Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: உருகுமால் நெஞ்சம் (11 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3612திருவாய்மொழி || (9-6–உருகுமால் நெஞ்சம்) (ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை)) (திருக்காட்கரை யெம்பெருமானுடைய ஆச்சரியமான பரிமாற்றங்களை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சு நீர்ப்பண்டமாகின்றதே யென்கிறார்.) 1
உருகுமால் நெஞ்சம் உயிரின் பரம் அன்றி
பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்
தெருவு எல்லாம் காவி கமழ் திருக் காட்கரை
மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே–9-6-1
தெரு எல்லாம் காலி கமழ்,Teru ellam kaali kamazh - தெருவுகள் தோறும் செங்கழு நீர்ப்பூ வாஸிக்கப்பெற்ற
திருக் காட்கரை,Thiruk kaatkarai - திருக்காட்கரையென்னுந் திருப்பதியிலே
மருவிய,Maruviya - பொருந்திவர்த்திக்கிற
மாயன் தன் மாயம்,Maayan than maayam - எம்பெருமானுடைய ஆச்சரியமான ஸெளந்தர்யசீலாதிகளை
நினைதொறு,Ninaithoru - நினைக்கிறபோதெல்லாம்
நெஞ்சம் உருகும்,Nenjam urugum - நெஞ்சு சுட்டுக்குலைந்து உருகாநின்றது
உயிரின் பரம் அன்றி,Uyirin param andri - ஆத்மாவுக்குத் தாங்கக்கூடிய அளவல்லாமல்
வேட்கை பெருகும்,Vetkai perugum - ஆசை கரைபுரண்டு செல்லா நின்றது
தொண்டனேன் என் செய்கேன்,Thondaneen en seigain - சபலனான நான் என்ன செய்யக் கடவேன்?
3613திருவாய்மொழி || (9-6–உருகுமால் நெஞ்சம்) (ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை)) (திருக்காட்கரை யெம்பெருமானை நோக்கி ‘உன்னோடு நான் கலந்து பரிமாறின பரிமாற்றத்தை நினைக்க சக்தனாகின்றிலேன்! ‘ என்கிறார்.) 2
நினைதொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும்
வினை கொள் சீர் பாடிலும் வேம் எனது ஆர் உயிர்
சுனை கொள் பூஞ்சோலைத் தென் காட்கரை என் அப்பா
நினைகிலேன் நான் உனக்கு ஆள் செய்யும் நீர்மையே –9-6-2
நினை தொள் பூ சோலை,Ninaithol poo solai - தடாகங்களையுடைய பூஞ்சோலை களையுடைந்தான
தென் காட்கரை,Then kaatkarai - திருக்காட்கரை யிவெழுந்தருளியிருக்கிற
என் அப்பா,En appa - எம்பெருமானே
வினை கொள் சீர்,Vinai kol seer - பாபங்களைக் கொள்ளை கொள்ளும்தான் (உனது) திருக்குணங்களை
நினைதொறும்,Ninaithorum - நினைக்கிற போதெல்லாம்
நெஞ்சு இடிந்து,Nenju idinthu - நெஞ்சானது சிதிலமாகி
சொல்லுந் தொறும்உகும்,Sollun thorumugum - (அக்குணங்களைச்) சொல்லாத தொடங்கின போதெல்லாம் (அந்த நெஞ்சானது) நீராயுருநா நின்றது
பாடிலும்,Paadiyum - (அக்குணங்களைப்) பாடத்தொடங்கினாலோ
எனது ஆர் உயிர் வேம்,Enathu ar uyir vem - என்னுடைய அருமையான ஆத்ம வஸ்துவானது வேலா நின்றது.
