Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: பொன்னியல் (14 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
97ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 1
பொன்னியல் கிண் கிணி சுட்டி புறம்கட்டி
தன்னிய லோசை சலஞ்சல னென்றிட
மின்னியல் மேகம் விரைந்தெதிர் வந்தாற் போல்
என்னிடைக் கோட்டரா அச்சோ வச்சோ எம்பெருமான் வாரா அச்சோவச்சோ–1-8-1
பொன் இயல்,Pon iyal - பொன்னாற்செய்த
கிண்கிணி,Kinkini - அரைச் சதங்கை பாதச் சதங்கைகளையும்
சுட்டி,Sutti - சுட்டியையும்
புறம்,Puram - (அதற்கு உரிய) இடங்களிலே
கட்டி,Katti - அணிந்து
தன்,Than - சதங்கைக்கு
இயல்,Iyal - பொருந்திய
இசை,Isai - சப்தமானது
சலன் சலன் என்றிட,Salan salan endrida - சலன் சலனென்று ஒலிக்க
மின் இயல்,Min iyal - மின்னலோடு பொருந்திய
மேகம்,Megam - மேகமானது
விரைந்து,Viraindhu - வேகமாக ஓடி வந்து
எதிர் வந்தால் போல்,Ethir vanthal pol - எதிரே வந்தாற் போலே
என் இடைக்கு ஒட்டரா,En idaiyku ottara - என் இடையிலிருக்க (விரும்பி) ஓடிவந்து
அச்சோ அச்சோ,Achcho achcho - (என்னை) அணைத்துக் கொள்ள வேணும் அணைத்துக் கொள்ள வேணும்
எம்பெருமான்,Emperuman - எங்களுடைய தலைவனே!
வாரா,Vaara - வந்து
அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ
98ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 2
செங்கமலப் பூவில் தேனுண்ணும் வண்டே போல்
பங்கிகள் வந்து உன் பவள வாய் மொய்ப்ப
சங்கு வில் வாள் தண்டு சக்கர மேந்திய
அங்கைகளாலே வந்து அச்சோ வச்சோ ஆரத் தழுவா வந்து அச்சோ வச்சோ–1-8-2
செங்கமலம்,Sengamalam - செந்தாமரைப் பூவில்
தேன் உண்ணும்,Then unnum - தேனைக் குடிப்பதற்காக மொய்க்கின்ற
வண்டே போல்,Vande pol - வண்டுகளைப் போல
பங்கிகள் வந்து,Pangigal vandhu - (உனது) கூந்தல் மயிர்கள் வந்து
உன் பவளம் வாய்,Un pavalam vai - பவளம்போற் செந்நிறமான உனது வாயில்
மொய்ப்ப,Moippa - மொய்த்துக் கொள்ளும்படி
வந்து,Vandhu - ஓடி வந்து
சங்கு,Sangu - ஸ்ரீபாஞ்சஜன்யத்தையும்
வில்,Vil - ஸ்ரீசார்ங்கத்தையும்
வாள்,Val - நந்தகத்தையும்
தண்டு,Thandu - கௌமோதகியையும்
சக்கரம்,Chakkaram - ஸ்ரீஸூதர்சநாழ்வானையும்
ஏந்திய,Enthiya - (பூவேந்தினாற்போல) தரித்துக் கொண்டுள்ள
அம் கைகளாலே,Am kaigalale - அழகிய கைகளாலே
அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ
வந்து,Vandhu - ஓடிவந்து
ஆர தழுவா,Ara thazhuvaa - திருப்தி உண்டாகும்படி நன்றாகத் தழுவி
அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ
99ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 3
பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கை செய்து
நஞ்சுமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு
அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த
அஞ்சன வண்ணனே அச்சோ வச்சோ ஆயர் பெருமானே அச்சோ வச்சோ–1-8-3
பஞ்சவர்,Panjavar - பாண்டவர்களுக்காக
தூதன் ஆய்,Thoodhan aay - (துர்யோதநாதிகளிடம்) தூதனாய்ப் போய்
பாரதம்,Paaratham - (அந்த துர்யோதநாதிகள் தன் சொற்படி இசைந்து வராமையால்) பாரத யுத்தத்தை
கை செய்து,Kai seythu - அணி வகுத்துச் செய்து
நஞ்சு,Nanju - விஷத்தை
உமிழ்,Umizh - கக்குகின்ற
நாகம்,Naagam - (கானிய) ஸர்ப்பம்
கிடந்த,Kidandha - இருந்த
நல் பொய்கை,Nal poigai - கொடிய மடுவிலே
புக்கு,Pukku - புகுந்து
அஞ்சு,Anju - (ஆய்ச்சிகளும் ஆயரும்) பயப்படும்படி
பணத்தின் மேல்,Panathin mel - (அப்பாம்பின்) படத்திலே
பாய்ந்திட்டு,Paindhittu - குதித்து
அருள்செய்த,Arulseytha - (நடமாடி அக்காளியனை இணைப்பித்துப் பின்பு அவன் ப்ரார்த்திக்க) (அப்பாம்பின் ப்ராணனைக்) கருணையால் விட்டிட்ட
அஞ்சனம் வண்ணனே ! அச்சோ அச்சோ-;,Anjanam vannane Achcho achcho - அஞ்சனம் வண்ணனே ! அச்சோ அச்சோ-;
ஆயர்,Aayar - இடையர்களுக்கு
பெருமானே,Perumane - தலைவனானவனே!
அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ
100ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 4
நாறிய சாந்தம் நமக்கிறை நல்கென்ன
தேறி அவளும் திரு வுடம்பில் பூச
ஊறிய கூனினை உள்ளே யொடுங்க அன்று
ஏற வுருவினாய் அச்சோ வச்சோ எம்பெருமான் வாரா அச்சோ வச்சோ–1-8-4
நாறிய,Naariya - ‘நல்ல வாசனை வீசுகின்ற
சாந்தம்,Santham - சந்தனத்தை
நமக்கு,Namakku - எங்களுக்கு
இறை,Irai - கொஞ்சம்
நல்கு என்ன,Nalku enna - கொடு என்று (நீ) கூனியைக் கேட்க
அவளும்,Avalum - அந்தக் கூனியும் (‘இவர்கட்குக் கொடுத்தால் நம்மைக் கம்ஸன் தண்டிப்பனோ?’ என்று அஞ்சாமல்)
தேறி,Theri - மனம் தெளிந்து
திரு உடம்பில்,Thiru udambil - (உனது) திருமேனியிலே
பூச,Poosa - சாத்த
ஊறிய,Ooriya - வெகுநாளாயிருக்கிற
கூனினை,Kooninai - (அவளுடைய) கூனை
உள்ளே,Ulle - (அவள்) சரீரத்திற்குள்ளே
ஒடுங்க,Odunga - அடங்கும்படி
அன்று,Andru - அக் காலத்திலே
ஏற,Era - நிமிர்த்து
உருவினாய்,Uruvinai - உருவினவனே!
அச்சோ அச்சோ-;,Achcho achcho - அச்சோ அச்சோ-;
எம்பெருமான்! வந்து அச்சோ அச்சோ.,Emperumaan! vandhu achcho achcho - எம்பெருமான்! வந்து அச்சோ அச்சோ.
101ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 5
கழல் மன்னர் சூழக் கதிர் போல் விளங்கி
எழலுற்று மீண்டே இருந்து உன்னை நோக்கும்
சுழலைப் பெரிதுடைத் துச்சோதனனை
அழல விழித்தானே அச்சோ வச்சோ ஆழியங் கையனே அச்சோ வச்சோ–1-8-5
கழல்,Kalal - வீரக் கழலை யணிந்த
மன்னர்,Mannar - ராஜாக்கள்
சூழ,Sool - தன்னைச் சுற்றியிருக்க (அவர்கள் நடுவில்)
கதிர்போல்,Kathirpol - ஸூரியன்போல
விளங்கி,Vilangi - ப்ரகாசமாயிருந்து (‘கண்ணனுக்கு எழுந்திருத்தல் குசல ப்ரச்நம் பண்ணுதல் முதலிய மர்யாதை
எழல் உற்று,Ezhal utru - (ஒன்றும் செய்யக்கூடாது’ என்று கட்டளையிட்டிருந்த தானே தனக்கும் தெரியாமல்)(முதலில்) எழுந்திருந்து
மீண்டு,Meendu - மறுபடியும்
இருந்து,Irundhu - (தானெழுந்தது தெரியாதபடி) உட்கார்ந்து கொண்டு
உன்னை,Unnai - உன்னை
நோக்கும்,Nokkum - (பொய்யாஸநமிடுதல் முதலியவற்றால் கொல்வதாகப்) பார்த்த
பெரிது கழலை உடை,Perithu kalalai udai - மிகவும் (வஞ்சனையான) ஆலோசனையை யுடைய
துச்சோதனனை,Thuchchodhananai - துர்யோதநினை (திருவுள்ளத்திலுள்ள சீற்றமெல்லாம் பார்வையிலே தோன்றும்படி)
அழல விழித்தானே,Azhal vizhiththane - உஷ்ணமாகப் பார்த்தவனே!
அச்சோ அச்சோ-;,Achcho achcho - அச்சோ அச்சோ-;
ஆழி,Aazhi - திருவாழி யாழ்வானை
அம் கையனே,Am kaiyane - அழகிய கையிலேந்தியவனே!
அச்சோ அச்சோ-.,Achcho achcho - அச்சோ அச்சோ-;
102ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 6
போரொக்கப் பண்ணி இப் பூமிப் பொறை தீர்ப்பான்
தேரொக்க வூர்ந்தாய் செழுந்தார் விசயற்காய்
காரொக்கும் மேனிக் கரும் பெருங் கண்ணனே
ஆரத் தழுவாவந்து அச்சோ வச்சோ ஆயர்கள் போரேறே அச்சோ வச்சோ–1-8-6
இ பூமி, E poomi - இந்தப் பூமியினுடைய
பொறை,Porai - பாரத்தை
தீர்ப்பான்,Theerppan - தீர்ப்பதற்காக
போர்,Por - யுத்தத்தை
ஒக்க,Okka - (துர்யோதநாதிகளோடு) ஸமமாக
பண்ணி,Panni - செய்து
செழு,Sezhu - செழுமைதாங்கிய
தார்,Thar - மாலையை யுடைய
விசயற்கு ஆய்,Vijayarku aay - அர்ஜுநனுக்காக
தேர்,Ther - (அவனுடைய) தேரை
ஒக்க,Okka - (எதிரிகள் தேர் பலவற்றிற்கும் இது ஒன்றுமே) ஸமமாம்படி
ஊர்ந்தாய்,Oorndhai - பாகனாய்ச் செலுத்தினவனே!
கார் ஒக்கும்,Kaar okkum - மேகத்தோடு ஒத்த
மேனி,Meni - திருமேனியில்
கரும்பெருங் கண்ணனே,Karumperum kannane - கரியவாகிப் புடைபரந்து கண்களையுடையவனே!
வந்து,Vandhu - ஓடிவந்து
ஆர,Aara - நின்றாக
தழுவா,Thazhuvaa - தழுவிக்கொண்டு
அச்சோ அச்சோ-;,Achcho achcho - அச்சோ அச்சோ-;
ஆயர்கள்,Aayargal - இடையர்களுக்கு (அடங்கி நற்கின்ற)
போர் ஏறே,Por ere - போர் செய்யுந் தன்மையுள்ள ரிஷபம் போன்றவனே!
