Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: நீராய் நிலனாய் (12 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3315திருவாய்மொழி || (6-9—நீராய் நிலனாய்) (கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –ஜகதாகாரனாய் இருக்கிற படியை காட்டித் தந்தோம் இறே-என்ன அது போராது -அசாதாரணமாய் இருக்கிற வடிவைக் காண வேணும் என்கிறார்.) 1
நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடு வானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்
கூரார் ஆழி வெண் சங் கேந்திக் கொடியேன் பால்
வாராய்! ஒரு நாள் மண்ணும் விண்ணும் மகிழவே.–6-9-1
நீர் ஆய் நிலன் ஆய் தீ ஆய் கால் ஆய் கெடு வான் ஆய்,Neer aay nilan aay thee aay kaal aay kedu vaan aay - பஞ்ச பூதஸ்வரூபியும்
சீர் ஆர் சுடர்கள் இரண்டு ஆய்,Seer aar sudhargal irandu aay - சந்திரஸூர்யர்களாகிற சிறந்த தேஜ பதார்த்தஸ்வரூபியும்
சிவன் ஆய்,Sivan aay - சிவனுக்கு அந்தர்யாமியும்
அயன் ஆனாய்,Ayan aanaay - பிரமனுக்கு அந்தர்யாமியுமாயிருக்கும் எம்பெருமான்!
கூர் ஆர் ஆழி வெண் சங்கு ஏந்தி,Koor aar aazhi ven sangae aendhi - கூர்மைபொருந்திய திருவாழியையும் வெள்ளிய திருச்சங்கையும் திருக்கையில் தரித்துக்கொண்டு
மண்ணும் விண்ணும் மகிழ,Mannum vinnum magizha - உபய விபூதியும் களிக்கும்படி
ஒருநாள்,Oru naal - ஒருநாளாகிலும்
வாராய்,Vaarai - வந்தருளவேணும்.
3316திருவாய்மொழி || (6-9—நீராய் நிலனாய்) (கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் மஹா பலிக்கு உன் அழகைக் காட்டி அகில லோகத்தையும் அநந்யார்ஹம் ஆக்கிக் கொண்ட ஆச்சர்ய சக்தியை யுடைய நீ -நான் கண்டு உகக்கும்படி இந்த இடத்திலே வர வேணும் என்கிறார்.) 2
மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் வலங்காட்டி
மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே
நண்ணி உனை நான் கண்டு உகந்து கூத்தாட
நண்ணி ஒரு நாள் ஞாலத்தூடே நடவாயே.–6-9-2
மண்ணும் விண்ணும் மகிழ,Mannum vinnum magizha - உபய விபூதியும் (அழகு கண்டு) உகக்கும்படி
குறள் ஆய்,Kural aay - வாமனமூர்த்தியாய் (மாவலியிடம் சென்று)
வலம் பாட்டி,Valam paatti - தன்னுடைய சக்தியக்காட்டி
மண்ணும் விண்ணும் கொண்ட,Mannum vinnum konda - மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் அளந்துகொண்ட
மாயம் அம்மானே,Maayam ammaane - அற்புதனான ஸ்வாமியே!
உனை நான் நண்ணி,Unai naan nanni - உன்னை நான் கிட்டி
கண்டு உகந்து கூத்துஆட,Kandu ugandhu koothu aada - கண்ணாரக்கண்டு மகிழ்ந்து பரவசனாய் நர்த்தனம் பண்ணும்படியாக
நண்ணி,Nanni - இங்கே வந்து கிட்டி
ஒரு நாள்,Oru naal - ஒருநாளாகிலும்
ஞாலத்தூடே நடவாய்,Nyaalaththooda nadavay - இந்நிலத்திலே நடையழகு காட்டியருளாய்.
3317திருவாய்மொழி || (6-9—நீராய் நிலனாய்) (கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்) (கீதையில் * பரித்ராணாய ஸாதூநாம் … ஸம்பவாமி யுகேயுகே * என்றதை நினைப்பூட்டி “ஸமய விசேஷங்களலே எத்தனையோ விதமாக அவதாரங்கள் செய்வென்கிறார்.) 3
ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
சாலப் பல நாள் உகந்தோ றுயிர்கள் காப்பானே!
