Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: கொண்ட பெண்டிர் (12 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3556திருவாய்மொழி || 8-10—நெடுமாற் கடிமை (இத்திருவாய்மொழியை ஓத வல்லவர்கள் இதிற்சொன்ன பாகவத சேஷத்வத்தைப் பெற்று ஸகுடும்பமாக வாழப் பெறுவரென்று பயனுரைத்த தலைக் கட்டுகிறார்.) 11
நல்ல கோட்பாட்டுலகங்கள்
மூன்றின் உள்ளும் தான் நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை
அந்தண் குருகூர்ச் சடகோபன்
சொல்லப்பட்ட வாயிரத்துள்
இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வர்
கொண்ட பெண்டிர் மக்களே–8-10-11
Nalla kootpaadu,நல்ல கோட்பாடு - நல்ல கட்டளைப்பாடுடைய
Ulagangal moonru in ulloam,உலகங்கள் மூன்றின் உள்ளும் - மூவுலகங்களினுள்ளும்
Thaan niraintha,தான் நிறைந்த - வியாபீத்த
Alli kamalam kannanai,அல்லி கமலம் கண்ணனை - விகஸித்த தாமரைப் பூப்போன்ற கண்களையுடைய பெருமான் விஷயமாக
Am than kurukoor sadagopan sollappatta aayirathul,அம் தண் குருகூர் சடகோபன் சொல்லப்பட்ட ஆயிரத்துள் - ஆழ்வாரா வருளிச் செய்யப்பட்ட ஆயிரத்தினுள்
Ivaaiyum pattum vallaarkal,இவையும் பத்தும் வல்லார்கள் - இவை பத்தையும் ஓதவல்லவர்கள்
Konda pentir makkale,கொண்ட பெண்டிர் மக்களே - ஸ குடும்பமாக
Nalla pathal,நல்ல பத்த்தால் - பாகவத சேஷ்த்வ பர்யந்தமான சிறப்புடனே
Manai vaazhvaar,மனை வாழ்வார் - க்ருஹஸ்தர்களாக வாழப்பெறுவர்கள்.
3557திருவாய்மொழி || (9-1—கொண்ட பெண்டிர்) (கர்மவசத்தால் கிட்டிய பத்துக்களை விட்டு எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேரும் எனல் (வடமதுரை)) (ஔபாதிக பந்துக்களான களத்ர புத்திராதிகளால் ஒருபயனுமில்லை. அவர்கள் ஆபத்துக்கு உதவார்கள். கிருபாதிகபந்துவான ஸர்வேச்வானே ஆபத்பந்து. அவனையேபற்றி யுஜ்ஜீவிக்கப் பாருங்கோளென்கிறார்.) 1
கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்
கண்டதோடு பட்டது அல்லால் காதல் மற்று யாதும் இல்லை
எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான்
தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே–9-1-1
கொண்ட பெண்டிர்,Kondapendir - நம் உறவினர் என்று நாம் நினைக்கும்
மக்கள் உற்றார்,Makkal utrar - மனைவிமக்கள் உற்றார்
சுற்றத்தவர் பிறரும்,Sutrathavar pirarum - உறவினர் மற்றுமுள்ளோர்
கண்டதோடு,Kandodu - நம் கையில் பொருள் இருக்கும் வரை
பட்டது அல்லால்,Pattathu allal - உறவாடுவார்களே அன்றி
காதல் மற்று,Kadhal matru - உண்மையான உள் அன்பு ஒன்றும்