அச்சோ அச்சோ-.,Achcho achcho - அச்சோ அச்சோ-;
103ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 7
மிக்க பெரும் புகழ் மாவலி வேள்வியில்
தக்கது அன்று என்று தானம் விலக்கிய
சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய
சக்கரக் கையனே அச்சோ வச்சோ சங்க மிடத்தானே அச்சோ வச்சோ–1-8-7
மிக்க பெரும்புகழ்,Mikka perumpugazh - (ஔதார்யத்தால்) மிகுந்த கீர்த்தியை யுடைய
மா வலி,Maa vali - மஹாபலி (செய்த)
வேள்வியில்,Velviyil - யாகத்திலே (வாமநனாய்ச் சென்ற உனககு அந்த மஹாபலி நீ கேட்டதைக் கொöடுக்க முயன்ற வளவிலே)
இது,Ithu - நீ கொடுக்கிற விது
தக்கது அன்று,Thakkathu andru - தகுதியானதன்று’
என்று,Endru - என்று முறையிட்டு
தானம்,Thaanam - பூமி தானத்தை (அவன் தத்தம் பண்ணும் போது நீர் விழ வொட்டாமல்)
விலக்கிய,Vilakkiya - தடுத்த
சுக்கிரன்,Sukiran - சுக்கிராச்சாரியனுடைய
கண்ணை,Kannai - ஒரு கண்ணை
துரும்பால்,Thurumpaal - (உன் கையிலணிந்திருந்த) தர்ப்ப பவித்ரத்தின் நுனியால்
கிளறிய,Kilarriya - கலக்கின
சக்கரம் கையனே,Chakkaram kaiyane - சக்ராயுதமேந்திய கையை யுடையவனே!
அச்சோ அச்சோ-;,Achcho achcho - அச்சோ அச்சோ-;
சங்கம்,Sangam - பாஞ்ச ஜன்யத்தை
இடத்தானே,Idaththane - இடக்கையிலேந்தினவனே!
அச்சோ அச்சோ-.,Achcho achcho - அச்சோ அச்சோ-;
104ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 8
என்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன்
முன்னைய வண்ணமே கொண்டுஅள வாயென்ன
மன்னு நமுசியை வானில் சுழற்றிய
மின்னு முடியனே அச்சோ வச்சோ வேங்கட வாணனே அச்சோ வச்சோ–1-8-8
இது,Ithu - (வாமநனாய்ச் சென்ற திருமால் மாவலியிடத்தில் நீரேற்றுத் திரிவிக்கிரமனாய் வளர்ந்து அளக்கப் புகும் போது
அது கண்ட மஹாபலி புத்ரனான நமுசி ஓடிவந்து)
(யாசிக்கும் போதிருந்த வடிவம் மாறி யளக்கிற) இது

என் மாயம்,En maayam - என்ன மாயச் செய்கை!;
என் அப்பன்,En appan - என் தகப்பன்
அறிந்திலன்,Arinthilan - (நீ செய்யும் இந்தமாயத்தை) அறியவில்லை
முன்னைய வண்ணமே கொண்டு,Munnaiya vanname kondu - நீ யாசிக்க வந்த போதிருந்த வடிவத்தையே கொண்டு
அளவாய்,Alavaay - அளப்பாயாக
என்ன,Enna - என்று சொல்ல
மன்னு,Mannu - (இப்படி) பிடிவாதமாய் நின்ற
நமுசியை,Namusiyai - (அந்த) நமுசி யென்பவனை
வானில்,Vaanil - ஆகாசத்திலே
சுழற்றிய,Suzharriya - சுழலச் செய்த
மின்னு முடியனே,Minnu mudiyane - விளங்குகின்ற கிரீடத்தை யுடையவனே!
அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ-;
வேங்கடம்,Vengadam - திருமலையிலே
வாணனே,Vaanane - வாழுமவனே!
அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ
105ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 9
கண்ட கடலும் மலையும் உலகேழும்
முண்டத்துக் காற்றா முகில் வண்ணா ஓ ஒ வென்று
இண்டைச் சடை முடி ஈசன் இரக்கொள்ள
மண்டை நிறைத்தானே அச்சோ வச்சோ மார்வில் மறுவனே அச்சோ வச்சோ–1-8-9
கண்ட,Kanda - கண்ணாற்கண்ட
கடலும்,Kadalum - ஸமுத்ரங்களும்
மலையும்,Malayum - மலைகளும்
உலகு ஏழும்,Ulaku ezhum - கீழ் ஏழ் மேல் ஏழ் என்ற பதினான்கு லோகங்களும் (ஆகிய எல்லாவற்றையுமிட்டு நிறைக்கப் பார்த்தாலும்)
முண்டத்துக்கு,Mundaththukku - (என் கையிலிருக்கிற ப்ரஹ்ம) கபாலத்துக்கு
ஆற்றா,Aatraa - போதாவாம்;
முகில் வண்ணா,Mugil vanna - மேக வண்ணனே!
ஓஒ!,Ooo - ஓஒ! (ஹாஹா!)
என்று,Endru - என்று கூப்பிட்டு
இண்டை,Indai - நெருங்கின
சடை முடி,Sadai mudi - ஜடா பந்தத்தை யுடைய
ஈசன்,Eesan - சிவன்
இரக்கொள்ள,Irakkolla - பிச்சை யெடுக்க
மண்டை,Mandai - (அவன் கையிலிருந்த ப்ரஹ்ம) கபாலத்தை
நிறைத்தானே,Niraiththane - (மார்பிலிருந்து உண்டான ரத்தத்தால்) நிறையச் செய்தவனே!
அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ
மார்வில்,Maarvil - திரு மார்பிலே
மறுவனே,Maruvane - ஸ்ரீவத்ஸமென்னும் மச்சத்தை யுடையவனே!
அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ
106ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 10
துன்னிய பேரிருள் சூழ்ந்து உலகை மூட
மன்னிய நான்மறை முற்றும் மறைந்திட
பின்னிவ் வுலகினில் பேரிருள் நீங்க அன்று
அன்ன மதானானே அச்சோ வச்சோ அரு மறை தந்தானே அச்சோ வச்சோ-1-8-10
மன்னிய,Manniya - நித்ய ஸித்தமான
நால் மறை,Naal marai - சதுர் வேதங்களும்
முற்றும்,Mutrum - முழுவதும்
மறைந்திட,Maraindhida - மறைந்து விட (அதனால்)
அன்னிய,Anniya - நெருங்கிய
பேர் இருள்,Per irul - பெரிய அஜ்ஞாநாந்தகாரம்
சூழ்ந்து,Soozhndhu - பரவி
உலகை,Ulakai - லோகங்களை
மூட,Mooda - மறைத்துக் கொள்ள
பின்,Pin - பின்பு
உலகினில்,Ulakinil - இந்த லோகங்களில்
பேர் இருள்,Per irul - (அந்த) மிகுந்த அஜ்ஞாகாந்தகாரமானது
நீங்க,Neenga - நீங்கும்படி
என்று,Endru - அக் காலத்தில்
அன்னம் அது ஆனானே,Annam adhu aanane - ஹம்ஸமாய் அவதரித்தவனே!
அரு மறை தந்தானே,Aru marai thanthane - (அந்த ரூபத்தோடு) அருமையான வேதங்களை உபகரித்தவனே!
அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ
107ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 11
நச்சுவார் முன்னிற்கும் நாராயணன் தன்னை
அச்சோ வருக வென்று ஆய்ச்சி யுரைத்தன
மச்சணி மாடப் புதுவை கோன் பட்டன் சொல்
நச்சலும் பாடுவார் நீள் விசும்பாள்வரே–1-8-11
நச்சுவார் முன்,Nachchuvaar mun - (தன்னை) விரும்பிப்ப பக்தி பண்ணுமவர்களுடைய முன்னே
நிற்கும்,Nirkum - வந்து நிற்குந் தன்மையுள்ள
நாராயணன் தன்னை,Narayanan thannai - நாராயணனாகிய ஸ்ரீ க்ருஷ்ணனை
ஆய்ச்சி,Aaychchi - இடைக் குலத்தவளான யசோதை
அச்சோ வருக என்று உரைத்தன,Achcho varuga endru uraiththana - (அணைத்துக் கொள்ளுகையிலுண்டான விருப்பந் தோன்றும்படி) ‘அச்சோ வருவாயாக’ என்று சொன்னவற்றை
மச்சு அணி,Machchu ani - பல நிலைகளால் அழகிய
மாடம்,Maadam - மாளிகைகளை யுடைய
புதுவை,Pudhuvai - ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு
கோன்,Kon - நிர்வாஹகரான
பட்டன்,Pattan - பெரியாழ்வார்
சொல்,Sol - சொன்ன இப் பத்துப் பாசுரங்களையும்
பாடுவார்,Paaduvaar - பாடுபவர்கள்
நிச்சலும்,Nichchalum - எப்போதும்
நீள் விசும்பு,Neel visumbu - பரமாகாசமாகிற பரமபதத்திற்கு
ஆள்வர்,Aalvar - நிர்வாஹகராவர்.
626நாச்சியார் திருமொழி || 12 - மற்று இருந்தீர்கட்கு (தலைவி கண்ணனுள்ளவிடத்தில் தன்னைக் கொண்டு விடும்படி உற்றாரை வேண்டுதல்) 10
மன்னு மதுரை தொடக்கமாக வண் துவாராபதி தன்னளவும்
தன்னைத் தமருய்த்துப் பெய்ய வேண்டித் தாழ் குழலாள் துணிந்த துணிவை
பொன்னியல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டுச்சிதன் கோதை
இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே
தாழ் குழலாள், Thaazh kuzhalaal - தாழ்ந்த கூந்தலை யுடையளாய்
பொன் இயல்மாடம் பொலிந்துதோன்றும் புதுவையாகோன் விட்டு சித்தன் கோதை, Pon iyalmaadam polindhu thondrum Pudhuvaiyaakon Vittu chithan kodhai - பொன் மயமான மாடங்களினால் விளங்கித் தோன்றுகின்ற ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ளார்க்குத் தலைவராகிய பெரியாழ்வாருடைய (திருமகளான) ஆண்டாள்
மன்னு மதுரை தொடக்கம் ஆக வண் துவராபதி தன் அளவும் தன்னை, Mannu mathurai thodakkam aaga van Thuvarapathi than alavum thanai - ஸ்ரீமதுரை முதற்கொண்டு ஸ்ரீத்வாரகை வரைக்கும் (சொல்லப்பட்ட சில திவ்யதேசங்களில்) தன்னை (ஆண்டாளை)
தமர், Thamar - தன் உறவினர்
உய்த்து பெய்ய வேண்டி, Uythu peiya vendi - கொண்டு போய்ச் சேர்க்க வேண்டி
துணிந்த துணிவை, Thunindha thunivai - கொண்ட அத்யவஸாயம் விஷயமாக
இன் இசையால் சொன்ன, In isaiyaal sonna - இனிய இசையுடன் அருளிச் செய்த
செம் சொல் மாலை, Sem sol maalai - அழகிய சொல்மாலை யாகிய இத்திருமொழியை
