Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: ஒன்றும் தேவும் (11 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3106திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 1
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணி மாடம் நீடு திருக் குருகூரதனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!–4-10-1
தேவும், thevum - தேவர்களும்
உலகும், ulagum - அவர்களுக்கிருப்பிடமான உலகங்களும்
உயிரும், uyirum - மனிதர் முதலிய பிராணிகளும்
மற்றும் யாதும், matrum yaadhum - மற்றுமுள்ள எல்லாமும்
ஒன்றும் இல்லா அன்று, ondrum illa andru - சிறிதுமில்லாத அந்த ஊழிக்காலத்திலே
நான்முகன் தன்னொடு, naanmugan thannodu - பிரமனையும்
தேவர், thevar - தேவதைகளையும்
உலகு, ulagu - உலகங்களையும்
உயிர், uyir - பிராணிகளையும்
படைத்தான், padaithaan - படைத்தவனும்
நின்ற, nindra - சாஸ்த்ரங்களில் நிலைத்திருப்பவனுமான
ஆதி பிரான், aadhi piraan - ஆதிநாதனென்றும் எம்பெருமான்
குன்றம் போல் மணிமாடம் நீடு, kunram pol manimaadam needu - மலைபோன்ற திருமாளிகைகள் உயர்ந்திருக்கப்பெற்ற
திருகுருகூர் அதனுள், thirugurukoor adhanul - திருநகரியிலே
நிற்க, nirka - காட்சிதந்து கொண்டிருக்கும் போது
மற்றைதெய்வம், matraidheivam - வேறுதெய்வங்களை
நாடுதிர் ஏ, naaduthir ae - தேடியோடுகின்றீர்களே.
3107திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 2
நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்
வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில்,
மாட மாளிகை சூழ்ந் தழகாய திருக் குருகூர தனைப்
பாடி ஆடிப் பரவச் சென்மின்கள், பல்லுலகீர்!பரந்தே.–4-10-2
பல் உலகீர், pal ulageer - பலவகைப்பட்ட உலகர்களே!
நீர், neer - நீங்கள்
நாடி, naadi - தேடி
வணங்கும், vanangum - வணங்கும்படியாகவுள்ள
உம்மையும், ummaiyum - உங்களையும்
முன் படைத்தான், mun padaithaan - முன்னம் படைத்தவனும்
வீடு இல் சீர், veedu il seer - நித்யஸித்தங்களான திருக்குணங்களிலுண்டான
புகழ், pugazh - புகழையுடையனுமான
ஆதி பிரான் அவன் மேவி உறைகோயில், aadhi piraan avan mevi uraikoyil - ஆதிநாதன் விரும்பி யெழுந்தருளியிருக்குமிடமான
மாடம் மாளிகை சூழ்ந்து அழகு ஆய திரு குருகூர் அதனை, maadam maaligai soozhndhu azhagu aaya thiru kurukoor adhanai - மாடமாளிகைகளால் சூழப்பட்டு அழகு வாய்ந்த திருநகரியை
பாடி ஆடி, paadi aadi - பாடுதலும் ஆடுதலும் செய்து கொண்டு
பரவி, paravi - துதித்து
பரந்து செல்மின்கள், parandhu selminkal - எல்லாவிடத்திலும் பரவி நடவுங்கள்.
