Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: ஆரா அமுதே (11 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3194திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 1
ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற நெடுமாலே!
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே–5-8-1
ஆரா அமுதே,ara amuthe - எவ்வளவு அநுபவித்தாலும் திருப்தியிறவாத அமுதமாகிய
எம்மானே,emmane - எம்பெருமானே!
அடியேன் உடலம்,adiyen udalam - என்னுடைய சரீரமானது
நின்பால்,ninpaal - உன் திறத்தில்
அன்பு ஆய் ஏ,anbu aay e - அன்புதானே வடிவெடுத்ததாகி
நீர் ஆய் அலைந்து,neer aay alainthu - நீர்ப்பண்டமாக உருகி வியாகுலப்பட்டு
கரைய,karaiya - கரையும்படியாக
உருக்குகின்ற நெடுமாலே,urukkukindra netumale - உருகப்பண்ணாநிற்கிற ஸர்வேச்வரனே!
சீர் ஆர் செந்நெல்,seer ar sennel - சீர்மைமிக்க செந்நெற்பயிர்கள்
சவரி வீசும்,savari veesum - சாமரம்போல் வீசப்பெற்று
செழுநீர்,sezhuneer - செழுமைதங்கிய தீர்த்தங்களையுடைத்தான
திருகுடந்தை,thirukudandhai - திருக்குடந்தையிலே
ஏர் ஆர் கோலம் திகழ,er ar kolam thigazha - அழகு பொருந்திய திருமேனி விளங்க
கிடந்தாய்,kitandhai - சாய்ந்தருளினாய் (அவ்வழகை)
கண்டேன்,kanden - ஸேவிக்கப் பெற்றேன்
3195திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 2
எம்மானே! என் வெள்ளை மூர்த்தி! என்னை ஆள்வானே
எம்மா உருவும் வேண்டு மாற்றால் ஆவாய்! எழிலேறே!
செம்மா கமலம் செழுநீர் மிசைக் கண் மலரும் திருக் குடந்தை
அம்மா மலர்க் கண் வளர்கின்றானே! என் நான் செய்கேனே?–5-8-2
எம்மானே,emmane - எல்லாவிதத்திலும் மஹானானவனே!
என் வெள்ளை மூர்த்தி,en vellai moorthi - என்னை ஈடுபடுத்திக்கொண்ட பரிசுத்த ஸ்வரூபனே!
என்னை ஆள்வானே,ennai aalvane - என்னை அடிமை கொள்பவனே!
வேண்டும் ஆற்றால்,vendum aatral - திருவுள்ளமானபடியே
எம் மா உருவும் ஆவாய்,em ma uruvum aavay - எப்படிப்ப்ட அவதார விக்ரஹங்களையும் பரிக்ரஹிப்பவனே!
மா செம் கமலம்,ma sem kamalam - பெரிய செந்தாமரைகள்
செழுநீர் மிசை,cezhuneer misai - அழகிய நீரினிடத்து
கண்,kan - கண்டவிடமெங்கும்
மலரும்,malarum - மலரப்பெற்ற
திருகுடந்தை,thirukudandhai - திருக்குடந்தையிலே
அ மா மலர்,a ma malar - அப்படிப்பட்ட சிந்த மலர்போன்ற திருக்கண்கள் துயில்பவனே!
தான் என் செய்கேன்,than en seykayn - நான் என்ன பண்ணுலேன்! (இவ்வழகு கண்டு என்னால் தரிக்கப்போகிறதில்லையே’
3196திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 3
என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அரு வாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3
நான் என் செய்கேன்,naan en seykayn - அடியேன் என்ன செய்வேன்!
களைகண் யாரே,kalai kan yaare - ரக்ஷகராவார் யாவர்!
என்னை என் செய்கின்றாய்,ennai en seykinraay - என்னை என்ன செய்வதாக இருக்கிறாய்?
உன்னால் அல்லால்,unnal allaal - உன்னைத் தவிர்த்து
யாவராலும்,yaavaraalum - வேறு ஒருவிதமான உபாயத்தாலும்
குறை ஒன்றும் வேண்டேன்,kurai onrum venden - சிறிதும் அபேக்ஷையடையேனல்லேன்
கன் ஆர் மதில் சூழ் குடந்தை கிடந்தாய்,kan ar madil soozh kudandhai kitandhay - வேலைப்பாடு பொருந்திய மதிள்சூழ்ந்த திருக்குடந்தையிலே சயனித்தருள்பவனே!
அடியேன்,adiyen - அடியேனுடைய
அரு,aru - ஆத்மாவானது
வாழ்நாள்,vaalnaal - வாழும் காலத்தில்
செல் நாள் எ நாள்,sel naal e naal - கழிகின்ற நாள்கள் எத்தனைநாளோ
அ நான்,a naan - அந்த நாள்களெல்லாம்
உன் தாய் பிடித்தே,un thay pitithey - உனது திருவடிகளைப் பற்றிக்கொண்டே
செல,cel - நடக்கும்படி
காண்,kaan - நடாக்ஷித்தருளவேணும்.
