Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: மாசறு சோதி (11 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3139திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) (பராங்குச நாயகி மடலூர்வதாக எண்ணினபடியை அறிந்ததோழி அதனை விலக்கப்புகுந்து ‘ஊரார் பழிசொல்வர்காண்’ என்ன; அவனுடைய அழகு முதலியவற்றிலே அகப்பட்டுக் கலங்கின நான் ஊரார் பழியை லக்ஷியம் பண்ணும் நிலைமையிலே இலேன் என்கிறாள் தலைவி.) 1
மாசறு சோதி என் செய்ய வாய் மணிக் குன்றத்தை
ஆசறு சீலனை ஆதி மூர்த்தியை நாடியே
பாசற வெய்தி அறிவிழந்து எனை நாளையம்
ஏசறும் ஊரவர் கவ்வை தோழி! என்செய்யுமே?–5-3-1
மாறு அறுசோதி,Maaru aruchothi - அழுக்கற்ற தேஜஸ்ஸையுடைய
செய்ய வாய்,Seiyya vaai - சிவந்த திருப்பவளத்தையுடைய
என் மணி குன்றத்தை,En mani kunraththai - மாணிக்கமலைபோல் எனக்கு யோக்யனானவனும்,
ஆக அது சீலனை,Aaga adhu seelanai - குற்றமற்ற சீலகுணத்தையுடையவனும்
ஆதி மூர்த்தியை,Aadhi moorthiyai - முழுமுதற் கடவுளுமான எம்பெருமானை
நாடி,Naadi - தேடி
பாக அறவு எய்தி,Paaga aravu eidhi - உடம்பில் பசுமை நிறம் அழிவடைந்து
அறிவு இழந்து,Arivu izhanthu - அறிவும் இழக்கப்பெற்று
ஏனை நானையம்,Ena nanaiyam - எத்தனை காலமிருப்போம்?
தோழி,Thozi - தோழியே!
ஏசு அறும்,Aesu arum - ஏசுவதற்கென்றே அற்றுத்தீர்ந்த
ஊரவர்,Ooravar - ஊராருடைய
கவ்வை,Kavvai - பழிமொழி
என் செய்யும்,En seyyum? - யாது செய்யும்?
3140திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) (கீழ்ப்பாட்டில், ஊரார் சொல்லுபழி நமக்கென்ன செய்யப் போகிறதென்றால்; ‘இப்படியும் ஒரு வார்த்தையுண்டோ? பழிக்கு அஞ்சாதே யிருக்கவொண்ணுமோ? பழி பரிஹரிக்கவேண்டியது அவசியமாயிற்றே’ என்ன, நான் பழி பரிஹரிக்க வேண்டாவென்று சொல்லுகின்றேனல்லேன்; பழி பரிஹரிக்கும்படியான நிலைமையில் இல்லையே! என்கிறாளிப்பாட்டில்.) 2
என் செய்யும் ஊரவர் கவ்வை? தோழீ! இனி நம்மை
என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறை கொண்டான்
முன் செய்ய மாமை இழந்து மேனி மெலி வெய்தி
என் செய்ய வாயும் கருங்கண்ணும் பயப் பூர்ந்தவே.–5-3-2
என் செய்ய தாமரை கண்ணன்,En seyya thaamarai kannan - சிவந்ததாமரை போன்ற திருக்கண்களையுடையனான என்னாதன்
என்னை,Ennai - என்னுடைய
நிறை,Nirai - அடக்கத்தை
கொண்டான்,kondaan - கொள்ளை கொண்டான்; (அதனாலே)
முன்,Mun - முதன் முதலாக
செய்ய மாமை இழந்து,Seyya maamai izhandhu - விலக்ஷணமான மேனி நிறம் அழியப்பெற்று
மேனி மெலிவு எய்தி,Meni melivu eidhi - சரீரமும் மெலிந்து
என் செய்ய வாயும்,En seyya vaayum - எனது சிவந்தவாயும்
கரு கண்ணும்,Karu kannum - கறுத்தகண்ணும்
பயப்பு ஊர்ந்து,Bayappu oornthu - பாலை நிறம் படரப் பெற்றன.
தோழீ,Thozhi - தோழியே!
இனி,Ini - இந்நிலைமையானபின்பு
நம்மை,Nammai - நம் விஷயத்திலே
ஊரவர் கவ்வை,Ooravar kavvai - ஊராருடைய பழிமொழி
என் செய்யும்,En seyyum - என்ன பண்ணும்?