யாதும் இல்லை,Yadum illai - யாரிடமும் இல்லை
எண் திசையும்,En thisaiyum - ஆதலால் எட்டுத் திக்கிலும்
கீழும் மேலும்,Keelum melum - பாதாளத்திலும் மேல் உலகிலும்
முற்றவும்,Mutravum - உள்ள அனைத்தையும்
உண்ட,Unda - பிரளயத்தில் உண்டு வயிற்றில் வைத்து
பிரான்,Piran - காத்த எம்பெருமானுக்கு
தொண்டரோம் ஆய்,Thondarom aai - தொண்டராய்
உய்யல் அல்லால்,Uyyal allal - இருந்து கைங்கர்யம் செய்வது தவிர
இல்லை துணையே கண்டீர்,Illai thunaiye kandir - வேறு உபாயம் இல்லை
3558திருவாய்மொழி || (9-1—கொண்ட பெண்டிர்) (கர்மவசத்தால் கிட்டிய பத்துக்களை விட்டு எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேரும் எனல் (வடமதுரை)) (ஆபாஸபந்துக்கள் உபகாரம் செய்வாரைப்போலேயிருந்து தங்களுக்கு வேண்டிய ப்ரயோஜனங்களைத் தலைக்கட்டிக் கொள்வர்கள்; அவர்கள் நம்பத்தகுந்தவர்கவல்லர்; நம்பாதவர்களுக்கும் நம்பிக்கை யுண்டாக்கி ஆபத்ஸகனாரும் ஸர்வேச்வரனைப் பற்றுமதே ப்ரயோ ஜனமென்கிறது இப்பாட்டு.) 2
துணையும் சார்வும் ஆகுவார் போல் சுற்றத்தவர் பிறரும்
அணையவந்த வாக்கம் உண்டேல் அட்டைகள் போல் சுவைப்பர்
கணை யொன்றாலே யேழ் மராமும் எய்த எம் கார் முகிலை
புணை என்று உய்யப் போகல் அல்லால் இல்லை கண்டீர் பொருளே–9-1-2
துணையும்,Thunaiyum - ஆபத்துக் காலத்தில் துணை போலவும்
சார்வும்,Sarvum - சார்வு போலவும்
ஆகுவார் போல்,Aakuvaar pol - உதவுவது போல்
சுற்றத்தவர் பிறரும்,Sutrathavar pirarum - உறவினர்களும் மற்றவர்களும்
ஆக்கம் உண்டேல்,Aakkam undel - செல்வம் உள்ள வரை
அட்டைகள் போல்,Attaikal pol - அட்டைகள் போல்
அணைய வந்த,Anaiya vantha - உடன் வந்து
சுவைப்பர்,Suvaippar - ஒட்டி உறவாடுவார்கள்
கணை ஒன்றாலே,Kanai ondrale - ஓர் அம்பாலே
ஏழ் மரமும் எய்த,Ezhu maramum eitha - ஏழு மராமரங்களையும் எய்த
எம் கார் முகிலை,Em kar mugilai - எம் காளமேகப் பெருமானை
புணை என்று உய்ய,Punai endru uyya - தஞ்சம் என்று உய்ய
போகல் அல்லால்,Pogal allal - ஒரே வழி என்பதைத் தவிர
பொருளே இல்லை,Porule illai - வேறு வழி இல்லை என்பதை
கண்டீர்,Kandir - அறிவீர்களாக
3559திருவாய்மொழி || (9-1—கொண்ட பெண்டிர்) (கர்மவசத்தால் கிட்டிய பத்துக்களை விட்டு எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேரும் எனல் (வடமதுரை)) (ஸம்ஸாரிகள் ஸ்வப்ரயோஜனமே கண்ணுயிருப்பவர்களாதலால் அந்த ஸ்வப்ர யோஜனத்திற்காக நேசத்தை அபிநயிப்பவர்களே யல்லது அதற்கு வழியில்லை யென்றால் ஆணுகவும்மாட்டார்கள்; ஆகவே அன்னவர்களிடத்துப் பற்று விடத்தக்க தென்கிறாரிப்பாட்டில்) 3
