Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: மாலை நண்ணி (12 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3655திருவாய்மொழி || (9-9–மல்லிகை கமழ்தென்ற) (தலைவி மாலைப்பொழுது கண்டு தனது ஆற்றாமையால் இரங்கிக் கூறல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –நிகமத்தில் அவன் பக்கல் சாபலமுடையார் இத்திருவாய் மொழியைச் சொல்லி அவனைப் பெறுங்கோள் என்கிறாள்.) 11
அவனை விட்டு அகன்று உயிர் ஆற்ற கில்லா
அணி யிழையாய்ச்சியர் மாலைப் பூசல்
அவனை விட்டகல்வதற்கே யிரங்கி
அணி குருகூர்ச் சடகோபன் மாறன்
அவனியுண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த
ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு
அவனியுள் அலற்றி நின்று உய்ம்மின் தொண்டீர்
அச் சொன்ன மாலை நண்ணித் தொழுதே–9-9-11
அவனை விட்டு அகன்று,Avanai vittu akandra - கண்ண பிரானை விட்டுப் பிரிந்து
உயிர் ஆற்றகில்லா,Uyir aatrakillaa - உயிர் தரிக்கமாட்டாத
அணி இழை ஆராய்ச்சியர்,Ani izhai aaraaychiyar - அழகிய ஆபரணங்களணிந்த கோபிமார்கள்
மாலை பூசல்,Maalai poosal - மாலைப் பொழுதிலே பட்ட பாட்டை
அவனை விட்டு அவல்வதற்கே இரங்கி,Avanai vittu avalvadharke irangi - அப்பெருமானை விட்டு பிரிந்திருக்கை காரணமாக நோவுபட்டு
அணி குருகூர் சடகோபன் மாறன்,Ani Kurukoor Sadagopan Maaraṉ - ஆழ்வார்
அவனி உண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த,Avani undu umizhndhavan meel uraintha - பூமிணை உண்டுமிழ்ந்த அப்பெருமான் விஷயமாக அருளிச் செய்த
ஆயிரத்ததுள் இவை பத்தும் கொண்டு,Aayirathathul ivai pathum kondu - ஆயிரத்தினுள் இப்பதிகங் கொண்டு
தொண்டீர்,Thondir - தொண்டர்களே
அவனியுள் அலற்றி நின்று,Avaniyul alattri ninru - பூமிக்குள்ளே உகந்து அநுஸந்தித்து
3656திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி (வடதளசயனனான மஹோபகாரகன் திருவடிகளிலே ப்ரேமத்தோடு பணிந்து அநவாத கைங்கரியம் பண்ணுங்கோளென்று, இத்திருவாய்மொழியிற் சொல்லுகிற ஆச்ரயணத்தைச் சுருக்கமாகவருளிச் செய்கிறார்.) 1
மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெடக்
காலை மாலை கமல மலர் இட்டு நீர்
வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே–9-10-1
Velai modhum madhil sul,வேலை மோதும் மதில் சூழ் - கடலலை மோதப் பெற்ற மதிளாலே சூழப்பட்ட
Thirukkannapurathu,திருக்கண்ணபுரத்து - திருக்கண்ணபுரத்தி லெழுந்தருளி யிருப்பவனும்
Aalin mel,ஆலின் மேல் - ஜலத்தின் மீது
Aal amarnthaan,ஆல் அமர்ந்தான் - ஆலிலையில் கண் வள்ர்ந்தவமான
Maalai,மாலை - ஸர்வேச்வரனை
Kanni,கண்ணி - கிட்டி
Adi inaigal,அடி இணைகள் - அவனது உபயபாதங்களையும்
Kaalai maalai,காலை மாலை - இரவும் பகலும்
Kamalam malar ittu,கமலம் மலர் இட்டு - தாமரைப்பூக்களை ஸமர்ப்பித்து
Neer,நீர் - (அன்பர்களே!) நீங்கள்
Vinai keda,வினை கெட - (உங்களுடைய) பாவம் தொலையும்படி
Thozhudhu ezumin,தொழுது எழுமின் - வணங்கி உஜ்ஜீவியுங்கள்