3108திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 3
பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கிக்
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளிய கில்லீர்
சிரங்களால் அமரர் வணங்கும் திருக்குருகூர் அதனுள்
பரன் திறமன்றிப் பல்லுலகீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே.–4-10-3
பரந்த, parandha - விஸ்தீர்ணமான
தெய்வமும், dheivamum - தேவதாவர்க்கங்களையும்
பல் உலகம், pal ulagam - (அவர்களுக்குப்) பல உலகங்களையும்
படைத்து, padaithu - ஸ்ருஷ்டித்தும்
அன்று, andru - பிரளயம் வந்த காலத்திலே எல்லாவற்றையும் ஒரு சேர விழுங்கி
கரந்து, karandhu - உள்ளே யொளித்து வைத்தும்
உமிழ்ந்து, umizhndhu - பிறகு வெளிப்படுத்தியும்
கடந்து, kadanthu - (மஹாபலிடத்தில் தானம் பெற்று) அளந்து கொண்டும்
இடந்தது, idandhadhu - (மஹாவராஹமாய்) இடந்தெடுத்தும் ஆக இப்படிச்செய்த காரியங்களை
கண்டும், kandum - பிரமாணங்களாலே கண்டறிந்து வைத்தும்
தெளிய கில்லீர், theliya killeer - தெளியமாட்டாத
பல் உலகீர், pal ulageer - பலவகைபட்ட உலகத்தவர்களே!
அமரர், amarar - தேவர்கள்
சிரங்களால் வணங்கும், sirangalaal vanangum - தலையால் வணங்கப் பெற்ற
திருகுருகூர் அதனுள், thiru kurukoor adhanul - திருநகரியில் எழுந்தருளியிருக்கிற
பரன், paran - பரம புருஷனுக்கு
திறம் அன்றி, thiram andri - பிரகாரமாயல்லது
மற்று, matru - வேறு ஸ்வதந்திரமாயிருப்பதொரு
தெய்வம் இல்லை, dheivam illai - தேவதை கிடையாது
பேசுமின், pesumin - அப்படிப்பட்ட தேவதையொன்று உண்டாகில் சொல்லுங்கள்.
3109திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 4
பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே கபால நன் மோக்கத்துக் கண்டு கொண்மின்
தேச மாமதிள் சூழ்ந்து அழகாய திருக்குருகூர் அதனுள்
ஈசன் பால் ஓர் அவம் பறைதல் என்னாவது இலிங்கியர்க்கே?–4-10-4
பேசநின்ற, pesanindra - உங்களால் பரதெய்வமாகப் பேசப்படுகின்ற
சிவனுக்கும், sivanukkum - ருத்ரனுக்கும்
பிரமன் தனக்கும், Biraman thanakkum - (அவனது தந்தையான) பிரமனுக்கும்
பிறர்க்கும், pirarkkum - மற்றுமுள்ள தேவதைகளுக்கும்
நாயகன் அவனே, naayagan avane - தலைவன் ஸ்ரீமந்நாராயணனே என்னுமிடத்தை
கபாலம் நல் மோக்கக்து, kabalam nal mokkakthu - கபாலமோக்ஷக்கதையினால்
கண்டுகொண்மின், kandu konmin - தெரிந்துகொள்ளுங்கள்
தேசம், dhesam - தேஜஸ்ஸுபொருந்திய
மா, maa - சிறந்த
மதிள் சூழ்ந்து, madhil soozhndhu - மதில்களால் சூழப்பட்டு
அழகு ஆய, azhagu aaya - அழகு பெற்றதான
திரு குருகூர் அதனுள், thiru kurukoor adhanul - திருநகரியில் எழுந்தருளியிருக்கிற
ஈசன் பால், eesan paal - ஸர்வேச்வரன் விஷயத்திலே
ஓர் அவம் பறைதல், or avam paraidhal - தப்பான பேச்சுக்களைப் பேசுவது
இலிங்கியர்க்கு, ilingiyarkku - லிங்கப்பிரமாண வாதிகளுக்கு
என் ஆவது, en aavathu - என்னபலனைத்தரும்!
