Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: வாரணம் ஆயிரம் (11 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
556நாச்சியார் திருமொழி || 6 - வாரணம் ஆயிரம் (ஆயனை மணம் செய்து கொள்வதாகத் தான் கண்ட கனாவைத் தலைவி தோழிக்கு கூறுதல்) 1
வாரண மாயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்று எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புரம் எங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்
தோழீ, Thozhi - என் உயிர்த் தோழியே!
நம்பி, Nambi - ஸகல குண பரிபூர்ணனான
நாரணன், Naaranan - ஸ்ரீமந் நாராயணன்
ஆயிரம் வாரணம் சூழ, Aayiram Vaaranam Soozha - ஆயிரம் யானைகள் சூழ்ந்து வர
வலம் செய்து நடக்கின்றான் என்று எதிர், Valam Seidhu Nadakindran Endru Edhir - பிரதக்ஷிணமாக எழுந்தருளாகிற னென்று (வாத்ய கோஷதிகளால் நிச்சயித்து)
பொன் பூரண குடம் வைத்து, Pon Poorana Kudam Vaithu - பொன் மயமான பூர்ண கும்பங்களை வைத்து
புரம் எங்கும், Puram Engum - பட்டணம் முழுதும்
தோரணம் நாட்ட, Thoranam Naata - தோரண ஸ்தம்பங்கள் நாட்ட (இந்த நிலையையை)
நான் கனாக் கண்டேன், Naan Kanaa Kanden - நான் ஸ்வப்நத்தில் அநுபவித்தேன்
557நாச்சியார் திருமொழி || 6 - வாரணம் ஆயிரம் (ஆயனை மணம் செய்து கொள்வதாகத் தான் கண்ட கனாவைத் தலைவி தோழிக்கு கூறுதல்) 2
நாளை வதுவை மணம் என்று நாளிட்டு
பாளை கமுகு பரிசிடைப் பந்தல் கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பானோர்
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்
தோழீ, Thozhi - என் உயிர்த் தோழியே!
நாளை, Naalai - நாளைக்கு
வதுவை மணம் என்று நாள் இட்டு, Vadhuvai Manam Endru Naal Ittu - விவாஹ மஹோத்ஸவ மென்று முஹூர்த்தம் நிர்ணயித்து
பாளை கமுகு பரிசு உடை பந்தல் கீழ், Paalai Kamugu Parisu Udai Pandhal Keezh - பாளைகளோடு கூடின பாக்கு மரங்களாகிற அலங்காரங்களை யுடைத்தான மணப் பந்தலின் கீழே
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் காளை, Kolari Maadhavan Govindhan Enbaan Or Kaalai - நரஸிம்ஹனென்றும் மாதவனென்றும் கோவிந்தனென்றும் திருநாமங்கள் பூண்ட ஒரு யுவாவானவன்
புகுத, Pugutha - பிரவேசிக்க
நான் கனாக் கண்டேன், Naan Kanaa Kanden - நான் ஸ்வப்நத்தில் அநுபவித்தேன்
558நாச்சியார் திருமொழி || 6 - வாரணம் ஆயிரம் (ஆயனை மணம் செய்து கொள்வதாகத் தான் கண்ட கனாவைத் தலைவி தோழிக்கு கூறுதல்) 3
இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்
வந்து இருந்து என்னை மகள் பேசி மந்திரத்து
மந்திரக் கோடி யுடுத்தி மண மாலை
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்
தோழீ, Thozhi - என் உயிர்த் தோழியே!
இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம், Indiran Ullitta Devar Kuzham ellam - இந்திரன் முதலான தேவ ஸமூஹங்களெல்லாம்
வந்து இருந்து, Vandhu Irundhu - (இந்திலத்திலே) வந்திருந்து
என்னை மகள் பேசி, Ennai Magal Pesi - என்னைக் கல்யாணப் பெண்ணாக வார்த்தை சொல்லி
மந்திரித்து, Mandhirithu - அதற்குமேல் ஸம் பந்திகள் ஒருவர்க்கொருவர் செய்து கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் விஷயமாக யோசித்து முடிவுசெய்து கொண்டு (பிறகு)
அந்தரி, Andhari - ‘துர்க்கை‘ என்கிற நாத்தனார்
மந்திரம் கோடி உடுத்தி, Mandhiram Kodi Uduthi - கல்யாண புடைவையை எனக்கு உடுத்தி
மணம் மாலை சூட்ட, Manam Maalai Soota - பரிமளம் மிக்க புஷ்பங்களையும் சூட்ட
நான் கனாக் கண்டேன், Naan Kanaa Kanden - நான் ஸ்வப்நத்தில் அநுபவித்தேன்
559நாச்சியார் திருமொழி || 6 - வாரணம் ஆயிரம் (ஆயனை மணம் செய்து கொள்வதாகத் தான் கண்ட கனாவைத் தலைவி தோழிக்கு கூறுதல்) 4
நால் திசைத் தீர்த்தம் கொணர்ந்து நனி நல்கி
பாப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்து ஏத்தி
பூப்புனை கண்ணிப் புனிதனோடு என்தன்னை
காப்பு நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்
தோழீ, Thozhi - என் உயிர்த் தோழியே!
