| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3150 | திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (ஜகத்தடங்கலும் இருள்மூடி நின்றது; ரக்ஷகனென்று பேர் பெற்றிருக்கும் ஸர்வேச்வரனோ வந்து ரக்ஷித்தருள்கின்றிலன்; இனியென்னை ரக்ஷிப்பார் ஆரென்கிறாள்.) 1 | ஊரெல்லாம் துஞ்சி உல கெல்லாம் நள்ளிருளாய் நீரெல்லாம் தேறி ஓர் நீளிரவாய் நீண்டதால் பாரெல்லாம் உண்ட நம் பாம்பணையான் வாரானால் ஆர்?எல்லே! வல் வினையேன் ஆவி காப்பார் இனியே.–5-4-1 | ஊர் எல்லாம் துஞ்சி,Oor ellam thunji - ஊர் முழுவதும் உறங்கிப்போய் உலகு எல்லாம்,Ulagu ellam - உலகம் முழுவதும் கள் இருளாய்,Kal irulaay - காடாந்தகராம்மிக்கு நீண்டது,Neendathu - நெடுகிச் செல்கின்றது; ஆல்,Aal - அந்தோ!, (இந்நிலைமையில்) பார் எல்லாம் உண்ட,Paar ellam unda - பூமி முழுவதையும் (பிரளயகாலத்திலே) வயிற்றிலே வைத்து ரக்ஷித்த நம் பாம்பு அணையான்,Nam paambu anaiyaan - சேஷசாயியான எம்பெருமான் வாரான்,Vaaraan - வந்து முகங்காட்டுகின்றிலம் நீர் எல்லாம் தேதி,Neer ellam thedi - நீர் நிலமெல்லாம் அலையடங்கித் தெளிந்து ஓர் நின் இரவு ஆய்,Oor nin iravu aay - (பகல் கலசாத) ஒரே காளராத்ரியாய் இனி,Ini - இப்படியான பின்பு வல் வினை யேன்,Val vinai yaen - கொடும்பாவியான என்னுடைய ஆவி,Aavi - உயிரை காப்பார்,Kaappaar - ரக்ஷிப்பவர் ஆர்,Aar - யாவர்? எல்லே,Elle - என்னே! |
| 3151 | திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –இத்தசையிலே கிருஷ்ணனும் வந்திலன் –மஹா பாபியான என்னோட்டை சம்பந்தத்தால் நெஞ்சே நீயும் பாங்கு இன்றியே ஒழியா நின்றாய் – என்கிறாள்) 2 | ஆவி காப்பார் இனியார்? ஆழ்கடல் மண் விண் மூடி மா விகாரமாய் ஓர் வல்லிரவாய் நீண்டதால் காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால் பாவியேன் நெஞ்சமே! நீயும் பாங் கல்லையே.–5-4-2 | ஆழ் கடல்,Aazh kadal - ஆழ்ந்த கடலையும் மண்,Man - பூமியையும் விண்,Vin - ஆகாசத்தையும் மூடி,Moodi - மறைத்து (இவ்வளவோடும் நில்லாமல் ஸகலலோகங்களையும் கபளீகரிக்கும்படி) மா வீசாரம் ஆய்,Maa veesaram aay - பெரிய விகாரத்தையுடைந்தாய்கொண்டு வல்,Val - வலிதான ஓர் இரவு ஆய்,Or iravu aay - ஒரே ராத்திரியாய் நீண்டது,Neendadhu - நெடுகிச் செல்லா நின்றது; ஆல்,Aal - அந்தோ! காவி சேர் கண்ணன்,Kaavi seer kannan - நெய்தல் பூப்போன்ற நிறத்தையுடையனான என் கண்ணனும்,En kannanum - எனக்குத் தஞ்சமான கண்ணபிரானும் வாராவி,Vaaraavi - வந்து முகங்காட்டுகின்றிலன் பாவியேன்,Paaviyin - பாவியான என்னுடைய நெஞ்சமே,Nenjame - மனமே! நீயும்,Neeyum - நீ தானும் பாங்கு அல்லை,Paangu allai - அணுகூலமாக இருக்கிறாயில்லை. இனி,Ini - இப்படியான பின்பு ஆவி காப்பார்,Aavi kaappar - பிராணனை ரக்ஷித்துத் தருவார் ஆர்,Aar - யாவர்? (ஒருவருமில்லை.) |
