Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: கெடுமிடராய (11 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3678திருவாய்மொழி || (10-2–கெடுமிடராய) (திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொண்டு செய்யலாம் என்று கூறுதல்) (ப்ராப்யமான திருவனந்தபுரத்திலே சென்று சேருகைக்கு இடையூறுகள் பல உண்டே; அவையெல்லாம் திருநாமஸங்கீர்த்தனம் பண்ணின வளவிலேயே தொலையும்; அங்கே புக வாருங்கோள் என்று அநுகூலரையழைக்கிறார்.) 1
கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும்
கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்
விடமுடை யரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்த புரநகர் புகுதும் இன்றே–10-2-1
கேசவா என்ன இடர் ஆய எல்லாம் கெடும்,Kesavaa enna idar aaya ellam kedum - கேசவ நாமத்தைச் சொன்ன வளவில் துன்பமானவை எல்லாம் தொலைந்துபோம்
விடம் உடை அரவில் பள்ளி விரும்பினான்,Vidam udai aravil pallli virumbinaan - நச்சரவினனை மேல் விரும்பிப் பள்ளி கொள்ளுமவன் வர்த்திக்கிற
நாளும் கொடுவினை செய்யும்,Naalum koduvinai seyyum - நிரந்தரமாகக் கொடுமைகளைச் செய்ய நிற்கிற
சுரும்பு அலற்றும் தடம் உடை வயல்,Surumbu alatrum tadam udai vayal - வண்டுகள் ஆரவாரிக்கின்ற தடாகங்கள் நிறைந்த கழன்கிளையுடைய
கூற்றின் தமர்களும் குறுககில்லார்,Koottin thamargalum kurugakillaar - யமபடர்களும் அணுகமாட்டாது ஓடிப்போவர்கள்; (ஆன பின்பு)
அனந்தபுரம் நகர்,Ananthapuram nagar - திருவனந்தபுரமாகிற திவ்ய தேசத்தை
இன்றே புகுதும்,Endrae pukuthum - இன்றே போய்ப் புகுவோம்.
3679திருவாய்மொழி || (10-2–கெடுமிடராய) (திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொண்டு செய்யலாம் என்று கூறுதல்) (திருவனந்தபுரத் தெம்பெருமானுடைய திருநாமமொன்றே ஸஹஸ்ர முகமான ரக்ஷயைப் பண்ணுமென்றார்.) 2
இன்று போய்ப் புகுதிராகில் எழுமையும் ஏதம் சாரா
குன்று நேர் மாட மாடே குருந்து சேர் செருந்தி புன்னை
மன்றலர் பொழில் அனந்த புர நகர் மாயன் நாமம்
ஒன்றும் ஓர் ஆயிரமாம் உள்ளுவார்க்கும் உம்பரூரே–10-2-2
குன்று நேர் மாடம்,Kunru neer maadam - மலை போன்ற மாடங்களினருகே
எழுமையும் ஏதம் சாரா,Ezhumaiyum aedham saara - ஏழேம் பிறப்பும் ஸம்ஸார தோஷம் எட்டாது
குருந்து சேர் செருந்தி புன்னை,Kurundhu ser serundhi punai - குருந்த மரங்களோடு சேர்ந்த சுரபுன்னை மரங்களும் புன்னை மரங்களும்
மாயன் நாமம்,Maayan naamam - அத்திருப்பதி எம்பெருமானுடைய திருநாமங்களில்
ஒன்றும்,Ondrum - ஏதேனும் ஒன்றாகிலும்
மன்று அலர் பொழில் அனந்தபுரம் நகர்,Manru alar pozhil ananthapuram nagar - மன்றிலே அலறும் படியான சோலைகளையுடைய திருவனந்தபுரத்தை
ஓர் ஆயிரம் ஆகும்,Or aayiram aakum - ஒன்றே ஆயிரமாகிக் காரியஞ் செய்யும் பெருமையுடையது;
இன்று போய் புகுதிரி ஆகில்,Endru pooi pukuthiri aagil - இன்றே சென்றடைவர்களாகில்
உள்உவர்க்கு,Ulluvarkku - இத்தையநுஸந்திப்பார்க்கு
ஒம்பர் ஊரே,Ombur oorae - அத்திருவனந்புரந்தானே பரமபதமாயிருக்கும்.
