| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 463 | பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 1 | சென்னியோங்கு தண் திருவேம்கடம் உடையாய் உலகு தன்னை வாழ நின்ற நம்பீ தாமோதரா சதிரா என்னையும் என் உடைமையும் உன் சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு நின்னருளே புரிந்து இருந்தேன் இனி என் திருக் குறிப்பே -5 -4-1 | சென்னி ஓங்கு, Chenni ongu - கொடு முடியானது (ஆகாசத்தளவும்) உயர்ந்திருக்கப் பெற்ற தண், Than - குளிர்ந்த திருவேங்கடம், Thiruvengadam - திருவேங்கட மலையை உடையாய், Udayai - (இருப்பிடமாக) உடையவனே! உலகு தன்னை, Ulagu thannai - உலகத்தவர்களை வாழ, Vaazha - வாழ்விப்பதற்காக நின்ற, Nindru - எழுந்தருளி யிராநின்ற நம்பீ, Nambi - (கல்யாண குணங்களால்) நிறைந்தவனே! தாமோதரா, Thamodhara - தாமோதரனே! சதிரா, Sathira - (அடியாருடைய குற்றத்தைக் கண்ணெடுத்துப் பாராத) சதிரை யுடையவனே! என்னையும், Yennaiyum - எனது ஆத்துமாவுக்கும் என் உடைமையையும், En udaimaiyaiyum - என் உடைமையான சரீரத்திற்கும் உன், Un - உன்னுடைய சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு, Sakara pori otrik kondu - ஸுதர்சனாழ்வானுடைய திரு விலச்சினையை இடுவித்து நின், Nin - உன்னுடைய அருளே, Arule - கருணையே புரிந்திருந்தேன், Purindhiruthen - (ஸ்வயம் பிரயோஜநமாக) விரும்பி யிரா நின்றேன் இனி, Ini - இப்படியான பின்பு திருக் குறிப்பு, Thirukkurippu - திரு வுள்ளக் கருத்து என், En - எதுவாயிருக்கின்றது? |
| 464 | பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 2 | பறவை ஏறு பரம் புருடா நீ என்னைக் கை கொண்ட பின் பிறவி என்னும் கடலும் வற்றிப் பெரும் பதம் ஆகின்றதால் இறவு செய்யும் பாவக்காடு தீக்கொளீஇ வேகின்றதால் அறிவை என்னும் அமுதவாறு தலைப் பற்றி வாய்க் கொண்டதே -5- 4-2 | பறவை ஏறு, Paravai eru - பெரிய திருவடி மேல் ஏறுமவனான பரம் புருடா, Param puruda - புருஷோத்தமனே! நீ, Nee - (ஸர்வ ரக்ஷகனான) நீ என்னை, Ennai - (வேறு கதி யற்ற) என்னை கைக் கொண்ட பின், Kaikonda pin - ஆட் படுத்திக் கொண்ட பிறகு பிறவி என்னும் கடலும், Piravi ennum kadalum - ஸம்ஸாரமாகிற ஸமுத்ரமும் வற்றி, Vatri - வறண்டு போய் (அதனால்) பெரும் பதம் ஆகின்றது, Perum padham agindradhu - பெரிய தரம் பெற்றதாகிறது இறவு செய்யும், Iravu seiyum - (இவ்வாத்துமாவை) முடிக்கிற பாவக்காடு, Pavakkaadu - பாப ஸமூஹமானது தீக் கொளீஇ, Thee koli - நெருப்புப் பட்டு வேகின்றது, Vegindradhu - வெந்திட்டது அறிவை என்னும், Arivai enum - ஞானமாகிற அமுதம் ஆறு, Amudham aaru - அம்ருத நதியானது தலைப் பற்றி வாய்க் கொண்டது, Thalaipatri vaaikondadhu - மேன் மேலும் பெருகிச் செல்லா நின்றது |