பாப்பனர் சிட்டர்கள் பல்லார், Paapanar Sittargal Pallaar - சிஷ்டர்களான பல ப்ராஹ்மணர்கள்
நால் திசை, Naal Dhisai - நான்கு திசைகளிலுமிருந்து
தீர்த்தம், Theertham - தீர்த்தங்களை
கொணர்ந்து, Konarndhu - கொண்டு வந்து
நனி நல்கி, Nani Nalki - நன்றாகத் தெளிந்து
எடுத்து ஏத்தி, Eduthu Ethi - உச்ச ஸ்வரமாக வெடுத்து மங்களா சாஸநம் பண்ணி
பூப்புனை கண்ணிப் புனிதனோடு, Poopunai Kanni Punithanodu - (பலவகைப்) புஷ்பங்கள் புனைந்த மாலையை யுடையவனாய்ப் பரம பாவநனான கண்ண பிரானோடு
என்றன்னை, Endrannai - என்னை (இணைத்து)
காப்பு நாண் கட்ட, Kaapu Naan Katta - கங்கணங்கட்ட
நான் கனாக் கண்டேன், Naan Kanaa Kanden - நான் ஸ்வப்நத்தில் அநுபவித்தேன்
560நாச்சியார் திருமொழி || 6 - வாரணம் ஆயிரம் (ஆயனை மணம் செய்து கொள்வதாகத் தான் கண்ட கனாவைத் தலைவி தோழிக்கு கூறுதல்) 5
கதிரொளி தீபம் கலசமுடன் ஏந்தி
சதிரள மங்கையர் தாம் வந்து எதிர் கொள்ள
மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டெங்கும்
அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்
தோழீ, Thozhi - என் உயிர்த் தோழியே!
சதிர் இள மங்கையர் தாம், Sathir Ila Mangaiyar Thaam - அழகிய இளம் பெண்கள்
கதிர் ஒளி தீபம், Kathir Oli Theepam - ஸூர்யனுடைய ஒளி போன்ற ஒளியை யுடைய மங்கள தீபத்தையும்
கலசம், Kalasam - பொற் கலசங்களையும்
உடன் ஏந்தி, Udan endhi - கையில் ஏந்திக் கொண்டு
வந்து எதிர் கொள்ள, Vandhu Edhir Kolla - எதிர் கொண்டு வர
மதுரையார் மன்னன், Madhuraiyar Mannan - மதுரையிலுள்ளார்க்கு அரசனான கண்ண பிரான்
அடி நிலை தொட்டு, Adi Nilai Thottu - பாதுகைகளைச் சாத்திக் கொண்டு
எங்கும் அதிர, Engum Adhira - பூமி யெங்கும் அதிரும் படியாக
புகுத, Pugutha - எழுந்தருள
நான் கனாக் கண்டேன், Naan Kanaa Kanden - நான் ஸ்வப்நத்தில் அநுபவித்தேன்
561நாச்சியார் திருமொழி || 6 - வாரணம் ஆயிரம் (ஆயனை மணம் செய்து கொள்வதாகத் தான் கண்ட கனாவைத் தலைவி தோழிக்கு கூறுதல்) 6
மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்
மைத்துனன் நம்பி மது சூதனன் வந்து என்னை
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்
தோழீ, Thozhi - என் உயிர்த் தோழியே!