3680திருவாய்மொழி || (10-2–கெடுமிடராய) (திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொண்டு செய்யலாம் என்று கூறுதல்) (பிரதிபந்தங்கள் தொலைவதற்கு இன்ன திருநாமமென்று ஒரு நிர்ப்பந்தமில்லை; ஆயிரந்திருநாமங்களுள் ஏதேனுமொரு திருநாமத்தைச் சொல்லவமையும் என்கிறார்.) 3
ஊரும் புள் கொடியும் அக்தே உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தான்
சேரும் தண்ணனந்தபுரம் சிக்கெனப் புகுதிராகில்
தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறியச் சொன்னோம்
பேரும் ஓர் ஆயிரத்துள் ஓன்று நீர் பேசுமினே–10-2-3
புள் ஊரும்,Pul oorum - பெரிய திருவடியை ஊர்தியாகக் கொள்ளுமவனாய்
சிக்கென புகுதிரி ஆகில்,Sikkena pukuthiri aagil - திடமான அத்யவஸாயத்துடன் சென்று சேழ்வீர்களால்,
கொடியம் அஃதே,Kodiyam akhthae - அப்பெரிய திருவடியையே கொடியாகவுமுடையனாய்
நோய் வினைகள் எல்லாம் தீரும்,Noy vinaigal ellam theerum - நோயும் வினைகளுமானவையெல்லாம் தீரும்;
உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தான்,Ulagu ellam undu umizhndhaan - உலகங்களையெல்லாம் ஒரு கால் உண்பதும் மற்றொரு கால் உமிழ்வதுஞ் செய்தவான எம்பெருமான்
நாம் திண்ணம் அறிய சொன்னோம்,Naam thinam ariya sonnom - (இவ்விஷயததை உங்களுக்கு) நாம் திண்ணமாக அறியும்படி தெரிவித்தோம்;
சேரும் தண் அனந்தபுரம்,Serum than ananthapuram - நித்யவாஸஞ் செய்யுமிடான குளிர்ந்த திருவனந்தபுரத்தை
பேரும் ஒரு ஆயிரத்துள்,Perum oru aayiraththul - (அப்பெருமானுடைய) ஸஹஸ்ரநாமங்களுள்
நீர் ஒன்று பேசுமின்,Neer onru pesumin - நீங்கள் ஏதேனுமொரு திருநாமத்தைச் சொல்லுங்கள்.
3681திருவாய்மொழி || (10-2–கெடுமிடராய) (திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொண்டு செய்யலாம் என்று கூறுதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –ஆஸ்ரியிப்பார்க்கு ருசி பிறக்கைக்காக -திருவனந்த புரத்தில் எம்பெருமானுக்கு அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு அடிமை செய்கிறவர்கள் என்ன புண்ணியம் செய்தார்களோ -என்கிறார் -அவர்கள் பாக்யம் பண்ணின படியைப் பேசுங்கோள் என்றுமாம்.) 4
பேசுமின் கூசமின்றிப் பெரிய நீர் வேலை சூழ்ந்து
வாசமே கமழும் சோலை வயல் அணி அனந்த புரம்
நேசம் செய்து உறைகின்றானை நெறிமையால் மலர்கள் தூவி
பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே–10-2-4
பெரிய நீர் வேலை சூழ்ந்து,Periya neer velaai soozhndhu - பெரிய நீராகிய கடலாலே சூழப்பட்டு
மலர்கள் தூவி,Malarhal thoo vi - புஷ்பங்களை பணிமாறி ஆராதிக்குமவர்கள்
வாசமே கமழும் சோலை வயல் அணி,Vaasame kamazhum solai vayal ani - பரிமளமே நிறைந்த சோலைகளையும் வயல்களையும் அலங்காரமாகக் கொண்ட
அனந்தபுரம்,Ananthapuram - திருவனந்தபுரத்திலே பூசனை செய்கின்றார்கள்
புண்ணியம் செய்த ஆறு ஏ,Punnayam seitha aaru ae - புண்ணிய செயத விதம் எனனோ!