| 465 | பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 3 | எம்மனா என் குல தெய்வமே என்னுடை நாயகனே நின்னுள்ளேனாய் பெற்ற நன்மை இவ்வுலகினில் யார் பெறுவார் நம்மன் போலே வீழ்த்த முக்கும் நாட்டிலுள்ள பாவம் எலாம் சும்மெனாதே கை விட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே -5- 4-3 | எம் மனா, Em mana - எமக்குத் தலைவனே!;தாய் ; மன்னன் என் குல தெய்வமே, En kuladeivame - என் குடிக்குப் பரதேவதை யானவனே! என்னுடைய நாயகனே, Ennudaiya naayagane - எனக்கு நாதனானவனே! நின்னுளேன் ஆய், Ninnulen ai - உன் அபிமாநத்தில் ஒதுங்கினவனாய் நாட்டில் உள்ள எல்லாப் பாவங்களும், Naatil ulla ella paavangalum - உலகத்திலுள்ள எல்லாருடைய பாவங்களும்;நாடு சாஸ்திரம் என்றுமாம் சும்மெனாதே, Summenaathe - மூச்சு விடவும் மாட்டாமல் பெற்ற நன்மை, Petra nanmai - பெற்ற நன்மையை இ உலகினில், I ulaginil - இந்த உலகத்திலுள்ள ஆர் பெறுவார், Aar peruvaar - மற்று யார் தான் பெறுவர்? நம்மன் போல, Namman pol - பூத ப்ரேத பிசாசங்களைப் போல் (உருத் தெரியாமல் ஒளிந்து வந்து) வீழ்ந்து அமுக்கும், Veezhndhu amukkum - கீழே தள்ளி மேலே அமுக்கா நின்றுள்ள கை விட்டு, Kai vittu - ஸவாஸநமாக விட்டிட்டு ஓடி, Odi - ஓடிப் போய் தூறுகள், Thoorugal - புதர்களில் பாய்ந்தன, Paaindhana - ஒளிந்து கொண்டன |
| 466 | பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 4 | கடல் கடைந்து அமுதம் கொண்டு கலசத்தை நிறைத்தால் போல் உடல் உருகி வாய் திறந்து மடுத்து உன்னை நிறைத்துக் கொண்டேன் கொடுமை செய்யும் கூற்றமும் என் கோலாடி குறுகப் பெறா தடவரைத் தோள் சக்கரபாணீ சாரங்க வில் சேவகனே -5 -4-4 | தட வரை, Tada varai - பெரிய மலை போன்ற தோள், Thol - தோள்களை யுடையவனும் சக்கரபாணீ, Sakkarapani - திருவாழி யாழ்வானைத் திருக் கையிலுடையனுமானவனே! சார்ங்கம் வில், Saarngam vil - சார்ங்கத்தை வில்லாகக் கொண்ட சேவகனே, Sevakane - வீரனே! கடல், Kadal - திருப் பாற் கடலை கடைந்து, Kadainthu - (மந்தர மலையாகிற மத்தினால்) கடைந்து அமுதம் கொண்டு, Amudham kondu - (அக் கடலினின்றும்) அம்ருதத்தை யெடுத்து கலசத்தை, Kalasathai - கலசத்தில் நிறைந்த ஆ போல், Niraindha aa pol - (நீ) நிறைந்தது போல உடல் உருகி, Udal urugi - (அடியேன்)உடல் உருகப் பெற்ற வாய் திறந்து, Vaai thirandhu - வாயைத் திறந்து கொண்டு உன்னை, Unnai - (ஆராவமுதாகிய) உன்னை மடுத்து நிறைந்துக் கொண்டேன், Maduthu niraindhukonden - உட் கொண்டு தேக்கிக் கொண்டேன் கொடுமை செய்யும், Kodumai seiyum - (இனி) கொடிய தண்டங்களை நடத்துமவனான கூற்றமும், Kootramum - யமனும் என் கோல் ஆடி, En kol aadi - எனது செங்கோல் செல்லுமிடங்களில் குறுகப் பெரு, Kuruga peru - அணுக வல்லவனல்லன் |
| 467 | பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 5 | பொன்னைக் கொண்டு உரைகல் மீதே நிறம் எழ உரைத்தால் போலே உன்னைக் கொண்டு என் நாவகம் பால் மாற்றின்றி உரைத்துக் கொண்டேன் உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன் என்னையும் உன்னில் இட்டேன் என்னப்பா என் இருடீகேசா என் உயிர் காவலனே – 5-4 -5 | என் அப்பா, En appa - எனக்குத் தந்தையானவனே! என் இருடீகேசா, En irudeekesa - எனது இந்திரியங்களை (உன் வசப்பட்டொழுகும்படி) நியமிக்க வல்லவனே! என் உயிர், En uyir - என் ஆத்மாவை காவலனே, Kaavalane - (அந்ய சேஷமாகாதபடி) காக்க