Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: தீர்ப்பாரை யாமினி (11 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3062திருவாய்மொழி || (4-6–தீர்ப்பாரை யாமினி) (வெறி விலக்கு) (பராங்குசநாயகியன் தோழியானவள், ‘இந்நோய் பாண்டவபக்ஷ்பாதியான கண்ணபிரானடியாக வந்ததாகையாலே இதற்கு நீங்கள் பரிஹாரமாக நினைத்துச் செய்கிறவை பரிஹாரமல்ல’ என்று க்ஷேபிக்கிறாள்.) 1
தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்!
ஓர்ப்பால் இவ் வொண்ணுதல் உற்ற நல் நோய் இது தேறினோம்;
போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப்போர்த்
தேர்ப் பாகனார்க்கு இவள் சிந்தை துழாஅய்த் திசைக்கின்றதே.–4-6-1
அன்னை மீர்,Annai meer - தாய்மார்களே!
இனி,Ini - இப்படிப்பட்ட நிலைமையான பின்பு
தீர்ப்பாரை,Teerpaarai - இந்த நோயைத் தீர்க்க வல்லவர்களை
யாம் எங்ஙனம் நாடுதலும்,Yaam engganam naaduthalum - நாம் எவ்விதமாகத் தேடிப்பிடிக்க முடியும்? (முடியாது)
ஓர்ப்பால்,Oarpaal - நன்கு நிரூபிக்குமளவில்
இ ஓள் நுதல்,Iol nuthal - அழகிய நெற்றியையுடைய இப்பெண்பிள்ளை
உற்ற இது,Uttra idhu - அடைந்திருக்கின்ற இந்த நோயானது
நல் நோய்,Nal noy - விலக்ஷ்ணமான நோயாகும் ;
தேறினோம்,Therinom - திண்ணமாக அறிந்தோம் ;
அன்று,Andru - முன்பொருகாலத்திலே
போர்,Pour - பாரதப்போரிலே
பாகு,Paagu - பாகனாயிருந்து செய்யவேண்டிய காரியங்களை
தான் செய்து,Thaan seydhu - தானே முன்னின்று நடத்தி
ஐவரை,Aivarai - பஞ்சபாண்டவர்களை
வெல்வித்த,Velvitha - ஐயம் பெற்றவர்களாகச் செய்வித்த
மாயம்,Mayam - ஆச்சரிய சத்தியுக்தரும்
போர் தேர் பாகனார்க்கு,Pour ther paaganaarkku - யுத்தபூமியில் தேர்செலுத்தவல்லவருமான பெருமாள் விஷயத்திலே
இவள்,Ival - இப்பராங்குச நாயகியினுடைய
சிந்தை,Sindhai - மனமானது
துழாய்,Thuzhaay - துழாவப்பெற்று
திசைக்கின்றதுஎ,Thisaikkindradhue - அறிவழயா நின்றதே!
3063திருவாய்மொழி || (4-6–தீர்ப்பாரை யாமினி) (வெறி விலக்கு) (க்ஷுத்ர தெய்வங்களைக் குறித்துப்பண்ணும் சாந்திகளால் இவளுடைய நோய் போக்க வரிது; எம்பெருமானுடைய லக்ஷ்ணங்களைச் சொல்லில் இவளைப் பெறலாமென்கிறாள்.) 2
திசைக்கின்றதே இவள் நோய் இது மிக்க பெரும் தெய்வம்
இசைப்பின்றி நீர் அணங்கு ஆடும் இளம் தெய்வம் அன்று இது
திசைப்பின்றியே சங்கு சக்கரம் என்று இவள் கேட்க நீர்
இசைக்கிற்றீர் ஆகில் நன்றேயில் பெறுமிது காண்மினே –4-6-2
(அன்னைமீர்),Annai meer - தாய்மார்களே!,
திசைக்கின்றதே,Thisaikkindradhe - நீங்கள் இப்படியும் அறிவு கெடலாகுமோ?