பொருள் கையுண்டாய்ச் செல்லக் காணில் போற்றி என்று ஏற்றி எழுவர்
இருள் கொள் துன்பத்தின்மை காணில் என்னே என்பாருமில்லை
மருள் கொள் செய்கை யசுரர் மங்க வடமதுரைப் பிறந்தார்க்கு
அருள் கொள் ஆளாய் யுய்யல் அல்லால் இல்லை கண்டீர் அரணே–9-1-3
பொருள் கை,Porul kai - செல்வம் கையில்
உண்டாய்,Undai - உள்ளதைக்
செல்ல காணில்,Sella kaanil - கண்டார்களாகில்
போற்றி என்று,Potri endru - அவனை வாழ்த்தி
ஏற்றி,Yetri - அவன் கொடுக்கும் பரிசுகளை ஏற்று
எழுவர்,Ezhuvar - விடை பெற்றுச் செல்வர்
இருள் கொள்,Irul kol - வருத்தம் விளைவிக்கும்
துன்பத்து இன்மை,Thunpathu inmai - துன்பம் ஏற்படுவதை
காணில் என்னே!,Kaanil enne! - கண்டவுடன் ஐயோ என்பாரும்
என்பாரும் இல்லை,Enbarum illai - இல்லை உதவுபவரும் இல்லை
மருள் கொள்,Marul kol - நெஞ்சு கலங்கும்படியான
செய்கை,Seigai - செய்கைகளை உடைய
அசுரர் மங்க,Asurar manga - அசுரர்கள் அழிய
வடமதுரை,Vadamathurai - வடமதுரையில்
பிறந்தாற்கு,Pirandarku - பிறந்த கண்ணனுக்கு
அருள் கொள்,Arul kol - ஆட்பட்டு அடிமை கொண்டு
ஆளாய்,Alaai - கைங்கர்யம் செய்து
உய்யல் அல்லால்,Uyyal allal - உய்வதைத் தவிர
கண்டீர்,Kandir - வேறு உபாயமோ
அரணே,Arane - புகலோ ஒன்றும் இல்லை
3560திருவாய்மொழி || (9-1—கொண்ட பெண்டிர்) (கர்மவசத்தால் கிட்டிய பத்துக்களை விட்டு எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேரும் எனல் (வடமதுரை)) (சிலரை ஆபத்துக்கு உதவுமவர்களாகக் கொண்டு நெடுநாள் ஆராவதித்தால் அவர்கள் அவ்வாராதனைகளை யெல்லாம் பெற்றிருந்து ஆபத்துவந்தவாறே எண்ணற்று உபேக்ஷிப்பர்கள். அப்படியன்றிக்கே நிர்ஹேதுகமாகவந்து அவதரித்து ஆபத்ஸகனுனவனே ஆச்ரயிக்கத் தக்கவனென்கிறுரிப்பாட்டில்.) 4
அரணம் ஆவர் அற்ற காலைக்கு என்று என்று அமைக்கப் பட்டார்
இரணம் கொண்டு தெப்பர் ஆவர் இன்றி இட்டாலும் அக்தே
வருணித்து என்னேவடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
சரண் என்று உய்யப் போகல் அல்லால்இல்லை கண்டீர் சதிரே–9-1-4
அற்ற காலைக்கு அரணம் ஆவயர் என்று என்று,Atra kaalaikku aranam aavayar endru endru - கைம்முதலற்ற காலத்திற்குப் புலாகங்சுடடுமென்று பலகாலும் சிந்தித்து
அமைக்கப்பட்டார்,Amaikkapattaar - வசப்படுத்திக் கொள்ளப்பட்டவர்கள்
இரணம் கொண்ட தெப்பம் ஆவர்,Iranam konda theppam aavar - கடனை இலுத்துக் கொண்டவர்கள் போல் தக்கராயொழிவர்கள்
இன்றி இட்டாலும்,Inri ittalm - பச்சை யிடாவிட்டாலும்
அஃதே,Ahde - அவர்களின் உதயாமை உன்னதே
வருணித்து எண்ணே,Varunithu enne - (இப்படி) இன்றி கெட்டவர்களைப் பற்றிச் சொல்லி என்ன பயன்?
