Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: பொன்னியல் (12 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
97ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 1
பொன்னியல் கிண் கிணி சுட்டி புறம்கட்டி
தன்னிய லோசை சலஞ்சல னென்றிட
மின்னியல் மேகம் விரைந்தெதிர் வந்தாற் போல்
என்னிடைக் கோட்டரா அச்சோ வச்சோ எம்பெருமான் வாரா அச்சோவச்சோ–1-8-1
பொன் இயல்,Pon iyal - பொன்னாற்செய்த
கிண்கிணி,Kinkini - அரைச் சதங்கை பாதச் சதங்கைகளையும்
சுட்டி,Sutti - சுட்டியையும்
புறம்,Puram - (அதற்கு உரிய) இடங்களிலே
கட்டி,Katti - அணிந்து
தன்,Than - சதங்கைக்கு
இயல்,Iyal - பொருந்திய
இசை,Isai - சப்தமானது
சலன் சலன் என்றிட,Salan salan endrida - சலன் சலனென்று ஒலிக்க
மின் இயல்,Min iyal - மின்னலோடு பொருந்திய
மேகம்,Megam - மேகமானது
விரைந்து,Viraindhu - வேகமாக ஓடி வந்து
எதிர் வந்தால் போல்,Ethir vanthal pol - எதிரே வந்தாற் போலே
என் இடைக்கு ஒட்டரா,En idaiyku ottara - என் இடையிலிருக்க (விரும்பி) ஓடிவந்து
அச்சோ அச்சோ,Achcho achcho - (என்னை) அணைத்துக் கொள்ள வேணும் அணைத்துக் கொள்ள வேணும்
எம்பெருமான்,Emperuman - எங்களுடைய தலைவனே!
வாரா,Vaara - வந்து
அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ
98ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 2
செங்கமலப் பூவில் தேனுண்ணும் வண்டே போல்
பங்கிகள் வந்து உன் பவள வாய் மொய்ப்ப
சங்கு வில் வாள் தண்டு சக்கர மேந்திய
அங்கைகளாலே வந்து அச்சோ வச்சோ ஆரத் தழுவா வந்து அச்சோ வச்சோ–1-8-2
செங்கமலம்,Sengamalam - செந்தாமரைப் பூவில்
தேன் உண்ணும்,Then unnum - தேனைக் குடிப்பதற்காக மொய்க்கின்ற
வண்டே போல்,Vande pol - வண்டுகளைப் போல
பங்கிகள் வந்து,Pangigal vandhu - (உனது) கூந்தல் மயிர்கள் வந்து
உன் பவளம் வாய்,Un pavalam vai - பவளம்போற் செந்நிறமான உனது வாயில்
மொய்ப்ப,Moippa - மொய்த்துக் கொள்ளும்படி
வந்து,Vandhu - ஓடி வந்து
சங்கு,Sangu - ஸ்ரீபாஞ்சஜன்யத்தையும்
வில்,Vil - ஸ்ரீசார்ங்கத்தையும்
வாள்,Val - நந்தகத்தையும்
தண்டு,Thandu - கௌமோதகியையும்
சக்கரம்,Chakkaram - ஸ்ரீஸூதர்சநாழ்வானையும்
ஏந்திய,Enthiya - (பூவேந்தினாற்போல) தரித்துக் கொண்டுள்ள
அம் கைகளாலே,Am kaigalale - அழகிய கைகளாலே
அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ
வந்து,Vandhu - ஓடிவந்து
ஆர தழுவா,Ara thazhuvaa - திருப்தி உண்டாகும்படி நன்றாகத் தழுவி
அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ
99ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 3
பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கை செய்து
நஞ்சுமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு
அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த
அஞ்சன வண்ணனே அச்சோ வச்சோ ஆயர் பெருமானே அச்சோ வச்சோ–1-8-3
பஞ்சவர்,Panjavar - பாண்டவர்களுக்காக
தூதன் ஆய்,Thoodhan aay - (துர்யோதநாதிகளிடம்) தூதனாய்ப் போய்
பாரதம்,Paaratham - (அந்த துர்யோதநாதிகள் தன் சொற்படி இசைந்து வராமையால்) பாரத யுத்தத்தை
கை செய்து,Kai seythu - அணி வகுத்துச் செய்து
நஞ்சு,Nanju - விஷத்தை
உமிழ்,Umizh - கக்குகின்ற
நாகம்,Naagam - (கானிய) ஸர்ப்பம்
கிடந்த,Kidandha - இருந்த
நல் பொய்கை,Nal poigai - கொடிய மடுவிலே
புக்கு,Pukku - புகுந்து
அஞ்சு,Anju - (ஆய்ச்சிகளும் ஆயரும்) பயப்படும்படி
பணத்தின் மேல்,Panathin mel - (அப்பாம்பின்) படத்திலே
பாய்ந்திட்டு,Paindhittu - குதித்து
அருள்செய்த,Arulseytha - (நடமாடி அக்காளியனை இணைப்பித்துப் பின்பு அவன் ப்ரார்த்திக்க) (அப்பாம்பின் ப்ராணனைக்) கருணையால் விட்டிட்ட
அஞ்சனம் வண்ணனே ! அச்சோ அச்சோ-;,Anjanam vannane Achcho achcho - அஞ்சனம் வண்ணனே ! அச்சோ அச்சோ-;
ஆயர்,Aayar - இடையர்களுக்கு
பெருமானே,Perumane - தலைவனானவனே!
அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ
100ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 4
நாறிய சாந்தம் நமக்கிறை நல்கென்ன
தேறி அவளும் திரு வுடம்பில் பூச
ஊறிய கூனினை உள்ளே யொடுங்க அன்று
ஏற வுருவினாய் அச்சோ வச்சோ எம்பெருமான் வாரா அச்சோ வச்சோ–1-8-4
நாறிய,Naariya - ‘நல்ல வாசனை வீசுகின்ற
சாந்தம்,Santham - சந்தனத்தை
நமக்கு,Namakku - எங்களுக்கு
இறை,Irai - கொஞ்சம்
நல்கு என்ன,Nalku enna - கொடு என்று (நீ) கூனியைக் கேட்க
அவளும்,Avalum - அந்தக் கூனியும் (‘இவர்கட்குக் கொடுத்தால் நம்மைக் கம்ஸன் தண்டிப்பனோ?’ என்று அஞ்சாமல்)
தேறி,Theri - மனம் தெளிந்து
திரு உடம்பில்,Thiru udambil - (உனது) திருமேனியிலே
பூச,Poosa - சாத்த
ஊறிய,Ooriya - வெகுநாளாயிருக்கிற
கூனினை,Kooninai - (அவளுடைய) கூனை
உள்ளே,Ulle - (அவள்) சரீரத்திற்குள்ளே
ஒடுங்க,Odunga - அடங்கும்படி
அன்று,Andru - அக் காலத்திலே
ஏற,Era - நிமிர்த்து
உருவினாய்,Uruvinai - உருவினவனே!
அச்சோ அச்சோ-;,Achcho achcho - அச்சோ அச்சோ-;
எம்பெருமான்! வந்து அச்சோ அச்சோ.,Emperumaan! vandhu achcho achcho - எம்பெருமான்! வந்து அச்சோ அச்சோ.
101ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 5
கழல் மன்னர் சூழக் கதிர் போல் விளங்கி
எழலுற்று மீண்டே இருந்து உன்னை நோக்கும்
சுழலைப் பெரிதுடைத் துச்சோதனனை
அழல விழித்தானே அச்சோ வச்சோ ஆழியங் கையனே அச்சோ வச்சோ–1-8-5
கழல்,Kalal - வீரக் கழலை யணிந்த
மன்னர்,Mannar - ராஜாக்கள்
சூழ,Sool - தன்னைச் சுற்றியிருக்க (அவர்கள் நடுவில்)
கதிர்போல்,Kathirpol - ஸூரியன்போல
விளங்கி,Vilangi - ப்ரகாசமாயிருந்து (‘கண்ணனுக்கு எழுந்திருத்தல் குசல ப்ரச்நம் பண்ணுதல் முதலிய மர்யாதை
எழல் உற்று,Ezhal utru - (ஒன்றும் செய்யக்கூடாது’ என்று கட்டளையிட்டிருந்த தானே தனக்கும் தெரியாமல்)(முதலில்) எழுந்திருந்து
மீண்டு,Meendu - மறுபடியும்
இருந்து,Irundhu - (தானெழுந்தது தெரியாதபடி) உட்கார்ந்து கொண்டு
உன்னை,Unnai - உன்னை
நோக்கும்,Nokkum - (பொய்யாஸநமிடுதல் முதலியவற்றால் கொல்வதாகப்) பார்த்த
பெரிது கழலை உடை,Perithu kalalai udai - மிகவும் (வஞ்சனையான) ஆலோசனையை யுடைய
துச்சோதனனை,Thuchchodhananai - துர்யோதநினை (திருவுள்ளத்திலுள்ள சீற்றமெல்லாம் பார்வையிலே தோன்றும்படி)
அழல விழித்தானே,Azhal vizhiththane - உஷ்ணமாகப் பார்த்தவனே!
அச்சோ அச்சோ-;,Achcho achcho - அச்சோ அச்சோ-;
ஆழி,Aazhi - திருவாழி யாழ்வானை
அம் கையனே,Am kaiyane - அழகிய கையிலேந்தியவனே!
அச்சோ அச்சோ-.,Achcho achcho - அச்சோ அச்சோ-;
102ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 6
போரொக்கப் பண்ணி இப் பூமிப் பொறை தீர்ப்பான்
தேரொக்க வூர்ந்தாய் செழுந்தார் விசயற்காய்
காரொக்கும் மேனிக் கரும் பெருங் கண்ணனே
ஆரத் தழுவாவந்து அச்சோ வச்சோ ஆயர்கள் போரேறே அச்சோ வச்சோ–1-8-6
இ பூமி, E poomi - இந்தப் பூமியினுடைய
பொறை,Porai - பாரத்தை
தீர்ப்பான்,Theerppan - தீர்ப்பதற்காக
போர்,Por - யுத்தத்தை
ஒக்க,Okka - (துர்யோதநாதிகளோடு) ஸமமாக
பண்ணி,Panni - செய்து
செழு,Sezhu - செழுமைதாங்கிய
தார்,Thar - மாலையை யுடைய
விசயற்கு ஆய்,Vijayarku aay - அர்ஜுநனுக்காக
தேர்,Ther - (அவனுடைய) தேரை
ஒக்க,Okka - (எதிரிகள் தேர் பலவற்றிற்கும் இது ஒன்றுமே) ஸமமாம்படி
ஊர்ந்தாய்,Oorndhai - பாகனாய்ச் செலுத்தினவனே!
கார் ஒக்கும்,Kaar okkum - மேகத்தோடு ஒத்த
மேனி,Meni - திருமேனியில்
கரும்பெருங் கண்ணனே,Karumperum kannane - கரியவாகிப் புடைபரந்து கண்களையுடையவனே!
வந்து,Vandhu - ஓடிவந்து
ஆர,Aara - நின்றாக
தழுவா,Thazhuvaa - தழுவிக்கொண்டு
அச்சோ அச்சோ-;,Achcho achcho - அச்சோ அச்சோ-;
ஆயர்கள்,Aayargal - இடையர்களுக்கு (அடங்கி நற்கின்ற)
போர் ஏறே,Por ere - போர் செய்யுந் தன்மையுள்ள ரிஷபம் போன்றவனே!