இவள் நோய் இது,Ival noy idhu - இப்பெண்பிள்ளைக்கு உண்டாகியிருக்கின்ற இந்நோயானது
மிக்க பெரு தெய்வம்,Mikha peru dheivam - பராத்பரமான தெய்வமடியாக வந்தது;
இசைப்பு இன்றி,Isaippu indri - தகுதியில்லாதபடி
நீர்,Neer - நீங்கள்
அணங்கு ஆடும்,Anangu aadum - வெறியாடுவிக்கின்ற
இள தெய்வம் அன்று இது,Ila dheivam andru idhu - க்ஷு த்ரதெய்வமடியாக வந்ததன்று இது; (ஆதலால்)
திசைப்பு இன்றியே,Thisaippu indriye - மனக்குழப்பம் தவிர்ந்து
நீர்,Neer - நீங்கள்
இவள்கேட்க,Ival kaetka - இப்பெண்பிள்ளையின் காதில் விழும்படியாக
சங்கு சக்கரம் என்று,Sanghu sakkaram endru - சங்கென்றும் சக்கரமென்றும்
இசைக்கிற்றிர் ஆகில்,Isaikkindrir aagil - சொல்ல வல்லீர்களானால்
தன்றே,Thandre - நலமாகவே
இல் பெறும்;,Elperum - (இவள்) இல்லிருப்பப் பெறும்படியாகும்:
இது காண்மின்,Idhu kaanmin - இங்ஙனே நடத்திப் பாருங்கள்.
3064திருவாய்மொழி || (4-6–தீர்ப்பாரை யாமினி) (வெறி விலக்கு) (தவறுதலான செயல்களைச் செய்யாமல் எம்பெருமான் திருவடிகளை வாழ்த்துவதாகிற பரிஹார முறைமையை யனுட்டித்தால் இவளுடைய நோய் தீருமென்கிறாள்.) 3
இது காண்மின் அன்னைமீர்! இக்கட்டு விச்சி சொற் கொண்டு நீர்
எதுவானும் செய்து அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின்!
மதுவார் துழாய் முடி மாயப்பிரான் கழல் வாழ்த்தினால்
அதுவே இவள் உற்ற நோய்க்கும் அரு மருந்தாகுமே.–4-6-3
அன்னை மீர்,Annai meer - தாய்மார்களே!
இதுகாண்மின்,Idhu kaanmin - நான் சொல்லுகிற இக்காரியத்தைச் செய்துபாருங்கள்;
நீர்,Neer - நீங்கள்
இ கட்டுவிச்சி சொல்கொண்டு,I kattuvischi solkondru - இந்தக் குறத்தியின் பேச்சைக் கேட்டு
எதுவானாலும் செய்து,Eduvaanalum seydhu - ஸ்வரூப விருத்தமானதைச் செய்து
அங்கு,Angu - அவ்விடத்திலே
ஓர் கள்ளும் இறைச்சியும்,OrKallum iraichiyum - ஹேயமான மதுவையும் மாம்சஸத்தையும்
துர்வேல்மின்,Dhurveelmin - ஆராதனையாக வைக்கவேண்டர்
மது ஆர்,Madhu aar - தேன் பொருந்தின
துழாய்,Thuzhaai - திருத்துழாய் மாலையை
முடி,Mudi - திருமுடியிலணிந்துள்ள
மாயம் பிரான்,Maayam piraan - ஆச்சர்ய சக்தியுக்தனான ப்ரபுவினுடைய
கழல்,Kazhal - திருவடிகளை நோக்கி
வாழ்த்தினால்,Vazhthinaal - மங்களாசாஸனம் பண்ணினால்
அதுவே,Adhuvae - அதுதானே
இவள் உற்ற நோய்க்கும்,Ival utra noykum - இப்பெண்பிள்ளையடைந் திருக்கிற நோய்க்கும்
அரு மருந்து ஆகும்,Aru marundhu aagum - அருமையான மருந்தாகும்.