3197திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 4
செலக் காண்கிற்பார் காணு மளவும் செல்லும் கீர்த்தியாய்!
உலப்பிலானே! எல்லா உலகு முடைய ஒருமூர்த்தி!
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்! உன்னைக் காண்பான் நான்
அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே.–5-8-4
செல காண்கிற்பார்,cel kaankirpar - மேலே மேலே காணவல்லவர்கள்
காணும் அளவும்,kaanum alavum - எவ்வளவு காண்பர்பளோ அவ்வளவும்
செல்லும் கீர்த்தியாய்,cellum keertiyay - வளர்ந்துசெல்கின்ற திருக்குணங்களையுடையவனே!
கிடந்தாய்,kitandhay - சயனித்தருள்பவனே!
நான் உன்னை காண்பான் அலப்பு ஆய்,naan unnai kaanpaan alappu aay - என் உன்னைக்காண வேண்டி அமைந்து
உலப்பு இலானே,ulappu ilaane - அந்தத் திருக்குணங்கட்கு முடிவு இல்லாதவனே!
எல்லா உலகும் உடைய,ella ulagum udaiya - எல்லாவுலகங்களுக்கும் ஸ்வாமியான
ஒரு மூர்த்தி,oru moorthi - ஒப்பற்ற தலைவனே!
நலத்தால் மிக்கார் குடந்தை,nalathaal mikkar kudandai - பக்திமிகுந்தவர்கள் வாழ்கின்ற திருக்குடந்தையிலே
ஆகாசத்தை நோக்கி,aakaasathai nokki - (நீ வருதற்குரிய) வானத்தைப்பார்த்து
அழுவன் தொழுவன்,azhuvan thozhuvan - அழுவதும் தொழுவதும் செய்யாநின்றேன்.
3198திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 5
அழுவன் தொழுவன் ஆடிக் காண்பான் பாடி அலற்றுவன்
தழுவல் வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன்
செழு வொண் பழனக் குடந்தைக் கிடந்தாய்! செந்தாமரைக் கண்ணா!
தொழுவனேனை உன தாள் சேரும் வகையே சூழ் கண்டாய்.–5-8-5
செழு ஒண் பழனம்,sezu on palanam - செழுமைதங்கிய நீர்நிலங்களையுடைய
குடந்தை கிடந்தாய்,kudandai kitandhay - திருக்குடந்தையிலே சயனித்தருள்பவனே!
செம் தாமரை கண்ணா,sem thaamarai kannaa - செந்தாமரை மலர்போன்ற திருக்கண்களையுடையவனே!
அழுவன் தொழுவன்,azhuvan thozhuvan - அழுவேன் தொழுவேன்;
ஆடி காண் பன்,aadi kaan pan - கடனம் செய்து பார்ப்பேன்;
பாடி அலற்றுவன்,Paadi alattruvan - வாயாரப்பாடிப் பிரலாபனம் செய்வேன்;
தழு வல்வினையால்,thazhu valvinaiyaal - என்னைத் தழுவிக்கொண்டிருக்கிற வலிய பாவத்தினாலே
பக்கம் நோக்கி,pakkam nokki - (எந்தப்பக்கமாக நீவருகிறாயோவென்று) பக்கந்தோறும் பார்த்து (எங்கும் வரக்காணாமையாலே)
காணி கவிழ்ந்து இருப்பன் தொழுவனேனை,kaani kavilnthu iruppan thozhuvane'nai - வெட்கப்பட்டுத் தலைகவிழ்ந்திருப்பேன்;
உன தாள் சேரும் வகையே,un thaal serum vakaiye - உன் திருவடியடையமாறு
சூழ் கண்டாய்,soozh kandai - உபாயசிந்தை பண்ணவேணும்.
3199திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 6
சூழ் கண்டாய் என் தொல்லை வினையை அறுத்துன்னடி சேறும்
ஊழ் கண்டிருந்தே தூராக் குழி தூர்த்து எனை நாளகன்றிருப்பன்
வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்! வானோர் கோமானே!
யாழி னிசையே! அமுதே! அறிவின் பயனே! அரிஏறே!–5-8-6
வாழ் தொல் புகழார் குடந்தை,vaal thol pugazhaar kudandhai - விளங்குகின்ற அகாதியான புகழையுடையார் வர்த்திக்கிற திருக்குடந்தையிலே
கிடந்தாய்,kitandhay - சயனித்தருள்பவனே!
வானோர் கோமானே,vaanoor komaane - நித்யஸூரிகாதனே!