3110திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 5
இலிங்கத் திட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்து வாது செய்வீர்களும் மற்று நும் தெய்வமுமாகி நின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக் குருகூர் அதனுள்
பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே.–4-10-5
இலிங்கத்து இட்ட புராணத்தீரும், ilingathu itta puranatheerum - லிங்கமாஹாத்மிய விஷயமாகக் கல்பிக்கப்பட்ட புராணத்தைப் பற்றினவர்களாயும்
சமணரும், samanarum - ஜைநர்களாயும்
சாக்கியரும், saakiyarum - பௌநர்களாயும்
வலிந்து வாது, valindhu vaadhu - விதண்டாவாதம் செய்பவர்களாயுமிருக்கிற நீங்களாகவும்
மற்றும் நும் தெய்வமும் ஆகிநின்றான், matrum num dheivamum aaginindraan - தேவதாந்தரங்களாகவும் (இப்படி ஸர்வசரீரகனான)
பொலிந்து நின்ற பிரான், polindhu nindra piran - பொலிந்து நின்ற பிரானென்கிற எம்பெருமானை,
செந்நெல், sennel - செந்நெற்பயிர்களானவை
மலிந்து, malindhu - ஸம்ருத்திபெற்று
கவிரி வீசும், kaviri veesum - சாமரை வீசப்பெற்ற
திரு குருகூர் அதனுள், thiru kurukoor adhanul - திருநகரியிலே
கண்டீர், kandeer - ஸேவியுங்கோள்
ஒன்றும், ondrum - எள்ளளவும்
பொய் இல்லை, poi illai - அஸத்யமில்லை,
போற்றுமின், potrumin - துதியுங்கோள்
3111திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 6
போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு, உம்மை இன்னே
தேற்றி வைத்தது, எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே;
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குருகூர் அதனுள்
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்தறிந்து ஓடுமினே.–4-10-6
மற்று ஓர் தெய்வம், matru or dheivam - வேறோரு தேவதையை
போற்றி பேண, potri pena - துதிக்கு ஆதரிக்கும்படியாக
புறத்து இட்டு, purathu ittu - வேறுபடுத்தி
உம்மை, ummai - உங்களை
இன்னே, inne - இப்போதுநீங்களிருக்கிற விதமாக
தேற்றி வைத்தது, thettri vaithadhu - தேவதாந்தரங்களை நம்பும்படியாக (எம்பெருமான்) செய்து வைத்ததானது
எல்லீரும், elleerum - எல்லாரும் (எதற்காகவென்றால்)
வீடு பெற்றால், veedu petraal - முக்தியுடைந்தால்
உலகு இல்லை என்றே, ulagu illai endrae - புண்யபாண விஷயமான சாஸ்த்ர மரியாதை குலைந்துபோகுமென்கிற காரணத்தாலேயாகும்;
சேற்றில், setril - சேற்றுநிலத்தில்
செந்நெல், sennel - செந்நெற்பயிர்களும்
கமலம், kamalam - தாமரையும்
ஓங்கி, oongi - ஓங்கி வளரப்பெற்ற
திரு குருகூர் அதனுள், thiru kurukoor adhanul - திருநகரியிலே எழுந்தருளியிருக்கின்ற
ஆற்றல் வல்லவன், aatral vallavan - பரமசக்தியுக்தனான பெருமானுடைய
மாயம் கண்டீர், maayam kandeer - மாயையேயாமத்தனை;
அது, Adhu - மாயையென்பதை
அறிந்து, arindhu - தெரிந்துகொண்டு
அறிந்து, arindhu - அது தப்பும் வழி அவன் திருவடிகளைப்பற்றுவதே’ என்றும் தெரிந்துகொண்டு
ஓடுமின, oodumin - திருவடியே சென்று சேரப் பாருங்கள்.
