மாலையிலே மலி, Mali - பொருந்திய தண், Than - குளிர்ந்த துழாய், Thuzhai - திருத்துழாயிலே தாழ்ந்து, Thaazhnthu - தாமதித்திருந்து ஊதாய், Oodhai - (வந்து) ஊது. |
| 1682 | பெரிய திருமொழி || (8-4–விண்ணவர் தங்கள்) (திரு கண்ணபுரம் 4) - (கோல்தும்பி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூமிக்கு செவ்வி பெற்று இருந்துள்ள திருத் துழாயிலே தாழ்ந்தூதாய்) 5 | ஏரார் மலரெல்லா மூதி நீ என் பெறுதி
பாரார் உலகம் பரவப் பெரும் கடலுள்
காராமையான கண்ண புரத் தெம்பெருமான்
தாரார் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ –8-4-5 | பதவுரை Show / Hideநீ, Nee - நீ (- (கண்ணபுரத்தெம்பெருமானுடைய -;)) ஏர் ஆர் மலர் எல்லாம், Ear Ar Malai Ellam - அழகு நிரம்பிய (மற்ற புஷ்பங்களிலெல்லாம் ஊதி, Oothi - ஒலி செய்து என் பெறுதி, En Peruthi - என்னபேறு பெறுவாய்; (ஒன்றும் பெறமாட்டாய்.) பார் ஆர் உலகம், Par Ar Ulagam - இப்பூமியிலே பொருந்திய ஜனங்களெல்லாம் பரவ, Parava - வணங்குமாறு பெரு கடலுள், Peru Kadalul - பெரிய ஸமுத்ரத்தினுள்ளே கார் ஆமை ஆன, Kar Aamai Aan - பெரிய ஆமையாகத் திருவவதரித்த தார் ஆர் நறு துழாய், Thar Ar Naru Thuzhai - மாலையிலே பொருந்திய பரிமளம் மிக்க திருத்துழாயிலே தாழ்ந்து ஊதாய், Thazhndu Oodhai - வைகியிருந்து (வந்து) ஊது. |
| 1683 | பெரிய திருமொழி || (8-4–விண்ணவர் தங்கள்) (திரு கண்ணபுரம் 4) - (கோல்தும்பி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நீ அங்கே சென்றால் முகம் தருவிப்பார் உண்டு அவன் தான் விரோதி நிரசன சீலன்- என்றும் ஒக்க ஆபத்துக்களில் உதவிப் போந்தவன் உதவாது ஒழியிலும் விட ஒண்ணாத வடிவு அழகை உடையவன் ஆனபின்பு அவன் பக்கலிலே சென்று இங்கே வந்தூதப் பாராய் -என்கிறாள்) 6 | மார்வில் திருவன் வலனேந்து சக்கரத்தன்
பாரைப் பிளந்த பரமன் பரஞ்சோதி
காரில் திகழ் காயா வண்ணன் கதிர் முடி மேல்
தாரில் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ –8-4-6 | பதவுரை Show / Hideமார்வில் திருவன், Marvil Thiruvan - திருமார்பிலே ஸ்ரீ மஹாலக்ஷிமியை யுடையவனும் (- (கோல் தும்பீ!-)) வலன் ஏந்து சக்கரத்தன், Valan Aendhu Chakkarathan - வலத்திருக்கையில் தரிக்கப்பட்ட திருவாழியையுடையவனும் பாரை, Parai - (அண்டபித்தியில்) ஒட்டிக்கிடந்த பூமியை பிளந்த பரமன், Pilanda Paraman - (மஹாவராஹமாகிக்) குத்திக் கொணர்ந்த மேன்மை வாய்ந்தவனும் பரம் சோதி, Param Sothi - நிகரற்ற சோதியே வடிவெடுத்தவனும் காரில் திகழ், Kaaril Thigal - கறுப்பு நிறத்தினால் விளங்குகின்ற காயா, Kaayaa - காயாம்பூப்போன்ற வண்ணன், Vannan - வடிவையுடையவனுமான பெருமானுடைய கதிர் முடிமேல், Kathir Mudimael - ஒளி பொருந்திய திருமுடிமீதுள்ள தாரில், Thaaril - மாலையில் (தொடுக்கப்பட்டிருக்கின்ற) நறு, Naru - பரிமளம் மிக்க துழாய், Thuzhai - திருத்துழாயில் தாழ்ந்து, Thaazhnthu - தங்கியிருந்து ஊதாய், Oodhai - (வந்து) ஊது. |