3657திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி (“கள்ளவிழும் மலரிட்டு இறைஞ்சுமின் “என்று அருளிச் செய்கையாலே இன்ன மலரென்று ஒரு நிர்ப்பந்தமில்லை யென்பது காட்டப்படும். கீழ்ப்பாட்டில் “கமல மலரிட்டு ” என்றது– கமல மலரேயாக வேணுமென்றும் அதுபோன் சிறந்த மலரேயாக வேணுமென்றும் காட்டினபடியன்று என்பதை இப்பாட்டில் தெளியவைத்தாராயிற்று..) 2
கள் அவிழும் மலரிட்டு நீர் இறைஞ்சுமின்
நள்ளி சேரும் வயல் சூழ் கிடங்கின் புடை
வெள்ளி ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
உள்ளி நாளும் தொழுது எழுமினோ தொண்டீரே–9-10-2
Thondare,தொண்டரே - எம்பெருமானிடத்து ஆசையுள்ளவர்களே
Neer,நீர் - நீங்கள்
Kal avizhum malar,கள் அவிழும் மலர் - தேனொழுகுகின்ற புஷ்பங்களைப் பணிமாறி
Iraijin,இறைஞ்சுமின் - வணங்குங்கள்
Nalli serum,நள்ளி சேரும் - பெண் நண்டுகள் களித்த வாழப்பெற்ற கழனிகள் சூழ்ந்த
Vayal sul kidankin,வயல் சூழ் கிடங்கின் - அகழ்களைப் பக்கங்களிலே யுடையதும்புடை
Velli aaynth madhin soo zh,வெள்ளி ஏய்ந்த மதின் சூழ் - சுக்கிரனைத் தொட்டுக் கொண்டிருக்கிற மதிள்களாலே சூழப்பட்டதமான
Thiru Kannapuram,திரு கண்ணபுரம் - திருக்கண்ணபுரத்தை
Ullli,உள்ளி - சிந்தனை செய்து கொண்டு
Naalum,நாளும் - நாடோறும்
Thozhudhu ezumin,தொழுது எழுமின் - வணங்கி உஜ்ஜீவியுங்கள்
3658திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி (திருக்கண்ணபுரத்திலே நின்றருளினவன் உபயவிபூதி நாதனாயிற்று; தொண்டர்களே உங்கள் துக்கங்கெட அநந்யப்ரயோஜநராய்க் கொண்டு ஆச்ரயியுங்கோளென்கிறார்) 3
தொண்டீர் நும் தம் துயர் போக நீர் ஏகமாய்
விண்டு வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின்
வண்டு பாடும் பொழில் சூழ் திருக் கண்ணபுரத்து
அண்ட வாணன் அமரர் பெருமானையே–9-10-3
Thondar,தொண்டர் - தொண்டர்களே
Vantu paadum pozhi soo zh,வண்டு பாடும் பொழிழ் சூழ் - வண்டுகள் பாடுமிடமான் சோலைகளாலே சூழப்பட்ட
Thiru Kannapurathu,திரு கண்ணபுரத்து - திருக் கண்ணபுரத்தி வெழுந்தருளியிருக்கிற
Andam vaanan amarar perumaa nai,அண்டம் வாணன் அமரர் பெருமானை - அகிலாண்ட கோடி ப்ரஹ மாண்டநாயகனான எம்பெருமானை
Thum tham thuyar poka,தும் தம் துயர் போக - உங்களுடைய துக்கம் தொலையும்படி
Neer aegam aay,நீர் ஏகம் ஆய் - நீங்கள் அநந்ய ப்ரயோஜநர்களாய்
Vindu vaadaa malar ittu,விண்டு வாடா மலர் இட்டு - மலர்ந்து வாடாத (அப்போதலர்ந்த) பூக்களைப் பணிமாறி
Neer iraijumeen,நீர் இறைஞ்சுமீன் - நீங்களே தொழுங்கள்
3659திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி (ஆச்ரயிக்குமளவில் நப்பின்னைப்பிராட்டி புருஷகாரமாக ஆச்ரயியுங்கொள்; அவளுடைய புருணகாரபலத்தாலே பேறு தப்பாதென்கிறார்.) 4
மானை நோக்கி மடப்பின்னை தன் கேள்வனைத்
தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்
வானை உந்தும் மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
தான் நயந்த பெருமான் சரண் ஆகுமே–9-10-4