மத்தளம் கொட்ட, Mathalam Kotta - மத்தளங்கள் அடிக்கவும்
வரி சங்கம் நின்று ஊத, Vari Sangam Nindru Oodha - ரேகைகளை யுடைய சங்குகளை ஊதவும்
மைத்துனன் நம்பி மதுசூதனன், Maithunan Nambi Madhusudhanan - மைத்துனமை முறையை யுடையனாய் பூர்ணனான கண்ண பிரான்
முத்து உடை தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ் வந்து, Muthu Udai Thaamam Nirai Thaazhntha Pandhal Keezh Vandhu - முத்துக்களை யுடைய மாலைத் திரள்கள் தொங்க விடப் பெற்று பந்தலின் கீழே வந்து
என்னை கைத் தலம் பற்ற, Ennai Kaithalam Patra - என்னைப் பாணி க்ரஹணம் செய்தருள
நான் கனாக் கண்டேன், Naan Kanaa Kanden - நான் ஸ்வப்நத்தில் அநுபவித்தேன்
562நாச்சியார் திருமொழி || 6 - வாரணம் ஆயிரம் (ஆயனை மணம் செய்து கொள்வதாகத் தான் கண்ட கனாவைத் தலைவி தோழிக்கு கூறுதல்) 7
வாய் நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால்
பாசிலை நாணல் படுத்துப் பரிது வைத்து
காய்சின வாய் களிறு அன்னன் என் கை பற்றி
தீ வலம் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான்
தோழீ, Thozhi - என் உயிர்த் தோழியே!
வாய் நல்லார், Vai Nallaar - நன்றாக ஓதின வைதிகர்கள்
நல்ல மறை ஓதி, Nalla Marai Odhi - சிறந்த வேத வாக்கியங்களை உச்சரிக்க
மந்திரத்தால், Manthirathaal - (அந்தந்த க்ரியைகளுக்கு இசைந்த) மந்த்ரங்களைக் கொண்டு
பாசு இலை நாணல் படுத்து, Paasu Ilai Naanal Paduthu - பசுமை தங்கிய இலைகளை யுடைத்தான நாணற் புல்லைப் பரிஸ்தரணமாக அமைத்து
பரிதி வைத்து, Parithi Vaithu - ஸமித்துக்களை இட்டு
காய்சின வாய் களிறு அன்னன், Kaaichina Vaai Kaliru Annan - மிக்க சினத்தை யுடைய மத்த கஜம் போல் செருக்கனான கண்ண பிரான்
என் கை பற்றி, En Kai Patri - என் கையைப் பிடித்துக் கொண்டு
தீ வலம் செய்ய, Thee Valam Seiya - அக்நியைச் சுற்றி வர
நான் கனாக் கண்டேன், Naan Kanaa Kanden - நான் ஸ்வப்நத்தில் அநுபவித்தேன்
563நாச்சியார் திருமொழி || 6 - வாரணம் ஆயிரம் (ஆயனை மணம் செய்து கொள்வதாகத் தான் கண்ட கனாவைத் தலைவி தோழிக்கு கூறுதல்) 8
இம்மைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் பற்றாவான்
நம்மை யுடையவன் நாராயணன் நம்பி
செம்மை யுடைய திருக்கையால் தாள் பற்றி
அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான்
தோழீ, Thozhi - என் உயிர்த் தோழியே!
இம்மைக்கு, Immaikku - இப் பிறவிக்கும்
ஏழ் ஏழ் பிறவிக்கும், Ezh Ezh Piravikum - மேலுள்ள பிறவிகள் எல்லாவற்றிற்கும்
பற்று ஆவான், Patru Aavaan - சரண்யனா யிருப்பவனாய்
நம்மை உடையவன், Nammai Udaiyavan - நமக்கு சேஷியாய்
நம்பி, Nambi - ஸகல கல்யாண குண பரிபூர்ணனாய்
நாராயணன், Narayanan - நாராயணனான கண்ண பிரான்
செம்மை உடைய திரு கையால், Semmai Udaiya Thiru Kaiyaal - செவ்விய (தனது) திருக் கையினால்
தாள் பற்றி, Thaal Patri - (எனது) காலைப் பிடித்து
அம்மி மிதிக்க, Ammi Midhikka - அம்மியின் மேல் எடுத்து வைக்க
நான் கனாக் கண்டேன், naan Kanaa Kanden - நான் ஸ்வப்நத்தில் அநுபவித்தேன்
564நாச்சியார் திருமொழி || 6 - வாரணம் ஆயிரம் (ஆயனை மணம் செய்து கொள்வதாகத் தான் கண்ட கனாவைத் தலைவி தோழிக்கு கூறுதல்) 9
வரிசிலை வாண் முகத்து என் ஐமார் தாம் வந்திட்டு
எரி முகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
அரிமுகன் அச்சுதன் கை மேல் என் கை வைத்து
பொரி முகந்து அட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்
தோழீ, Thozhi - என் உயிர்த் தோழியே!