வல்லவனே! பொன்னை, Ponnai - ஸுவர்ணத்தை நிறம் ஏழ, Niram ezha - நிறமறிய (நிறத்தைப் பரீஷிப்பதற்காக) உரைகல் மீது கொண்டு, Uraikal meedhu kondu - உரைக் கல்லில் இட்டு உரைத்தால் போல், Uraithaal pol - உரைப்பது போல உன்னை, Unnai - (பரம போக்யனான) உன்னை என் நா அகம் பால் கொண்டு, En na agam paal kondu - என் நாவினுட்கொண்டு மாற்று இன்றி, Maatru indri - மாற்று அழியும்படி உரைத்துக் கொண்டேன், Uraithu konden - பேசிக்கொண்டு நின்றேன் உன்னை, Unnai - (யோகி கட்கும் அரியனான) உன்னை என்னுள் , Ennul - என் நெஞ்சினுள் கொண்டு வைத்தேன், kondu veithen - அமைத்தேன் என்னையும், Ennaiyum - (நீசனான) அடியேனையும் உன்னில் இட்டேன், Unnil itten - உனக்குச் சேஷப் படுத்தினேன் |
| 468 | பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 6 | உன்னுடைய விக்கிரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம் என்னுடைய நெஞ்சகம் பால் சுவர் வழி எழுதிக் கொண்டேன் மன்னடங்க மழு வலம் கை கொண்ட விராம நம்பீ என்னுடை வந்து எம்பெருமான் இனி எங்கு போகின்றதே -5- 4-6 | மன், Man - (துஷ்ட) க்ஷத்திரியர்கள் அடங்க, Adanga - அழியும்படி மழு, Mazhu - மழு என்னும் ஆயுதத்தை வலம் கை கொண்ட, Valam kai konda - வலக் கையில் ஏந்தி யிரா நின்றுள்ள இராமன், Raman - பரசு ராமனாய்த் திரு வவதரித்த விராம நம்பீ, Virama nambi - குண பூர்த்தியை யுடையவனே உன்னுடைய, Unnudaiya - உன்னுடைய விக்கிரமம், Vikkiramam - வீரச் செயல்களில் ஒன்று ஒழியாமல், Ondru ozhiyaamal - ஒன்று தப்பாமல் எல்லாம், Ellaam - எல்லாவற்றையும் என்னுடைய, Ennudaiya - என்னுடைய நெஞ்சகம் பால், Nenjagam paal - நெஞ்சினுள்ளே சுவர் வழி எழுதிக் கொண்டேன், Suvar vazhi ezhuthi konden - சுவரில் சித்திர மெழுதுவது போல எழுதிக் கொண்டேன்;பிரகாசிக்கும் படி கொண்டேன் எம் பெருமான், Em perumaan - எமக்குத் தலைவனே!எனக்கு உபகாரகன் ஆனவனே (கோபமும் உத்தேச்யம் -நமது விரோதி பாஹுள்யத்தைப் போக்கி அருளியதால்) என்னிடை வந்து, Ennidai vandhu - என் பக்கலில் எழுந்தருளி இனி , Ini - இனி மேல் போகின்றது, pogindrathu - போவதானது எங்கு, engu - வேறு எவ்விடத்தைக் குறித்து? |
| 469 | பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 7 | பருப்பதத்து கயல் பொறித்த பாண்டியர் குல பதி போல் திருப் பொலிந்த சேவடி என் சென்னியில் மேல் பொறித்தாய் மருப்பொசித்தாய் மல்லடர்த்தாய் என்று என்று உன் வாசகமே உருப் பொலிந்த நாவினேனை யுனக்கு உரித்து ஆக்கினையே -5 -4-7 | பருப்பதத்து, Paruppadhathu - மகா மேரு பர்வதத்தில் கயல், Kayal - (தனது) மகர த்வஜத்தை பொறித்த, Poritha - நாட்டின் பாண்டியர் குல பதி போல், Pandiyar kula pathi pol - பாண்டிய வம்சத்து அரசனைப் போல் திருப் பொலிந்து, Thiru polindhu - அழகு விளங்கா நின்றுள்ள சே அடி, Se adi - செந்தாமரை மலர் போன்ற திருவடிகளை என் சென்னியின் மேல், En chenniyin mel - என் தலையின் மீது பொறித்தாய் என்று, Porithaai endru - (அடையாளமாக) வாட்டி யருளினவனே! என்றும் மருப்பு ஒசித்தாய் என்று, Maruppu osithaai