3141திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) (எம்பெருமானுடைய அதிமாநுஷ சேஷ்டிதங்களிலே நெஞ்சைப் பறி கொடுத்த என்னை ஊராருடைய பழிமொழி என்ன செய்யுமென்கிறாள்.) 3
ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன் பேய் முலை
சார்ந்து சுவைத்த செவ் வாயன் என்னை நிறை கொண்டான்
பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடு அன்றி ஓர் சொல்லில்லேன்
தீர்ந்த என் தோழி! என் செய்யும் ஊரவர் கவ்வையே?–5-3-3
ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன்,Oorntha sakadam uthaiththa paathaththan - (நலிவதற்காக) ஊர்ந்து வந்த சகடத்தைப் பொடிபடுத்தின திருவடிகளையுடையவனும்
பேய்முலை,Peymulai - பூதனையின் முலையை
சார்ந்து,Saarnthu - மனம் பொருந்தி
சுவைத்த,Suvaiththa - பசையறவுண்ட
செம் வாயன்,Sem vaayan - செவ்விய வாயையுடையவனுமான எம்பிரான் (அந்தச் செயல்களாலே)
என்னை நிறைகொண்டான்,Ennai niraikondaan - என்னுடைய ஸ்த்ரீத்வ பூர்த்தியை அபஹரித்தான்;
தீர்ந்த என் தோழீ,Theerndha en thozhi - எனக்கு நன்மை தேடுகையிலே) அற்றுத் தீர்ந்திருக்கின்ற என் தோழியே!
போர்ந்தும பெயர்ந்தும்,Poornthum peyarnthum - எந்தவிதத்திலும்
அவனோடு அன்றி ஓர் சொல் இலேன்,Avanoadu anri or sol ileen - அவ்வெம் பெருமான் விஷயமான பேச்சன்றி வேறொரு பேச்சு உடையேனல்லேன்;
ஊரவர் கவ்வை என்செய்யும்,Ooravar kavvai enseyyum - ஊரார் அலர் தூற்றுதல் என்னை என்ன பண்ணும்?
3142திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –இப்படி தன்னைப் பிரிந்து துக்கப்படா நிற்க வாராத நிர்க்ருணனை -நீ என் செய்ய ஆசைப்படுகிறாய் என்ன -தன் பக்கலிலே எனக்கு அதி மாத்ர ப்ரேமத்தை விளைப்பித்த பரம உபகாரகனையே நீ நிர்க்ருணன் என்று சொல்லுவது என்று தோழியை கர்ஹிக்கிறார்.) 4
ஊரவர் கவ்வை எரு விட்டு அன்னை சொல் நீர் படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
காரமர் மேனி நம் கண்ணன் தோழீ! கடியனே?–5-3-4
தோழீ,Thozhi - தோழியே!
ஊரவர்,Ooravar - ஊராருடைய
கவ்வை,Kavvai - பழமொழிகளை
எரு இட்டு,Eru ittu - எரவாக இட்டு
அன்னை சொல் நீர் படுத்து,Annai sol neer padutthu - தாயின் ஹிதசைனமாகிற நீரைப்பாய்ச்சி
ஈரம் நெல் வித்தி,Eeram nel vithi - ஆசையாகிற நெல்லை விதைத்து
முளைத்த,Mulaittha - முளைப்பித்த
நெஞ்சம் பெரு செயுள்,Nenjam peru seiyul - நெஞ்சாகிற பெரிய வயலிலே
பேர் அமர் காதல்,Per amar kaadhal - பெரிய ஊர்ப்பூசலை விளைவிப்பதான காதலாகிற பயிரை
கடல் புரைய,Kadal puraiya - கடல்போலே அபரிச்சிந்நமாக
விளைவித்த,Vilaivittha - பலிக்கும்படிபண்ணின
கார் அமர் மேனி,Kaar amar meni - கார்கால மேகத்தின் நிறம் பொருந்திய திரு மேனியையுடைய
அடியனே,Adiyane - கடியனோ? (கடியனல்லன்)
3143திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -நான் சொல்லுகிறபடியே குணவாளன் அன்றிக்கே நீ சொல்லுகிறபடியே குண ஹீனன் ஆனாலும் என் நெஞ்சம் அவனை அல்லது அறியாது -உனக்கு அதில் ஒரு பலம் இல்லை என்கிறாள்.) 5
கடியன் கொடியன் நெடியமால் உலகங் கொண்ட
அடியன் அறிவரு மேனி மாயத்தன் ஆகிலும்
கொடிய என் நெஞ்சம் அவனென்றே கிடக்கும் எல்லே!