3065திருவாய்மொழி || (4-6–தீர்ப்பாரை யாமினி) (வெறி விலக்கு) (எம்பெருமானுடைய திருநாமங்களை இப்பெண்பிள்ளை செவிப்படச் சொல்லுவதே; இந்நோய்க்குப் பரிஹாரமென்கிறாள்.) 4
மருந்து ஆகும் என்று,அங்கு ஓர் மாய வலவை சொற் கொண்டு,நீர்
கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும் களன் இழைத்து என் பயன்?
ஒருங்காகவே உலகு ஏழும் விழுங்கி உமிழ்ந்திட்ட
பெருந்தேவன் பேர் சொல்லகிற்கில், இவளைப் பெறுதிரே.–4-6-4
(அன்னை மீர்),(Annai meer) - தாய்மார்களே!
மருந்து ஆகும் என்று,Marundhu aagum endru - நோய்க்குப் பரிஹாரமாகுமென்றெண்ணி
ஓர் மாயம் அலவை சொல் கொண்டு,Or maayam alavai sol kondu - வஞ்சகச் செய்கைகளையுடையளாயும் தோன்றினபடியே சொல்லுபவளாயமிருக்கின்ற ஒருத்தியின் பேச்சைக்கொண்டு
நீர்,Neer - நீங்கள்
கரு சோறும்,Karu sorum - கருஞ்சோற்றையும்
மற்றை செம்சோறும்,Matrai semsorum - மற்றுள்ள செஞ்சோற்றையும்
களன்,Kalan - நாற்சந்தியிலே
இழைத்து,Izhaitthu - இடுவதனால்
என் பயன்,En payan - என்ன பலனுண்டாம்? (இது வீணான காரியம்;)
உலகு ஏழும்,Ulaku ezhum - ஸப்தலோகங்களையும்
ஒருங்கு ஆக எ,Orungu aaga e - ஒருகாலே
விழுங்கி,Vizhungi - (பிரளம் கொள்ளாதபடி.)உட்கொண்டு
உமிழ்ந்திட்ட,Umiizhndittu - பிறகு வெளிப்படுத்தின
பெரு தேவன்,Peru devan - பரதேவதையான ஸ்ரீமந்நாராயணனுடைய
பேர்,Per - திருநாமங்களை
சொல்ல கிற்கில்,Solla kirl - (இவளது காதிலே படும்படி.)சொல்லவல்லீர்களானால்
இவளை பெறுதிர்,Ivalai peruthir - இவளை இழவாமே பெறுவீர்கள்.
3066திருவாய்மொழி || (4-6–தீர்ப்பாரை யாமினி) (வெறி விலக்கு) (மகளுடைய நோய் தீரவேணு மென்று நீங்கள் பண்ணுகிற பரிஹாரம் நோயை இன்னமும் அதிகப்படுத்தா நின்றதே யன்றித் தீரச்செய்கின்றதில்லையே: ஆனபின்பு இந்த முறைமைகளைவிட்டு நோயின் ஸ்வரூபத்திற்கு யோக்யமான பரிஹார முறைமை அனுஷ்டிக்கப் பாருங்களென்கிறாள்.) 5
இவளைப் பெறும் பரிசு இவ்வணங்கு ஆடுதல் அன்று;அந்தோ!
குவளைத் தடங்கண்ணும் கோவைச் செவ்வாயும் பயந்தனள்;
கவளக் கடாக்களிறு அட்டபிரான் திரு நாமத்தால்
தவளப் பொடிகொண்டு நீர் இட்டிடுமின்; தணியுமே.–4-6-5
அன்னைமீர்,Annai meer - தாய்மார்களே!