Maanai nokki mada pinai than kaelvanai,மானை நோக்கி மட பின்னை தன் கேள்வனை - மானை யொத்த கண்பார்வையை யுடையளான நப்பின்னைப்பிராட்டிக்கு நாதனும்
Kaenai,கேணை - தேன்போல் இனியனுமான எம்பெருமானை
Vaadaa malar ittu neer iraijchamin,வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சமின் - அப்போதலர்ந்த செவ்விப் பூக்களையிட்டு நீங்கள் தொழுங்கள்
Vaanai undhum madhil soo zh,வானை உந்தும் மதிள் சூழ் - ஆகாசத்தை யளாவியிருக்கின்ற மதிகளாலே சூழப்பட்ட
Thiru Kannapuram,திருக்கண்ணபுரம் - திருக்கண்ணபுரத்தை
Nayanda perumaan thaane,நயந்த பெருமான் தான் - விரும்பியிருக்கின்ற சௌரிப்பெருமானே
Saran aagum,சரண் ஆகும் - ரக்ஷகராவர்
3660திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி (கீழ்ச்சொன்னபடி பக்தி யோகத்தால் அவனை யாம்யிக்க அதிகாரிகளல்லாமல் தன் திருவடிகளையே உபாயமாகப் பற்றினவர்களுக்கு எ ம்பெருமான் எல்லாப்படியானும் தக்ஷகனாய் தேஹாவஸானத்திலே அவர்களை இந்த ப்ரக்ருதியில் நின்றும் விடுவித்துத் திருநாட்டிலே கொண்டுபோய் வைத்தருள்லனென்கிறார்.) 5
சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்
தரணி யாளன் தனது அன்பர்க்கு அன்பாகுமே–9-10-5
Thanathaal adai tharukku,தனதாள் அடை ந்தார்க்கு - தனது திருவடிகளை உடைந்தவர்களுக்கு
Charanam ellaam aagum,சரணம் எல்லாம் ஆகும் - ஸகலவித ரக்ஷசனுமாய்
Maranam aanal,மரணம் ஆனால் - இந்த தேஹம் விட்டு நீங்கினவுடனே
Vaikundam kodukkum,வைகுந்தம் கொடுக்கும் - பரமபதமளிக்கும் பெருமானுமாய்பிரான்
Thiru Kannapuram,திருக்கண்ணபுரம் - திருக்கண்ணபுரமாகிற
Kaan,காண் - ஷேத்திரத்தை
Aalan,ஆளன் - ஆள்பவனுமான எம்பெருமான்
Anbu aagum,அன்பு ஆகும் - அன்புதானே வடிவெடுத்தவனாயிருப்பன்
3661திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி ( தன தாளடைந்தார்க்கெல்லாம் அன்பனாகும்= “அநாலோசித விசேஷாசேஷ லோகசரண்ய!” என்று எம்பெருமானாரருளிச் செய்வதை இங்கு அநுஸந்திப்பது. தனது திருவடிகளையுடைந்தாரில் இன்னாரினையாசென்று வாசி பாராதே வஸிஷ்ட சண்டாள விபாகமற எல்லார்க்குமொக்க ஸ்நேஹிக்குமவன் எம்பெருமான் என்று ஆழ்வானருளிச் செய்தது இங்கே அநுஸந்தேயம்.) 6
அன்பன் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
செம்பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டான்
நன் பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
அன்பன் நாளும் தன் மெய்யர்க்கு மெய்யனே–9-10-6
Thana thaal adainthaarkku ellaam,தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் - தனது திருவடிகளைப்பற்றினாரெல்லார்க்கும்
Anban aagum,அன்பன் ஆகும் - அன்பு செய்பவனாய்
Sempon aagathu avunan udal keentavan,செம்பொன் ஆகத்து அவுணன் உடல் கிண்டவன் - சிவந்த பொன்போன்ற அடம்பையுடைய இரணியாசுரனது உடைலைக் கீண்டவனாய்
Naan pon eyndha madhil sooal,நான் பொன் எய்ந்த மதிள் சூழ் - நல்ல பொன்னாலே யமைத்த மதிளாலே சூழப்பட்ட