அச்சோ அச்சோ-.,Achcho achcho - அச்சோ அச்சோ-;
103ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 7
மிக்க பெரும் புகழ் மாவலி வேள்வியில்
தக்கது அன்று என்று தானம் விலக்கிய
சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய
சக்கரக் கையனே அச்சோ வச்சோ சங்க மிடத்தானே அச்சோ வச்சோ–1-8-7
மிக்க பெரும்புகழ்,Mikka perumpugazh - (ஔதார்யத்தால்) மிகுந்த கீர்த்தியை யுடைய
மா வலி,Maa vali - மஹாபலி (செய்த)
வேள்வியில்,Velviyil - யாகத்திலே (வாமநனாய்ச் சென்ற உனககு அந்த மஹாபலி நீ கேட்டதைக் கொöடுக்க முயன்ற வளவிலே)
இது,Ithu - நீ கொடுக்கிற விது
தக்கது அன்று,Thakkathu andru - தகுதியானதன்று’
என்று,Endru - என்று முறையிட்டு
தானம்,Thaanam - பூமி தானத்தை (அவன் தத்தம் பண்ணும் போது நீர் விழ வொட்டாமல்)
விலக்கிய,Vilakkiya - தடுத்த
சுக்கிரன்,Sukiran - சுக்கிராச்சாரியனுடைய
கண்ணை,Kannai - ஒரு கண்ணை
துரும்பால்,Thurumpaal - (உன் கையிலணிந்திருந்த) தர்ப்ப பவித்ரத்தின் நுனியால்
கிளறிய,Kilarriya - கலக்கின
சக்கரம் கையனே,Chakkaram kaiyane - சக்ராயுதமேந்திய கையை யுடையவனே!
அச்சோ அச்சோ-;,Achcho achcho - அச்சோ அச்சோ-;
சங்கம்,Sangam - பாஞ்ச ஜன்யத்தை
இடத்தானே,Idaththane - இடக்கையிலேந்தினவனே!
அச்சோ அச்சோ-.,Achcho achcho - அச்சோ அச்சோ-;
104ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 8
என்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன்
முன்னைய வண்ணமே கொண்டுஅள வாயென்ன
மன்னு நமுசியை வானில் சுழற்றிய
மின்னு முடியனே அச்சோ வச்சோ வேங்கட வாணனே அச்சோ வச்சோ–1-8-8
இது,Ithu - (வாமநனாய்ச் சென்ற திருமால் மாவலியிடத்தில் நீரேற்றுத் திரிவிக்கிரமனாய் வளர்ந்து அளக்கப் புகும் போது
அது கண்ட மஹாபலி புத்ரனான நமுசி ஓடிவந்து)
(யாசிக்கும் போதிருந்த வடிவம் மாறி யளக்கிற) இது

என் மாயம்,En maayam - என்ன மாயச் செய்கை!;
என் அப்பன்,En appan - என் தகப்பன்
அறிந்திலன்,Arinthilan - (நீ செய்யும் இந்தமாயத்தை) அறியவில்லை
முன்னைய வண்ணமே கொண்டு,Munnaiya vanname kondu - நீ யாசிக்க வந்த போதிருந்த வடிவத்தையே கொண்டு
அளவாய்,Alavaay - அளப்பாயாக
என்ன,Enna - என்று சொல்ல
மன்னு,Mannu - (இப்படி) பிடிவாதமாய் நின்ற
நமுசியை,Namusiyai - (அந்த) நமுசி யென்பவனை
வானில்,Vaanil - ஆகாசத்திலே
சுழற்றிய,Suzharriya - சுழலச் செய்த
மின்னு முடியனே,Minnu mudiyane - விளங்குகின்ற கிரீடத்தை யுடையவனே!
அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ-;
வேங்கடம்,Vengadam - திருமலையிலே
வாணனே,Vaanane - வாழுமவனே!
அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ
105ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 9
கண்ட கடலும் மலையும் உலகேழும்
முண்டத்துக் காற்றா முகில் வண்ணா ஓ ஒ வென்று
இண்டைச் சடை முடி ஈசன் இரக்கொள்ள
மண்டை நிறைத்தானே அச்சோ வச்சோ மார்வில் மறுவனே அச்சோ வச்சோ–1-8-9
கண்ட,Kanda - கண்ணாற்கண்ட
கடலும்,Kadalum - ஸமுத்ரங்களும்
மலையும்,Malayum - மலைகளும்
உலகு ஏழும்,Ulaku ezhum - கீழ் ஏழ் மேல் ஏழ் என்ற பதினான்கு லோகங்களும் (ஆகிய எல்லாவற்றையுமிட்டு நிறைக்கப் பார்த்தாலும்)
முண்டத்துக்கு,Mundaththukku - (என் கையிலிருக்கிற ப்ரஹ்ம) கபாலத்துக்கு
ஆற்றா,Aatraa - போதாவாம்;
முகில் வண்ணா,Mugil vanna - மேக வண்ணனே!
ஓஒ!,Ooo - ஓஒ! (ஹாஹா!)
என்று,Endru - என்று கூப்பிட்டு
இண்டை,Indai - நெருங்கின
சடை முடி,Sadai mudi - ஜடா பந்தத்தை யுடைய
ஈசன்,Eesan - சிவன்
இரக்கொள்ள,Irakkolla - பிச்சை யெடுக்க
மண்டை,Mandai - (அவன் கையிலிருந்த ப்ரஹ்ம) கபாலத்தை
நிறைத்தானே,Niraiththane - (மார்பிலிருந்து உண்டான ரத்தத்தால்) நிறையச் செய்தவனே!
அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ
மார்வில்,Maarvil - திரு மார்பிலே
மறுவனே,Maruvane - ஸ்ரீவத்ஸமென்னும் மச்சத்தை யுடையவனே!
அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ
106ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 10
துன்னிய பேரிருள் சூழ்ந்து உலகை மூட
மன்னிய நான்மறை முற்றும் மறைந்திட
பின்னிவ் வுலகினில் பேரிருள் நீங்க அன்று
அன்ன மதானானே அச்சோ வச்சோ அரு மறை தந்தானே அச்சோ வச்சோ-1-8-10
மன்னிய,Manniya - நித்ய ஸித்தமான
நால் மறை,Naal marai - சதுர் வேதங்களும்
முற்றும்,Mutrum - முழுவதும்
மறைந்திட,Maraindhida - மறைந்து விட (அதனால்)
அன்னிய,Anniya - நெருங்கிய
பேர் இருள்,Per irul - பெரிய அஜ்ஞாநாந்தகாரம்
சூழ்ந்து,Soozhndhu - பரவி
உலகை,Ulakai - லோகங்களை
மூட,Mooda - மறைத்துக் கொள்ள
பின்,Pin - பின்பு
உலகினில்,Ulakinil - இந்த லோகங்களில்
பேர் இருள்,Per irul - (அந்த) மிகுந்த அஜ்ஞாகாந்தகாரமானது
நீங்க,Neenga - நீங்கும்படி
என்று,Endru - அக் காலத்தில்
அன்னம் அது ஆனானே,Annam adhu aanane - ஹம்ஸமாய் அவதரித்தவனே!
அரு மறை தந்தானே,Aru marai thanthane - (அந்த ரூபத்தோடு) அருமையான வேதங்களை உபகரித்தவனே!
அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ
107ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 11
நச்சுவார் முன்னிற்கும் நாராயணன் தன்னை
அச்சோ வருக வென்று ஆய்ச்சி யுரைத்தன
மச்சணி மாடப் புதுவை கோன் பட்டன் சொல்
நச்சலும் பாடுவார் நீள் விசும்பாள்வரே–1-8-11
நச்சுவார் முன்,Nachchuvaar mun - (தன்னை) விரும்பிப்ப பக்தி பண்ணுமவர்களுடைய முன்னே
நிற்கும்,Nirkum - வந்து நிற்குந் தன்மையுள்ள
நாராயணன் தன்னை,Narayanan thannai - நாராயணனாகிய ஸ்ரீ க்ருஷ்ணனை
ஆய்ச்சி,Aaychchi - இடைக் குலத்தவளான யசோதை
அச்சோ வருக என்று உரைத்தன,Achcho varuga endru uraiththana - (அணைத்துக் கொள்ளுகையிலுண்டான விருப்பந் தோன்றும்படி) ‘அச்சோ வருவாயாக’ என்று சொன்னவற்றை
மச்சு அணி,Machchu ani - பல நிலைகளால் அழகிய
மாடம்,Maadam - மாளிகைகளை யுடைய
புதுவை,Pudhuvai - ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு
கோன்,Kon - நிர்வாஹகரான
பட்டன்,Pattan - பெரியாழ்வார்
சொல்,Sol - சொன்ன இப் பத்துப் பாசுரங்களையும்
பாடுவார்,Paaduvaar - பாடுபவர்கள்
நிச்சலும்,Nichchalum - எப்போதும்
நீள் விசும்பு,Neel visumbu - பரமாகாசமாகிற பரமபதத்திற்கு
ஆள்வர்,Aalvar - நிர்வாஹகராவர்.
626நாச்சியார் திருமொழி || 12 - மற்று இருந்தீர்கட்கு (தலைவி கண்ணனுள்ளவிடத்தில் தன்னைக் கொண்டு விடும்படி உற்றாரை வேண்டுதல்) 10
மன்னு மதுரை தொடக்கமாக வண் துவாராபதி தன்னளவும்
தன்னைத் தமருய்த்துப் பெய்ய வேண்டித் தாழ் குழலாள் துணிந்த துணிவை
பொன்னியல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டுச்சிதன் கோதை
இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே
தாழ் குழலாள், Thaazh kuzhalaal - தாழ்ந்த கூந்தலை யுடையளாய்
பொன் இயல்மாடம் பொலிந்துதோன்றும் புதுவையாகோன் விட்டு சித்தன் கோதை, Pon iyalmaadam polindhu thondrum Pudhuvaiyaakon Vittu chithan kodhai - பொன் மயமான மாடங்களினால் விளங்கித் தோன்றுகின்ற ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ளார்க்குத் தலைவராகிய பெரியாழ்வாருடைய (திருமகளான) ஆண்டாள்
மன்னு மதுரை தொடக்கம் ஆக வண் துவராபதி தன் அளவும் தன்னை, Mannu mathurai thodakkam aaga van Thuvarapathi than alavum thanai - ஸ்ரீமதுரை முதற்கொண்டு ஸ்ரீத்வாரகை வரைக்கும் (சொல்லப்பட்ட சில திவ்யதேசங்களில்) தன்னை (ஆண்டாளை)
தமர், Thamar - தன் உறவினர்
உய்த்து பெய்ய வேண்டி, Uythu peiya vendi - கொண்டு போய்ச் சேர்க்க வேண்டி
துணிந்த துணிவை, Thunindha thunivai - கொண்ட அத்யவஸாயம் விஷயமாக
இன் இசையால் சொன்ன, In isaiyaal sonna - இனிய இசையுடன் அருளிச் செய்த
செம் சொல் மாலை, Sem sol maalai - அழகிய சொல்மாலை யாகிய இத்திருமொழியை
ஏத்த வல்லார்க்கு, Etha vallaarku - ஓத வல்லவர்களுக்கு
இடம், Idam - வாழுமிடம்
வைகுந்தம், Vaikundham - பரமபதமேயாம்