3112திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 7
ஓடி ஓடிப் பல பிறப்பும் பிறந்து, மற்றோர் தெய்வம்
பாடி ஆடிப் பணிந்து பல்படி கால் வழி ஏறிக் கண்டீர்;
கூடி வானவர் ஏத்த நின்ற திருக் குருகூரதனுள்
ஆடு புட்கொடி ஆதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே.–4-10-7
ஓடி ஓடி, oodi oodi - ஸம்ஸார சக்ரத்தில் ஓடியோடி
பலபிறப்பும் பிறந்து, palapirappum pirandhu - பலபல யோனிகளிலே பிறந்து
பல் படி கால், pal padi kaal - வம்ச பரம்பரையாக
மற்று ஓர் தெய்வம் வழி ஏறி, mattru or dheivam vazhi eri - தேவதாந்தரங்களை அந்தந்த நூல்களிலே சொல்லியிருக்கிறபடி
பாடி ஆடி பணிந்து, paadi aadi panindhu - பலபடியாக வழிபட்டு
கண்டீர், kandeer - பலன் கைபுகுந்தமை கண்டீர்களே;
வானவர், vaanavar - தேவர்கள்
கூடி, koodi - திரண்டு
ஏத்த நின்ற, eatha nindra - துதிக்கும்படி நின்ற
திரு குருகூர் அதனுள், thiru kurukoor adhanul - திருநகரியிலே எழுந்தருளியிருக்கின்ற
ஆடு புள்கொடி ஆதி மூர்த்திக்கு, aadu pulkodi aadhi moorthikku - ஆடுங்கருளக்கொடியுடைய ஆதிநாதப் பெருமாளுக்கு
அடிமை புகுவது, adimai puguvadhu - அடியராயிருந்த தகுதி
3113திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 8
புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை
நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே;
கொக்கு அலர்தடம் தாழை வேலித் திருக்குருகூர் அதனுள்
மிக்க ஆதிப்பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் விளம்புதிரே!–4-10-8
அடிமையினால், adimaiyinaal - அடிமைசெய்து
புக்கு, pukku - உள்புகுந்து
தன்னை கண்ட, thannai kanda - தன்னைக்காணப்பெற்ற
மார்க்கண்டேயனவனை, markkandeyanavannai - மார்க்கண்டேயனென்று ப்ரஸித்த னானவனை
அன்று, andru - அக்காலத்தில்
நக்கபிரான், nakkapiraan - திகம்பரச்சாமியான ருத்ரன்
உய்யக்கொண்டதும், uyyakkondadhum - ரகூஷித்ததும்
நாராயணன் அருளே, naarayanan arule - நாராயணனுடைய வெண்ணிறமாக அலர்கின்ற
தட தாழை, thada thaazhai - பெரியதாழைகளை
வேலி, veli - வேலியாகவுடைய
திருகுருகூர் அதனுள், thirukurukoor adhanul - திருநகரியிலே
மிக்க, mikka - மேம்பாடுடைய
ஆதி பிரான் நிற்க, aadhi piraan nirka - ஆதிநாதப்பெருமாளிருக்க
மற்ற எ தெய்வம், matra e dheivam - வேறு எந்த தேவதைகளை
விளம்புதிர், vilambuthir - பேசுகிறீர்கள்?
3114திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 9
விளம்பும் ஆறு சமயமும்,அவை ஆகியும் மற்றும் தன்பால்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப்பிரான் அமரும்
வளங் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய திருக் குருகூரதனை
உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உயக்கொண்டு போகுறிலே.–4-10-9
விளம்பும், vilambum - கண்டபடி சொல்லுவது தவிரப் பொருட்பொருத்தம் சிறிதுமில்லாதவைகளான
ஆறு சமயமும், aaru samayamum - ஆறுவகைப்பட்ட பாஹ்ய மதங்களும்
அவை ஆகிய, avai aagiya - அந்த பாஹ்யமதங்கட்குப் பரியாயமான
மற்றும், matrum - குத்ருஷ்டி மதங்களும்
தன் பால், than paal - தன் விஷயத்திலே
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய, alandhu kaandaṟku ariyan aagiya - எல்லை காணவொண்ணாதனாயிருக்கிற
ஆதி பிரான், aadhi piraan - ஸகலஜகத காரணபூதனான ஸர்வேச்வரன்
அழகும், azhagum - நித்யவாஸம் பண்ணுமிடமாய்
வளம் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய, valam kol than panai soozhnthu azhagu aaya - வளம் மிக்க குளிர்ந்த நீர் நிலங்களாலே சூழப்பட்டு அழகியதான
திருகுருகூர் அதனை, thirukurukoor adhanai - திருநகரியை
உம்மை, ummai - உங்களை
உய்யக் கொண்டு போகுறில், uyya kondu pokuril - உஜ்ஜிவிப்பித்துக்கொண்டு நடக்க வேண்டியிருந்தீர்களாகில்
உளம் கொள் ஞானத்து, uḷam kol nyaanathu - அந்தரங்க ஞானத்துக்குள்ளே
வைம்மின், vaimmin - வைத்துச் சிந்தனை செய்யுங்கள்.
