Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: கிளரொளி (11 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2886திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(ஸ்ரீ பன்னீராயிரப்படி –திருமலையில் காட்டிலும் அத்தோடு சேர்ந்த திருப்பதியை அனுபவிக்கையே பரம பிரயோஜனம் -என்கிறார்) 1
கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்
வளர் இளம் பொழில் சூழ் மாலிரும் சோலை
தளர்விலராகில் சார்வது சதிரே –2-10-1
kilar oli,கிளர் ஒளி - மேன்மேலுங் கொழுந்து விட்டுக் கிளர்கின்ற ஞானவொளியையுடைய
ilamai,இளமை - இளம்பிராயம்
ketuvatan munnam,கெடுவதன் முன்னம் - அழிவதற்குள்ளே
valar oli,வளர் ஒளி - குன்றாத தேஜஸ்ஸையுடையனான
mayon,மாயோன் - எம்பெருமான்
maruviya,மருவிய - நித்யஸந்நதானம் பண்ணியிருக்கிற
kovil,கோவில் - ஆலயமாய்
valar ilapolil cul,வளர் இளபொழில் சூழ் - வளர்கின்ற இளஞ்சோலைகளால் சூழப்பட்டதான
maliruncolai,மாலிருஞ்சோலை - திருமாலிருஞ்சோலை மலையை
talarvu ilar aki,தளர்வு இலர் ஆகி - தளர்ச்சி யில்லாதவராகி
carvate,சார்வதே - அடைவதுதான்
catir,சதிர் - ஸ்பரூபாநரூபம்
2887திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -திருமலை தான் வேணுமோ -அத்தோடு சேர்ந்த திருப்பதியை பரம பிரயோஜனம் என்கிறார்) 2
சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது
அதிர்குரல் சங்கத்து அழகர் தம் கோயில்
மதி தவழ் குடுமி மாலிரும் சோலை
பதியது வேத்தி எழுவது பயனே –2-10-2
catir,சதிர் - அழகு பொருந்திய
ila matavar,இள மடவார் - இளம் பருவத்துப்பெண்களிடத்து
talcciyai,தாழ்ச்சியை - ஆழய்காற்படுவதை
matiyatu,மதியாது - ஒரு பொருளாக நினையாமல்
atirkural cankattu,அதிர்குரல் சங்கத்து - முழங்குகின்ற ஓகையையுடைய சங்கு ஒலிக்கப்பெற்ற
alakar tam koyil,அழகர் தம் கோயில் - அழகருடைய ஆலயமாய்
mati taval kutumi,மதி தவழ் குடுமி - சந்திரன் உலாவப்பெற்ற சிகரத்தை யுடைத்தான
maliruncolai;,மாலிருஞ்சோலை; - மாலிருஞ் சோலையாகிற
pati atu,பதி அது - அந்தத் திருப்பதியை
etti,ஏத்தி - துதித்து
eluvate,எழுவதே - உய்வதே
payan,பயன் - புருஷார்த்தம்
2888திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(திருமலையைத் தொழவேணுமென்பதுகூட அவசியமன்று,திருமலையோடு ஸம்பந்தமுள்ள (அதன் அருகிலுள்ள) ஒரு மலையைத் தொழுதாலும் போதும், என்கிறது இப்பாட்டு.) 3
பயனல்ல செய்து பயனில்லை நெஞ்சே
புயல் மழை வண்ணர் புரிந்துறை கோயில்
மயல் மிகு பொழில் சூழ் மாலிரும் சோலை
அயன்மலை யடைவது அது கருமமே –2-10-3
nence,நெஞ்சே - மனமே!,
puyal malai vannar,புயல் மழை வண்ணர் - வர்ஷாகாலத்து மேகம் போன்ற திருநிறத்தையுடைய பெருமான்