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பல நாள் அடியேன் இன்னும் தளர்வேனோ?–6-9-3
உகம் தோறு,Ugam thooru - ஒவ்வொரு யுகத்திலும்
ஞாலத்தூடே,Nyaalaththooda - பூமியிலே அவதரித்து
நடத்தும் நின்றும் கிடந்து இருந்தும்,Nadaththum ninrum kidandhu irundhum - நடப்பது நிற்பது கிடப்பது இருப்பதான செயல்களைச் செய்து
சால பல நாள்,Saala pala naal - பல்லாயிரமாண்டளவும்
உயிர்கள் காப்பானே,Uyirkal kaappaanai - பிராணிகளை ரக்ஷித்தருள்பவனே!
கோலம் திரு மா மகளோடு,Kolam thiru maa makhalodu - உன்னழகுக்கு ஏற்ற அழகுடையளான திருமாமகளுடனே (கூடியிருக்கிற)
உன்னை கூடாதே,Unnai koodaadhe - உன்னைக்கிட்டி யநுபவிக்கப்பெறாமல்
சால பல நாள்,Saala pala naal - (மேலுள்ள) மிகப்பலகாலமெல்லாம்
இன்னும் அடியேன் தளர்வேனோ,Innum adiyaen thalarveeno - உன்னுறவு பெற்று வைத்தும் அடியேன் இழந்து துடிப்பது தானே?
3318திருவாய்மொழி || (6-9—நீராய் நிலனாய்) (கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் பிரபலமான சகடாஸூரனை நிரசித்த நீ வருகைக்கு விரோதி யுண்டாகிலும் அத்தைப் போக்கி நான் காணும்படி வர வேணும் என்கிறார்) 4
தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல் வேறாப்
பிளந்து வீயத் திருக் காலாண்ட பெருமானே!
கிளர்ந்து பிரமன் சிவன் இந்திரன் விண்ணவர் சூழ
விளங்க ஒரு நாள் காண வாராய் விண் மீதே.–6-9-4
சகடம் அசுரர் உடல்,Sakadam asurar udal - சகடாசுரனுடைய உடலானது
தளர்ந்தும் முறிந்தும்,Thalarndhu murindhu - சின்ன பின்னமாகி
வேறு ஆ பிளந்து வீய,Veru aa pilandhu veeya - இருபிளவாகி உருமாய்ந்தொழியும்படியாக
திரு கால் ஆண்ட பெருமானே,Thiru kaal aanda perumaanai - திருவடிகளைக் கொண்டு காரியங் கொண்ட ஸ்வாமியே!
பிரமன் சிவன் இந்திரன் விண்ணவர்,Brahman Sivan Indiran vinnavar - பிரமன் முதலான தேவர்களெல்லாம்
கிளர்ந்து சூழ,Kilarndhu soozh - உத்ஸாஹத்தோடே வந்து சூழ்ந்துஸேவிக்க
விளங்க,Vilanga - அதனாலே ஒரு விளக்கம் உண்டாகும்படியாக
ஒரு நாள்,Oru naal - ஒரு நாளாகிலும்
வீண் மீது காணவாராய்,Veen meedhu kaanavaaraai - ஆகாசத்தின்மேலே கண்ணுக்குத் தோற்ற எழுந்தருளாய்.
3319திருவாய்மொழி || (6-9—நீராய் நிலனாய்) (கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்) (பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சாவதாரமென்கிற ஐந்து ப்ரகாரங்களைக் கொண்டு அடியார்களை உகப்பித்தருளாநின்ற நீ எனது நெஞ்சிலும் எழுந்தருளியிருந்து வைத்து என் கண்ணுக்குத் தோற்றாதேயிருந்தால் தளரமாட்டேனோ வென்கிறார்) 5
விண் மீதிருப்பாய்! மலை மேல் நிற்பாய்! கடற் சேர்ப்பாய்!
