Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: முனியே (13 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
0அமலனாதிபிரான்- தனியன் || லோக ஸாரங்க முனிவராலே எழுந்தருளப்பண்ணிக்கொண்டு வரப்பட்டு, பெரிய பெருமாள் ஸந்நிதியில் தனியே புகுந்தவரும், பெரிய பெருமாள் காட்டிக் கொடுத்த திருவடித் தாமரைகள், அழகிய ஆடை, திருநாபி, மிகவும் இனியதான திருவயிறு, திருமார்வு, கழுத்து, சிவந்த வாய், அப்போதலர்ந்த தாமரை போன்ற கண்கள், திருமேனி ஆகியவற்றைக் கண்டவரும், எம்பெருமானைப் பாடுவதே வாழ்ச்சியாகக் கொண்டிருந்தவருமான திருப்பாணாழ்வார் திருவடிகளைக் கொண்டாடினோம் 22
காட்டவே கண்ட பாதகமல நல்லாடையுந்தி
தேட்டரு முதரபந்தந் திருமார்வு கண்டஞ் செவ்வாய்
வாட்டமில் கண்கள்மேனி முனியேறித் தனிபுகுந்து
பாட்டினால் கண்டுவாழும் பாணர்தாள் பரவினோமே
Muni eri, முனி ஏறி - லோகஸாரங்கமுனியின் (தோளின்மேல்) ஏறி
Thani pugundhu, தனி புகுந்து - தனியே உள்ளே புகுந்து
Kaatave kanda, காட்டவே கண்ட - (எம்பெருமான்) காண்பித்தபடியே கண்டு ஸேவிக்கப்பட்ட
Paadha Kamalam, பாத கமலம் - திருவடித் தாமரைகளும்
Nal aadai, நல் ஆடை - சிறந்த திருப்பீதாம்பரமும்
Undhi, உந்தி - திருநாபியும்
Thetarum, தேட்டரும் - கிடைத்தற்கு அரிதான
UdharaBandham, உதரபந்தம் - பொன்அரைநாணும்
Thirumaarvu, திருமார்வு - பிராட்டி வாழ்கிற மார்பும்
Kandam, கண்டம் - திருக்கழுத்தும்
Sevvaai, செவ்வாய் - சிவந்த வாயும்
Vaattam il, வாட்டம் இல் - சோர்வுஇல்லாத
Kangal, கண்கள் - திருக்கண்களும் (ஆகிய இவற்றோடு கூடிய)
Meni, மேனி - திருமேனியை
Paattinaal kandu vaazhum, பாட்டினால் கண்டு வாழும் - பாசுரங்களின் அநுஸந்தானத்தோடேகூட ஸேவித்து ஆனந்தித்த
Paanar, பாணர் - திருப்பாணாழ்வாருடைய
Thaal, தாள் - திருவடிகளை
Paravinome, பரவினோமே - துதிக்கப்பெற்றோம்
0பெரிய திருமொழி - தனியன் || எம்பார் என்னுமாசிரியர் எம்பெருமானார் திருவடிகளிலே வந்து வணங்கிப் பிரார்த்திக்கின்றார் ( ஸ்வாமிந்! தேவரீரையொழிய வேறுயாரும் அடியோங்களுக்குப் புகலாவாரில்லை ; தத்துவ நூல்களில் எங்களுக்கு உண்டான எவ்வளவோ ஸம்சயங்களை இதுவரையில் தேவரீர் போக்கியருளி மஹோபகாரம் செய்திருக்கிறது. அதெல்லாம் பெரிதல்ல; திருமங்கையாழ்வாருடைய திவ்யஸூக்திகளை எவ்வளவு ச்ரமப்பட்டுக் கண்டபாடஞ் செய்தாலும் மறப்பின் மிகுதியாலே தரிக்கமுடியாமல் வருந்துகிற எங்களுக்கு எப்படியாவது அந்த ஸ்ரீஸூக்திகளையெல்லாம் தரிக்கும்படியான மனவுறுதியை அருள் செய்யவேணும்) 26
எங்கள் கதியே இராமாநுச முனியே
சங்கை கெடுத்தாண்ட தவராசா ! – பொங்குபுகழ்
மங்கையர்கோன் ஈந்த மறை ஆயிரம் அனைத்தும்
தங்கு மனம் நீ எனக்குத் தா!