endru - (குவலயாபீடத்தின்) கொம்பை முறித்தவனே என்றும் மல், Mal - மல்லரை அடர்ந்தாய் என்று, Adarndhaai endru - நிரஸித்தவனே! என்றும் உன் வாசகமே, Un vaasagame - (இவ்வாறான) உனது செயல்களுக்கு வாசகமான திரு நாமத்தின் அநு ஸந்தாநத்தினாலேயே உருப் பொலிந்த நாவினேனை, Uru polindha naavinenai - தழும்பேறின நாக்கை யுடைய அடியேனை உனக்கு, Unakku - உனக்கு உரித்து ஆக்கினையே, Uritthu aakkinaiye - அநந்யார்ஹ சேஷனாக ஆக்கிக் கொண்டாயே |
| 470 | பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 8 | அனந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து என் மனந்தனுள்ளே வந்து வைகி வாழ செய்தாய் எம்பிரான் நினைந்து என்னுள்ளே நின்று நெக்கு கண்கள் அசும்பு ஒழுக நினைந்து இருந்தே சிரமம் தீர்த்தேன் நேமி நெடியவனே – 5-4 -8 | நேமி, Nemi - திருவாழி யாழ்வானை யுடைய நெடியவனே, Nediyaavane - ஸர்வாதிகனே! எம் பிரான், Em piran - எனக்குப் பரமோபகராகனானவனே! அனந்தன் பாலும், Anandhan paalum - திருவனந்தாழ்வானிடத்திலும் கருடன் பாலும், Garudan paalum - பெரிய திருவடியினிடத்திலும் ஐதுநொய்தாக வைத்து, Aidhu noithaaga vaithu - (அன்பை) மிகவும் அற்பமாக வைத்து என் மனம் தன் உள்ளே, En manam than ulle - எனது ஹருதயத்தினுள்ளே வந்து வைகி, Vandhu vaigi - வந்து பொருந்தி வாழச் செய்தாய், Vaazha seidhaai - (என்னை) வாழ்வித்தருளினாய் என் உள்ளே, En ulle - (இப்படி வாழ்வித்த உன்னை)என் நெஞ்சில் நினைந்து நின்று, Ninaindhu nindru - அநுஸந்தித்துக் கொண்டு நெக்கு, Nekku - (அதனால்) நெஞ்சு சிதிலமாகப் பெற்று கண்கள் அகம்பு ஒழுக, Kangal agambu ozhuga - கண்களினின்றும் நீர் பெருகும்படி நினைத்து இருந்தே, Ninaithu irundhe - (நீ செய்த நன்றிகளை) அநுஸந்தித்துக் கொண்டே சிரமம் தீர்த்தேன், Siramam theerthen - இளைப்பாறப் பெற்றேன் |
| 471 | பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 9 | பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என் மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ தனிக்கடலே தனிச் சுடரே தனி உலகே என்று என்று உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே -5- 4-9 | பனி, Pani - குளிர்ந்த கடலில், Kadalil - திருப்பாற் கடலில் பள்ளி கோளை, Palli kolai - பள்ளி கொள்ளுதலை பழக விட்டு, Pazhaga vittu - பழகியதாக விட்டு (மறந்து விட்டு) (பிறிவு உளவு என்று அன்றோ ஸூ கம் உள்ளது; சேர்ந்தே இருந்தால் மறதிக்கு இடம் இருக்குமே: குகன் இடம் பெருமாள்) ஓடி வந்து, Odi vandhu - (அங்கு நின்றும்) ஓடி வந்து என், En - என்னுடைய மனம் கடலில், Manam kadalil - ஹ்ருதயமாகிற கடலில் வாழ வல்ல, Vaazha valla - வாழ வல்லவனும் மாயம் , Maayam - ஆச்சரிய சக்தியை யுடையவனும் மணாள, Manaala - (பெரிய பிராட்டியார்க்குக்) கணவனும் நம்பீ, Nambi - குண பூர்ணனுமான எம்பெருமானே! தனி கடல் என்று, Thani kadal endru - ஒப்பற்ற திருப்பாற் கடல் என்றும் தனி சுடர் என்று, Thani sudar endru - ஒப்பற்ற ஆதித்ய மண்டலமென்றும் தனி உலகு என்று, Thani ulagu endru - ஒப்பற்ற பரம பதமென்றும் (சொல்லப்படுகிற இவை) உனக்கு இடம் ஆய் இருக்க, Unakku idam aai irukka - உனக்கு (ஏற்ற) வாஸஸ் ஸ்தாநமாயிருக்கச் செய்தேயும் (அவற்றை உபேக்ஷித்து விட்டு) என்னை, Ennai - (மிகவும் நீசனான) அடியேனை உனக்கு, Unakku - உனக்கு உரித்து ஆக்கினையே, Uritthu aakkinaiye - உரிய வாஸஸ் ஸ்தாநமாக அமைத்துக் கொண்டருளினையே! (இஃது என்ன ஸௌசீல்யம்!) |