நான்,Naan - இப்படியாகப் பெற்ற நான்
உனக்கு ஆள் செய்யும் நீர்மை நினைகிலேன்,Unakku aaal seiyyum neermai ninaikilaan - உனக்குந் கைங்கரியம்பண்ணும் விதத்தை அறிகின்றிலேன்
3614திருவாய்மொழி || (9-6–உருகுமால் நெஞ்சம்) (ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை)) (கீழ்ப்பாட்டின் ஈற்றடிக்கு வியாக்கியானமாயிருக்கிறது இப்பாட்டெல்லாம். அடிமை கொளுவதாக ஒரு வியாஜமிட்டு உள்ளே புகுந்து தன் படிகளைக் காட்டி ஸர்வஸ்வாப ஹாரம் பண்ணின வாற்றை அந்தோ! நினைக்க மாட்டிற்றிலேனென்கிறார்.) 3
நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை
ஈர்மை செய்து என் உயிராய் என் உயிர் உண்டான்
சீர் மல்கு சோலைத் தென் காட் கரை என் அப்பன்
கார் முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலன்–9-6-3
நெஞ்சம் வஞ்சித்து புகுந்து,Nenjam vanjithu pukundhu - ஏதோ வஞ்சனையினால் என் நெஞ்சினுள்ளே புகுந்து
நீர்மையால் என்னை ஈர்மை செய்து,Neermaiyaal ennai eermai seydhu - முறைகெடப் பரிமாறும் சீல குணத்தினால் என்னை நலிந்து
என் உயிர் ஆய் என் உயிர் உண்டான்,En uyir aayi en uyir undaan - எனக்குத் தாரகனாயிருப்பன் போல என்னை யழித்தவனும்
சீர்மல்கு சோலை தென் காட்கரை என் அப்பன்,Seer malgu solai then kaatkarai en appan - அழகு நிரம்பிய சோலைகளால் சூழப்பட்ட திருக்காட்கரையியெழுந்தருளியிருக்கும் பெருமானும்
கார்முகில் வண்ணன் தன்,Kaarmukil vannan than - காளமேக வண்ணனுமானபரம புருஷனுடைய
கள்வம்,Kalvam - க்ருத்ரிமத்தை
அறிகிலேன்,Arikilaan - தெரிந்து கொள்ள மாட்டாதவனாயிருக்கிறேன்.
3615திருவாய்மொழி || (9-6–உருகுமால் நெஞ்சம்) (ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை)) (தான் சேஷியாயும் ஜகத்தெல்லாம் சேஷபூதமாயும் முறைதப்பாமல் எல்லாரோடுங் கலக்கிறவன் நீசனேன் நிறையொன்றுமிலேனென்ன நின்ற அதிக்ஷுத்ரனான என் பக்கவிலே காட்டும் வியோமோஹம் இன்னதென்று என்னால் சொல்ல முடிகிறதில்லையே யென்று தடுமாறுகிறார்.) 4
அறிகிலேன் தன்னுள் அனைத்து உலகும் நிற்க
நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான்
வெறி கமழ் சோலைத் தென் காட்கரை என் அப்பன்
சிறிய என் ஆர் உயிர் உண்ட திரு வருளே–9-6-4
தன் உள்,Than ul - தனது ஸங்கல்பத்திலே
அனைத்து உலகும் நிற்க,Anaiththu ulagam nirka - ஸமஸ்த லோ பதார்த்தங்களும் தரிப்புற்றிருக்க
தானும்,Thaanum - இப்படி அவற்றை யெல்லாம் தரித்திருக்கிற தானும்
நெறிமையால்,Nerimaiyaal - சரீராத்மபாவ ஸம்பந்த மடியான சேஷ சேஷி பாவமாகிற முறைமை தவறாமல்
அவற்றுள் நிற்கும் பிரான்,Avattrul nirkkum piraan - அவற்றுக்குள்ளே நிற்கும் உபகாரகனாய்
வெறி கமழ் சோலை,Veri kamazh solai - பரிமளம் மமிக்க சோலைகளையுடைய
சிறிய என்,Siriya en - மிகவும் ஷீத்ரனான என்னுடைய
ஆர் உயிர்,Ar uyir - ஆத்ம வஸ்துவை
உண்ட,Unda - மேல் விழுந்து அநுபவித்த
திரு அருள்,Thiru arul - வியோமோஹத்தை
அறிகிலேன்,Arikilaan - அறிகின்றிலேன்
3616திருவாய்மொழி || (9-6–உருகுமால் நெஞ்சம்) (ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை)) (எம்பெருமான் என்னை யடிமை கொள்வான்போலே புகுந்து என் சரீரத்தையும் ஆத்மாவையும் ஒக்க புஜியா நின்றானே! இது என்ன வியாமோஹம்! என்று வியக்கிறார்.) 5