எங்கள் கதியே, engal kathiye - எங்களுக்கு அடைக்கலமாய் இருக்குமவரே
இராமாநுச , Ramanuja - இராமாநுஜன் என்னும் திருநாமத்தையுடையவராய்
முனியே, muniye - ஆத்மாக்களின் ரக்ஷனத்தை மனனம் பண்ணுபவரே
சங்கை, sangai - வேத சாஸ்திரத்தில் இருக்கும் ஐயங்களை எல்லாம்
கெடுத்து, keduthu - போக்கி
ஆண்டு, aandu - எல்லாரையும் அடிமை கொண்டவரான
தவராசா, thavarasa - எதிராஜரே
பொங்கு, pongu - மிகுந்த
புகழ், pugazh - பெருமையுடைய
மங்கையர்கோன், mangaiyarkon - திருமங்கையில் உள்ளாருக்கு ராஜாவான திருமங்கையாழ்வார்
ஈந்த, eendha - அருளிச்செய்த
மறை, marai - வேத ரூபமான
ஆயிரம் அனைத்தும், ayiram anaithum - ஆயிரம் பாட்டாக இருக்கும் பெரிய திருமொழி பிரபந்தமும், அனைத்தும்
தங்கு மனம், thangu manam - தரித்திருக்கும்படியான மனதை
நீ எனக்கு தா, nee enakku tha - அடியேனுக்கு, தேவரீர் தந்தருள வேண்டும்
3766திருவாய்மொழி || 10-10 முனியே (நிர்ஹேதுகமாக வடிவழகைக் காட்டி என்னை யீடுபடுத்திவைத்து உன்னையொழியச் செல்லாதபடி பண்ணிவைத்து இப்படி ஸம்ஸாரத்திலே இன்னமும் தள்ளி வைப்பது தகுதியன்று என்கிறார்.) 1
முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–10-10-1
முனியே, Muniye - படைக்கும் வகையை மனனம் பண்ணுமவனே!
நான்முகனே, Naanmugane - நான்முகனுக்கு அந்தரியாமியாயிருக்குமவனே!
முக்கண் அப்பா, Mukkan appa - ஸம்ஹாரக் கடவுளான ருத்ரனுக்கு அந்தரியாமியானவனே!
கனிவாய் தாமரை கண், Kanivaai thaamarai kan - கனிந்த அநரத்தையும் தாமரைபோன்ற திருக்கண்களையுமுடைய
என் பொல்லா கருமாணிக்கமே, En polla karu maanikkame - துளையாத கருமாணிக்கம் போன்ற திருவுருவத்தை எனக்கு அநுபவிப்பித்தவனே!
என் கள்வா, En kalva - என்னை வஞ்சித்து ஈடுபடுத்திக் கொண்டவனே!
தனியேன் ஆர் உயிரே, Thaniyen aar uyire - என்னொருவனுக்குப் பாரி பூர்ண ப்ராணனானவனே
என் தலை மிசை ஆய் வந்திட்டு, En thalai misai aai vandhittu - என் தலைமேலே வந்து சேர்ந்தாயான பின்பு
இனி நான் போகல் ஒட்டேன், Ini naan pogal otten - இனி யொருநாளும் உன்னை அகன்றுபோக இசையமாட்டேன்:
என்னை , Ennai - ஆர்த்தி மிகுந்த என்னை
ஒன்றும் மாயம் செய்யேல், ondrum maayam seiyel - ஒரு படியாலும் வஞ்சிக்கலாகாது.