வடமதுரை பிறந்தவன்,Vadamathurai piranthavan - வடமதுரையிலே வந்து பிறந்த எண்ணபிராணுடைய
வண் புகழே,Van pugale - சீனம்முதலிய குணங்களையே
சரண் என்று,Saran endru - தஞ்சமென்று கொண்டு
உய்யப் போகில் அல்லால்,Uyyap pogil allal - உஜ்ஜீவித்துப் போமதொழிய
சதிர் இல்லை,Sathir illai - வேறு சதிர்பாடு இல்லை
3561திருவாய்மொழி || (9-1—கொண்ட பெண்டிர்) (கர்மவசத்தால் கிட்டிய பத்துக்களை விட்டு எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேரும் எனல் (வடமதுரை)) (மாதர்களால் படும் அவமானங்களை யெடுத்துரைத்து எம்பெருமானுக்கு ஆட்பட்டு உய்வதே உய்வு என்கிறாரிப்பாட்டில்.) 5
சதிரமென்று தம்மைத் தாமே சம்மதித் தின்மொழியார்
மதுரபோகம் துற்றவரே வைகி மற்றொன்றுறுவர்
அதிர்கொள் செய்கை யசுரர் மங்க வடமதுரைப் பிறந்தார்க்கு
எதர் கொள் ஆளாய் யுய்யல் அல்லால் இல்லை கண்டீர் இன்பமே–9-1-5
சதிரம் என்று,Sathiram endru - சதிரையுடையோ மென்று
நம்மை நாமே சம்மதித்து,Nammai name sammathithu - தம்மைத் தாங்களே பஹீமானித்துக் கொண்டு
இன்மொழியார்,Inmozhiyaar - வெறும் பேச்சினிமையையுடையரான மாதர்களினுடைய
மதுரபோகம்,Mathurapogam - இனிய போகங்களை
அற்றவரே,Atravare - அனுபவித்தவர்களே
லைகி,Laiki - மற்றொரு காலத்திலே
மற்று ஒன்று உறுவர்,Matru onru uravar - வாய்கொண்டு சொல்ல வொண்ணாத அவமானங்களை அடைவர்கள்
அதில் கொள் செய்கை அசுரர் மங்க,Adhil kol seigai asurar manga - (ஆனபின்பு) அஞ்சவேண்டுஞ் செய்கைகளையுடைய அசுரர்கள் தொலையும்படி
வடமதுரை பிறந்தாற்கு,Vadamathurai pirandarku - வடமதுரையிலே வந்து பிறந்த கண்ணபிரானுக்கு
எதிர்கொள் ஆள் ஆய்,Ethirkol aal aai - ஆபிமுக்யம் பண்ணுமடியவர்களாகி
உய்ரல் அல்லால்,Uyiral allal - உஜ்ஜீவித்துப் போமதொழிய
இன்பம் இல்லை,Inbam illai - (வேறு வழியில்) சுகமில்லை.
3562திருவாய்மொழி || (9-1—கொண்ட பெண்டிர்) (கர்மவசத்தால் கிட்டிய பத்துக்களை விட்டு எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேரும் எனல் (வடமதுரை)) (எம்பெருமானே பரமபுருஷார்த்தம் என்பதுணராதே முன்னே கழிந்த பலர் பாழாய்ப் போயினர்; நீங்களும் அங்ஙனே நசித்துப் போகாமே வடமதுரைப்பிறந்த பெருமானுடைய திருக்குணங்களைச் சொல்லி உய்யப்பாருங்கள்; இது தவிர வேறு ஹிதமில்லை ஆத்மாவுக்கு என்கிறாரிப்பாட்டில்.) 6
இல்லை கண்டீர் இன்பம் அந்தோ உள்ளது நினையாதே
தொல்லையார்கள் எத்தனைவர் தோன்றிக் கழிந்து ஒழிந்தார்
மல்லை மூதூர் வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
சொல்லி யுப்பப் போக வல்லால் மற்று ஓன்று இல்லை சுருக்கே–9-1-6
இன்பம் இல்லை! கண்டீர்,Inbam illai! Kandir - (இவ்வுலகில்) சுகமே யிருப்ப தொன்று இல்லைகிடீர்
அந்தோ,Antho - ஐயோ! இதை நாமெடுத்துச் சொல்ல வேணுமோ ?