இவளை,Ivalai - இப்பெண்பிள்ளையை
பெறும்பரிசு,Perumparisu - (நோய்தீர்ந்து) நாம் பெறுதற்குரிய மார்க்கம்
இ அணங்கு ஆடுதல் அன்று,I anangu aaduthal andru - வெறியாடுதலாகிற இக்காரியமன்று
அந்தோ,Andho - ஐயோ!இ (இப்பெண்பிள்ளை)
குவளை தட கண்ணும்,Kuvalai thada kannum - குவளை மலர்போன்றதாய் விசாலமான கண்களும்
கோவை செம் வாயும்,Kovai sem vaayum - கோவைக்கனிபோன்று சிவந்த அதரமும்
பயந்தனன்,Payandhanan - வைவர்ணியமடையப்பெற்றாள்:
கவளம்,Kavalam - (இதற்குத்தகுந்த பரிஹாரமென்னவென்றால்) மதகரமான மருந்துகளைக் கவளங்கொண்டதாய்
கடா,Kada - மதம் பெற்றதான
களிறு,Kaliru - (குவலயாபீடமென்னும்) யானையை
அட்ட,Atta - தொலைத்தருளின
பிரான்,Piraan - ஸ்வாமியினுடைய
திருநாமத்தால்,Thirunaamathaal - திருநாமோச்சாரண பூர்வகமாக
தவளம் பொடி கொண்டு,Thavalam podi kondu - பரிசுத்தமான (ஸ்ரீவைஷ்ணவ பாத) தூளியைக் கொண்டு வந்து
நீர் இட்டிடுமின்,Neer ittitumin - நீங்கள் (இவள்மேல்) துர்வுங்கோள்
தணியும்,Thaniyum - (இவளதுநோய்) தீரும்.
3067திருவாய்மொழி || (4-6–தீர்ப்பாரை யாமினி) (வெறி விலக்கு) (கீழ்ப்பாட்டில் “தவளப்பொடிக்கொண்டு நீரிட்டிடுமன்தணியுமே” என்று கூறின தோழியை நோக்கித் தாய்மார் “நீ சொல்லுகிறபொடி இன்னதென்று தெரியவில்லையே!; விளங்கச்சொன்னால் நலம்” என்ன் அதனை விளங்க வுரைக்கின்றாளிப்பாட்டில்.) 6
தணியும் பொழுது இன்றி நீர் அணங்கு ஆடுதிர்; அன்னைமீர்!
பிணியும் ஒழிகின்றது இல்லை, பெருகும் இது அல்லால்;
மணியின் அணி நிற மாயன் தமர் அடி நீறு கொண்டு
அணிய முயலின், மற்று இல்லை கண்டீர் இவ்வணங்குக்கே.–4-6-6
அன்னைமீர்,Annai meer - தாய்மார்களே!
தணியும்பொழுது இன்றி,Thaniyum pozhuthu indri - சிறிதும் ஓய்வு இல்லாமல்
நீர் அணங்கு ஆடுதிர்,Neer anangu aaduthir - நீங்கள் வெறியாடுதலைச் செய்வியாநின்றீர்கள்;
பிணியும் ஒழிகின்றது இல்லை,Piniyum ozhiginrathu illai - (இவ்வெறியாடலினால்) நோயோ தீர்கின்றதில்லை;
இது அல்லால்,Ithu allaal - நோய்தீராத மாத்திரமேயன்றிக்கே
பெருகும்,Perugum - மேன்மேலும் வருத்தியுமடைந்து வருகின்றது;
இஅணங்குக்கு,I anangukku - இப்பெண்பிள்ளைக்கு
மணியில் அணி நிறம்,Maniyil ani nirama - நீலமணியிற்காட்டிலும் அழகிய நிறம்படைத்த
மாயன்,Maayan - எம்பெருமானுடைய
தமர்,Thamar - பக்தர்களான ஸ்ரீ வைஷ்ணவர்களினுடைய
அடி நீறு கொண்டு,Adi neeru kondu - பாததூளியைக் கொண்டு வந்து
அணிய முயலில்,Aniya muyalil - இடுவதற்கு முயற்சி செய்தால்
மற்று இல்லை கண்டீர்,Matru illai kandeer - (இதோடொத்த பரிஹாரம்) வேறெதுவுமில்லைகிடீர்.