ஏத்த வல்லார்க்கு, Etha vallaarku - ஓத வல்லவர்களுக்கு
இடம், Idam - வாழுமிடம்
வைகுந்தம், Vaikundham - பரமபதமேயாம்
2674பெரிய திருமடல் || 4
முன்ன நான் சொன்ன அறத்தின் வழி முயன்ற
அன்னவர் தாம் கண்டீர்கள் ஆயிரக் கண் வானவர் கோன்
பொன்னகரம் புக்கு அமரர் போற்றி செய்யப் பொங்கொளி சேர்
கொன்னவிலும் கோளரி மாத் தான் சுமந்த கோலஞ்சேர்
மன்னிய சிங்காசனத்தின் மேல் வாணெடுங்கண்
கன்னியரால் இட்ட கவரிப் பொதிய விழ்ந்தாங்கு
இன்னிளம் பூந்தென்றல் இயங்க மருங்கிருந்த
மின்னனைய நுண் மருங்குல் மெல்லியலார் வெண் முறுவல்
முன்னம் முகிழ்த்த முகிழ் நிலா வந்தரும்ப
அன்னவர் தம் மானோக்கம் உண்டாங்கு அணிமலர் சேர்
பொன்னியல் கற்பத்தின் காடுடுத்த மாடெல்லாம்
மன்னிய மந்தாராம் பூத்த மதுத் திவலை
இன்னிசை வண்டு அமரும் சோலை வாய் மாலை சேர்
மன்னிய மா மயில் போல் கூந்தல் மழைத் தடம் கண்
மின்னிடை யாரோடும் விளையாடி வேண்டிடத்து
மன்னு மணித்தலத்து மாணிக்க மஞ்சரியின்
மின்னொளி சேர் பளிங்கு விளிம்பிடத்த
மன்னும் பவளக்கால் செம்பொன் செய் மண்டபத்துள்
அன்ன நடைய வரம்பையர் தங்கை வளர்த்த
இன்னிசை யாழ் பாடல் கேட்டு இன்புற்று இரு விசும்பில்
மன்னு மழை தவழும் வாணிலா நீண் மதி தோய்
மின்னொளி சேர் விசும்பூரும் மாளிகை மேல்
மன்னு மணி விளக்கை மாட்டி மழைக் கண்ணார்
பன்னு விசித்ரமாப் பாப்படுத்த பள்ளி மேல்
துன்னிய சாலேகஞ் சூழ் கதவத் தாள் திறப்ப
அன்ன முழக்க நெரிந்துக்க வாணீலச்
சின்ன நறுந்தாது சூடியோர் மந்தாரம்
துன்னு நறு மலரால் தோள் கொட்டிக் கற்பகத்தின்
மன்னு மலர்வாய் மணி வண்டு பின் தொடர
இன்னிளம் பூந்தென்றல் புகுந்தீங்கு இள முலைமேல்
நன்னறும் சந்தனச் சேறுள் புலர்த்தத் தாங்க அருஞ்சீர்
மின்னிடை மேல் கை வைத்து இருந்து ஏந்து இள முலை மேல்
பொன்னரும் பாரம் புலம்ப வகம் குழைந்து ஆங்கு
இன்ன வுருவின் இமையாத் தடம் கண்ணார்
அன்னவர் தம் மாநோக்கம் உண்டு ஆங்கு அணி முறுவல்
இன்னமுதம் மாந்தி இருப்பர் இது வன்றே
அன்ன வறத்தின் பயனாவது ஒண் பொருளும்
அன்ன திறத்தே யாதலால் காமத்தின்
மன்னும் வழி முறையே நிற்று நாம் –
…………..
முன்னம் நான் சொன்ன அறத்தின் வழி முயன்ற அன்னவர் தாம், Munnam Naan Sonna Araththin Vazhi Muyanra Annavar Thaam - (புருஷார்த்தங்களில்) முதலதாக நான் எடுத்துச் சொன்ன தருமத்தின் வழியிலே அநுஷ்டானஞ் செய்தவர்கள்
ஆயிரம் கண் வானவர் கோன் பொன் நகரம் புக்கு, Aayiram Kan Vaanavar Kon Pon Nagaram Pukku - ஆயிரங் கண்ணுடையனான இந்திரனுடைய அழகிய லோகத்திற்சென்று சேர்ந்து
அமரர் போற்றி செய்ய, Amarar Potri Seyya - தேவர்கள் வாழ்த்தப்பெற்று,
பொங்கு ஒளி சேர்கொல் நவிலும் கோள் அரிமாதான் சுமந்த கோலம் சேர் மன்னிய சிங்க ஆசனத்தின் மேல், Pongu Oli Serkol Navilum Kol Arimaadhan Sumandha Kolam Ser Manniya Singa Aasanaththin Mel - மேன்மேலும் வளர்கின்ற ஒளியை யுடையதும், கொல்லுந் தொழிலிற் பழகின் வலிய சிங்கத்தால் சுமக்கப்பட்டதும், அழகியதும், பொருத்தமுடையதுமான சிங்காசனத்தின் மேலே (இருந்துகொண்டு)
வாள் நெடு கண் கன்னி யரால் இட்ட, Vaal Nedu Kan Kanni Yaraal Itta - வாள் போற்கூரிய நீண்ட கண்களையுடைய கன்னிகைகளாலே வீசப்பட்ட கவரிபொதி அவிழ்ந்து
இன் இள பூ தென்றல் இயங்க, In Il Poo Thendral Iyanga - இனிதாயும் மந்தமாயும் பரிமள முடையதாயுமிருக்கிற தென்றல் வந்து வீசப்பெற்று
மருங்கு இருந்த மின் அனையை நுண் மருங்குல் மெல் இயலார், Marungu Irundha Min Anaiyai Nun Marungul Mel Iyalaarkal - அருகே யிருக்கிற மின்போல் ஸூக்ஷமமான இடையையுடைய மாதர்கள்
வெண் முறுவல், Ven Muruvil - (தங்களுடைய) வெளுத்த பற்களாலே
முன்னம் முகிழ்த்த, Munnam Mukizhttha - அபிப்பிராயத்தை ஸூசிப்பிக்கின்ற
முகிழ் நிலா வந்து அரும்ப, Mugizh Nila Vandu Arumba - இளநிலாவந்து மேலே ப்ரஸிக்க