purintu,புரிந்து - விரும்பி
urai,உறை - நித்யவாஸம் செய்கிற
koyil,கோயில் - ஸந்நிதியாய்,
mayalmiku polil cul,மயல்மிகு பொழில் சூழ் - (கண்டவர்களை) மயக்குகிற சக்திமிகுந்த சோலைகளால் சூழப்பட்ட
malirun colai,மாலிருஞ் சோலை - திருமாலிருஞ் சோலையினுடைய
ayal,அயல் - அருகிலுள்ள
malai,மலை - மலையை
ataivatu atu,அடைவது அது - அடைவதும் கருமமே ஸ்ரீஉத்தேச்யந்தான்
payan alla ceytu,பயன் அல்ல செய்து - நிஷ்பலமான காரியங்களைச் செய்வதனால்
payan illai,பயன் இல்லை - லாபமில்லை
2889திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி-கர்ம பந்தத்தைப் போக்கி ஆஸ்ரிதர் ஆனவர்கள் அடிமை செய்து வாழ்கைக்கு ஈடாம் படி சர்வேஸ்வரன் வர்த்தித்து அருளுகிற திரு மலையை ஆஸ்ரயிக்கையே சத்ருசமான படி என்கிறார்) 4
கரும வன்பாசம் கழித்து உழன்று உய்யவே
பெருமலை எடுத்தான் பீடுறை கோயில்
வருமழை தவழும் மாலிரும் சோலை
திருமலை யதுவே யடைவது திறமே –2-10-4
karumam,கருமம்‌ - கருமங்களாகிற
van pacam,வன்‌ பாசம்‌ - வலிய பாசங்களை
kalittu,கழித்து - கழற்றி
ulaniru,உழனீறு - அடிமை செய்து திரிந்து
uyyave,உய்யவே - உஜ்ஜீவிக்கும்‌ பொருட்டே
peru malai etuttan,பெரு மலை எடுத்தான்‌ - கோவர்த்தன உத்தாரணம்‌ செய்தருளியவனான எம்பெருமான்‌
pitu urai,பீடு உறை - தனது பெருமையெல்லாம்விளங்க நித்யவாஸம்‌ பண்ணுமிடமான
koyil,கோயில்‌ - ஸந்நிதியாய்‌
varu malai tavalum,வரு மழை தவழும்‌ - மழை பெய்ய வருகிற மேகங்கள்‌ தவழ்கின்ற
maliruncolai,மாலிருஞ்சோலை - மாலிருஞ்சோலை
tirumalai atuve,திருமலை அதுவே - எம்பெருமான்‌ ஸந்நிதி பண்ணியிருக்கிற திருமலையை
ataivatu,அடைவது - சேர்வது
tiram,திறம்‌ - உசிதம்‌
2890திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி-திருமலைக்கு புறம்பான மலையை பிராபிக்கையே நல் விரகு என்கிறார்) 5
திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது
அற முயலாழிப் படையவன் கோயில்
மறுவில் வண் சுணை சூழ் மாலிரும்சோலை
புறமலை சாரப் போவது கிறியே –2-10-5
tiram utai,திறம் உடை - பலவகைப்பட்ட
valattal,வலத்தால் - வலிமையைக் கொண்டு
tivinai,தீவினை - பாவங்களை
perukkatu,பெருக்காது - மிகையாகச் செய்யாமல்
aram muyal ali pataiyavan koyil,அறம் முயல் ஆழி படையவன் கோயில் - ஆச்ரித ரக்ஷண தருமத்திலே முயல்கின்ற திருவாழியை ஆயுதமாகவுடைய பெருமானது கோயிலாய்.
maru il,மறு இல் - அழுக்கற்ற
van cuaina cul,வண் சுஐன சூழ் - வளமான களைகளால் சூழப்பட்ட
maliruncolai,மாலிருஞ்சோலை - திருமாலிருஞ் சோலையினுடைய
puram malai,புறம் மலை - பக்கத்திலுள்ள தொருமலையை
cara,சார - கிட்டுமாறு
povatu,போவது - போவதானது
kiri,கிறி - நல்ல உபாயம்.