உள்ளது நினையாதே,Ullathu ninayaathe - சாச்வதமான புருஷார்த்தத்தை நினையாதே
தொல்லையார்கள்,Thollaiyaarkal - பழைய காலத்திலிருந்தவர்கள்
எத்தனைவர்,Ethanaivar - எத்தனை பேர்
தோன்றிகழிந்து ஒழிந்தார்,Thonriginazinthu ozhinthar - ஜன்மமரணங்களே யாத்திரையாய்ப் போனார்கள் (அன்னவர்கள் கணக்கற்றவர்கள்)
மல்லை மூதூர் வடமதுரை,Mallai moothur vadamathurai - (ஆன பின்பு) செல்வம் மிகுந்த புராதனமான வடமதுரையிலே
பிறந்தவன்,Piranthavan - வந்து பிறந்து கண்ணபிரானுடைய
வண் புகழே சொல்லி,Van pugale solli - உதாரமான திருக்குணங்களையே கீர்த்தனம் பண்ணி
உய்ய போகில் அல்லால்,Uyya pogil allal - உஜ்ஜீவித்துப் போமதொழிய
சுருக்கு,Surukku - சுருங்கச் சொல்லும் வழி
மற்று ஒன்று இல்லை,Matru onru illai - வேறொன்றுமில்லை.
3563திருவாய்மொழி || (9-1—கொண்ட பெண்டிர்) (கர்மவசத்தால் கிட்டிய பத்துக்களை விட்டு எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேரும் எனல் (வடமதுரை)) (கீழ்ப்பாட்டில் சுருக்கே யென்றதைச் சுருங்கவருளிச் செய்கிறார். எம்பெருமானைப் பற்றுவதினுடைய எளிமையையும் இனினையையும் எடுத்துரைக்கின்றார். 7
மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ் உயிர் க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ
குற்றம் அன்று எங்கள் பெற்றத் தாயன் வடமதுரைப் பிறந்தான்
குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே–9-1-7
மற்றொன்று இல்லை,Matronru illai - உபாயாந்தரமில்லை
மாநிலத்து, எவ் உயிர்க்கும்,Maanilathu, ev uyirkum - பரந்த நிலவுலகிலுள்ள யாவர்க்கும்
சுருங்க சொன்னோம்,Surunga sonnom - இது சுருக்கமாகச் சொல்லுகிறோம்
சிற்ற வேண்டா,Sitra venda - ஆயாஸகரமான ப்ரவருத்திகளிலேநின்று உழலவேண்டா
சிந்திப்பே அமையும்,Sindippe amaiyum - மாநஹிகமான அத்யவஸாயமே போதும்
கண்டீர்கள் அந்தோ,Kandirgal antho - கண்டீர் அந்தோ-;
கூட மதுரை பிறந்தான்,Kooda mathurai piranthaan - வடமதுரையிலே அவதரித்தவனான
எங்கள் பெற்றத்து ஆயன்,Engal petrathu aayan - எங்கள் கோபாலகிருஷ்ணணுடைய
குற்றம் இல்சீர்,Kutram ilseer - குற்றமற்ற திருக்குணங்களை
வைகல் கற்று வாழ்தல் இது,Vaigal katru vaalthal idhu - எப்போதும் கற்று வாழ்தாலகிறவிது
குணம்,Kunam - குணமாகுமே தவிர
குற்றம் அன்று,Kutram anru - குற்றமாகாது.