| 3152 | திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (அநிஷ்டங்களைத் தொலைக்க வல்லனான இராமபிரானும் உதவ வருகின்றிலன்; முடியவும் வழி தெரியாமல் திகைக்கின்றேனென்கிறாள்.) 3 | நீயும் பாங்கல்லை காண் நெஞ்சமே! நீளிரவும் ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால் காயும் கடும் சிலை என் காகுத்தன் வாரானால் மாயும் வகை அறியேன் வல் வினையேன் பெண் பிறந்தே.–5-4-3 | நெஞ்சமே,Nenjame - மனமே! நீயும்,Neeyum - (எல்லாக் காரியங்களுக்கும் முதற்கருவியான நீயும் பாங்கு அல்லை காண்,Paangu allai kaan - எனக்கு விதேயமாக இருக்கிறாயில்லை; நின் இரவும்,Ninn iravum - ஏற்கனவே நீண்டு வருகின்ற ராத்திரியும் ஓயும் பொழுது இன்றி,Oyum pozhudhu indri - ஓயுங்காலம் இல்லாமல் ஊழி ஆய்,Uuzhi aay - ஒரு கல்பமாய் கொண்டு நீண்டது,Neendadhu - வளர்ந்து விட்டது; ஆல்,Aal - அந்தோ; காயும்,Kaayum - (விரோதிகளைக்) காய்கின்ற சுடு சிலை,Sudu silai - கடிய சார்ங்கவில்லையுடைய என் காகுத்தன்,En Kaaguthan - இராமபிரான் வாரான்,Vaaraan - வந்து முகம்காட்டுகின்றவன்; வல்வினையேன்,Valvinaiyene - வலிய பாபத்தையுடையேனான நான் பெண் பிறந்து,Pen pirandhu - பெண்ணாய்ப்பிறந்து மாயும் வகை அறியேன்?,Maayum vakai arien - முடியும் வழியை அறிகின்றிலேன். |
| 3153 | திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (சண்டார்க்குப் பொறுக்க வொண்ணாதபடி நான் துன்பப்பட்டாநிற்க, எல்லாருடைய ஆபத்துக்களையும் போக்குவானான திரிவிக்கிரமன் வருகின்றிலன்; என்னுடைய சிந்தை நோய் தீரும் வழி என்னோ! என்கிறாள்.) 4 | பெண் பிறந்தார் எய்தும் பெருந்துயர் காண்கிலேன் என்று ஒண் சுடரோன் வாரா தொளித்தான் இம் மண்ணளந்த கண் பெரிய செவ்வாய் நம் காரேறு வாரானால் எண் பெரிய சிந்தை நோய் தீர்ப்பார் ஆர் என்னையே?–5-4-4 | பெண் பிறந்தார் எய்தும்,Pen piranthaar eydum - பெண்ணாய்ப் பிறந்தவர்கள் அடைகின்ற பெரு துயர் காண்கிலேன் என்று,Peru thuyar kaangilaeen endru - பெருந்துக்கத்தை காணமாட்டேன்’ என்றெண்ணி ஒண் சுடரோன்,On sudaron - ஸூரியன் வாராது ஒளித்தான்,Vaaradhu o̱lithaan - வாராதே மறைந்து போனான் போலும் இ மண் அளந்த,EmanAlandha - இப்பூமியை யளந்து கொண்டவனும் பெரிய கண்,Periya kan - பரந்த திருக்கண்களையுடையவனும் செம்வாய்,Semvai - சிவந்த அதரத்தையுடையவனும் எம் கார் எறு,Em kaar eru - கறுத்த திருமேனியையுடையவனும் காளைபோன்றவனுமான எம்பெருமான் வாரான்,Vaaraan - வந்து முகங்காட்டுகின்றிலன்; ஆல்,Aal - அந்தோ! எண்பெரிய,Enperiya - நினைக்கவும் முடியாத சிந்தை நோய்,Sinthai noy - மனோவியாதியை என்னை,Ennai - என்னிடத்தில் நின்றும் தீட்பார்,Theebar - நீக்கவல்லவர்கள் ஆர்,Aar - யார் சொல்? |