திருவருள் செய்பவன் போல என் உள் புகுந்து
உருவமும் ஓர் ஆர் உயிரும் உடனே உண்டான்
திருவளர் சோலைத் தென் காட்கரை என் அப்பன்
கருவளர் மேனி நம் கண்ணன் கள்வங்களே–9-6-5
திரு அருள் செய்பவன் போல,Thiru arul seipayavan pola - என்னிடமிருந்து அடிமை கொள்ளு கையாகிற திருவருளைச் செய்பவன் போல அவிநயம் காட்டி
என் உன் புகுந்து,En un pukundhu - என் நெஞ்சிலே புகுந்து
உருவமும் ஆர் உயிரும்,Uruvamum ar uyirum - உடலையு முயிரையும்
உடனே உண்டான்,Udane undaan - ஹேய உபாதேய விபாக மில்லாதபடி ஏகரீதியாக அனுபவித்தான்
திரு வளர் சோலை தென் காட்கரை என் அப்பன்,Thiru valar solai then kaatkarai en appan - அழகு மிகுந்த சோலைகளையுடைய தென் காட்கரை என் அப்பன்
கருவளர்மேனி,Karuvalar meeni - என் அப்பன் சாமநிறம் விஞ்சின திரு மேனியை யுடையவனாய்க் கொண்டு
என் கண்ணன்,En kannan - எனக்கு விதேயனாயிருந்த அப்பெருமானுடைய
கள்வங்களே,Kalvangale - வஞ்சனை யிருக்கிறபடி என்னே
3617திருவாய்மொழி || (9-6–உருகுமால் நெஞ்சம்) (ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை)) (ஒருவனைக் கள்ளனென்றறிந்தால் அவனுடைய ஸஹவாஸத்தை விட்டுவிலகுதல் போல, எம்பெருமானுடைய வஞ்சகங்களை யறிந்த நீர் அவனைவிட்டு அகல வேண்டாவோ னென்ன என் செய்வேன்? அவனைக் கண்டவாறே அவனது வஞ்சனைகளை மெய்யென்று கொள்ளும்படி நேர்ந்து விடுகிறதே யென்கிறார்.) 6
எம் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும்
அம் கண்ணன் உண்ட என் ஆர் உயிர்க்கோது இது
புன் கண்மை எய்திப் புலம்பி இராப்பகல்
என் கண்ணன் என்று அவன் காட் கரை ஏத்துமே–9-6-6
என் கண்ணன்,En kannan - என் பக்கல் பிச்சேறின கண்ணனுடைய
கள்வம்,Kalvam - வஞ்சனைகளானவை
செம் ஆய நிற்கும்,Sem aaya nirkum - செம்மையாகவே ஆர்ஜவமென்றே தோன்றா விந்கும்
அங்கண்ணன்,Angkannan - அவன் வியாமோஹத்தாலே மிகவும் சபலனாய்க் கொண்டு
உண்ட,Unda - பூஜிக்கப்பெற்ற
கோது,Kothu - (அதனாலே) நிஸ்ஸாரமான
என் ஆர் உயிர் இது,En ar uyir idhu - இந்த என்னாத்மாவானது
புன்கண்மை எய்தி,Pungamai eedhi - தைன்யத்தையடைந்ததாகி
என் கண்ணன் என்று இரா பகல் புலம்பி,En kannan endru ra pagal pulampi - எனக்கு விதேயனானவனே யென்று இரவும் பகலும் கதறியழுது
அவன் காட்கரை ஏத்தும்,Avan kaatkarai aethum - அவனுடைய திருக்காட்கரைப் பதியையே சொல்லா நின்றது.
3618திருவாய்மொழி || (9-6–உருகுமால் நெஞ்சம்) (ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை)) (என்னை யடிமை கொள்வாரைப்போலே வந்து புகுந்து என்னுயிரை மானப்புஜித்து, பின்னையும் புஜியாதான் போலே கிடந்து படாநின்றானென்கிறார்.) 7
காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்
ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–9-6-7
ஆள் கொள்வான் ஒத்து,Aaal kolvaan oththu - அடிமை கொள்வரைப் போலே (புகுந்து)
என் உயிர் உண்ட மாயனால்,En uyir unda maayaanal - என்னாத்மாவைக் கொள்ளை கொண்ட மாயப்பெருமானாலே
கோள் உண்டே,Kowl undae - புஜித்துக் கொள்ளப்படச் செய் நேயும்
கோள் குறைபட்டது,Kowl kuraipattadhu - போகம் மிச்சப்பட்டிருக்கிற தென்னலாம்படியிருக்கிற
என் ஆருயிர்,En aar uyir - என்னாத்மாவானது
காட்கரை ஏத்தும்,Kaatkarai Yeththum - அவனுறையுமிடமான திருகட்கரையைப் புகழா நின்றது.