நேசம் செய்து உறைகின்றானை,Nesam seithu urai kindraanai - அன்பு பூண்டு நித்யவாஸம் பண்ணும் பெருமானை
கூசம் இன்றி பேசுமின்,Koosam indri pesumin - (அந்த பாக்ய விசேஷத்தை நீங்கள் (கூசாமல் எடுத்துச் செல்லுங்கள்
நெறிமையால்,Nerimaiyaal - முறை தவறாது
3682திருவாய்மொழி || (10-2–கெடுமிடராய) (திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொண்டு செய்யலாம் என்று கூறுதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –திருவனந்த புரத்தில் ஆஸ்ரயிக்கும் அவர்கள் அயர்வறும் அமரர்களோடு ஒப்பர் என்று கொண்டாடி -அப்படியே நீங்களும் ஆஸ்ரயிங்கோள் என்கிறார்.) 5
புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி
எண்ணுமின் எந்தை நாமம் இப்பிறப்பு அறுக்கும் அப்பால்
திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்த புரத்து
அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரர் ஆவார்–10-2-5
புண்ணியம் செய்து நல்ல புனலோடு மலகள் தூவி,Punnayam seithu nalla punalodu malargal thoo vi - பக்தி கொண்டு நல்ல தீர்த்தத்தையும் புஷ்பங்களையும் பணிமாறி
செறி பொழில்,Seri pozhil - செறிந்த சோலைகளையுடைய திருவனந்தபுரத்திலே அனந்தபுரத்து
அண்ணலார்,Annalaar - ஸ்வாமியினுடைய
எந்தை நாமம் எண்ணுமின்,Endhai naamam ennumin - எம்பெருமானது திருநாமங்களைச் சிந்தனை செய்யுங்கள். (அப்படிச் செய்யுமளவில்)
கமலம் பாதம்,Kamalam paadam - திருவடித் தாமரைகளை
அணுகுவார்,Anuguvaar - கிட்டுமவர்கள்
இப்பிறப்பு அறுக்கும் அப்பால்,Eppirappu arukkum appaal - இக் கொடிய ஸம்ஸாரத்தைத் தொலைத்தருள்வன்மேலும்,
அமரர் ஆவார்,Amarar aavaar - நித்யஸூரிகளோடொப்பர்;
நாம் திண்ணம் அறிய சொன்னோம்,Naam thinam ariya sonnom - (இதனை) நாம் திடமாகத் தெரிவித்தோம்.
3683திருவாய்மொழி || (10-2–கெடுமிடராய) (திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொண்டு செய்யலாம் என்று கூறுதல்) (அயர்வறுமமரர்களும் வந்து அடிமை செய்கிறது திருவனந்தபுரத்திலே யாதலால் திருநாட்டிலுங்காட்டில் பரமப்ராப்யம் திருவனந்தபுரம்; நாமும் இங்கே சென்று அடிமை செய்யத்தகுமென்கிறார்.) 6
அமரராய்த் திரிகின்றார் கட்கு ஆதிசேர் அனந்த புரத்து
அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப்பணி செய்வர் விண்ணோர்
நமர்களோ சொல்லக் கேண்மின் நாமும் போய் நணுக வேண்டும்
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே–10-2-6
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனார்,Kumaranar dhaathai thunbam thudaitha kovindanaar - முருகனது தந்தையான சிவபிரானது துன்பத்தைப் போக்கியருளின பெருமானாய்
அகப்பணி செய்தவர் விண்ணோர்,Agappani seithavar vinnor - அந்தரங்கமான பணிவிடைகளைச் செய்யுமவர்கள் நித்ய முக்தர்களாயிருப்பார்;
அமரர் ஆய் திரிகின்றார்கட்கு ஆதி,Amarar aay thirigindraarkatku aadhi - அமரரென்று பேர் பெற்றுத் திரிகின்றவர்களுக்கும் தலைவனாயிருக்குமவன்
நமர்களோ,Namargaloo - தம்முடையவர்களே!