2891திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(திருமலைக்குப் போகிற மார்க்கமுண்டே, அதனைச் சிந்திப்பது தானும் போது மென்கிறார்.) 6
கிறியென நினைமின் கீழ்மை செய்யாதே
உறியமர் வெண்ணெய் யுண்டவன் கோயில்
மறியோடு பிணை சேர் மாலிரும் சோலை
நெறி படவதுவே நினைவது நலமே –2-10-6
kilmai ceyyate,கீழ்மை செய்யாதே - இழிவான செயல்களைச் செய்யாமல்
kiri ena,கிறி என - (இப்போது நான் சொல்லுகிறதை) நல்ல வுபாயமென்று நினையுங்கோள்
uri amar,உறி அமர் - உறிகளிலே அமைத்துவைத்த வெண்ணெயை
untavan,உண்டவன் - அமுது செய்த கண்ணபிரானுடைய
koyil,கோயில் - ஆலயமாய்
mariyotu pinaicer,மறியோடு பிணைசேர் - தம் குட்டிகளோடுகூட மான்பேடைகள் சேர்ந்து வாழப்பெற்ற
maliruncolai,மாலிருஞ்சோலை - திருமலையினுடைய
neri,நெறி - வழியிலே
pata,பட - செல்லவேணுமென்கிற
atuve,அதுவே - அந்த நினைவு ஒன்றையே
ninaivatu,நினைவது - நினைப்பது
nalam,நலம் - நல்லது.
2892திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(ஸ்ரீ ஆறாயிரப்படி- இதுவே ப்ராப்யம் என்று நினையுங்கள் -வேறு ஒன்றை ப்ராப்யமாக நினையாதே – நிலமுன மிடந்தான் என்றைக்கும் தனக்கு கோயிலாகக் கொண்ட பரம புருஷ நிர்மல ஞான ஜனகமான திருமலையை அநந்ய ப்ரயோஜனராய்க் கொண்டு வலம் செய்து மருவுங்கள்-இதுவே பரம ப்ராப்யம் -என்கிறார்) 7
நலமென நினைமின் நரகழுந்தாதே
நிலமுன மிடந்தான் நீடுறை கோயில்
மலமறு மதி சேர் மாலிரும் சோலை
வலமுறை எய்தி மருவுதல் வலமே –2-10-7
narakaluntate,நரகழுந்தாதே - நரகத்தில் அழுந்த நினையாமல்
nalam enaninaimin,நலம் எனநினைமின் - (இவ்வுபதேசத்தை) நன்மை யென்று நெஞ்சிற் கொள்ளுங்கள்; (அதாவது)
munam,முனம் - முற்காலத்தில்
nilam,நிலம் - பூமியை
itantan,இடந்தான் - வராஹ ரூபியாகி இடந்தெடுத்துவந்த பெருமான்
koyil,கோயில் - நித்யவாஸம் பண்ணுகிற
ஸந்நிதியாய்,

malam aru mati cer,மலம் அறு மதி சேர் - களங்கமற்ற சந்திரன்
சேருமிடமான

malirun colai,மாலிருஞ் சோலை - திருமலையை
valam murai
eyti, வலம் முறை எய்தி
- அநுகூலமானமுறையிலே கிட்டி
maruvutale,மருவுதலே - பொருந்துவதே
valam,வலம் - உறுதியானது
2893திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –திருமலையைச் சென்று நிரந்தரமாக வலம் செய்கையே வழக்கு என்கிறார்) 8
வலம் செய்து வைகல் வலம் கழியாதே
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில்
வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே –2-10-8
valam ceytu,வலம் செய்து - (சரணங்களுக்கு) வலிமை யுண்டாக்கிக் கொண்டு எப்போதும்
vaikal,வைகல் - எப்போதும்
valam kaliya,வலம் கழியா - அந்த வலிமையை வீணாகப் பாழ்படுத்தாமல்
valam ceyyum,வலம் செய்யும் - (நமக்கு) நன்மையையே செய்தருளாநின்ற
ayan,ஆயன் - கோபால கிருஷ்ணனான
mayavan,மாயவன் - மாயவனுடைய
koyil,கோயில் - கோயிலாகி
vanor valam ceyyum,வானோர் வலம் செய்யும் - நித்ய ஸூரிகளும் வந்து பிரதக்ஷிணம் செய்யுமிடமான
maliruncolai,மாலிருஞ்சோலை - திருமலை விஷயத்தில்
valam ceytu,வலம் செய்து - பிரதக்ஷிணம் முதலிய அநுகூல வ்ருத்திகளைச்செய்து
nalum,நாளும் - நாடோறும்
maruvutal,மருவுதல் - பொருந்தியிருப்பது