யாழின் இசையே,yaazhin isaiye - வீணாகானம்போலே பரம் போக்யனானவனே!
அமுதே,amuthe - அமிருதம் போன்றவனே!
அறிவின் பயனே,arivin payane - அறிவுக்கும் பலனானவனே!
அரி ஏறே,Ari ere - சிங்கமும் கஇடபமும் போன்று சிறந்தவனே!
உன் அடி சேரும் ஊழ் கண்டு இருந்தே,un adi serum ooz kandu irunthe - நான் உனது திருவடிகளையடையும்படியான முறைமையைக் கண்டிருந்தும்
தூரா குழி தூர்த்து,thura kuzhi thuruthu - ஒருநாளும் தூர்க்கவொண்ணாத இந்திரியக்குழிகளை நிறைத்துக்கொண்டு
எனை நாள்,enai naal - எத்தனை காலம்
அகன்று இருப்பன்,agandru iruppan - உன்னைவிட்டுப் பிரிந்திருப்பேன்!
எளன் தொல்லை வினையை அறுத்து,elan tollai vinaiyai aruthu - (இப்படி அகன்றிருக்கைக்குக்காரணமான) எனது அநாதி பாபங்களைத் தொலைத்து
சூழ் கண்டாய்,soozh kandai - என்னை ஸ்வீகரித்தருள வேணும்.
3200திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 7
அரியேறே! என்னம் பொற் சுடரே! செங்கட் கருமுகிலே!
எரியேய் பவளக்குன்றே! நால்தோள் எந்தாய்! உனதருளே
பிரியா அடிமை என்னைக் கொண்டாய்! குடந்தைத் திருமாலே!
தரியேன் இனி உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே.–5-8-7
அரி ஏறே,Ari ere - சிறந்த சிங்கமே!
ஏன்,en - நான் அனுபவித்தற்குரிய
அம் பொன் சுடரே,am pon sudare - அழகிய பொன்போன்ற ஒளியுருவனே!
செம் கண் கரு முகிலே,sem kan karu mugile - சிவந்த கண்களையுடைய காளமேகம் போன்றவனே!
எரி ஏய் பவளம் குன்றே,eri aye pavalam kunre - நக்ஷத்திர மண்டலத்தளவும் ஓங்கின பவளமலைபோன்றவனே!
நால் தோள் எந்தாய்,nal thol endhay - சதுர்ப்புஜ ஸ்வாமியே!
உனது அருகே,unathu aruke - உனது கிருபையினாலர்
என்னை பீரியா அடிமை கொண்டாய்,ennai peeriya adimai kondai - என்னை அத்தாணிச் சேவகங் கொண்டவனே!
குடந்தை திருமாலே,kudandai thirumale - திருக்குடந்தையில் வாழும் திருமாலே!
இனி தரியேன்,ini thariyane - இனிமேல் தரித்திருக்ககில்லேன்!
உன் சரணம் தந்து,un sarannam thandu - உனது திருவடிகளைக் கொடுத்தருளி
என் சன்மம் களையாய்,en sanmam kalaiyaay - எனது சரீரத்தொடர்பைத் தவிர்த்தருளவேணும்.
3201திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 8
களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!
தளரா உடலம் என தாவி சரிந்து போம் போது
இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே.–5-8-8
வளைவாய் நேமிபடையாய்,valaivay nemipadaiyaay - வளைந்த வாயையுடைய திருவாழியை ஆயுதமாகவுடையவனே!
குடந்தை கிடந்த,kudandai kitandha - திருக்குடந்தையிலே சயனித்தருள்கின்ற
மா மாயா,ma maaya - மஹாச்சர்யரூபனே!
துன்பம் களைவாய்,thunbam kalivaay - எனது துன்பங்களை நீ களைந்தாலும் சரி
களைமா தொழிவாய்,kalaimaa thozhivaay - களையாவிட்டாலும் சரி
களைகண் மற்று இலேன்,kalaikan matru ilen - வேறு சரணமுடையேனல்லேன்;
உடலும் தளரா,udalum thalarā - உடல் தளர்ந்து
எனது ஆவி,enathu aavi - என் உயிரானது
சரிந்து பொம் போது,sarindhu pom podhu - நிலைகுலைந்து உத்க்ரமணமடையும்போது
இளையாது,ilaiyathu - மெலியாமல்
உன் தான்,un thaan - உன் திருவடிகளையே
ஒருங்க பிடிந்து போது,orungga pitinthu pothu - ஒருமிக்கப் பிடித்துப் போகும்படி
நீயே இசை,neeye isai - நீயே திருவுள்ளம்பற்ற வேணும்.
3202திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 9
இசைவித் தென்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே!
அசைவில் அமரர் தலைவர் தலைவா! ஆதிப் பெரு மூர்த்தி!