சேர் அனந்தபுரத்து,Ser ananthapurathu - நித்யவாஸஞ் செய்கிற திருவனந்தபுரத்திலே
சொல்ல கேண்மின்,Solla kearnmin - நாம் சொல்வதைக்கே உங்கோள்;
அமரா கோன் அர்ச்சிக்கின்று அங்கு,Amaraa kon archikkindraangu - ஸ்ரீ ஸேனாபதியாழ்வான் ஆராதிக்க அதற்குப் பொருத்தமாக
நாமும் போய் நணுக வேண்டும்,Naamum pooi nanuga vendum - அவர்களோடு நாமும் கூடிக் கைங்கரியம் பண்ண வேண்டும்.
3684திருவாய்மொழி || (10-2–கெடுமிடராய) (திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொண்டு செய்யலாம் என்று கூறுதல்) (ஸர்வேச்ரன் திருக்கண் வளர்ந்கருளுகிற திருவனந்தபுரத்தே சென்று அடிமை செய்யய்ப பெற்றால் எல்லாத் துக்கங்களும் தீருமென்கிறார்.) 7
துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவு மற்றும்
படைத்த வெம் பரம மூர்த்தி பாம்பணைப் பள்ளி கொண்டான்
மடைத் தலை வாளை பாயும் வயல் யணி யனந்த புரம்
கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடு வினை களையலாமே–10-2-7
உலகு உயிர் தேவும் மற்றும் உலகங்களையும்,Ulagu uyir theevum matrum ulagangalaiyum - (மநுஷ்யாதி) ப்ராணிகளையும் தேவஜாதிகளையும் மற்றும் மஹதார் பதார்த்தங்களையும்
மடை தலை வளை பாயும் வயல் அணி அனந்தபுரம்,Madai thalai valai paayum vayal ani ananthapuram - நீர் நிலங்களிலே மீன்கள் களித்துப் பாயா நின்ற வயல்களை அலங்காரமாகவுடைய திருவனந்தபுரத்திலே
துடைத்த கோவிந்தனாரே,Thudaitha kovindanaarae - ஒன்றொழியாமல் ஸம்ஹர்த்த பெருமாள் தானே
பாம்பு அணை பள்ளி கொண்டான்,Paambu anai pallli kondaana - சேஷ சயனத்திலே பள்ளி கொண்டருளா நின்றான்; (அவ்விடத்தே சென்று)
படைத்த எமபரம மூர்த்தி,Padaitha emparam moorthi - (அவற்றையெல்லாம் மறுபடியும்) படைத்தருளின பரம புருஷன்; (அப்பெருமாள்) கடைத்தலை சீய்க்கப் பெற்றால
கடு வினை களையலாம்,Kadu vinai kalaiyaalaam - திருவாசல் விளக்குதல் முதலிய கைங்கரியங்களைப் பண்ணப் பெற்றால் கொடிய பாவங்களைப் போக்கப் பெறலாம்.