3767திருவாய்மொழி || 10-10 முனியே (தம் காரியம் செய்தல்லது நிற்க வொண்ணாதபடி ஆணையிடுகிறாரிப்பாட்டில். ஒன்றும் மாயம் செய்யேலென்னையே என்று கீழ்ப்பாட்டில் சொன்னவுடனே எம்பெருமான் வந்து அபயமளிக்க வேணுமே, அது செய்யக் காணாமையாலே மீண்டும் மாயஞ்செய்யேலென்னை யென்கிறார்) 2
மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை
வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய்
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே
கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –10-10-2
என்னை மாயம் செய்யேல், ennai maayam seiyel - என் திறத்தில் வஞ்சனை பண்ணா தொழியவேணும்;
உன் திருமார் வத்து மாலை, Un thirumaar vathu maalai - உன்னுடையதிருமார் விலேசாத்திய மாலை போன்றவளாய்
நங்கை, Nangai - ஸகல குணபாரிபூர்ணையாய்
வாசம் செய்; பூ குழலாள், Vaasam sey; poo kuzhalaal - பரிமளம் மிக்க கூந்தலையுடையவளான
திரு ஆணை, Thiru aannai - பெரியபிராட்டியாணை:
நின் ஆணை, Nin aannai - உன் ஆணை
நேசம் செய்து, Nesam seydhu - தானாகவே ஸ்நேஹித்து
உன்னோடு, Unodu - உன்னோடே
என்னை, Ennai - நீசனான என்னை
உயிர் வேறு அன்றி, Uyir veru andri - ஆத்மபேத மில்லாமல்
ஒன்று ஆகவே, Ondru aagave - ஏக வஸ்துவாகவே
கூசம் செய்யாது, Koosam seiyaadhu - எனது தண்மையைப் பார்த்துக் கூசாமல்
கொண்டாய், Kondai - அடியேபிடித்து அங்கீகாரித்தருளினாய்;
என்னை வந்து கூவி கொள்ளாய் ennai vandhu koovi kollai - (ஆனபின்பு) இனி உபேகூஷியாதே என்னைத் திருவடி சேர்த்துக் கொள்ளவேணும்.
3768திருவாய்மொழி || 10-10 முனியே (தாஹித்தவன் தாஹ சாந்தி பிறக்கும் அளவும் தண்ணீர் தண்ணீர் -என்னுமா போலே மீண்டும்– கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ-என்கிறார்) 3
கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பரந்ததுவே–10-10-3
மேவி தொழும், mevi thozhum - விரும்பித் தொழுகின்ற
பிரமன் சிவன் இந்திரன் ஆதிக்கு எல்லாம், Biraman sivan indiran aadhiku ellaam - பிரமன் சிவன் இந்திரன் முதலானார்க்கும்
முதல், mudhal - மூலநாரணமான
நாவி கமலம், naavi kamalam - திருநாபிக்கமலத்திற்கு
கிழங்கே, kizhange - இருப்பிடமானவனே!
ளும்பர்அந்ததுவே, lumbar andhadhuve - அவர்களிஎம் மேற்பட்ட நித்யஸூரிகளுக்கும் பரம ப்ராப்யனானவனே!
ஆவிக்கு, aavikku - ஆத்மாவுக்கு
ஒர் பற்று கொம்பு, or patru kombu - ஓர் கொள்கொம்பு
நின் அலால், nin alaal - உன்னைத் தவிர
யான் அற்கின்றிலேன், yaan arkinrilen - நான் காண்கின்றிலேன்; (ஆதலால்) அந்தோ! வந்து கூவிக்கொள்ளாய்.
3769திருவாய்மொழி || 10-10 முனியே (ஸர்வநிர்வாஹகனான நீயே என் காரியத்தையும் நிர்வஹிக்கவேண்டியிருக்க, என் காரியம் நானே பண்ணிக் கொள்வேனாகப் பார்த்திருக்கிறாயாகில் என்னைக் கைவிட்டபடியன்றோ வென்கிறார்.) 4
உம்பர் அம் தண் பாழேயோ அதனுள் மிசை நீயேயோ
அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ
எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே–10-10-4
உம்பர்அம் தண் பாழேயோ, umparam than paazheyo - மூல ப்ரக்ருதிக்கு நிர்வாஹகனானவனே!
அதனுள் மிசை நீயேயோ, adhanul misai neeyeyo - அந்தப்ரக்ருதிக்குள்ளே நிற்கிற ஆத்ம தத்வத்துக்கு நிர்வாஹகனானவனே!