| 3154 | திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -ஆபத்தில் உதவும் அன்னையரும் தோழியரும் ஆராய்கிறிலர்-அவர்கள் உதவாத போது உதவும் கிருஷ்ணனும் வருகிறிலன் -நான் சப்தாவசேஷை யானேன் என்கிறாள்.) 5 | ஆர் என்னை ஆராய்வார்? அன்னையரும் தோழியரும் நீர் என்னே என்னாதே நீளிரவும் துஞ்சுவரால் கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால் பேர் என்னை மாயாதால் வல் வினையேன் பின் நின்றே.–5-4-5 | அன்னையரும்,Annaiyarum - தாய்மாரும் தோழியரும்,Thozhiyarum - தோழிமாரும் நீர் என்னே என்னாதே,Neer enne ennaadhe - ‘இப்படியும் ஒரு நீர்மையுண்டாவதே!’ என்று என் திறத்தில் இரங்காமல் நீள் இரவும்,Neel iravum - நீண்ட இராமுழுவதும் துஞ்சவர்,Thunjavar - உறங்காநிற்பர்கள்; ஆல்,Aal - அந்தோ!; கார் அன்ன,Kaar anna - மேகத்தையொத்த மேனி,Meni - திருமேனியையுடைய நம் கண்ணனும்,Nam kannanum - நமது கண்ணபிரானும் வாரான்,Vaaraan - வந்து முகம்காட்டுகின்றிலன்; வல்வினை யென் பின் நின்று,Valvinai yen pin nindru - பெரும்பாவியான நான் முடிந்த பின்பும் நின்று கொண்டு பேர்,Per - என் பேர் என்னை மாயாது,Ennai maayadhu - என்னை முடிய வொட்டுகிறதில்லை என்னை ஆராய்வார் ஆர்,Ennai araayvaar aar - என்னைப் பற்றி சிந்திப்பார் ஆருமில்லையே! |
| 3155 | திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –விரஹ வியசனம் செல்லா நிற்க ராத்திரியுமாய் ரக்ஷகனான எம்பெருமானும் வாராது ஒழிந்தால் முடிய பெறாது இருக்கிற என்னை ரஷிப்பார் ஆர் -என்கிறாள்) 6 | பின் நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதடுமால் முன் நின்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால் மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால் இந் நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் இவ் விடத்தே?–5-4-6 | பின் நின்ற,Pin nindra - பிடரிபீடித்துள்ளுவதற்காகப் பின் தொடர்ந்து நின்ற காதல் நோய்,Kaadhal noy - ப்ரேம விரோதியானது நெஞ்சம்,Nenjam - (தன்குப்பிறப்பிடமான நெஞ்சை) பெரிது,Peridhu - மிகவும் அடும்,Adum - அழிக்கின்றது ஆல்,Aal - அந்தோ இரா ஊழி,Iraa uuzhi - இரவாகிய கல்பமானது முன் நின்று,Mun nindru - முன்னேயிருந்து கண் புதைய,Kan pudhaiya - கண்தெரியாதபடி முடிந்து,Mudindhu - மறைந்தது ஆல்,Aal - அந்தோ; மண் நின்ற சக்கரத்து,Man nindra chakkarathu - எப்போதும் கை நழுவாது நின்ற திருவாழியாழ்வானையுடைய எம் மாயவனும்,Em maayavanum - எம்பிரானும் வாரான்,Vaaraan - வருகின்றிலன் ஆல்,Aal - ஆதலால் நின்ற நீள் இ ஆவி,Nindra neel i aavi - முடியாதே நின்று நீள்கின்ற இவ்வுயிரை இவ்விடத்து,Ivvidathu - இந்த நிலைமையிலே காப்பார் ஆர்,Kaappar aar - ரக்ஷிப்பார்யார்? |
| 3156 | திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (இப் பேரிருளிலே என்செய்வேனென்று. உறங்காத தெய்வங்களைக் குறித்து முறையிடுகின்றாள்.) 7 | காப்பார் ஆர் இவ்விடத்து? கங்கிருளின் நுண் துளியாய்ச் சேட்பால தூழியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்த் தூப்பால வெண் சங்கு சக்கரத்தன் தோன்றானால் தீப்பால வல்வினையேன் தெய்வங்காள்! என் செய்கேனோ?