3068திருவாய்மொழி || (4-6–தீர்ப்பாரை யாமினி) (வெறி விலக்கு) (இவளது நோய்க்குப் பரிஹாரமாக தேவதாந்தர பஜனம் பண்ணினால் இவளுக்கு இழவேயாம். இவள் பிழைக்க வேணுமென்றிருந்தீர்களாகில் ஸ்ரீவைஷ்ணவர்களைப் பணிவதே பாங்கு என்கிறாள். ஆடறுக்கவும் மது நிவேதனம் பண்ணவும் பாரிக்கின்ற பரிஹாரமுறையை வாய்விட்டு நிந்திக்கின்றாள்.) 7
அணங்குக்கு அருமருந்து என்று,அங்கு ஓர் ஆடும் கள்ளும்பராய்,
துணங்கை எறிந்து,நும் தோள் குலைக் கப்படும் அன்னைமீர்!
உணங்கல் கெடக் கழுதை உதடு ஆட்டம் கண்டு என் பயன்?
வணங்கீர்கள் மாயப் பிரான் தமர் வேதம் வல்லாரையே.–4-6-7
அணங்குக்கு,Anangukku - இப்பெண்பிள்ளைக்கு
அரு மருந்து என்று,Aru marunthu endru - அருமையான மருந்தென்று சொல்லி
அங்கு ஓர் ஆடும் கள்ளும் பராய்,Angu or aadum kallum paraai - தேவதாந்தரத்திற்கு ஆடறுக்கவும் கள் நிவேதனம் செய்யவும் பாரித்து
சுணங்கை எறிந்து,Sunangai erindhu - ஒருவகைக் கூத்தாடுதலையும் செய்வித்துக் கொண்டு
நும் தோள் குலைக்க படும் அன்னைமீர்,Num thol kullaikka padum annai meer - தோள்கள் துடிக்கக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற தாய்மார்களே!
உணங்கல்கெட,Unangal kedu - (இந்தக் கூத்தாடுதலைக் கண்டு கொண்டிருப்பதும் ஒரு வேடிக்கையோ?) உலர்த்தின நெல் பாழாய்ப் போக
கழுதை உதடு ஆட்டம் கண்டு என் பயன்,Kazhuthai uthadu aattam kandu en payan - (அதனை மேய்கிற) கழுதையின் உதடு அசைகின்ற அழகைக் கண்டு கொண்டிருப்பதனால் ஒரு பயனுண்டோ?
மாயன் பிரான்,Maayan praan - ஆச்சரிய சக்தியையுடையனான எம்பெருமானுடைய
தமர்,Thamar - பக்தர்களான
வேதம் வல்லாரை,Vedam vallaarai - வைதிகர்களை
வணங்கீர்கள்,Vanangeerkaal - வணங்குங்கள்.
3069திருவாய்மொழி || (4-6–தீர்ப்பாரை யாமினி) (வெறி விலக்கு) (வேத வித்துக்களான ஸ்ரீ வைஷ்ணவர்களைப் புருஷகாரமாகக் கொண்டு எம்பெருமான் திருவடிகளைப் பணிந்து இவளுடைய நோயைத் தீர்த்துக் கொள்ளாதே அற்ப தெய்வங்களைப் பணிதல் உங்களுக்குக் கீழ்மை யென்கிறாள்.) 8
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்
பாதம் பணிந்து,இவள் நோய் இது தீர்த்துக் கொள்ளாது போய்,
ஏதம் பறைந்து,அல்ல செய்து,கள்ளூடு கலாய்த்தூஉய்,
கீத முழவிட்டு, நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே.–4-6-8
(அன்னைமீர்),(Annai meer) - தாய்மார்களே!