அம்பரம் நல்சோதி அதனுள் பிரமன் அரண் நீ, ambaram nalsothi adhanul biraman aran nee - ஆகாசம் முதலானவற்றுக்கும் அண்டத்துக்குள்ளேயிருக்கிற பிரமன் சிவன் முதலான வர்களுக்கும் நிர்வாஹன் நீ;
உம்பரும் , umbarum - மேலான தேவர்களையும்
யாதவரும்,yaathavarum - மநுஷ்யாதி ஸகலசேதநரையும்
படைத்த முனிவன் அவன் நீ, padhaitha munivan avan nee - அவரவர்களது கருமங்களை மனனம் பண்ணி ஸ்ருஷ்டித்தவன் நீ;
எம் பரம் சாதிக்கல் உற்று, em param saadhikkal utru - (இப்படியாயிருக்க) என் சாரியம் நீயே செய்வதாக ஏறிட்டுக்கொண்டு
என்னை போர விட்டிட்டாயே, enai pora vittitaaye - (இவ்வளவும் வர நிறுத்தி) என்னை இங்கேயே பொகட்டுவைத்தாயே.
3770திருவாய்மொழி || 10-10 முனியே (ஸர்வரகூஷகனாள நீ உபேகூஷித்தால் என்காரியம் நான் செய்யவோ? பிறர் செய்யவோ? நாளும் செய்;ய முடியாமல் பிறரும் செய்ய முடியாதபடி. யன்றோவிருப்பது; இனி முடிந்தேனத்தனையன்றோவென்கிறார்.) 5
போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனது என்பன் என் யான் எனபது என்
தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே –10-10-5
இரும்பு, irumbu - காய்ச்சின இரும்பானது
தீர உண்ட, theera unda - தன் காய்ச்சல் தீரும்படி உண்ட
நீர் அது போல, neer athu pola - நீர் போல
என் ஆர் உயிரை ஆர பருக, en aar uyirai aara paruka - என் ஆத்மாவின் விடாயெல்லாம் தீரப் பருகுகைக்கு
எனக்கு ஆரா அமுது ஆனாயே, enakku ara amuthu anaaye - எனக்கு ஆராவமூதமா யிருக்கின்றாயே;
நீ என்னை போர விட்டிட்டு, nee ennai pora vittittu - (இப்படியிருக்க) நீ என்னை அநாதாரித்து
புறம் போக்கல் உற்றால், puram pokkal utraal - உபேகூஷித்துப் பொருட்டால்
பின்னை, pinai - ஸர்வ சக்தியான நீயுமிப்படி கைவிட்டபின்பு
யான், yaan - அசக்தனான நான்
ஆரை கொண்டு, aarai kondu - எந்த உபாயத்தைக் கொண்டு
எத்தை, yethai - எந்த புருஷார்த்தத்தை (ஸாதிப்பேன்!)
அந்தோ, andho - ஜயோ!
எனது என்பது என், enathu enbadhu en - என்னுடையதென்கைக்கு என்ன இருக்கிறது.
யான் என்பது னுள், yaan enbadhu nul - நான் என்கைக்கு ஒரு ஸ்வதந்த்ர கர்த்தாவுண்டோ?
3771திருவாய்மொழி || 10-10 முனியே (பெரிய பிராட்டியார்டத்திற்போலே என்னிடத்திலும் மிகுந்த அபிநிவேசம் கொண்டவனாய் எனது உடலிலுமுயிர்லும் அதிகமான விருப்பத்தைப் பண்ணி புஜித்த நீ இனி யென்னை யுபேஷியாதே விரைவில் விஷயீகரித்தருளாயென்கிறார்) 6
எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6
புணம் க்ற்யா நிறத்த, punam kryaa niraththa - தன்னிலத்தில் அலர்ந்த காயாம்பூப் போன்ற நிறத்தை யுடையையாய்
புண்டாரிகம் கண் செம் கனி வாய், puntaarikam kan sem kani vaai - தாமரைபோன்ற திருக்கண்ணையும் சிவந்த திருப்பவளத்தையுமுடையையான
உனக்கு, unakku - உனக்கு
ஏற்கும், erkum - ஏற்றிருக்கின்ற
கோலம், kolam - வடிவு படைத்தவளான
மலர்பாவைக்கு, malar paavaikku - பெரிய பிராட்டிக்கு
அன்பா, anbaa - அன்பனே!
என் அன்பே, en anbe - என் விஷயத்தில் அன்பு தானே வடிவெடுத்தாற் போன்றிருப்பவனே!