3564திருவாய்மொழி || (9-1—கொண்ட பெண்டிர்) (கர்மவசத்தால் கிட்டிய பத்துக்களை விட்டு எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேரும் எனல் (வடமதுரை)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –9-1-8-எம்பெருமான் இங்கே வந்து திருவவதாரம் பண்ணி யருளுகைக்கு நிதானத்தைச் சொல்லி -அவனையே ரக்ஷகனாக பற்றும் அத்தனை போக்கி ஒருவருக்கும் வேறு ஒரு பிரயோஜனம் இல்லை -என்கிறார் .) 8
வாழ்தல் கண்டீர் குணம் இது அந்தோ மாயவன் அடி பரவி
போழ்து போக வுள்ள கிற்கும் புன்மை யிலாதவர்க்கு
வாழ் துணையா வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
வீழ் துணையாப் போமிதனில் யாதுமில்லை மிக்கதே–9-1-8
வாழ்தல் இது குணம் கண்டீர்,Vaalthal idhu kunam kandir - வாழுகிறவி அவன்றோ எல்லார்க்கும் குணமாவது
அந்தோ,Antho - வாழும் வகையறியாதபடி எண்
மாயவன் அடி பாவி,Maayavan adi paavi - ஸர்வேச்வரனுடைய திருவடிகளை துதித்து (பகவத்குணு நுபவம் பண்ணி)
போழ்துபோ,Polthupo - காலசேஷபம்பண்ண வேறுமென்று
உள்ளகிற்கும்,Ullakirkkum - நினைக்கவல்லவர்களான
புன்மை இல்லாவர்கக்கு,Punmai illaavarkkakku - உத்தமாதிகாரிகளுக்கு
வாழ்துணை ஆ,Vaalthunai aa - வாழ்ச்சிக்த துணையாவதற்காக
வடமதுரை பிறந்தவன்,Vadamathurai pirandhavan - வடமதுரையிலே வந்து பிறந்த கண்ணனுடைய
வண் புகழே,Van pugale - திக்குணங்களையே
வீழ்துணை ஆ போம் இதனில்,Veerthunai aa pom idhanil - ஆசைப்படுந் துணையாகக் கொண்டு நடப்பதிற்காட்டிலும்
மிக்கது யாதும் இல்லை,Mikkathu yadhum illai - மேற்பட்ட வாழ்வு யாதொன்றுமில்லை.
3565திருவாய்மொழி || (9-1—கொண்ட பெண்டிர்) (கர்மவசத்தால் கிட்டிய பத்துக்களை விட்டு எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேரும் எனல் (வடமதுரை)) (எம்பெருமானைத் தவிர்த்து வெறொன்றை ரக்ஷகமாகப் பற்றினவர்கள் பண்டு நின்ற நிலையுங்கெட்டு அனர்த்தப்பட்டுப் போவர்கள்; ஆனபின்பு அவனல்லது புகலில்லை யென்கினறார்.) 9
யாதும் இல்லை மிக்கதனில் என்று என்று அது கருதி
காது செய்வான் கூதை செய்து கடை முறை வாழ்க்கையும் போம்
மாதுகிலின் கொடிக் கொள் மாட வடமதுரைப் பிறந்த
தாதுசேர் தோள் கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரணே–9-1-9
அதனில் மிக்குயாதும் இல்லை என்று என்று அது கருதி,Adhanil mikku yadhum illai endru endru adhu karuthi - (பகவத்விஷயம் தவிர வேறொன்றைப் பற்றி நின்று) அதிற்காட்டிலும் மேம்பட்ட தொன்றுமில்லை யென்று பலகாலும் அதையே சிந்தனை செய்யுமளவில்
காது செய்வான் கூதைசெய்து,Kaathu seivaan koodaiseithu - கனங்குழையிடக் காதுபெருக்கப் புகுந்து பண்டுள்ளதையும் போக்கிக் கூதை செய்யுமா போல
கடை முறை வாழ்க்கையும் போம்,Kadai murai vaalkaiyum pom - கடைகெட்ட ஸம்ஸார வாழ்க்கைக்கும் ஹானிவந்த தாமித்தனை (ஆன பின்பு)
மாதுகிலின் கொடிகாள் மாடம்,Mathukilin kodikal maadam - பெரிய த்வஜபடங்களைக் கொண்ட மாடங்களைக் புடைத்தான
வட மதுரை பிறந்த,Vada mathurai pirandha - வடமதுரையிலே வந்தவதரிந்த
தாது சேர்தோள் கண்ணன் அல்லால்,Thaathu serthol kannan allal - மாலையணிந்த தோள்களையுடைய கண்ணனைத் தவிர்த்து
சரண் இல்லை கண்டீர்,Saran illai kandir - வேறொரு புகலில்லை திடீர்
3566திருவாய்மொழி || (9-1—கொண்ட பெண்டிர்) (கர்மவசத்தால் கிட்டிய பத்துக்களை விட்டு எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேரும் எனல் (வடமதுரை)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –9-1-10-தானே எல்லார்க்கும் சரண் என்னும் இவ்வர்த்தத்தை பிரதிஷ்டைக்காக வந்து திருவவதாரம் பண்ணி யருளின கிருஷ்ணன் திருவடிகளை ஆஸ்ரயிங்கோள் -என்கிறார்.) 10
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து
மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான்
திண்ண மா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்ம்மினோ
எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்று இல்லையே–9-1-10
கண்ணன் அல்லால் சரண் இல்லை அது நிற்க,Kannan allal saran illai adhu nirka - ஸ்ரீக்ருஷ்ணனல்லது வேறு சரணில்லை யென்னுமர்த்தம் நிலைநிற்கைக்காகவும்
மண்ணின்பாரம் நீக்குதற்கு,Manninpaaraam neekutharku - பூபாரத்தைப் போக்குகைக்காகவும்
வட மதுரை பிறந்தான்,Vada mathurai piranthaan - வட மதுரையில் வந்து அவதரித்தான் (ஆன பின்பு. ஸம்ஸாயிகளே)!