–5-4-7 | இவ்விடத்து,Ivvidathu - இந்நிலையில் காப்பார் ஆர்,Kaappar aar - ரக்ஷிப்பாரார்? சுங்கு இருளின்,Sungu irulin - நன்றாக சொரிந்த இருளையுடையதாயும் நுண் துளி ஆய்,Nunn thuli aay - நுண்ணிதான பணித்துளியையுடையதாயும் சேண் பாலது,Sen paaladhu - மிக நீண்டிருப்பதான ஊழி ஆய்,Uuzhi aay - சல்பமாய்க்கொண்டு செல்கின்ற,Selginra - செல்லாநிற்கிற கங்குல் வாய்,Kangul vaay - ராத்திரியிடத்து தூ பால,Thoo paal - அழுக்கற்ற ஸ்வபாவத்தையுடையதாய் வெண்,Ven - வெளுத்ததான சங்கு,Sangu - சங்கையும் சக்கரத்தன்,Chakkarathan - சக்கரத்தையுமுடையனானவன் தோன்றான்,Thonaan - தோன்றிக்காட்சி தருகின்றவன் தெய்வத்தாள்,Deyvathaal - தேவதைகளே! நி பால கல் வினையேன்,Ni paal kal vinaiyene - மிகக் கொடியபாவங்களை யுடையேனான நான் என் செய்வேன்?,En seyven - என்ன பண்ணுவேன்? |
| 3157 | திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (தென்றலோ நலிகின்றது. கண்ணனோ வருகின்றிலன் , என் செய்வேனென்று மீண்டும் தெய்வங்களையே நோக்கி முறையிடுகின்றாள்.) 8 | தெய்வங்காள் என் செய்கேன்? ஓர் இரவு ஏழ் ஊழியாய் மெய் வந்து நின்று எனதாவி மெலிவிக்கும் கை வந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால் தை வந்த தண் தென்றல் வெம் சுடரில் தான் அடுமே.–5-4-8 | தெய்வங்காள்,Deyvangal - தெய்வங்களே! ஓர் இரவு,Or iravu - ஒரு இராப்பொழுதானது ஏழ் ஊழி ஆய்,Ezh uuzhi aay - ஏழு சல்பசாலமாய்க்கொண்டு மெய்,Mei - மெய்யே வந்து நின்று,Vandhu nindru - முன்னே வந்து நின்று என்ற ஆவி,Endra aavi - என்னுடைய உயிரை மெலிவிக்கும்,Melivikkum - இளைக்கப்பண்ணா நின்றது; கை வந்த சக்கரத்து,Kai vandha chakkarathu - கையிலே ஸஜ்ஜனாயிருக்கிற் திருவாழி யாழ்களையுடைய என் கண்ணனும்,En kannanum - எனது கண்ணபிரானும் வாரான்,Vaaraan - வருகின்றிலன் தைவந்த,Thaivandha - தடவினால் போலிருக்கின்ற தண் தென்றல்,Than thendral - குளிர்ந்த தென்றலானது வெஞ்சுடரில் அடும்,Vensudaril adum - வெள்ளிய நெருப்பிற் காட்டிலும் அதிகமாகச் சுடாநின்றது. |
| 3158 | திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (இரவோ மிகவும் நலியா நின்றது; ஆதித்தியனும் ஆவிர்ப்பளிக்கின்றிலன்; எம்பெருமானும் வந்து தோன்றுகின்றிலன்; நான் நின்று நோவுபடுமித்தனை போக்கி என் பாதையைப் போக்குவார் ஆருமில்லையே யென்கிறாள்.) 9 | வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண் துளியாய் அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால் செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால் நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே.–5-4-9 | வீங்கி இருளின்,Veengi irulin - மிகச் செறிந்த இருளையுடைத்தாய் நுண் துளி அய்,Nunn thuli ay - நுண்ணிய பனித்துளியை யுடையதாய்க் கொண்டு தான்,Thaan - இராப்பொழுதானது வெம் சுடரில்,Vem sudaril - வெவ்விய நெருப்பிற் காட்டில் சுடும்,Sudum - சுடர்கின்றது ஆல்,Aal - அந்தோ! (இந்த நிலைமையில்) அம் சுடா,Am sudaa - அழகிய ஒளியையுடையனான வெய்யோன்,Veyyon - ஸூரியனுடைய அணி நெடு தேர்,Ani netu ther - அழகிய பெரிய தேரும் தோன்றாது,Thonaadhu - தென்படவில்லை செம் சுடர் தாமரை கண் செல்லனும்,Sem sudar thaamarai kan chellanum - சிவந்த காந்தியையுடைய தாமரை போன்ற திருக்கண்களையும் ஸ்ரீமானும் வாரான்,Vaaraan - வந்து தோன்றவில்லை ஆல்,Aal - ஆதலால் நின்று உருகுகின்றேன்,Nindru uruguginraen - நிரந்தரமாக உருகாநின்றேன். இனி,Ini - இந்நிலைமையில் செஞ்சு இடர்,Senju idar - (எனது) மனத்துயரை தீர்ப்பார் ஆர்,Theerpaar aar - போக்குவாரா? |