எனக்கு ஆரா அமுது ஆய், enakku aara amudhu aay - எனக்குப் பரம போக்யனாய்
எனது ஆவியை இன் உயிரை, enadhu aaviyai in uyirai - என்னுடைய ஹேயமான ப்ரக்ருதியையும் விலகூஷணனான ஆத்மாவையும்
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய், manakku aaraamai manni undittai - இதயத்துக்கு த்ருப்தி பிறவாதபடி விரும்பி நிரந்தரமாக புஜித்தாய்:
இனி உண்டொழியாய், ini undozhiyaai - குறையும் புஜித்தேயாக வேணும்.
3772திருவாய்மொழி || 10-10 முனியே (பிரளயார்ணவத்திலே மூழ்கியிருந்த ஸ்ரீ பூமிப்பிராட்டியை யெடுத்து அவளோடே கலந்தாப்போலேயும், கடலைக்கடைந்து பிராட்டியோடே ஸம்ச்லேஷித்தாப்போலேயும் பிராட்டி பாரிக்ரஹமானவென்னை ஸம்ஸார ஸாகரத்தில் நின்று மெடுத்து என் பக்கலிலே மிகவும் வியாமோஹங் கொண்டிருக்கிறவுன்னைப் பெற்றுவைத்து இனித் தப்பவிடுவனோவென்கிறார்) 7
கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7
கோலம் மலர்பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ, kolam malarpaavaikku anbu aagiya en anbeyo - பெரிய பிராட்டியார்க்கு உகப்பானவத்தாலே அவள் பாரிக்ரஹமான என் பக்கலிலே அன்புசெய்யுமவனே!
நீலம் வரை, neelam varai - நீலமணி மலை யொன்று
இரண்டு பிறை கவ்வி, irandu pirai kavvi - இரண்டு பிறையைக் கவ்விக் கொண்டு
நிமிர்ந்தது ஒப்ப, nimirndhadhu oppa - எழுந்திருந்தாற் போலே
கோலம் வராகம் ஒன்று ஆய், kolam varaagam ondru aai - எழுந்திருந்தாற் போலே விலகூஷணமான அத்விதீய மஹா வராஹமாய்
நிலம், nilam - பூமியை
கோடு இடை கொண்ட, kodu idai konda - எயிற்றிலே கொண்டெடுத்த
எந்தாய், endhaai - எம்பெருமானே!
நீலம் கடல் உடைந்தாய், neelam kadal udaindhaai - உனது திருமேனி நிழலிட்டாலே நீலமான கடலைக் கடைந்து அமுத மளித்தவனே!
உன்னை பெற்று, unnaai petru - உன்னைப் புகலாகப் பெற்று வைத்து
இனி போக்குவனோ, ini pokkuvano - கைபுகுந்த பின்பு நழுவ விடுவேனோ!
3773திருவாய்மொழி || 10-10 முனியே (மிகவும் விஸஜாதீயனாயிருந்த எனக்கு மிகவும் தாரகனான வுன்னை பெற்று வைத்து இனி விடுவேனோ? உயிரைவிட்டு உடல் தாரிக்கவற்றோ வென்கிறார்.) 8
பெற்று இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை
உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-10-10-8
உயிர் ஆய், uyir aay - கர்ம வச்யனான ஆத்மாவுக்கு நியந்தாவாய்
பயன் அவை ஆய், payan avai aay - கருமபலனான ஸீக துக்கங்களைக் கொடுப்பவனாய்க் கொண்டு
இம் மூவுலகும் முற்ற பெருதூறு ஆய், im moovulagum mutra peruthooru aay - இந்த மூவுலக மெல்லாமாகிற பெரிய தூற்றை யுண்டாக்கினவனாய்
தூற்றில் புக்கு, thootril pukku - இந்தத் தூறு தன்னுள்ளே புகுந்து
முற்ற கரந்து ஒளித்தாய், mutra karandhu oliththai - ஒருபடியாலு மறிய வொண்ணாதபடி மறைந்து நிற்குமவனாய்
என் முதல் தனி வித்தே ஓ, en mudhal thani vithe o - எனக்கு உன்னைக் கிட்டுகைக்கு மூல ஸீக்ருதமாயிருப்பவனே!