அதனுள் கண்ணா என்னும்,Adhanul kannaa ennum - அத்திருப்பதியிலே நிற்கிற கண்ணா வென்று அழையா நின்றது (அவ்வளவுமன்றிக்கே)
வேட்கை நோய் கூர,Vetkai noi koora - காதல் நோய் மிகப்பெற்று
நினைந்து கரைந்து உகும்,Ninaindhu karaindhu ugum - (அவனுடைய பரிமாற்றங்களை)நினைத்து உருகி சிதிலமாகா நின்றது.
3619திருவாய்மொழி || (9-6–உருகுமால் நெஞ்சம்) (ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை)) (எம்பெருமானை யநுபவிக்குமாழ்வார்க்கு “எப்பொழுதும் நாள் திங்களாண்டுழி யூழிதொறும் அப்பொழுதைக்கப் பொழுதென்னாராவமுதமே” என்னும்படி, நித்யா பூர்வமாயிருக்கிறாப்போலே எம்பபெருமான்றனக்கும் ஆழ்வாருடைய அநுபவம் நித்யாபூர்மாயிருக்கும்படி சொல்லுகிறது இப்பாட்டில்.) 8
கோள் உண்டான் அன்றி வந்து என் உயிர் தான் உண்டான்
நாளும் நாள் வந்து என்னை முற்றவும் தானுண்டான்
காள நீர் மேகம் தென் காட் கரை என் அப்பற்கு
ஆள் அன்றே பட்டது என் ஆர் உயிர் பட்டதே–9-6-8
கோள் உண்டான் அன்றி வந்து,Kowl undaan andri vandhu - என்பக்கல் ஒருபகாரம் கொண்டல்லாமல் நிர்ஹேதுகமாக வந்து
என் உயிர் தான் உண்டான்,En uyir thaan undaan - என்னாத்மாவை யநுபவித்தான் (அவ்வளவேயன்றியே)
நாள் நாளும் வந்து,Naal naalum vandhu - நாள் தோறும் வந்து
என்னை முற்றவும் தான் உண்டான்,Ennai muttravu thaan undaan - என்னைச் சிறிதும் சேவயொதபடி பூர்த்தியாக புஜித்தான்
கர்ணம் நீர் மேகம்,Karnam neer megam - கறுத்து நீர் கொண்டெழுந்த மேகம் போன்ற வடிவையுடைய
தென்காட்கரை அப்பற்கு என்,Then kaatkarai appaarkku en - திருக்காட்கரை யெம்பெருமானுக்கு
ஆள் பட்டது அன்றே,Aaal pattadhu andri - நான் அடிமைப் பட்டவத்தனையேயன்றோ
என் ஆருயிர் பட்டதே,En aar uyir pattadhe - என்னை இங்ஙனே படுத்த வேணுமோ?