அன்னவர் தம், Annavar Tham - அப்படிப்பட்ட மாதர்களுடைய
மான் நோக்கம் உண்டு, Maan Nokkam Undu - மானின் நோக்குப் போன்ற நோக்கை அநுபவித்து
ஆங்கு, Aangu - அவ்வளவிலே
அணி மலர சேர், Ani Malara Ser - அழகிய பூக்கள் நிறைந்துள்ள
பொன் இயல் கற்பகத் தின் காடு உடுத்தமாடு எல்லாம், Pon Iyala Karpagath Thin Kaadu Uduthamaadu Ellam - பொன்மயமான கற்பகக்காடுகள் நிறைந்த ப்ரதேசங்க ளெல்லாவற்றிலும்
மன்னிய மந்தாரம் பூத்த மது திவலை, Manniya Mandharam Pootha Madhu Thivalai - நிலைபெற்றிருக்கிற பாரிஜாத வ்ருக்ஷங்களின் பூக்களிலுள்ள மகரந்த பிந்துக்களில்
இன் இசை வண்டு அமரும் சோலை வாய், In Isai Vandu Amarum Solai Vaai - இனிய இசைகளைப்பாடுகின்ற வண்டுகள் பொருந்தி யிருக்கப்பெற்ற பூஞ்சோலைகளிலே,
மாலை சேர் மன்னிய மா மயில் போல் கூந்தல், Maalai Ser Manniya Maa Mayil Pol Koondhal - புஷ்பங்களை யணிந்தும் மயில் தோகை போன்றுமிருக்கிற கூந்தலை யுடையவர்களாயும்
மழை தட கண், Mazhai Thada Kan - குளிர்ந்து விசாலமான கண்களை யுடையவர்களாயும்
மின் இடையாரோடும், Min Idaiyaarodum - மின்போல் நுண்ணிய இடையை யுடையவ்ர்களாயு மிருக்கிற அப்ஸரஸ் ஸ்த்ரீகளோடே
வேண்டிடத்து விளையாடி, Vaendidathu Vilaiyaadi - யதேஷ்டமான இடங்களில் ரமித்து
மன்னும் மணி தலத்து, Mannum Mani Thalathu - சிறந்த ரத்னங்களழுத்தின ஸ்தலங்களிலே (கட்டப்பட்டு)
மாணிக்கம்மஞ்சரியின், Maanikkam Manjariyin - மாணிக்க மயமான பூங்கொத்துக்களை யுடையதும்
மின்னின் ஒளி சேர்பளிங்கு விளிம்பு அடுத்த, Minnin Oli Serpalinku Vilimpu Adutha - மின்னல்போலே பளபள வென்று விளங்குகின்ற ஸ்படிகக் கற்களாலே குறடு (கொடுங்கை) கட்டப்பெற்றதும்
மன்னும் பவளக்கால், Mannum Pavala Kaal - சிறந்த பவழ ஸ்தம்பங்களை யுடையதும்
செம்பொன் செய், Sembon Sei - செம்பொன்னால் செய்யப்பட்டதுமான
அன்னம் நடைய அரம்பையர் தம் கை வளர்த்த, Annam Nadaya Arampaiyar Tham Kai Valarttha - அன்ன நடையுடைய அப்ஸரஸ்ஸுக்களின் கை வழியாக வுண்டான
இன் இசை யாழ் பாடல், In Isai Yaazh Paadal - இனிய இசையை யுடையவீணையின் பாட்டை
கேட்டு இன்புற்று, Kaettu Inpu Trum - கேட்டு ஆனந்தித்தும்,
இரு விசும்பில் மன்னு மழை தவழும், Iru Visumbil Mannu Mazhai Thavazhum - பரந்த ஆகாசத்திலே பொருந்தி யிருக்கிற மேக மண்டலங்கள் வந்து படியப்பெற்றதும்
வாள் நிலா நீள் மதி தோய், Vaal Nila Neel Mathi Thoi - அழகிய நிலவையுடைய பெரிய சந்திரன் வந்து படியப் பெற்றதும்
மின்னின் ஒளி சேர், Minnin Oli Cher - மின்னலின் ஒளி போன்ற ஒளியை யுடையதும்
விசும்பு ஊரும், Visumbu Oorum - ஆகாசத்தில் ஸஞ்சரிப்பதுமான
மாளிகை மேல், Maaligai Mael - விமாநத்திலே
மழை கண்ணார், Mazhai Kannaal - குளிர்ந்த கண்களையுடையரான மாதர்கள்
மன்னு மணி விளக்கை மாட்டி, Mannu Mani Vilakkai Maatti - என்று மணையாத மணி விளக்குகளைத் தொங்கவிட்டு
விசித்திரமா பாப்படுத்த, Visithiramaa Paappadutha - ஆச்சரியமாக விஸ்தாரமாய்ப் பரப்பின்
பன்னு பள்ளிமேல், Pannu Pallimeel - கொண்டாடத்தக்க சயனத்தின் மீது
துன்னிய சாலேகம் சூழ் கதவம் தான் திறப்ப, Thunniya Saalegam Soozh Kathavam Thaan Thirappa - நெருங்கிய சன்னல்களைச் சுற்றியுள்ள கதவுகள் திறந்துகொள்ள,
இன் இள பூ தென்றல், In Ilapoo Thendral - பரமபோக்யான மந்த மாருதமானது
அன்னம் உழக்க நெரிந்து உக்க வாள் நீலம் நறு சின்னதாது சூடி, Annam Uzhaikka Nerinthu Ukka Vaal Neelam Naru Chinnathathu Soodi - அன்னப்பறவைகள் மிதிப்பதனாலே நெரிந்து துகளாய்ப்போன அழகிய நீலோத்பலத்தின் மணம் மிக்க சிறிய தாதுகளைச் சூடிக்கொண்டும்
ஓர் மந்தாரம் துன்னு நறு மலரால் தோள் கொட்டி, Oor Mandhaaram Thunnu Naru Malaraal Thol Kotti - சிறந்த மந்தார வ்ருக்ஷத்திலே நெருங்கியுள்ளதும் மணம் மிக்கதுமான புஷ்பங்களாலே தோள்களை அலங்காரித்துக்கொண்டும்