3685திருவாய்மொழி || (10-2–கெடுமிடராய) (திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொண்டு செய்யலாம் என்று கூறுதல்) (திருவனந்தபுரத்திலே திருக்கண் வளர்ந்தருளுகிற ஸர்வேச்வரனுடைய திருவடிகளைக் காண நடவுங்கோளென்று ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு நியமித்தருளுகிறார்.) 8
கடுவினை களையலாகும் காமனைப் பயந்த காளை
இடவகை கொண்ட தென்பர் எழில் அணி அனந்த புரம்
படமுடை யரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண
நடமினோ நமர்கள் உள்ளீர் நாமும் உமக்கு அறியச் சொன்னோம்–10-2-8
எழில் அணி அனந்தபுரம்,Ezhil ani ananthapuram - அழகணிந்த திருவனந்தபுரம் திருப்பதி
படம் உடை அரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண,Padam udai aravil pallli payindravan paadam kaana - படங்களையுடைய வனத்தாழ்வான் மீது பள்ளி கொண்டருளும் அனந்த பத்மநாபனுடைய திருவடிகளை ஸேவிக்க நடவுங்கள்
காமனை பயந்த காளை இடவகை கொண்டது என்பர்,Kaamanai payantha kaalai idavakai kondaathu enbar - மன்மதனுக்கும் உத்பாதகனான பெருமாள் தனக்கு இருப்பிடமாகக் கொண்ட தலமென்பார்கள்;
நடமின் நாம் உமக்கு அறிய சொன்னோம்,Nadamin naam umakku ariya sonnom - (இதனை) நாம் உமக்குத் தெரிவித்தோம்; (இங்ஙனே செய்தால்)
நமர்கள் உள்ளீர் நம்மோடொரு ஸம்பந்தம் பெற்றவர்களாயிருப்பவர்களே!கடு வினை களையல் ஆகும்,Namargal ullir nammodoru sambantham petraavargalaayiruppavargale! Kadu vinai kalaiyal aagum - கொடிய பாவங்களை எல்லாம் போக்கப் பெறலாம்.
3686திருவாய்மொழி || (10-2–கெடுமிடராய) (திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொண்டு செய்யலாம் என்று கூறுதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி – திருவனந்த புரத்திலே கண் வளர்ந்து அருளுகிற சர்வேஸ்வரனுடைய திருவடிகளைக் காணப் போருங்கோள் -என்று அனுகூலரை அழைக்கிறார்.) 9
நாமும் உமக்கு அறியச் சொன்னோம் நாள்களும் நணியவான
சேமம் நன்குடைத்துக் கண்டீர் செறி பொழில் அனந்த புரம்
தூம நல் விரை மலர்கள் துவளற வாய்ந்து கொண்டு
வாமனன் அடிக்கென்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள் தாமே–10-2-9
நாம உமக்கு அறிய சொன்ன நாள்களும் நணிய ஆன (முன்பு),Naam umakku ariya sonna naalgalum nania aan (mumbhu) - நாம் உங்களுக்குத் தெரிவித்த சரீராவஸான நாளும் ஸமீபித்தது;
தூமம் நல் விரை மலர்கள்,Thoomam nal virai malargal - (ஆன பின்பு அவ்விடத்திற்கு) தூபத்தியும் நறுமண மலர்களையும்
செறி பொழில் அனந்தபுரம் சேமம் நன்கு உடைத்து,Seri pozhil ananthapuram semam nallkku udaiythu - செறிந்த பொழில்களையுடைய திருவனந்தபுரமானது நமக்கு நன்றாக க்ஷேமம் செய்ய வல்லது;
துவள் அற ஆய்ந்து கொண்டு வாமனன் அடிக்கு என்று ஏத்த,Thuvaal araa aayndhu kondu vaamanan adikku enru aetha - பர்சுத்தமாக சேகரித்துக் கொண்டு எம்பெருமானுடைய திருவடிகளுக்கென்று ஸங்கல்பித்துத் துதிக்க,
கண்டீர்,Kandheer - இதை அனுபவித்திலே காணலாமன்றோ;
வினைகள் தானே பாய்ந்து அறும்,Vinaihal thaanae paayndhu arum - பாவங்களை தன்னடையே தொலைந்து போம்.