திசைவில் வீசும் செழுமா மணிகள் சேரும் திருக்குடந்தை
அசைவில் உலகம் பரவக் கிடந்தாய்! காண வாராயே.–5-8-9
என்னை,ennai - நெடுநாள் விமுகனாயிருன்னத வென்னை
இசைவித்து,isaivithu - அடிமைக்கு இசையும்படி செய்து
உன் தாள் இணை கீழ்,un thaal inai keel - உனது உபயபாதங்களின் கீழே
இருந்தும் அம்மானே,irundhum ammaane - தங்கும்படி செய்தருளின ஸ்வாமியே!
அசைவு இல் அமரர் தலைவர்,asaivu il amarar thalaivar - நித்யஸூரிகளுக்குள் தலைவரான அநந்தகருடவிஷ்வக்ஸேனர்களுக்கும்
தலைவா,thalaiva - முதல்வனே!
ஆதி பெரு மூர்த்தி,aadhi peru moorthi - ஸகலஜகத்காரணபூசமான திவ்ய விக்ரஹத்தையுடையவனே!
திசை வில் வீசும் செழுமா மனிகள் சேரும்,disai vil veesum sezuma maniḵaḷ cerum - எங்கம் ஒளிவீசுகின்ற மிகச்சிறந்த ரத்னங்கள் சேருமிடமான
திரு குடந்தை,tiru kutantai - திக்குடந்தையிலே
அசைவு இல்,asaivu il - ஓய்வில்லாதபடி (அவதாரம்)
உலகம் பரவ,ulagam parava - உலகமெல்லாம் துதிக்கும் படி
கிடந்தாய்,kitandhay - சயனித்தருள்பவனே!
காண வாராய்,kaana vaaraay - நான்கண்டு அநுபவிக்கும்படி வரவேணும்
3203திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 10
வாரா அருவாய் வரும் என் மாயா! மாயா மூர்த்தியாய்!
ஆரா வமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்!
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக்குடந்தை
ஊராய்! உனக் காட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ?–5-8-10
வாரா,vaara - திருவுருவத்தோடு வாராமல்
அரு ஆய் வரும்,aru aay varum - அரூபியாய் உள்ளேவந்து தோன்றுகின்ற
என் மாயா,en maaya - என் மாயவனே!
மாயா மூர்த்தியார்,maaya moorthiyaar - ஒருநாளும் அழியாத திவ்ய மங்கள விக்ரஹத்தையுடையவனே!
ஆரா அமுது ஆய்,ara amuthu aay - எவ்வளவு அனுபவித்தாலும் திருப்திபிறவாத அமிருதமாய்க் கொண்டு
அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்,adiyen aavi agame tittipai - என் உள்ளுக்குள்ளே தித்தித்திருக்குமவனே!
தீரா வினைகள் தீர,teera vingal teera - தொலையாத பாவங்களும் தொலையும்படியாக
என்னை ஆண்டாய்,ennai aandaay - அடியேனை ஆண்டருளினவனே!
திரு குடந்தை ஊரா,tiru kutantai oora - திருக்குடந்தைப்பதியோளே!
அடியேன்,adiyen - அடியேன்
உனக்கு ஆள்பட்டும்,unakku aalpattum - உனக்கு அடிமைப்பட்டும்
இன்னம் உழல்வேனோ,innam uzhalveno - இன்னமும் கிலேப்படுவேனோ!
3204திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 11
உழலை என்பில் பேய்ச்சி முலை யூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே.–5-8-11
உழலை என் பின் பேய்ச்சி,uzhalai en pin peyschi - உழல்தடிபோன்ற எலும்புகளையுடைளான பூதனையினுடைய
முலை ஊடு,mulai oodu - முலை வழியாக
அவள் உயிரை உண்டான்,aval uyirai undaan - அவளது உயிரை முடித்த பெருமானுடைய
கழல்கள் அவையே,kazalkal avaiye - திருவடிகளையே
சரண் ஆக கொண்ட,saran aka konda - சரணமாகப்பற்றின
குகூர் சடகோபன்,kukoor sadagopan - ஆழ்வார்
குழலின் மலிய,kulalin maliya - குழலோசையித் காட்டிலும் இனிதாக
சொன்ன,sonna - அருளிச்செய்த
ஓர் ஆயிரத்துள்,or aayirattu - ஒப்பற்ற ஆயிரத்தினுள்ளே
இ பத்தும்,i pattum - இப்பதிகத்தை
மழலை தீர,malalai teera - தமது அறியாமை தொலையும்படி
வல்லார்,vallaar - அதிகரிக்கவல்லவர்கள்
மான் ஏய் நோக்கியர்க்கு,maan aay nokkiyarkku - மான்போன்ற நோக்கையுடைய திவ்யாப்ஸரன்ஸுக்களுக்கு
காமர்,kaamar - ஆதரிக்கத்தக்கவராவர்.