கற்பகத்தில் மன்னுமலர் வாய் மணி வண்டு பின் தொடர, Karppagathil Mannumalar Vaai Mani Vandu Pin Thodara - கல்ப வ்ருக்ஷத்திலே பொருந்திய பூக்களிலே படிந்த அழகிய வண்டுகள் பின் தொடரப் பெற்றும்
ஈங்கு புகுந்து, Eengu Pugundhu - இவர்கள் ரமிக்கு மிடங்களிலே வந்து சேர்ந்து
இள முலை மேல் நல் நறு சந்தனம் சேறு உள் புலர்ந்த, Ila Mulai Mael Nal Naru Chandhanam Cheru Ula Pularntha - இளமுலைகள் மேல் பூசப்பட்ட நல்ல மணமுடைய சநதனச் சேற்றை நன்கு உலர்த்த
தாங்க அரு சீர்  மின் இடை மேல் கை வைத்து இருந்து, Thaanga Aru Seer Min Idai Mael Kai Vaithu Irundhu - தரிக்க முடியாத (ஸூக்ஷ்மமான) அழகிய மின் போன்ற இடுப்பின் மீது கையை வைத்துக்கொண்டிருந்து
எந்து இள முலை மேல் பொன் அரும்பு ஆரம் புலம்ப, Endhu Ila Mulai Mael Pon Arumbu Aaram Pulamba - உந்நதமான இள முலை மேலே காசுமாலைகள் ஒலிக்கும்படி நிற்க
ஆங்கு, Aangu - அவ்விருப்பைக் கண்டு
அகம் குழைந்து, Aham Kuzhainthu - மனமுருகி
இன்ன உருவின் இமையா தடங்கண்ணார் அன்னவர் தம், Inna Uruvin Imaiya Thadankannaal Annavar Tham - இப்படிப்பட்ட விலக்ஷணமான வடிவுபடைத்த தேவ மாதர்களுடைய
மான் நோக்கம் உண்டு, Maan Nokkam Undu - மானின் நோக்குப் போன்ற நோக்கை அநுபவித்து
ஆங்கு, Aangu - அதனோடு கூட
அணி முறுவல் இன்அமுதம் மாந்தி இருப்பர், Ani Muruvai Inamudham Manthi Irupper - அழகிய புன்சிரிப்பாகிற இனிய அம்ருதத்தையும் புஜித்திருப்பர்கள்
அன்ன அறத்தின் பயன் ஆவது இது அன்றே, Anna Araththin Payan Aavathu Ithu Anre - அப்படிப்பட்ட (முன்னே நான் சொன்ன) தர்ம புருஷார்த்தத்திற்குப் பலனாகப் பெறும்பேறு இதுவே யாம்.
ஒண் பொருளும் அன்ன திறதத்தே, On Porulum Anna Thiraththae - சிறந்த அர்த்த புருஷார்த்தத்தின் பலனும் அப்படிக்கொதத்தேயாம்
ஆதலால், Aadhalal - இப்படி தர்ம அர்த்தங்களாகிய இரண்டு புருஷார்த்தங்களுக்கும் காமமே பயனாகத் தேறுவதனால்
காமத்தின், Kaamaththin - அக்காம புருஷார்த்தத்தினுடைய
மன்னும் வழிமுறையே, Mannum Vazhimuraye - நிலை நின்றவழியாகிய பகவத் காமமார்க்கத்திலே
நாம் நிற்றும், Naam Nitrum - நாம் ஊற்றமுடையரா யிருப்போம்.
2674பெரிய திருமடல் || 13
பாவியேற்கு
என்னுறு நோய் யானுரைப்பக் கேண்மின் -இரும் பொழில் சூழ்
மன்னு மறையோர் திரு நறையூர் மா மலை போல்
பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு
என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் நோக்குதலும்
மன்னன் திரு மார்பும் வாயும் அடி இணையும்
பன்னு கரதலமும் கண்களும் பங்கயத்தின்
பொன்னியல் காடார் மணி வரை மேல் பூத்தது போல்
மின்னி யொளி படைப்ப வீணாணும் தோள் வளையும்
மன்னிய குண்டலமும் ஆரமும் நீண் முடியும்
துன்னு வெயில் விரித்த சூளா மணி யிமைப்ப
மன்னு மரகதக் குன்றின் மருங்கே யோர்
இன்னிள வஞ்சிக் கொடி யொன்று நின்றது தான்
அன்னமாய் மானாய் அணி மயிலாய் ஆங்கிடையே
மின்னாய் இளவேய் இரண்டாய் இணைச் செப்பாய்
முன்னாய தொண்டையாய்க் கெண்டைக் குலம் இரண்டாய்
அன்ன திருவுருவம் நின்றது அறியாதே
என்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும்
பொன்னியலும் மேகலையும் ஆங்கு ஒழியப் போந்தேற்கு
மன்னு மறி கடலும் ஆர்க்கும் மதி யுகுத்த
இந்நிலாவின் கதிரும் என்தனக்கே வெய்தாகும்
தன்னுடைய தன்மை தவிரத் தான் என்கொலோ
பாவியேற்கு என்று உறு நோய், Paaviyeerkku Endru Uru Noi - பாவியாகிய எனக்கு நேர்ந்த நோயை
யான் உரைப்ப கேண்மின், Yaan Uraippa Keni - நானே சொல்லக் கேளுங்கள் (என்னவென்றால்)
இரு பொழில் சூழ், Iru Pozhil Soozh - விசாலமான சோலைகள் சூழப்பெற்றதும்
மறையோர் மன்னும், Maraiyore Mannum - வைதிகர்கள் வாழப்பெற்றதுமான
திரு நறையூர், Thiru Naraiyoor - திருநறையூரில்