வேதம் வல்லார்களை கொண்டு,Vedam vallaarkalai kondu - வைதிகர்களான ஸ்ரீவைஷ்ணவர்களைப் புருஷகாரமாகக் கொண்டு
விண்னோர் பெருமான்,Vinnor perumaan - நித்ய ஸூரிநாதனான எம்பெருமானுடைய
திருபாதம்,Thirupaadham - திருவடிகளை
பணிந்து,Panindhu - அச்ரயித்து
இவள் நோய் இது,Ival noyi idhu - இவளுடைய இந்த நோயை
தீர்த்துக்கொள்ளாது போய்,Theerthuk kollaadhu poyi - போக்கிக்கொள்ளாமல்
ஏதம் பறைந்து,Edham paraindhu - இழிவான பேச்சுகளைப்பேசி
அல்ல செய்து,Alla seidhu - ஸ்வரூபத்திற்குத் தகாத காரியங்களைச் செய்து
ஊடு,Oodu - நடுநடுவே
கள் கலாய் துர்ய்,Kal kalaai durya - தன்னைக் கலந்து துர்வி
கீதம் முழவு இட்டு,Geetham muzhavu ittu - வாத்ய கோஷங்களைப் பண்ணி
நீர் அணங்கு ஆடுதல்,Neer anangu aaduthal - நீங்கள் வெறியாடுவிக்கின்றவிது
கீழ்மையே,Keelmaiye - (இக்குடிக்கு) அவத்யமேயாம்
3070திருவாய்மொழி || (4-6–தீர்ப்பாரை யாமினி) (வெறி விலக்கு) (நீங்கள் அணங்காடுவதை நான் கண் கொண்டு காண மாட்டேன்; இவள் பிழைக்க வேணுமென்றிருந்தீர்களாகில் கண்ண பிரானுடைய திருவடிகளை நினைத்து வாழ்த்துங்கோள் என்கிறாள்.) 9
கீழ்மையினால் அங்கு ஓர் கீழ்மகன் இட்ட முழவின் கீழ்
நாழ்மை பலசொல்லி, நீர் அணங்கு ஆடும் பொய் காண்கிலேன்;
ஏழ்மைப் பிறப்புக்கும் சேமம் இந் நோய்க்கும் ஈதே மருந்து;
ஊழ்மையில் கண்ணபிரான் கழல் வாழ்த்துமின் உன்னித்தே.–4-6-9
(அன்னை மீர்),(Annai meer) - தாய்மார்களே!
கீழ்மையினால்,Keelmaiyinaal - உங்கள் நீசத்தனத்தினால்
அங்கு ஓர் கீழ்மகன் இட்ட முழவின் கீழ்,Angu or keelmagan itta muzhavin keel - நீசனான சண்டாளனொருவன் நடத்திப்
போரும் வாத்யகோஷத்தின் சார்பாக-

பல நாழ்மை சொல்லி,Pala naazhmai solli - தப்பு வார்த்தைகள் பலவற்றையுஞ் சொல்லி
நீர் அணங்கு ஆடும் பொய்,Neer anangu aadum poy - நீங்கள் வெறியாடுகின்ற விந்த வம்புவெலையை
காண்கிலேன்,Kaankilein - நான் கண்கொண்டு காணமாட்டேன்:
ஊழ்மையின்,Oozhmaiyin - (சிரமமாகச் செய்யவேண்டிய காரியம் என்னவென்றால்) முறைப்படியே
கண்ணபிரான்,Kannapiraan - க்ருஷணபகவானுடைய
கழல்,Kazhal - திருவடிகளை
உன்னித்து,Unnithu - சிந்தித்து
வாழ்த்துமின்,Vazhthumin - மங்களாசாஸநம் பண்ணுங்கள்:
ஈதே,Eedhe - இந்த மங்களாசாஸநமே
ஏழ்மை பிறப்புக்கும்,Ezmai pirappukkum - ஏழேழ் பிறவிக்கும்
சேமம்,Saemam - க்ஷேமகரம்:
இ நோய்க்கும்,I noikkum - இந்த நோய் தீருவதற்கும்
ஈதே மருந்து,Eedhe marunthu - இதுதான் மருந்து.
3071திருவாய்மொழி || (4-6–தீர்ப்பாரை யாமினி) (வெறி விலக்கு) (இப் பராங்குச நாயகிக்குக் கண்ணபிரான் பக்கலிலுள்ள அளவு கடந்த ப்ராவண்யத்தை யறிந்து நீங்கள் அதற்குத் தகுதியாக நடந்து கொள்வதே யுக்தமென்கிறாள் தோழி.) 10
உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள், அவனை அல்லால்;
நும் இச்சை சொல்லி,நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்!