valakku,வழக்கு - யுக்தம்
2894திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(திருமலையைத் தொழவேணுமென்கிற திண்ணிய அத்யவஸாயங் கொள்ளு மத்தனையே போதுமென்கிறார்.) 9
வழக்கென நினைமின் வல்வினை மூழ்காது
அழக்கொடி யட்டான் அமர் பெரும் கோயில்
மழக் களிற்றினம் சேர் மாலிரும் சோலை
தொழக் கருதுவதே துணிவது சூதே –2-10-9
val vinai,வல் வினை - கொடிய பாவங்களிலே
mulkatu,மூழ்காது - அழுந்தாமல்
valakkena ninaimin,வழக்கென நினைமின் - (இவ்வுபதேசத்தை) நியாயமென்று கொள்ளுங்கள்;
alam koti,அழம் கொடி - பேய்ச்சியாகிற
pennai,பெண்ணை - பூதனையை
attan,அட்டான் - முடித்தருளின பெருமான்
amar,அமர் - எழுந்தருளியிருக்கிற
peru koyil,பெரு கோயில் - பெரிய ஸந்நிதியாய்
mala kaliru inam cer,மழ களிறு இனம் சேர் - இளமைதங்கிய யானைக் கூட்டங்கள் சேருகிற
maliruncolai,மாலிருஞ்சோலை - திருமலையை
tola karutuvatu,தொழ கருதுவது - வணங்க வேணுமென்று எண்ணுவதில்
tunivate,துணிவதே - திடமான அத்யவஸாயங் கொள்வதே
cutu,சூது - சிறந்த வுபாயம்
2895திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –பல படிகளாலும் திருமலையே பரம ப்ராப்யம் என்று உபக்ரமித்த படியே உபசம்ஹரிக்கிறார்) 10
சூதென்று களவும் சூதும் செய்யாதே
வேத முன் விரித்தான் விரும்பிய கோயில்
மாதுறு மயில் சேர் மாலிரும் சோலை
போதவிழ் மலையே புகுவது பொருளே –2-10-10
cutu enru,சூது என்று - உபாயமென்றெண்ணி
kalavum,களவும் - களவையும்
cutum,சூதும் - சூதையும்
ceyyate,செய்யாதே - செய்ய நினைக்காமல்
mun,முன் - முற்காலத்தில்
vetam,வேதம் - வேதங்களை
virittan,விரித்தான் - (கீதை முதலியவற்றால்) விவரித்தருளின பெருமான்
virumpiyakovil,விரும்பியகோவில் - விரும்பி யெழுந்தருளி யிருக்குமிடமான கோயிலாய்
matu uru mayil cer,மாது உறு மயில் சேர் - பேடையோடு கூடின ஆண் மயில்கள் சேர்ந்து வாழப்பெற்ற
maliruncolai,மாலிருஞ்சோலை - மாலிருஞ்சோலை யென்கிற
potu avil malai,போது அவிழ் மலை - புஷ்பங்கள் விகஸிக்கிற திருமலையில்
pukuvate,புகுவதே - சென்று சேர்வதே
porul,பொருள் - புருஷார்த்தம்
2896திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி - நிகமத்தில் இது திருவாய் மொழி கற்றாரை திரு வாய் மொழி தானே ஜென்மத்தை முடித்து அழகர் திருவடிகளில் சேர்க்கும் என்கிறார் ) 11
பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே –2-10-11
porul enru,பொருள் என்று - (ஒருநாளாகிலும்) பிரயோஜனப்படுமென்று
i ulakam,இ உலகம் - இவ்வுலகங்களை
pataittavan,படைத்தவன் - ஸ்ருஷ்டித்த பெருமானுடைய
pukal mel,புகழ் மேல் - திருக்கல்யாண குணங்களில்
marul il,மருள் இல் - அஜ்ஞான மில்லாத
van kurukur van catakopan,வண் குருகூர் வண் சடகோபன் - வண் குருகூர் வண் சடகோபன்
terul kolla,தெருள் கொள்ள - (சேதநர்க்குத்) தெளிந்த ஞானமுண்டாகுமாறு
conna,சொன்ன - அருளிச் செய்த
or ayirattul,ஓர் ஆயிரத்துள் - ஆயிரம் பாசுரங்களுள்
ippattu,இப்பத்து - இப்பதிகம்
mutittu,முடித்து - ஸம்ஸார பந்தத்தைப் போக்கி
arul utaiyavan tal,அருள் உடையவன் தாள் - பரமதயாளுவான எம்பெருமானது திருவடிகளில்
anaivikkum,அணைவிக்கும் - சேர்விக்கும்