மா மலைபோல பொன் இயலும் மாடம் கவாடம் கடந்து புக்கு, Maa Malaipola Pon Iyalaam Maadam Kavaadam Kadandhu Pukku - பெரிய மலைபோன்றதும் ஸ்வரண மயமுமான ஸந்நிதியின் திருக் காப்பை நீக்கிச் சென்று
என்னுடைய கண்களிப்ப நோக்கினேன், Ennudaiya Kankalippa Noakkinen - எனது கண்கள் களிக்கும்படி உற்றுப்பார்த்தேன்
நோக்குதலும், Noakkuthalum - பார்த்தவளவில்
மன்ன்ன், Mannn - (அங்குள்ள) எம்பெருமானுடைய
திரு மார்பும், Thiru Maarbum - பிராட்டியுறையும் மார்வும்
வாயும், Vaayum - (புன் முறுவல் நிறைந்த) அதரமும்
அடி இணையும், Adi Inaiyum - உபய பாதங்களும்
பன்னு கரதலமும், Pannu Karathalum - கொண்டாடத் தக்க திருக்கைகளும்
கண்களும், Kankalum - திருக்கண்களும்
ஓர் மணிவரைமேல் பொன் இயல் பங்கயத்தின் காடுபூத்த்துபோல் மின்னி ஒளிபடைப்ப, Oru Manivaraimeel Pon Iyala Pankayathin Kaadupoththu Pol Minnni Olipadaippa - ஒரு நீலரத்ந பர்வத்த்தின் மேல் பொன் மயமான தாமரைக் காடு புஷ்பித்தாற்போல் பளபளத்த ஒளியை வீச,
வீழ்நாணும், Veelnaanum - விரும்பத்தக்க திருவரை நாணும்
தோள் வளையும், Thol Valaiyum - தோள் வளைகளும்
மன்னிண குண்டலமும், Mannin Kundalamum - பொருத்தமான திருக்குண்டலங்களும்
ஆரமும், Aaramum - திருமார்பில் ஹாரமும்
நீள் முடியும், Neel Mudiyum - பெரிய திருவபிஷேகமும்
துன்னு வெயில் விரித்த சூளாமணி இமைப்ப, Thunnu Veyil Viritha Soolamani Imaippa - மிக்க தேஜஸ்ஸை வெளிவிடுகின்ற முடியிற் பதித்த ரத்னமும் ப்ரகாசிக்க
மன்னு மாதகக்குன்றின் மருங்கே, Mannu Maathagakundrin Marunge - எல்லார்க்கும் ஆச்ரயமான மரகதமலை யென்னும்படியான எம்பெருமான் பக்கத்திலே
ஓர் இன் இள வஞ்சி கொடி ஒன்று நின்றது, Oru In Ila Vanchi Kodi Ondru Nindrathu - விலக்ஷணமாய் போக்யமாய் இளைசா யிருப்பதொரு வஞ்சிக்கொடி யென்னும் படியான பிராட்டி நின்றாள்.
அன்னம் ஆய், Annam Aay - (நடையில்) ஹம்ஸத்தை யொத்தும்
மான் ஆய், Maan Aay - (நோக்கில்) மானையொத்தும்
அணி மயில் ஆய், Ani Mayil Aay - (கூந்தலில்) அழகிய மயிலை யொத்தும்
இடை மின் ஆய், Idai Min Aay - இடையழகில மின்னலை யொத்தும்
இள இரண்டு வேய் ஆய், Ila Irandu Vey Aay - (தோளில்) இளைதான இரண்டு மூங்கில்களையொத்தும்
இணை செப்பு ஆய், Inai Seppu Aay - (ஸ்தநத்தில்) இரண்டு கலசங்களை யொத்தும்
முன் ஆய் தொண்டை ஆய், Mun Aay Thondai Aay - முன்னே தோற்றுகிற (அதரத்தில்) கொவ்வைக் கனியை யொத்தும்.
குலம் கொண்டை இரண்டு ஆய், Kulam Konda Irandu Aay - (கண்ணில்) சிறந்த இரண்டு கெண்டை மீன்களை யொத்தும்
அன்ன, Anna - அப்படிப்பட்டிருந்த
திரு உருவம், Thiru Uruvam - திவ்ய மங்கள விக்ரஹம் (பிராட்டி)
நின்றது அறியாது, Nindrathu Ariyadhu - (பக்கத்தில்) நிற்கும் படியை அறியாதே (எம்பெருமான் மாத்திரமே யுளனென்று ஸேவிக்கப் புகுந்த)
என்னுடைய நெஞ்சும், Ennudaiya Nenjum - எனது நெஞ்சும்
அறிவும், Arivum - (அந்த நெஞ்சின் தருமமாகிய) அறிவும்
இனம் வளையும், Inam Valaiyum - சிறந்த கைவளையும்
பொன் இயலும் மேகலையும், Pon Iyalaim Megalaiyum - ஸ்வர்ண மயமான மேகலையும்
ஒழிய போந்தேற்கு, Ozhiy Pondheerkku - (எல்லாம்) விட்டு நீங்கப்பெற்ற எனக்கு (இதற்குமேலும் ஹிம்ஸையாம்படி)
மன்னு மறி கடலும் ஆர்க்கும், Mannu Mari Kadhalum Aarkkum - சலியாததும் மடிந்து அலையெறிவதுமான கடலும் கோஷம் செய்யா நின்றது
மதி உகுத்த இன் நிலாவின் கதிகும், Madhi Uguththa In Nilavin Kathikum - சந்திரன் வெளியிடுகின்ற இனிய நிலாவின் ஒளியும்
என் தனக்கே, En Thanakke - எனக்கு மாத்திரம்
வெய்து ஆகும், Veithu Aakum - தீக்ஷ்ணமாயிரா நின்றது,
தன்னுடைய தன்மை தவிர தான் என்கொல், Thannudaiya Thanmai Thavira Thaan Enkol - நிலாவின் ஸ்வபாவமாகிய குளிர்த்தி தவிர்ந்து இப்படி வெப்பமாம்படி எம்பெருமான்றான் ஏதாவது செய்துவிட்டானோ.