மன்னப் படுமறை வாணனை வண் துவராபதி
மன்னனை ஏத்துமின்! ஏத்துதலும்,தொழுது ஆடுமே.–4-6-10
அவனை அல்லால்,Avanai allaal - எம்பெருமானைத் தவிர்த்து
மற்று ஒரு தெய்வம்,Matru oru deivam - வேறொரு தெய்வத்தை
உன்னித்து,Unnithu - ஒரு வஸ்துவாக நினைத்து
தொழாள்,Thozhaal - (இப்பெண்பிள்ளை) தொழுவது கிடையாது:
நும்,Num - (இப்படியிருக்க) உங்களுடைய
இச்சை,Icchai - மனம் போனபடியே
சொல்லி,Solli - (நான் அநுவாதம் செய்யவும் தகாத சொற்களைச்) சொல்லி
நும்,Num - உங்களுடைய
தோள் குலைக்கப்படும் அன்னை மீர்,Thol kulaikkappadum annai meer - தோள் அசையநிற்கிற தாய்மார்களே!,
மன்னப்படும்,Mannappadum - நித்யமாக விளங்குகின்ற வேதங்களினால் பிரதி பாதிக்கப்படுகிறவனும்
வண் துவராபதி மன்னனை,Van Dhuvaraapathi mannanai - அழகிய துவாரகாபுரிக்கு அதிபதியுமான எம்பெருமானை
ஏத்துமின்,Yaathumin - துதியுங்கோள்:
ஏத்தலும்,Yaathalum - துதித்தவுடனே
கதொழுது,Kadozhuthu - (இப்பெண்பிள்ளை உணர்த்தி பெற்று, அவனைத்) தொழுது
ஆடும்,Aadum - களித்துக் கூத்தாடுவாள்.
3072திருவாய்மொழி || (4-6–தீர்ப்பாரை யாமினி) (வெறி விலக்கு) (இத்திருவாய்மொழியை அன்போடு அதிகரிக்குமவர்கள் எம்பெருமானைப் பிரிந்து படுகையாகிற துக்கமின்றிக்கே வாழப்பெறுவர்கள் என்று பயனுரைத்துத் தலைக் கட்டுகின்றார்.) 11
தொழுது ஆடித் தூ மணி வண்ணனுக்கு ஆட்செய்து நோய் தீர்ந்த
வழுவாத தொல் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
வழுவாத ஆயிரத்துள் இவை பத்து வெறிகளும்
தொழுது ஆடிப் பாடவல்லார் துக்க சீலம் இலர்களே.–4-6-11
தொழுது ஆடி,Tozhuthu aadi - வணங்குதலும் கூத்தாடுதலுஞ் செய்து
தூ மணிவண்ணனுக்கு,Thoo manivannanukku - அழகிய நீலமணிபோன்ற நிறமுடையனான எம்பெருமானுக்கு
ஆள் செய்து,Aal seydu - அடிமைத்தொழில் செய்து
நோய் தீர்ந்த,Noy tirnta - நோய் தீரப்பெற்றவரும்,
வழுவாத,Valuvad - அவத்யமடையாத
தொல் புகழ்,Tol pugal - இயற்கையான புகழையுடையவரும்
வண் குருகூர்,Van kurukoor - அழகிய திருநகரிக்குத் தலைவருமான
சடகோபன்,Sadagopan - ஆழ்வார்
சொல்,Sol - அருளிச் செய்த
வழுவாத,Valuvad - குறையற்றதான
ஆயிரத்துள்,Ayirattul - ஆயிரத்தினுள்ளே
வெறிகள்,Verikal - வெறிவிலக்கு விஷயமான
இவை பத்தும்,Ivai pattum - இப்பதிகத்தை
தொழுதும் ஆடி,Tozhutum aadi - தொழுவதும் ஆடவதுமாய்க் கொண்டு
பாட வல்லார்,Pada vallar - பாடவல்லார்கள்
துக்க சீலம் இலர்கள்,Tukka cilam ilarkal - துக்கப்படுந்தன்மையில்லாதவராவர்.