அம் உடைமை உண்டேல்,Am udaimai undel - உங்களதாக நினைத்திருக்கிற பொருளுண்டாகில் (அதை)
திண்ணமா அவன் அடி சேர்த்து உய்ம்மின்,Thinnamaa avan adi serthu uymin - திடமாக அவன் திருவடிகளினே ஸமர்பித்து உஜ்ஜீவியுங்கள்
எண்ண வேண்டா,Enna venda - ஆலோசிக்க வேண்டா
நும்மது ஆதும்,Nummathu aadhu - உங்களுடையதான எப்பொருளும்
அவன் அன்றி மற்று இல்லை,Avan anri matru illai - அவனதேயன்றி மற்றமடியாயில்லை.
3567திருவாய்மொழி || (9-1—கொண்ட பெண்டிர்) (கர்மவசத்தால் கிட்டிய பத்துக்களை விட்டு எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேரும் எனல் (வடமதுரை)) (இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பலனுரைக்கும் பாசுதமானவிது விலக்ஷணமாகத் தோன்றியுள்ளது. “இப்பத்து மோதவல்லபிராக்கள் பண்டே நம்மையாளுடையார்கள்” என்கிறார். இப்பதிகத்தை யோதவல்லவர்களுக்கு ஆழ்வார் தாம் அடிமைப்படுவதாக அருளிச்செய்கிறார்.) 11
ஆதும் இல்லை மற்று அவனில் என்று அதுவே துணிந்து
தாது சேர் தோள் கண்ணனை குருகூர்ச் சடகோபன் சொன்ன
தீதிலாத ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும்
ஓத வல்ல பிராக்கள் நம்மை ஆளுடையார்கள் பண்டே–9-1-11
தாது சேர்தோள் கண்ணனை,Thaathu serthol kannanai - மாலையணிந்த தோள்களையுடைய பெருமானைக் குறித்து
அவனில் மற்று ஆதல் என்றதுவே துணிந்து,Avanil matru aadhal endrathuvae thuninthu - அவனையொழிய வேறெதுவு மில்லை யென்னுமத்யவஸாயத்தையே கொண்டு
குருகூர் சடகோபன் சொன்ன,Kurukoor Sadagopan sonna - ஆழ்வாரருளிச் செய்
ஒனா தமிழ்கள்,Ona tamizhkal - அழகிய தமிழினாலான
தீது இல்லாத இவை,Theethu illatha ivai - தீதற்ற இவ்வாயிரத்தினுள்ளே ஆயிரத்துள்
இப்பத்தும் ஒதவல்ல,Ippathum othavalla - இப்பதிகத்தைக் கற்கவல்ல
பிராக்கள்,Pirakkal - உபகாரர்களான் ஸ்வாமிகள்
பண்டே நம்மை ஆளுடையார்கள்,Pande nammai aaludaiyaargal - ஏற்கெனவே நம்மை அடிமை கொண்டவராவர்