மண் மீதுழல்வாய்! இவற்றுள் எங்கும் மறைந்துறைவாய்!
எண் மீதியன்ற புற அண்டத்தாய்! என தாவி
உண் மீதாடி உருக் காட்டாதே ஒளிப்பாயோ!–6-9-5
விண் மீது இருப்பாய்,Vinn meedhu iruppaay - பரமபதத்தில் வீற்றிருப்பவனே!
மலை மேல் நிற்பாய்,Malai meel nirppaa - (அர்ச்சாரூபியாய்) திருமலையிலே நிற்குமவனே!
கடல் சேர்ப்பாய்,Kadal seerppaa - திருப்பாற்கடலிலே கண் வளர்ந்தருளுமவனே!
மண் மீது உழல்வாய்,Mann meedhu uzhalvaay - (ராமக்ருஷ்ணாதி விபவரூபத்தாலே அவதரித்து) பூமியின்மேல் ஸஞ்சரிப்பவனே!
இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய்,Ivattrul engum maraindhu uraivaay - இந்த ஜகத்தில் ஸகலபதார்த்தங்களிலும் அந்தர்யாமியாய் மறைந்து வர்த்திப்பவனே!
எண் மீது இயன்ற புறம் அண்டத்தாய்,Enn meedhu iyandra puram andaththaa - எண்ணிக்கைக்கு மேலே போகக் கடவதான (எண்ணிறந்த) பஹிரண்டங்களிலு முளனானவனே! (நீ)
எனது ஆவியுள்,Enadhu aaviyul - என்னுடைய நெஞ்சுக்குள்ளே
மீதாடி,Meedhaadi - மிகவும் நடையாடி விட்டு
உரு காட்டாதே,Uru kaattaadhe - வடிவைக் கண்ணுக்காட்டாமல்
ஒளிப்பாயோ,Oli paayo - ஒளிக்கின்றாயே! இது தகுதியோ?
3320திருவாய்மொழி || (6-9—நீராய் நிலனாய்) (கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –காண்கைக்கு இவர் தாம் அயோக்யர் என்று உபேக்ஷித்து அருளினானாகக் கொண்டு -யோக்யதை அயோக்யதை பாராதே லோகத்தை எல்லாம் அளந்து கொண்ட உன்னால் இழக்கப் படுவார் உண்டோ என்கிறார்.) 6
பாயோர் அடி வைத்து அதன் கீழ்ப் பரவை நிலமெல்லாம்
தாயோர் அடியால் எல்லா உலகும் தடவந்த
மாயோன்! உன்னைக் காண்பான் வருந்தி எனை நாளும்
தீயோடு உடன் சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ?–6-9-6
ஓர் அடி,Oru adi - ஒரு திருவடியை
பாய் வைத்து,Paay vaiththu - பரப்பிவைத்து
பாவை நிலம் எல்லாம்,Paavai nilam ellam - கடல் சூழ்ந்த ஸகல பூமியும்
அதன் கீழ்,Adhan keezh - அந்தத் திருவடியின்கீழே யாம்படி
தாய்,Thaai - தாவியளந்து,
ஓர் அடியால,Oru adiyaal - மற்றொரு திருவடியாலே
உலகு எல்லாம,Ulagu ellam - மேலுலக மெல்லாவற்றையும்
தடவந்த,Thadavanda - ஆக்ரமித்த
மாயோன்,Maayon - ஆச்சரியசேஷ்டிதவே!
உன்னை காண்பான்,Unnai kaanbaan - உன்னைக் காணவேண்டி
வருந்தி,Varundhi - பிரயாஸ்ப்பட்டு
தீயோடு உடன் சேர் மெழுகு ஆய்,Theeyodu udan seer mezhuvu aay - நெருப்போடு சேர்ந்த மெழுகின் தன்மையை யுடையேனாய்
உலகில,Ulakil - இவ்வுலகத்தில்
எனை நாளும் திரிவேனோ,Enai naalum thirivaayno - எத்தனைநாளும் தட்டித்திரிவதேயோ என்கதி?