| 472 | பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 10 | தடவரை வாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடும் கொடி போலே சுடர் ஒளியாய் நெஞ்சின் உள்ளே தோன்றும் என் சோதி நம்பீ வட தடமும் வைகுந்தமும் மதிள் த்வராவதியும் இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே -5 -4-10 | தடவரை வாய், Tadavarai vaai - பெரிய பர்வதத்தில் மிளிர்ந்து மின்னும், Milirndhu minnum - மிகவும் விளங்கா நின்றுள்ள தவளம் நெடு கொடி போல், Thavalam nedu kodi pol - பரிசுத்தமான பெரியதொரு கொடி போல சுடர் ஒளி ஆய், Sudar oli aai - மிக்க தேஜஸ் ஸ்வரூபியாய் என் நெஞ்சின் உள்ளே, En nenjin ulle - எனது ஹ்ருதயத்தினுள் தோன்றும், Thondrum - விளங்கா நின்றுள்ள சோதி நம்பீ, Jodhi nambi - ஒளியினால் நிரம்பியவனே! வட தடமும், Vada thadamum - வடதிசையிலுள்ள திருப்பாற்கடலும் வைகுந்தமும், Vaigundhamum - ஸ்ரீவைகுண்டமும் மதிள், Madhil - மதில்களை யுடைய துவராபதியும், Thuvara pathiyum - த்வாரகையும் (ஆகிற) இட வகைகளை, Ida vagaigalai - இடங்களை யெல்லாம் இகழ்ந்திட்டு, Igazhindittu - உபேஷித்து விட்டு என் பால், En paal - என்னிடத்தில் இடவகை கொண்டனையே, ida vagai kondanaiye - வாஸ்தக புத்தியைப் பண்ணி யருளினையே! (இஃது என்ன வாத்ஸல்யம்!) |
| 473 | பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 11 | வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலனைக் கொழும் குளிர் முகில் வண்ணனை ஆயர் ஏற்றை அமரர் கோவை அந்தணர் தம் அமுதத்தினை சாயை போலே பாட வல்லார் தாமும் அணுக்கர்களே -5 -4-11 | வேயர் தங்கள், Veyar thangal - வேயர் வைதிகர்களுடைய குலத்து, Kulathu - வம்சத்து (வைதிகர் குலம்) உதித்த, udhitha - அவதரித்த விட்டு சித்தன், Vittu Chithan - பெரியாழ்வாருடைய மனத்து, Manathu - ஹ்ருதயத்தில் கோயில் கொண்ட, kovil konda - திருக் கோயில் கொண்டெழுந்தருளி யிருக்கிற கோவலனை, Kovalanai - கோபாலனும் கொழு குளிர் முகில் வண்ணனை, kozhu kulir mugil vannanai - கொழுமையும் குளிர்ச்சியும் பொருந்தி மேகம் போன்ற நிறத்தை யுடையனும் ஆயரேற்றை, Aayarerrai - இடையர்களுக்குத் தலைவனும் அமரர் கோவை, Amarr kovai - நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹனும் அந்தணர், Andhanar - சனகர் முதலிய ப்ரஹ்ம மஹரிஷிகளுக்கு அமுதத்தினை, Amudhathinai - அம்ருதம் போல் இனியதுமான எம்பெருமானை பாட வல்லார் தாம், Paada vallaar thaam - (இத் திருமொழியினால்) பாட வல்லவர்கள் சாயைப் போல, Saayai pola - நிழல் போல அணுக்கர்களே, Anukkargale - (எம்பெருமானை எப்போதும்) அணுகி இருக்கப் பெறுவர்கள் |