3620திருவாய்மொழி || (9-6–உருகுமால் நெஞ்சம்) (ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை)) (கீழ்ப்பாட்டில் “ஆளன்றே பட்டது என்னாருயில் பட்டது” என்றார் ; எம்பெருமானுடைய திருக்குணங்களில் ஊடுபட்டவர்களான எல்லார்க்குமே இது ஸஹஜந்தானே ; உமக்கு மாத்திரம் அஸாதாரணமோ ! என்று சில் கேட்பதாகக் கொண்டு நான் பட்டது யாரும் பட்டிலரென்கிறாரிப்பாட்டில்.) 9
ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது
பேர் இதழ்த் தாமரைக் கண் கனிவாயது ஓர்
கார் எழில் மேகம் தென் காட் கரை கோயில் கொள்
சீர் எழில் நால் தடம் தோள் தெய்வ வாரிக்கே–9-6-9
பேர் இதழ் தாமரை கண்,Peer ithazh thaamarai kan - பெரிய விதழை யுடைய தாமரை போன்ற திருக்கண்களையும்
கனி வாயது ஓர்,Kani vaayadhu or - கனிபோந் சிவந்த வாயையுமுடைத்தா யிருப்பதொரு
சார் எழில் மேகம்,Saar ezhil megam - கறுத்தழகிய மேகம் போன்ற வாயையுடையவனாய்க் கொண்டு
தென்காட்கரை கோயில்கொள்,Then kaatkarai koilkol - திருக்காட்கரையை உறைவிடமாகக் கொண்ட
சீர் எழில் நால் தட தோள்,Seer ezhil naal tada thol - அழகுமிக்க நான்கு திருத் தோள்களையுடையனாய்
தெயவம் வாரிக்கு,Theevam vaarikku - தெய்வங்களுக்குக் கடல் போன்வனான பெருமானுக்கு
எனது உயிர் பட்டது,Enathu uyir pattadhu - என்னாத்மா பட்டபாடு
ஆர் உயிர் பட்டது,Ar uyir pattadhu - வேறு யாருடைய ஆத்மா பட்டது? (நான் பகவத் விஷயத்தில் பட்டபாடு ஒருவரும் படவில்லை யென்கை)
3621திருவாய்மொழி || (9-6–உருகுமால் நெஞ்சம்) (ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி -தம்மோடு கலந்த எம்பெருமானுக்கு தம்மிலும் அபி நிவேசம் மிக்கு இருந்த படியையும் அத்தாலே மிகவும் நோவு பட்ட படியையும் அருளிச் செய்கிறார். 10
வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–9-6-10
உன்னை நானில்,Unnai naanil - உன்னைக் காணப் பெறில்
வாரிக் கொண்டு விழுங்குவன் என்று,Vaarik kondu vizhunguvaan endru - கபளீகரிப்பேனென்ற
ஆர்வு உற்ற,Aarvu utra - ஆசைகொண்ட
என்னை ஒழிய,Ennai ozhiya - என்னளவன்றியே
என்னில் முன்னம் பாரித்து,Ennil munnam paarithu - (இப்படி செய்யவேணுமென்று) எனக்கு முன்னமே மனோரதித்து
தான் என்னைமுற்ற பருகினான்,Thaan ennai mutra paruginan - என்னை நிச்சேஷமாகக் கபளி கரித் தவனான
கார் ஒக்கும் காட்கரை அப்பன்,Kaar okugum kaatkarai appan - காளமேகம் போன்ற திருக்காட்கரையப்பன்
கடியன்,Kadian - ஸ்வகார்யத்தில் பதற்ற முன்னவன்
3622திருவாய்மொழி || (9-6–உருகுமால் நெஞ்சம்) (ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை)) (இந்தத் திருவாய்மொழி கற்றார்க்குப் பிறவி முடிந்து அதுக்கடியான ஸம்ஸாரமும் நசிக்குமென்று பயனுரைத்துத் தலைகாட்டுகிறார்.) 11
கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னைக்
கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
வடிவு அமை ஆயிரத்து இப்பத்தினால் சன்மம்
முடிவு எய்தி நாசம் கண்டீர்கள் எம் கானலே–9-6-11
கடியன் ஆய் கஞ்சனை பிரான் தன்னை,Kadian aayi kanjanai piraan thannai - விரைந்து கம்ஸனைக் கொன்ற கண்ணபிரான் விஷயமாக
கொடி மதில் தென் குரு கூர் சடகோபன் சொல்,Kodi madil then guru koor sadagopan sol - ஆழ்வாரளிச் செய்த
வடிவுஅமை ஆயிரத்து,Vadivu amai aayirathu - சொற்பொருளழகு பொலிந்த ஆயிரத்தினுள்ளும்
இ பத்தினால்,E paththinaal - இப்பதிகத்தினால்
எம் சன்மம் முடிவு எய்தி,Em sanmam mudivu eedhi - நம்முடைய ஜன்ம பரம்பரைகள் முடிவு பெற்று
கானல்,Kaanal - கானலென்னும்படியான ஸம்ஸாரம்
நாசம் கண்டீர்கள்,Naasam kandeergaal - நாசமடைந்தொழியு மென்பது திண்ணம்.