3321திருவாய்மொழி || (6-9—நீராய் நிலனாய்) (கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்) (பிரானே! எல்லாம் உன்னுடைய ஸங்கல்பாயத்தமாயிருக்க, எனக்கு அருள் செய்வதுதானோ மிகை என்கிறார்.) 7
உலகில் திரியும் கரும கதியாய் உலகமாய்
உலகுக்கே ஓர் உயிரும் ஆனாய்! புற அண்டத்து
அலகில் பொலிந்த திசை பத்தாய அருவேயோ!
அலகில் பொலிந்த அறிவிலேனுக்கு அருளாயே.–6-9-7
உலகில் திரியும் கருமம் கதி ஆய்,Ulagil thiriyum karumam kathi aay - லோகத்தில் வியாபரிக்கிற ஸாதன கர்மஸ்வரூபியாயும்
உலகம் ஆய்,Ulagam aay - அந்தக கருமங்களை யனுஷ்டிப்பவர்கள் ஸ்வரூபியாயும்
உலகுக்கே ஓர் உயிரும் ஆனாய்,Ulakukke oru uyirum aanaay - ஸர்வலோகங்களுக்கும் எகாத்மாவாயும் நிற்பவனே!
புறம் அண்டத்து,Puram andaththu - அண்டங்களுக்கு வெளிப்பட்டிருப்பவர்களாய்
அலகு இல் பொலிந்த,Alaku il polinda - எண்ணிக்கையில்லாதபடி விளங்குபவர்களாய்
திசை பத்து ஆய,Disai paththu aay - பத்துத்திசைகளிலும் ஞானத்தாலே வ்யாப்தாயிருக்கின்ற முக்தாத்மாக்களை வடிவாகவுடையவனே!
அலகு இல் பொலிந்த அறிவிலேனுக்கு,Alaku il polinda arivilenukku - எண்ணிக்கையில்லாதபடி விளங்குகின்ற அஜ்ஞானத்தையுடையேனான என் விஷயத்தில்
அருளாய்,Arulai - க்ருபைபண்ணவேணும்.
3322திருவாய்மொழி || (6-9—நீராய் நிலனாய்) (கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் -தேஜோ மாயா விக்ரஹத்தையுடைய நீ அவ்வடிவை எனக்கு அனுபவிப்பியாதே சாம்சாரிக விஷயங்களில் தள்ளி இன்னம் கெடுக்கத் தேடுகிறாயோ என்கிறார்.) 8
அறிவிலேனுக்கு அருளாய் அறிவார் உயிரானாய்!
வெறி கொள் சோதி மூர்த்தி! அடியேன் நெடுமாலே!
கிறி செய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ?
பிறிதொன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே.–6-9-8
அறிவார் உயிர் ஆனாய்,Arivaar uyir aanaay - ஞானிகளை ஆத்மாவாக வுடையவனே!
வெறி கொள் சோதி மூர்த்தி,Veri kol sodi moorthi - ஸுகந்தமயமாய் தேஜோமயமாயிருந்துள்ள திவ்யமங்கள விக்ரஹத்தையுடையவனே!
அடியேன் நெடுமாலே,Adiyaen nedumaale - அடியேனிடத்தில் அளவுகடந்த வியாமோஹமுடையவனே!
அறிவு இலேனுக்கு அருளாய்,Arivu ilenukku arulai - அறிவிலியான என் விஷயத்திலே அருள் செய்ய வேணும்.
பிறிது ஒன்று அறியா அடியேன் ஆவி திகைக்க,Piridhu onru ariya adiyaen aavi thigaiyka - வேறொரு புகலறியாத அடியேனுடைய நெஞ்சு கலங்கும்படியாக
கிறி செய்து,Kiri seydhu - ஏதோ சூதுபண்ணி
என்னை புறத்து இட்டு,Ennai purathu ittu - என்னைப் புறம்புண்டான பற்றுக்களிலே அகப்படுத்தி
இன்னம் கெடுப்பாயோ,Innam kettuppaayoo - இன்னமும் கெடுக்க நினைக்கிறாயோ?