Thiru Kannapurathu Anban,திரு கண்ணபுரத்து அன்பன் - திருக்கண்ணபுரத்திலே விருப்பமுடையவனான எம்பெருமான்
Thana meyyarkku,தன மெய்யர்க்கு - தன் திறத்திலே உண்மையாக ஸ்நேஹிக்குமவர்களுக்கு
Naalum meyyan,நாளும் மெய்யன் - எப்போதும் உண்மையான ஸ்நேஹமுடையவன்
3662திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி ( இப்படி மெய்யர்க்கே மெய்யனாயும் பொய்யர்க்கே பொய்யனாயுமிருக்கு மிருப்பைத் திருக்கண்ணபுரத்திலே காட்டிக் கொண்டு வர்த்திக்கும் பெருமான் , ஆகத்து அணைப்பார்கட்கு அணியன் தன்னை ஹருதயத்திலே வைப்பார்க்குக் கையாளாயிருப்பன்.) 7
மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம்
பொய்யானாகும் புறம்பே தொழுவார்க்கு எல்லாம்
செய்யல் வாளை உகளும் திருக் கண்ணபுரத்து
ஐயன் ஆகத்து அணைப்பார்கட்கு அணியனே –9-10-7
Virumbi thozhu vaarkku ellaam,விரும்பி தொழு வார்க்கு எல்லாம் - தன்னையே புருஷார்த்தமாக ஆசைப்பட்டு தொழுமவர்களெல்லார்க்கும்
Meyyan aagum,மெய்யன் ஆகும் - மெய்யன்பனாய்
Purame thozhuvaarkku ellaam,புறமே தொழுவார்க்கு எல்லாம் - பிரயோஜநாந்தாங்களுக்காக மேலெழுத் தொழுமவர்களுக்கெல்லாம்
Poyyan aagum,பொய்யன் ஆகும் - தன்னை உள்ளபடி காட்டமாட்டாதவனாய்
Seiyilvaalai ugalum Thiru Kannapurathu Aiyan,செய்யில்வாளை உகளும் திரு கண்ணபுரத்து ஐயன் - கழனிகளில் வாளை மீன்கள் துள்ளி விளையாடப் பெற்ற திருக்கண்ண புரத்திலே யெழுந்தருளி யிருப்பவனான எம்பெருமான்
Aagathu anaip paarkatku,ஆகத்து அணைப் பார்கட்கு - தங்கள் மனத்தில் ஊன்றவைத்துக் கொள்பவர்களுக்கு
3663திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி ( மணியும் பொன்னுமிழக்கப் பெற்ற மதிலாளே சூழப்பட்ட திருக்கண்ணபுரத்திலே, திருநாட்டிலிருக்கும் படியில் ஒன்றுங்குறையாதே யெழுந் தருளியிருக்கும் சௌரிப் பெருமாளுடைய திருவடிகளையே உபாயமும் உபேயமுமாகப் பற்றுங்கள் என்றாராயிற்று) 8
அணியன் ஆகும் தன தாள் அடைந்தார்கட்கு எல்லாம்
பிணியும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
பணிமின் நாளும் பரமேட்டி தன் பாதமே–9-10-8
Thana thaal adainthaarkku ellaam,தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் - தன் திருவடிகளைப் பணிந்தவர் களெல்லார்க்கும்
Aniyan aagum,அணியன் ஆகும் - அந்தரங்கனா யிருப்பன்
Piniyum saaraa,பிணியும் சாரா - வியாதி முதலானவைகளும் அணுகமாட்டா
Piravi keduthu aalum,பிறவி கெடுத்து ஆளும் - ஸம்ஸார ஸங்கத்தை யறுத்து அடிமை கொள்வன்
Mani pon aayndha madhil soo'l,மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் - ரத்னங்களும் பொன்களும் பொருந்தின மதிளாலே சூழப்பட்ட
Thirukkannapuram,திருக்கண்ணபுரம் - திருக்கண்ணபுரத்தி யெழுந்தருளிளிருக்கிற
Paramaetti than paatham,பரமேட்டி தன் பாதம் - பரம புருஷனுடைய திருவடிகளை
3664திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி (பிறர்க்கு உபதேசஞ்செய்வது கிடக்க, தாம் முன்னம் அவனையாச்ரயித்துக் குறை தீர்ந்தபடியைப் பேசிக்களிக்கிறார்) 9