துடி கொள் இடை மடத் தோழி! அன்னை என் செய்யுமே!–5-4-5
கடியன்,Kadiyan - தன் காரியத்தில் விரைகின்ற கடுமையையுடையவன்
நெடியமால்,Nediya maal - போகத் தொடங்கினால் விலக்க அரிதாம்படி பெரிய மேன்மையையுடையவன்;
உலகம் கொண்ட அடியன்,Ulagam kondu adiyan - உலகம் முழுவதையும் தன்னதேயாம்படியளந்து கொண்ட திருவடியை யுடையவன்;
அறிவு அருமேனி மாயத்தான்,Arivu arumeni maayathaan - நல்லவனோ தீயவனோ என்று விவேகிக்க அரிதாம்படி அழகாலே மயக்கும் மாயத்தையுடையவன்;
கொடியன்,Kodiyaan - அக்காரியம் தலைக்கட்டினால் திரும்பிப் பாராமல்போகிற கொடியவன்;
ஆகிலும்,Aakilum - இங்ஙனே யானாலும்
கொடிய என் நெஞ்சம்,Kodiya en nenjam - கொடிதான என்னுடைய மனமானது
அவனே என்று கிடக்கும்,Avane endru kidakkum - அப்பெருமானே தஞ்சமென்று கிடக்கின்றது;
எல்லே,Elle - என்னே!
துடிகொள் இடை,Thudikol idai - உடுக்கை போன்ற இடையையும்
மடம்,Madham - மடப்பத்தையுமுடைய
தோழீ,Thozhi - தோழியே!
அன்னை,Annai - என் தாய்
என் செய்யும்,En seiyyum - என்ன செய்யக்கூடும்?
3144திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) (நீ இங்ஙனே துணிவு கொண்டால் தாயார் ஜீவிக்கமாட்டாள்; அத்தாலே ஊராருடைய பழிப்பும் மிகும் என்று தோழி சொல்ல, கண்ணபிரானுடைய குண சேஷ்டிதங்களில் நான் அகப்பட்டேன். இனி யார் என் செய்தாலென்ன என்கிறாள்.) 6
அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்!
என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி
மன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே.–5-3-6
தோழிமீர்,Thozhimeer - தோழிமார்களே!
முன்னை அமரர் முதல்வர்,Munnai amarar mudhalvar - நித்ய ஸூரிநாதனும்
வண் துவராபதி மன்னன்,Van dhuvaraapathi mannan - அழகிய த்வாரகாபுரிக்கு அரசனும்
மணிவண்ணன்,Manivannan - நீலமணிவண்ணனுமான
வாசுதேவன்,Vaasudevan - கண்ணபிரானாகிற
வலையுள்,Valaiyul - வலையினுள்ளே
அகப்பட்டேன்,Agappattaen - சிக்கிக் கொண்டேன்;
இனி,Ini - ஆன பின்பு
என்னை,Ennai - என் திறத்திலே
உமக்கு ஆசை இல்லை,Umakku aasai illai - நீங்கள் ஆசைவைக்க நியாயமில்லை;
அன்னை என் செய்யில்,Annai en seiyyil - தாய் எது செய்தால்தான் என்ன?
என் ஊர் என் சொல்லில்,En oor en sollil - என் ஊரார் எதுசொன்னால்தான் என்ன?
3145திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) (எம்பெருமான் பக்கலில் குண ஹாநி சொன்னவர்களுடைய வாய் அடங்கும்படி நாம் அவனைக் காணப் பெற்றுத் தலையாலே வணங்கலாம்படியான காலம் வாய்க்குமோ தோழீ என்கிறாள்.) 7
வலையுள் அகப்படுத்து என்னை நன் நெஞ்சம் கூவிக் கொண்டு
அலை கடற் பள்ளி அம்மானை ஆழிப் பிரான் தன்னைக்
கலை கொள் அகல் அல்கும் தோழி!நம் கண்களாற் கண்டு
தலையில் வணங்கவுமாங் கொலோ? தையலார் முன்பே.–5-3-7
கலைகொள்,Kalaikol - சேலை யணிந்ததும்
அகல்,Akal - அகன்றதுமான
அல்குல்,Alkull - நிதம்பத்தையுடைய
தோழீ,Thozhi - தோழியே,
என்னை,Ennai - என்னை
வலையுள்,Valaiyul - (தன்னுடைய குணசேஷ்டிதங்களாகிற) வலையிலே
அகப்படுத்து,Agappaduthu - சிக்கிக்கொள்ளும்படி செய்து
நல் நெஞ்சம்,Nal nenjam - (எனது) நல்ல நெஞ்சையும்
கூவிக்கொண்டு,Koovikkondu - அடியறுத்து அழைத்துக்கொண்டு
அலைகடல் பள்ளி அம்மானை,Alaikadal palli ammaanai - அலை யெறிகின் நாடலிலே (ஏகாந்தமாகப்) பள்ளிகொள்ளும் ஸ்வாமியாய்.