வரி சிலை வான் முகம், Vari Silai Vaan Mugam - அழகிய வில் போன்ற புருவத்தையும் ஒளி பொருந்திய முகத்தை யுடையவர்களான
என் ஐமார் தாம், En Aimaar Thaam - எனது தமையன்மார்கள்
வந்திட்டு, Vandhittu - வந்து
எரிமுகம் பாரித்து, Erimugam Paarithu - அக்னியை நன்றாக ஜ்வலிக்கச் செய்து
முன்னே என்னை நிறுத்தி, Munne Yennai Niruthi - அந்த அக்னியின் முன்னே என்னை நிறுத்தி
அரி முகன், Ari Mugan - (ஹிரண்ய வதத்திற்காக) ஸிம்ஹ முகத்தை யுடைனாய் அவதரித்த
அச்சுதன், Achudhan - கண்ண பிரானுடைய
கை மேல், Kai Mel - திருக் கையின் மேல்
என் கை வைத்து, En Kai Vaithu - என்னுடைய கையை வைத்து
பொரி, Pori - பொரிகளை
முகந்து அட்ட, Mugandhu Atta - அள்ளிப் பரிமாற
நான் கனாக் கண்டேன், naan Kanaa Kanden - நான் ஸ்வப்நத்தில் அநுபவித்தேன்
565நாச்சியார் திருமொழி || 6 - வாரணம் ஆயிரம் (ஆயனை மணம் செய்து கொள்வதாகத் தான் கண்ட கனாவைத் தலைவி தோழிக்கு கூறுதல்) 10
குங்குமம் அப்பிக் குளிர் சாந்தம் மட்டித்து
மங்கல வீதி வலம் செய்து மண நீர்
அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனைமேல்
மஞ்சனமாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்
தோழீ, Thozhi - என் உயிர்த் தோழியே!
குங்குமம், Kungumam - குங்குமக் குழம்பை
அப்பி, Appi - உடம்பெல்லாம் பூசி
குளிர் சாந்தம், Kulir Saandham - குளிர்ந்த சந்தனத்தை
மட்டித்து, Mattithu - மணக்கத் தடவி
ஆனை மேல், Aanai Mel - மத்த கஜத்தின் மேலே
அவனோடும் உடன் சென்று, Avanodum Udan Sendru - அக் கண்ண பிரானோடு கூடியிருந்து
மங்கலம் வீதி, Mangalam Veethi - (விவாஹ நிமித்தமான) அலங்காரங்கள் விளங்குகின்ற வீதிகளிலே
வலம் செய்து, Valam Seidhu - ஊர்வலம் வந்து
மணம் நீர், Manam Neer - வஸந்த ஜலத்தினால்
மஞ்சனம் ஆட்ட, Manjanam Aatta - (எங்க ளிருவரையும்) திருமஞ்சனம் பண்ணுவதாக
நான் கனாக் கண்டேன், Naan Kanaa Kanden - நான் ஸ்வப்நத்தில் அநுபவித்தேன்
566நாச்சியார் திருமொழி || 6 - வாரணம் ஆயிரம் (ஆயனை மணம் செய்து கொள்வதாகத் தான் கண்ட கனாவைத் தலைவி தோழிக்கு கூறுதல்) 11
ஆயனுக்காக தான் கண்ட கனாவினை
வேயர் புகழ் வில்லிபுத்தூர்க் கோன் கோதை சொல்
தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயு நன் மக்களைப் பெற்று மகிழ்வரே
வேயர் புகழ், Veyar Pugazh - வேயர் குலத்தவரால் புகழப் பட்டவராய்
வில்லிபுத்தூர் கோன், Villiputhoor Kon - ஸ்ரீவில்லிபுத்தூர்க்குத் தலைவரான பெரியாழ்வாருடைய (திருமகளான)
கோதை, Kodhai - ஆண்டாள்
தான் ஆயனுக்கு ஆக கண்ட கனாவினை, Thaan Aayanukaaga Kanda Kanaavinai - தான் கோபால க்ருஷ்ணனுக்கு வாழ்க்கைப் பட்டதாகக் கனாக் கண்ட படியைக் குறித்து
சொல், Sol - அருளிச் செய்த
தூய, Thooya - பரிசுத்தமான
தமிழ் மாலை ஈர் ஐந்தும், Tamizh Maalai Eer Aindhum - தமிழ் தொடையான இப் பத்துப் பாட்டுக்களையும்
வல்லவர், Vallavar - ஓத வல்லவர்கள்
வாயும், Vaayum - நற்குணகளமைந்த
நன் மக்களைப் பெற்று, Nan Makkalai Petru - விலக்ஷணரான புத்திரர்களைப் பெற்று
மகிழ்வர், Magizhvar - ஆநந்திக்கப் பெறுவர்கள்