3687திருவாய்மொழி || (10-2–கெடுமிடராய) (திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொண்டு செய்யலாம் என்று கூறுதல்) (ஸ்ரீ ஆறாயிரப்படி –அவன் திரு நாமங்களில் ஏதேனும் ஒரு திரு நாமத்தைச் சொல்ல அடிமை செய்கைக்கு பிரதிபந்தகங்கள் எல்லாம் தானே போம் என்று சொல்லி முடித்து திருவனந்த புரத்திலே போய் எம்பெருமானுக்கு அடிமை செய்யும் மஹாத்மாக்கள் ஆரோ தான் என்று கொண்டு அவர்களைக் கொண்டாடுகிறார்.) 10
மாய்ந்து அறும் வினைகள் தாமே மாவதா வென்ன நாளும்
ஏய்ந்த பொன் மதிள் அனந்த புர நகர் எந்தைக்கு என்று
சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல
ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தமில் புகழினாரே–10-2-10
மாதவா என்ன,Madhava enna - திருமாலே என்று சொன்ன வளவிலே
நல்ல சாந்தொடு விளக்கம் தூபம்,Nalla santhodu vilakkam thoombam - நல்ல சந்தன தீப தூபங்களையும்
வினைகள் தானே மாய்ந்து அறும்,Vinaihal thaanae maayndhu arum - பாவங்கள் தானே தொலைந்தொழியும்;
தாமரை மலர்கள் ஆய்ந்து கொணடு நாளும் ஏந்த வல்லார்,Thamarai malargal aayndhu kondu naalum aentha vallaar - தாமரைப் பூக்களையும் சேகரித்துக் கொண்டு சென்று நாடோறும் துதி செய்ய வல்ல பக் தர்கள்
ஏய்ந்த பொன்மதின் அனந்தபுரம் நகர் எந்தைக்கு என்று,Ayndha ponmathin ananthapuram nagar endhaikku enru - பொருந்தின பொன்மதினையுடைத்தான திருவனந்தபுர நாதனுக்கென்று ஸங்கல்பித்து
என்றும் அந்தம் இல் புகழினார் எந்நாளும்,Enrum andham il pugazhinaar ennnaalum - அழிவில்லாத புகழை யுடையராவர்.
3688திருவாய்மொழி || (10-2–கெடுமிடராய) (திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொண்டு செய்யலாம் என்று கூறுதல்) (இத்திருவாய் மொழி கற்கைக்குப் பலன் பரமபதத்தில் திவ்யாப்ஸரஸ்ஸுக்களாலே ப்ரஹ்மாலங்கார ப்ராப்தி பெறுவதென்கிறார்.) 11
அந்தமில் புகழ் அனந்த புர நகராதி தன்னை
கொந்தலர் பொழில் குருகூர் மாறன் சொல் லாயிரத்துள்
ஐந்தினோடு ஐந்தும் வல்லார் அணைவர் போய் அமர் உலகில்
பைந்தொடி மடந்தையர் தம் வேய் மரு தோள் இணையே–10-2-11
அந்தம் இல் புகழ்,Andham el pugazh - அழிவில்லாத புகழை யுடையனான
போய்,Pooi - (சாராவஸரனத்தில் அர்ச்சிராதி மார்க்கத்தாலே) சென்று
அனந்தபுரம் நகர் ஆதி தன்னை,Ananthapuram nagar aadhi thannai - திருவனந்தபுர மென்னும் திவ்ய தேசத்திலே யெழுந்தருளியிருக்கிற ஆதி புருஷனைக் குறித்து,
அமர் உலகில்,Amar ulakil - நித்ய விபூதியில்
கொந்து அலர் பொழில் குருகூர் மாறன் சொல்,Kondu alar pozhil kurukoor maaran sol - பூங்கொத்துக்கள் அலருகிற பொழில் சூந்த திருநகர்க்குத் தலைவரான ஆழ்வார் அருளிச் செய்த பை நொடி மடந்தையர் தம்
அழகிய ஹஸ்த பூஷணங்களணிந்த (பரமபதத்து) திவ்ய,Azhagiya hasta pooshanangal anindha (paramapadathu) divya - அப்ஸரஸ்ஸுக்கனுடைய
ஆயிரத்துள் ஆயிரம் பாசுரங்களையும்,Aayiraththul aayiram paasurangalaiyum - வேய் மரு தோள் இணை
வேய் போன்ற தோளினைகளால் நேரும் ஸத்காரங்களை,Vei poondra tholinigalal nerum sathkaarangkalai - ஐந்தினோடு ஐந்தும் வல்லார்
இப்பத்துப் பாசுரங்களையும் ஓத வல்லவர்கள,eppaththu paasurangalaiyum oadha vallavargal - அணைவர் அநுபவிக்கப் பெறுவர்கள்.