3323திருவாய்மொழி || (6-9—நீராய் நிலனாய்) (கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் உனக்கு விதேயமான விஷய இந்திரியங்கள் நடையாடுகிற தேசத்திலே வைத்து என்னை முடிக்கத் தேடுகிறாயோ உன் திருவடிகளில் அழைத்துக் கொள்ளும் காலம் அணித்தது ஆகாதோ என்கிறார்.) 9
ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவி யேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ?
தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ.–6-9-9
ஆவி திகைக்க,Aavi thigaiyka - நெஞ்சு கலங்கும்படியாந
ஐவர் குமைக்கும்,Aivar kumaikkum - பஞ்சேந்திரியங்களும் பீடிக்கும் படியான
சிற்றின்பம்பல,Sitrinbampala - அற்பாஸரங்களான விஷயங்கள் பலவற்றை
பாவியேனை நீ காட்டி,Paaviyeanai nee kaatti - பாவியேன் கண்ணிலே நீ காண்பித்து
படுப்பாயோ,Paduppaayoo - முடிக்க நினைக்கிறாயோ?
வையம் தாவி,Vaiyam thaavi - பூமி முழுவதையும் அளந்து கொண்ட ஸ்வாதீனமாக்கிக் கொண்ட
தட தாமரை கட்கே,Thada thamarai kattke - பெரிய திருவடித் தாமரைகளிலே நான் அந்வயிக்கும்படி
கூவிக்கொள்ளும் காலம்,Koovikkollum kaalam - என்னை யழைத்துக் கொள்ளுங்காலம்
இன்னம் குறுகாதோ,Innam kurukaadho - இன்னமும் ஸமீபித்ததாக ஆகக்கூடாதோ?
3324திருவாய்மொழி || (6-9—நீராய் நிலனாய்) (கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –வைஷயிக ஸூகத்தை அல்பம் அஸ்திரம் என்று இருந்தீர் ஆகில் -அநந்தமாய் ஸ்திரமான கைவல்ய புருஷார்த்தை பற்றினாலோ என்னில் -அத்தை உன் திருவடிகளில் கைங்கர்யம் அல்லாமையாலே வேண்டா என்றேன் அத்தனை -அப்படியே கைவல்யமும் வேண்டேன் -என்கிறார்.) 10
குறுகா நீளா இறுதி கூடா எனை ஊழி
சிறுகா பெருகா அளவில் இன்பம் சேர்ந்தாலும்
மறுகால் இன்றி மாயோன்! உனக்கே ஆளாகும்
சிறு காலத்தை உறுமோ அந்தோ! தெரியிலே.–6-9-10
மாயோன்,Maayon - ஆச்சரியமானவனே!
குறுகா நீளா,Kurugaa neelaa - ஸ்வருபத்தில் ஸங்கோச விகாஸ மில்லாமலும்
இறுதி கூடா,Irudi kooda - முடிவுமில்லாமலும்
எனை ஊழி,Enai oozhi - எக்காலத்திலும்
சிறுகா பெருகா,Sirukaa perugaa - க்ஷய வ்ருத்திகளில்லாமலும்
அளவு இல்,Alavu il - பரிச்சேதமற்றதாயு மிருக்கிற
இன்பம்,Inbam - கைவல்யா நுபவஸுகமானது
சேர்ந்தாலும்,Serndhaalum - வந்து கூடினாலும்
தெரியில்,Theriyil - நிரூபித்துப்பார்க்கில்
மறுகால் இன்றி,Marukaal inri - பின்னையொருகாலும் இல்லாதபடியாக (மிகவும் அற்பகாலமாக)
உனக்கே ஆன் ஆகும் சிறு காலத்தை,Unakke aan aakum siru kaalatthai - உனக்கே அடிமைப்படும்படியான ஸ்வல்பகாலத்தை
உறுமோ,Urumoo - ஒத்திருக்குமோ?