| 1684 | பெரிய திருமொழி || (8-4–விண்ணவர் தங்கள்) (திரு கண்ணபுரம் 4) - (கோல்தும்பி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ரஷணத்துக்கு தனி மாலை இட்டு இருக்கையாலே வளைத்து கார்யம் கொள்ளலாம் படி இருக்குமவன் – அழகாலே நாட்டை வெருட்டித் திரிகிற காமனுக்கும் கூட உத்பாதகன் – மாலையாய் பரிமளிதமான திருத் துழாயிலே தாழ்ந்து இங்கே வந்தூதாய்) 7 | வாமனன் கற்கி மதுசூதனன் மாதவன்
தார் மன்னு தாசரதியாய தட மார்வன்
காமன் தன தாதை திருக் கண்ண புரத் தெம்பெருமான்
தாம நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ –8-4-7 | பதவுரை Show / Hideவாமநன், Vaamanan - வாமநாவதாரஞ் செய்தவனும் (- (கண்ணபுரத்தெம்பெருமானுடைய-;) (தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ!-.)) கற்கி, Karkki - கல்கியவதாரம் செய்யப் போகிறவனும் மது சூதன், Madhu Soothan - மதுவென்னு மசுரனைக் கொன்றவனும் மாதவன், Madhavan - திருமகள் கொழுநனும் தார் மன்னு, Thar Mannu - (ரக்ஷகத்வஸூசகமான) மாலை பொருந்திய தட மார்வன், Thada Marvan - பெரிய திருமார்பையுடையவனும் தாசரதி ஆய, Dasarathi Aaya - தசரத புத்ரனாகத் திருவவதரித்தவனும் காமன் தன் தாதை, Kaman Than Thathai - மன்மதனுக்குத் தந்தையுமான தாமம், Thamam - மாலையிலுள்ள நறு, Naru - பரிமளம் மிக்க துழாய், Thuzhai - திருத்துழாயில் |
| 1685 | பெரிய திருமொழி || (8-4–விண்ணவர் தங்கள்) (திரு கண்ணபுரம் 4) - (கோல்தும்பி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விரோதிகளுக்கும் மிருத்யு வானவன் – ஸ்ரீ திருக் கண்ண புரத்திலே வந்து சந்நிஹிதனான ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய புகரை உடைத்தான திரு அபிஷேகத்தின் மேலே உண்டான-தர்ச நீயமான திருத் துழாய் மாலையிலே வந்தூதாய்) 8 | நீல மலர்கள் நெடு நீர் வயல் மருங்கில்
சால மலரெல்லாமூதாதே வாளரக்கர்
காலன் கண்ண புரத் தெம்பெருமான் கதிர் முடி மேல்
கோல நறுந்துழாய் கொண்டூதாய் கோல்தும்பீ –8-4-8 | பதவுரை Show / Hideநெடு நீர், Nedu Neer - அதிகமான ஜலத்தையுடைய (- (கோல் தும்பீ!-) (கண்ணபுரத்தெம்பெருமானுடைய-;) (கொண்டு ஊதாய்-.)) வயல், Vayal - வயல்களிலுண்டான நீலம் மலர்கள், Neelam Malargal - நீலோற்பல மலர்களிலும் மருங்கில், Marungil - சுற்றிலுமுள்ள மலர் எல்லாம், Malar Ellam - எல்லா மலர்களிலும் சால, Sala - மிகவும் ஊதாதே, Oothathe - ஒலிசெய்வது தவிர்த்து வாள் அரக்கர் காலன், Vaal Arakkar Kalan - வாட்படையையுடைய ராக்ஷஸர்களுக்கு மிருத்யுவான கதிர் முடி மேல், Kathir Mudi Mael - ஒளி பொருந்திய திருமுடி மீதுள்ள கோலம், Kolam - அழகிய நறு, Naru - பரிமளம் மிக்க துழாய், Thuzhai - திருத்துழாயை |