| 3159 | திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –இந்த ராத்திரியில் என்னுடைய வியசனத்தை கண்டு வைத்தும் அவன் திறமாக ஒரு வார்த்தை சொல்லாதே இந்த லோகம் உறங்குவதே -என்கிறாள்.) 10 | நின்று ருகுகின்றேனே போல நெடு வானம் சென்றுருகி நுண் துளியாய்ச் செல்கின்ற கங்குல் வாய் அன்றொரு கால் வையம் அளந்த பிரான் வாரான் என்று ஒன்றொரு காற் சொல்லாது உலகோ உறங்குமே.–5-4-10 | நின்று உருகுகின்றேன் போல,Nindru uruguginraen pola - நிரந்தரமாக உருகிக் கிடக்கிற என்னைப்போல நெடுவானம்,Netuvaanam - பரந்த ஆகாசமானது உருகி சென்று,Urugi sendru - உருகிப்போய் (அதனால்) நுண் துளி ஆய்,Nunn thuli aay - நுண்ணிய பனித்துளியாய் செல்கின்ற,Selginra - நடந்து வருகின்ற கல்குல் வாய்,Kalgul vaay - இராப்பொழுதிலே அன்று ஒருகால்,Andru orukaal - முன்பொரு காலத்திலே வையம்,Vaiyam - உலகத்தை அளந்த,Alandhu - அளந்து ஆக்கிரமித்துக் கொண்ட பிரான்,Piran - எம்பிரான் வாரான் என்று,Vaaraan endru - வரமாட்டானென்றாகிலும் ஒன்று,Ondru - ஒரு வார்த்தையை ஒருநாள் சொல்லாது,Orunaal sollaadhu - ஒரு தரமேனும் சொல்லாமல் உலகு,Ulaku - லோகமானது உறங்கும் ஓ,UrangumO - உறங்குகின்றதே! ஐயோ! |
| 3160 | திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -நிகமத்தில் இப்பாசுரம் கேட்டார் இவர் தசையை அனுசந்தித்தார் பிழையார் என்கிறார் -பரமபத சித்தி சொல்லிற்று -முடிந்தால் புகுமிடம் அதுவாகையாலே சொன்னது அத்தனை.) 11 | உறங்குவான் போல் யோகு செய்த பெருமானைச் சிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல் நிறங் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப் பத்தால் இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ?–5-4-11 | உறங்குபவன்போல்,Urangubavan pol - நித்திரை செய்பவன்போல் யோகு செய்து,Yogu seidhu - ரக்ஷனோபாய சிந்தை பண்ணிக் கொண்டிருக்கிற பெருமானை,Perumanaai - எம்பெருமான் விஷயமாக சிறந்த தொழில் சூழ் குருகூர் சடகோபன்,Sirandha thozhil sool kurugoor sadagopan - அழகிய சோலைகளாலே சூழப்பட்ட திருநகரிலிருக்குந் தலைவரான ஆழ்வார் சொல்,Sol - அருளிச் செய்த நிதம் கிளர்ந்த,Nitham kilarndha - பண் விஞ்சின அந்தாதி,Anthaathi - அந்தாதிக் கொடையான ஆயிரத்துள்,Aayiraththul - ஆயிரம் பாசுரங்களும் இப்பத்தால்,Ippathaal - இப்பதிகத்தினால் இறந்துபோய்,Iranthupoy - (அவரவர்கள்) சரீர வியோகம் பெற்றபின்பு வைகுந்தம்,Vaikundham - பரமபதத்தில் சேரா ஆறு,Seraa aaru - புகாதொழிவது எங்களை,Engalai - எவ்வண்ணம்? (புகவே புகுவர்களென்கை.) |