பாதம் நாளும் பணியத் தணியும் பிணி
ஏதம் சாரா எனக்கேல் இனி என் குறை
வேத நாவர் விரும்பும் திருக் கண்ணபுரத்து
ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே–9-10-9
Vedham nvaar virumbum,வேதம் நாவர் விரும்பும் - வைதிகர்கள் விரும்பி வர்த்திக்குமிடமான
Thirukkannapurathu,திருக்கண்ணபுரத்து - திருக்கண்ணபுரத்தி லெழுந்ததருளியிருக்கிற
Aadiyaanai,ஆதியானை - முழுமுதற்கடவுளான எம்பெருமானை
Adainthaarkku,அடைந்தார்க்கு - ஆச்ரயித்தவர்களுக்கு
Allal illai,அல்லல் இல்லை - துக்கமொன்று மில்லையாகும்
Naalum paadham paniya,நாளும் பாதம் பணிய - (அப்பெருமானுடைய) திருவடிகளை எப்போதும் ஸேவிக்கு மளவில்
Pini thaniyum,பிணி தணியும் - நோய்கள் அறும்
Ekam saaraa,ஏகம்சாரா - பாவங்கள் சேரமாட்டா
Ini,இனி - இப்படியான பின்பு
En kurai,என் குறை - என்ன குறையுண்டு? (ஒரு குறையுமில்லை)

3665திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி (பத்தியையோ ப்ரபத்திலேயோ அனுஷ்டிக்க சக்தரல்லாதவர்கள் திருக்கண்ணபுரமென்று சொன்னவளவிலே ஸமஸ்ததுக்கங்களும் போமென்கிறார்) 10
இல்லை அல்லல் எனக்கேல் இனி என் குறை
அல்லி மாதர் அமரும் திரு மார்பினன்
கல்லில் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
சொல்ல நாளும் துயர் பாடு சாராவே –9-10-10
Allal illai,அல்லல் இல்லை - துக்கங்கள் தொலையும் எனக்கு இனி என் குறை
Alli maadhar amarum thirumaarpavan,அல்லி மாதர் அமரும் திருமார்ப்பவன் - தாரையாளான பெரிய பிராட்டியாரு ருதையும் திருமார்பையுடைய பெருமான்
Nallil aayndha madhil sul,நல்லில் ஏய்ந்த மதிள் சூழ் - கற்பணிமிக்க மதிளாலே சூழப்பட்ட
Thiru Kannapuram solla,திரு கண்ணபுரம் சொல்ல - திருக்கண்ணபுரம் என்று சொன்ன வளவில்
Naalum,நாளும் - ஒரு நாளும்
Thuyarpaadu saara,துயர்பாடு சாரா - துக்கம் அணுகாது
3666திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி ( பலனுரைத்துத் தலைக்கட்டவேண்டிய இப்பாசுரத்தில் “இப்பத்தும் பாடி பணிமிளவன்தாள்களே” என்று உபநெசரூபமாகவே யருளிச்செய்தாரெனினும் இதுவும் பயனுரைப்பதாகவே தலைக்கட்டும்) 11
பாடு சாரா வினை பற்று அற வேண்டுவீர்
மாட நீடு குருகூர்ச் சடகோபன் சொல்
பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
பாடி ஆடிப் பணிமின் அவன் தாள்களே–9-10-11
Vinai patru,வினை பற்று - துக்க ஸம்பந்தம்
Paadu saara,பாடு சாரா - அருகில் கிட்டாதபடி
Ara venduveer,அற வேண்டுவீர் - அது கொலையவேணு மென்றிருப்பவர்களே
Maadam needu GuruKoor,மாடம் நீடு குருகூர் - மாடமாளிகைகள் உயர்ந்த திருநகரியிலே அவதிர்த்த
Sadagopan,சடகோபன் - ஆழ்வார்
Sol,சொல் - அருளிச்செய்த
thamizh aayiraththul ippattum,தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும் - தமிழ் பாடல் ஆன ஆயிரத்துள் இப் பத்தும் –
Paadi,பாடி - வாயாரப்பாடி
Aadi,ஆடி - அதற்குச் சேர நர்த்தன்ம் பண்ணி
Avan thaalgalae panimin,அவன் தாள்களே பணிமின் - அப்பெருமானுடைய திருவடிகளையே தொழுங்கள்