| 1686 | பெரிய திருமொழி || (8-4–விண்ணவர் தங்கள்) (திரு கண்ணபுரம் 4) - (கோல்தும்பி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நமக்கு அபூமியான இருக்கிற இடத்தில் போகச் சொல்லுகிறேனோ) 9 | நந்தன் மதலை நிலமங்கை நற்துணைவன்
அந்த முதல்வன் அமரர்கள் தம் பெருமான்
கந்தங்கமழ் காயா வண்ணன் கதிர் முடி மேல்
கொந்து நறுந்துழாய் கொண்டூதாய் கோல்தும்பீ –8-4-9 | பதவுரை Show / Hideநந்தன் மதலை, Nandan Mathalai - நந்தகோப குமாரனும் (- (கோல் தும்பீ!-)) நிலம் மங்கை நல் துணைவன், Nilam Mangai Nal Thunaivan - பூமிப்பிராட்டிக்கு இனிய வல்லபனும் அந்தம் முதல்வன், Andham Muthalvan - ஸம்ஹாரத்துக்குக் ஸ்ருஷ்டிக்குங் கடவனும் அமரர்கள் தம் பெருமான், Amarar Galam Perumaan - நித்யஸூரிகட்குத் தலைவனும் கந்தம் கமழ், Kandham Kamazh - பரிமளம் கமழப்பெற்றவனும் காயா வண்ணன், Kaayaa Vannaan - காயாம்பூப்போன்ற நிறத்தனுமான பெருமானுடைய கதிர் முடிமேல், Kathir Mudimael - ஒளிபொருந்திய திருமுடியின் மீதுள்ள கொந்து, Kondhu - கொத்துக் கொத்தான நறு, Naru - மணம்மிக்க துழாய் கொண்டு, Thuzhaai Kondo - திருத்துழாயைக் கொணர்ந்து ஊதாய், Oodhai - ஊது. |
| 1687 | பெரிய திருமொழி || (8-4–விண்ணவர் தங்கள்) (திரு கண்ணபுரம் 4) - (கோல்தும்பி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சேஷ பூதரான நாங்கள் இவற்றைக் கொண்டு பாடும்படியாக நீ உன் ஹிருதயத்திலே கொண்டு அவன் பக்கலிலே அறிவித்து எங்களுக்கு அவன் முகம் தரும்படி பண்ணி எங்கள் குறையைத் தீர்க்கப் பாராய் – என்கிறார் பத்தாம் பாசுரத்தில் இவர் ஒருவரும் ஆஸ்வஸ்தர் ஆகவே எல்லாரும் ஆஸ்வஸ்தர் காணும்) 10 | வண்டமரும் சோலை வயலாலி நன்னாடன்
கண்ட சீர் வென்றிக் கலியன் ஒலி மாலை
கொண்டல் நிற வண்ணன் கண்ண புரத்தானைத்
தொண்டரோம் பாட நினைந்தூதாய் கோல்தும்பீ –8-4-10 | பதவுரை Show / Hideவண்டு அமரும் சோலை, Vandu Amarum Solai - வண்டுகள் படிந்த சோலைகளையுடையதும் (- (கோல் தும்பீ!-)) வயல், Vayal - கழனிகளை யுடையதுமான ஆலி, Aali - திருவாலி யென்கிற நல் நாடன், Nal Naadan - நல்ல நாட்டுக்குத் தலைவரும் கண்ட சீர், Kanda Seer - பிரத்யக்ஷமான திருக்குணங்களையுடையவரும் வென்றி, Vendri - ஜயசீலருமான கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார் ஒலி, Oli - அருளிச்செய்த மாலை, Maalaik - இச்சொல் மாலையைக் கொண்டு, கொண்டல் நிறம் வண்ணன், Kondal Niram Vannaan - மேகத்தின் நிறம்போன்ற நிறத்தையுடையனான கண்ண புரத்தானை, Kanna Puraththaanai - திருக்கண்ணபுரத் தெம்பெருமானை தொண்டரோம், Thondarom - அடியோங்கள் பாட, Paada - பாடும்படியாக நினைந்து, Ninaindhu - நீ நெஞ்சிற்கொண்டு ஊதாய், Oodhai - ஊதவேணும். |