ஆழி பிரான் தன்னை,Aazhi praan thannai - திருவாழியாழ்வானை ஏந்தியுள்ள மஹோபகாரகனாக எம்பெருமானை
நம் கண்களால் கண்டு,Nam kangalal kandu - நமது கண்களாலே பார்த்து
தையலார் முன்பே,Thaiyalar munbae - (பழிசொல்லுகிற) மாதர்களின் நண்வட்டத்தில்
தலையில்,Thalaiyil - தலையாலே
வணங்கவும் ஆம் கொலோ,Vanangavum aam kolo - வணங்கவும் கூடுமோ?
3146திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) மஹோபகார சீலனான எம்பெருமானை குணஹீகன் என்று குறைகூறின தாய்மார் “அந்தோ! இப்பெருமானையோ நாம் குணஹீகனென்று சொன்னது!” என்று வெட்கப்பட்டுக் கவிழ் தலையிடும்படி நாம் அப்பெருமானைக் காண்பது என்றைக்கோ? என்கிறாள்.) 8
பேய் முலை உண்டு சகடம் பாய்ந்து மருதிடை
போய் முதல் சாய்த்துப் புள்வாய் பிளந்து களிறு அட்ட
தூ முறுவல் தொண்டை வாய்ப் பிரானை எந்நாள் கொலோ?
நாம் உறுகின்றது தோழீ! அன்னையர் நாணவே.–5-3-8
தோழீ,Thozhi - தோழியே!
பேண் முலை உண்டு,Paen mulai undu - பூதனையின் முலையைப் புசித்து
சாடல் பாய்ந்து,Saadal paayndhu - சகடத்தை முறித்துத் தள்ளி
மருது இடைபோய்,Marudhu idaipoy - இரட்டை மருதமரங்களிளிடையே தவழ்ந்து சென்று
முதல் சாய்த்து,Mudhal saaythu - (அற்றை) வேரோடே தள்ளி
புள்வாய் பிளந்து,Pulvaay pilandhu - பகாசுரனுடைய வாயைக் கிழித்து
களிறு அட்ட,Kaliru atta - குவளையபீட யானையைக் கொன்று முடித்த
தூ முறுவல் தொண்டை வாய்பிரானை,Thoo muruval thondai vaaypiraanai - பரிசுத்தமான மந்தஹாஸத்தையும் கொங்கைக் களிபோனற் திருபப்பவளத்தையுமுடைய பெருமானை
அன்னையர் நாண,Annaiyar naana - தாய்மார் தலைதொங்கும்படியாக
உரம் உறுகின்றது,Uram urugindrathu - நாம் கிட்டுவது
ஏ நான் கொலோ,E naan kolo - என்றைக்கோ?
3147திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) (என் பக்கல் ஸர்வஸ்வமும் கொள்ளை கொண்டு எட்டா நிலத்திலிருக்கிறவனை ஸகல லோகமும் பழிக்கும்படி மடலூரக் கடவேனென்று தோழிற்குத் தனது நெஞ்சை வெளியிடுகிறாள்.) 9
நாணும் நிறையும் கவர்ந்து என்னை நன்நெஞ்சம் கூவிக் கொண்டு
சேணுயர் வானத்திருக்கும் தேவ பிரான் தன்னை
ஆணை என் தோழீ! உலகு தோறு அலர் தூற்றி ஆம்
கோணைகள் செய்து குதிரியாய் மடல் ஊர்துமே.–5-3-9
என் தோழி,En thozhi - எனது தோழியே!,
என்னை,Ennai - என்பக்கலில் நின்றும்
நாணும்,Naanum - நாணத்தையும்
நிறையும்,Niraiyum - அடக்கத்தையும்
கவர்ந்து,Kavarnthu - கொள்ளை கொண்டு
நல் நெஞ்சம் கூய்க்கொண்டு,Nal nenjam kooykondru - (எனது) நல்ல நெஞ்சையும் ஆகர்ஷித்துக்கொண்டு
சேண் உயர் நாளத்து இருக்கும்,Sen uyar naalathu irukkum - மிகவும் உயர்ந்த பரமபதத்திலெழுந்தருளியிருக்கிற
தேவபிரான் தன்னை,Devapiraan thannai - நிதய் ஸூரிநாதனை
உலகு தோறு,Ulaku thoaru - ஒவ்வொருவலகத்திலும்
அவர் தூற்றி,Avar thootri - பழிதூற்றி