அந்தோ,Andhoo - ஐயோ?
3325திருவாய்மொழி || (6-9—நீராய் நிலனாய்) (கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்) (இத் திருவாய்மொழியானது தன்னோடு அந்வயமுடையாரை ஸர்வரக்ஷகனான எம்பெருமானுக்கு அநந்யார்ஹ சேஷ பூதராக்குமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11
தெரிதல் நினைதல் எண்ண லாகாத் திருமாலுக்கு
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்
தெரியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
உரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே.–6-9-11
தெரித்தல் நினைதல் எண்ணல் ஆகா,Teriththal ninaiththal ennall aakaa - சாஸ்த்ரஜ்ஞானத்தாலும் மனனத்தாலும் த்யானத்தாலும் பரிச்சேகதிக்க முடியாத
திரு மாலுக்கு,Thiru Maalukku - ஸ்ரீமந்நாராயணனுக்கு
தொண்டர் தொண்டர்,Thondar thondar - உரிய அநந்யார்ஹ சேஷ பூதர்களான பக்த பக்தர்களுக்கு
தொண்டன்,Thondan - பக்தரான
சடகோபன்,Sadagopan - நம்மாழ்வார்
தெரிய சொன்ன,Theriyat sonna - விசதமாக அருளிச்செய்த
ஓர் ஆயிரத்துள்,Oor aayiraththul - விலக்ஷணமான ஆயிரத்தினுள்ளே
இ பத்தும்,ePaththum - இந்தத் திருவாமொழி (தன்னைக் கற்குமவர்களை)
உலகம் உண்டாதற்கு,Ulagam undaatharku - உலக முண்டவனான எம்பெருமான் விஷயத்திலே
உரிய தொண்டர் ஆக்கும்,Uriya thondar aakum - அநந்யார்ஹ சேஷ பூதாரக்கும்.
3414திருவாய்மொழி || (7-8–மாயா வாமன) (எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச்சரியப்படுதல்) (விசித்திரமான காரியங்களையும் காரணங்களையும் எல்லாம் விபூதியாக யுடையனாய் அனுசந்தித்து -இவை என்ன படிகள் என்று விஸ்மிதராய் எம்பெருமானைக் கிடக்கிறார்.) 1
மாயா! வாமனனே!மது சூதா! நீ அருளாய்
தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய்க் காலாய்த்
தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்
நீயாய் நீ நின்றவாறு இவை என்ன நியாயங்களே!–7-8-1
மாயா,Maayaa - ஆச்சரியமான செய்கைகளையுடையவனே!
வாமனனே,Vaamananey - வாமநாவதாரஞ் செய்தவனே!
மதுசூதா,Madhusootha - மதுகைடபர்களைத் தொலைத்தவனே!
நீ அருளாய்,Nee arulaai - உன்படிகளை நீயே அருளிச் செய்யவேணும்;
தீ ஆய் நீர் ஆய் நிலன் ஆய் விசும்பு ஆய்; கால் ஆய்,Thee aai neer aai nilan aai visumbu aai; kaal aai - பஞ்ச பூதங்களுமாய்
தாய் ஆய் தந்தை ஆய்,Thaai aai thandhai aai - மாதா பிதாக்களாய்
மக்கள் ஆய்,Makkal aai - வயிற்றில் பிறந்த பிள்ளைகளாய்
மற்றும் ஆய்,Matrum aai - அல்லாதவையுமாய்
முற்றும் ஆய்,Mutrum aai - சொல்லிச் சொல்லாத எல்லாமுமாய்
நீ ஆய்,Nee aai - அவதாரணமான தன்மை வாய்ந்த நீயாய்
நீ நின்ற ஆறு இவை,Nee ninra aaru ivai - நீ நிற்கிற இந்தச் தன்மைகள்
என்ன நியாயங்கள்,Enna niyayangal - என்னவகைகளோ!