3115திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 10
உறுவது ஆவது எத்தேவும் எவ் வுலகங்களும் மற்றும் தன்பால்
மறுவின் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே
செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு திருக் குருகூரதனுள்
குறிய மாண் உருவாகிய நீள் குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே.–4-10-10
எத்தேவும், Ethevum - எல்லாத் தேவதைகளும்
எ உலகங்களும், E ulagangalum - எல்லாவுலகங்களும்
மற்றும், Matrum - மற்றுமுண்டான சேதநர தேசனங்களுமாகிய
இத்தனையும், Ithanaiyum - இவையடங்கலும்
தன் பால், Than paal - தன்னுடையதான
மறு இல் மூர்த்தியோடு ஒத்து, maru il Moorthiyodu othu - நிஷ்கலங்கமான அஸாதாரண விக்ரஹம்போன்று (ஸகல விதத்தாலும் விதேயங்களாகியென்றபடி)
நின்ற வண்ணம் நிற்க, Nindra vannam nirka - குறையற நிற்குமிருப்பிலே
செறுவில், Seruvil - விளை நிலங்களில்
செந்நெல், Sennel - செந்நெற்பயிர்களும்
கரும்பொடு, Karumpodu - கருப்பஞ்சோலைகளும்
ஓங்கு, Oongu - வளரும்படியான
திருகுருகூர் அதனுள், Thirukurukoor adhanul - திருநகரியிலே
குறிய மாண் உரு ஆகிய, Kuriya maan uru aagiya - வாமநப்ரஹ்மசாரி வேஷமெடுத்தவனும்
நீள் குடக் கூத்தனுக்கு, Neel kuda koothanukku - (க்ருஷடணனாய்ப்) பெரிய குடக் கூத்தாடினவனுமான பெருமானுக்கு
ஆள் செய்வதே உறுவதாவது, Aal seivadhe uruvathavadhu - அடிமை செய்வதே உற்றதாம்
3116திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 11
ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,
நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மா நகர் மற்றது கையதுவே.–4-10-11
ஆள் செய்து, Aal seidhu - (உபதேச முகத்தாலே ஸம்ஸாரிகளைத் திருத்திப்பணிகொள்ளுகையாகிற) கைங்கரியத்தைப் பண்ணி
ஆழி பிரானை சேர்ந்தவன், Aazhi piraanai serndhavan - ஆழியங்கையனான பெருமானை அடைந்தவரும்
வண் குருகூர் நகரான், Van Kurukoor nagaraan - திருநகரிக்குத் தலைவரும்
நாள் கமழ் மகிழ் மாலை மார்பினன், Naal kamazh magizh maalai maarbinan - பரிமளம் மாறாதமாலையைத் திருமார்பிலே அணிந்தவருமான
மாறன் சடகோபன், Maaran Sadagopan - ஆழ்வார்
வேட்கையால், Vetkaiyaal - ஆதரத்தோடு
சொன்ன பாடல் ஆயிரத்துள், Sonna paadal aayirathul - ஆயிரம்பாட்டினுள்ளே
இ பத்தும், I pathum - இப்பதிகத்தை
வல்லார், Vallar - ஓதவல்லவர்களுக்கு
மீட்சி இன்றி, Meetchi indri - மீண்டும் திரும்பிதலில்லாத
வைகுந்தம் மாநகர் மற்றது, Vaigundham maanagar mattrathu - ஸ்ரீ வைகுண்டமஹாநகரமாகிய அவ்விடம்
கையது, Kaiyadhu - கரஸ்தம்.