ஆம் கோணைகள் செய்து,Aam konaigal seydhu - செய்யக்கூடிய மிறுக்குக் களைச்செய்து
கு திரி ஆய்,Ku thiri aay - அடங்காத பெண்ணாய்
மடல் ஊர்தும்,Madal oordhum - மடலூரக் கடவோம்;
ஆணை,Aanai - இது திண்ணம்
3148திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) (மடலூர்வதில் தனக்குள்ள உறுதியை நன்கு வெளியிடுகிறாள். பாட்டினடியில் யாம் என்றது ஸ்வ ஸ்வரூபத்தை உறுத்திக் காட்டுகிறபடி.) 10
யாமடல் ஊர்ந்தும் எம் ஆழி அங்கைப் பிரானுடைத்
தூமடல் தண்ணத் துழாய் மலர் கொண்டு சூடுவோம்
யாமடம் இன்றித் தெருவு தோறு அயல் தையலார்
நா மடங்காப் பழி தூற்றி நாடும் இரைக்கவே.–5-3-10
யா மடம் இன்றி,Yaa madam indri - ஏதேனும் ஒரு படியாலும் பெண்மைக்குரிய ஒடுக்கமில்லாமல்
தெருவு தோறு,Theruvu thooru - வீதிகள் தோறும் புகுந்து
அயல் தைய லார்,Ayal thaya laar - அயல் பெண்களும்
நாடும்,Naadum - ஸகல லோகமும்
நா மடங்கா பழி தூற்றி,Naa madangaa pazi thootri - நாக்கு இடைவிடாதே சொல்லுகிற பழிமொழிகளைத் தூற்றி
இரைக்க,Irakka - இரைச்சல் போடும்படி
யாம்,Yaam - நாம்
மடல் ஊர்ந்தும்,Madal oordhum - மடலூர்ந்தாகிலும்
ஆழி அம் கை நம்பிரானுடைய,Aazhi am kai nambiraanudaiya - திருவாழியைத் தரித்த அழகிய திருக்கையையுடைய எம்பெருமானுடைய
தூ மடல்,Thoo madal - பரிசுத்தமான இதழ்களையுடைய
தண் அம் துழாய் மலர்,Than am thuzhaay malar - குளிர்ந்தழகிய திருத்துழாய்மலர் மாலையை
கொண்டு,Kondu - அவன் தரப்பெற்று
சூடுவோம்,Sooduvom - தலையில் அணிவோம்.
3149திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -நிகமத்தில் இத்திருவாய் மொழி சொல்லும் தேசத்தில் எம்பெருமான் தானே வந்து நித்ய சம்ச்லேஷம் பண்ணும் -என்கிறார்) 11
இரைக்குங் கருங்கடல் வண்ணன் கண்ண பிரான் தன்னை
விரைக் கொள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொன்ன
நிரைக் கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
உரைக்க வல்லார்க்கு வைகுந்த மாகுந்தம் மூரெல்லாம்.–5-3-11
இரைக்கும்,Iraikum - கோக்ஷிக்கின்ற
ஈறா கடல் கண்ணன்,Eeraa kadal kannan - கருங்கடல் போன்ற வடிவழகையுடையவன்
கண்ணபிரான் தன்னை,Kannapiraan thannai - கண்ணபிரானான எம்பெருமானைக் குறித்து
விரை கொள்பொழில்,Virai kolpozhil - பரிமனம்மிக்க சோலைகளையுடைய
குருகூர்,Gurukoor - திருநகரியில் அவதரித்த
சடகோபன்,Sadagopan - ஆழியார்
சொன்ன,Sonna - அருளிச் செய்த
நிரைகொள்,Nirai kol - சாஸ்த்ரமரியாதைப்படியே ஒழுங்குகளைக்கொண்ட
அந்தாதி,Andaadhi - அந்தாதித் தொடையாமைந்த
ஓர் ஆயிரத்துள்,Oor aayiraththul - ஆயிரம் பாசுரங்களிலுள்ளே
இயற்றும்,Iyarrum - இப்பதிகத்தை
உரைக்க வல்லார்க்கு,Urakk valarkkum - ஓதவல்லவர்களுக்கு
தம் ஊர் எல்லாம்,Tham oor ellaam - தம்தம் இருப்பிடமெல்லாம்
வைகுந்தம் ஆகும்,Vaikundham aagum - பரமபதம் போலே பேரின்பசீலமாக விளங்கும்