என் தனிபேர் உயிரை உன்னை , en thaniper uyirai unnai - எனக்கு அஸாதாரண தாரகனான வுன்னை
பெற்று இனி போக்குவனோ , petru ini pokkuvano - பெற்று வைத்து இனி விடுவேனோ!
3774திருவாய்மொழி || 10-10 முனியே (நான் ஜெகதாகாரனாய் இருக்கிற இருப்பைக் கண்டீர் ஆகில் இனி மற்ற அபேக்ஷிதம் என் என்னில் எனக்கு அதுவே அமையாது – நீ ஜெகதாகாரனாய் இருக்கிற இருப்பே அன்றியே இவற்றோடு ஒரு கலப்பு இன்றியே திரு நாட்டிலே நீயாய் இருக்கும் இருப்பைக் காண வேணும் என்கிறார் ) 9
முதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்
முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்
முதல் தனி எங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய்
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடுவிலீயோ–10-10-9
முழு மூ உலகு ஆதிக்கு எல்லாம், muzhu moo ulagu aadhikku ellaam - மூவுலகு தொடக்கமான எல்லாவற்றுக்கும்
முதல் தனி வித்தே ஓ, mudhal thani vithe o - முவகைக் காரணமுமானவனே!
அங்கும் இங்கும் முழு முற்று உறு, angum ingum muzhu mutru uru - எங்கும் ஸமஸ்த பதார்ததிருப்பதாய்
முதல் தனி, mudhal thani - அத்விதீய காரணமாய்
வாழ், vaazh - போதமோகூஷங்களாகிற வாழ்ச்சிக்கு
பாழ் ஆய், paazh aay - விளை நிலமான முல ப்ரக்ருதிக்கு நியாமகனாய்
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து ஒயர்ந்த முடிவு இலீ ஓ, mudhal thani soozhndhu agandru aazhndhu oyarndha mudivu ilee o - பு;ரக்ருதி ப்ராக்ருதங்களுக்கு நியாமகமாய் ஒப்பற்றதாய் தர்ம பூதஜ்ஞானத்தாலே எங்கும் வியாபித்ததாய் நித்யமான ஆத்மவர்க்கத்துக்கு நியாமகனானவனே!
முதல் தனி உன்னை, mudhal thani unnai - முதல்வனாயும் அத்விதீயனாயுமிருக்கிற உன்னை
உன்னை, unnai - அஸாதரணனானஷன வுன்ளை
நான் என்னை நாள் வந்து கூடுவன், naan ennai naal vandhu kooduvan - நான் எந்நாள் வந்து கூடக் கடவேன்!
3775திருவாய்மொழி || 10-10 முனியே (பெரியபிராட்டியா ராணையிட்டுத தடுத்தப் பெரிய ஆர்த்தியோடே கூப்பிட்ட ஆழ்வாருடைய காரியம் செய்தல்லது நிற்கவொண்ணாதபடி யாயிற்று எம்பெருமாளுக்கு; அதனால் இவர் பிரார்த்தித்தபடியே பாரிபூர்ணனாய்க் கொண்டு வந்து ஸமச்லேஷித்தருளினான்; அதுகண்டு என்னுடைய அபாரிமிதமான விடாயெல்லாம் தீரவந்து என்னோடே கலந்தாய்; என்னுடைய மநோரதமும் ஒருபடி நிறைவேறப்பெற்றேன்’ என்று போரின்பம் பொலிய விண்ணப்பஞ் செய்கிறார்.) 10
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த, Soozhndhu Agandru Aazhndhu Uyarndha - பத்து திக்கிலும் வ்யாப்தமாய்
முடிவு இல், Mudivu il - நித்யமாயிருக்கிற
பெரு பாழே ஓ, Peru Paazhe O - ப்ரக்ருதி தத்வத்துக்கு நியாமகனாய் நிற்கிறவனே!
சூழ்ந்து, Soozhndhu - (தர்மபூத ஜ்ஞானத்தாலே, அதையும் வியாபித்து
அதனில் பெரிய, Adhanil Periya - அதற்காட்டிலும் பெரியதாய்
பரம், Param - மேற்பட்டதாய்
நல்மலர்சோதீ ஒ, Nal Malarsodhi O - வகஸ்வர தேஜோரூபமான ஆத்ம வஸ்துவுக்கும் ஆத்மாவானவனே!
சூழ்ந்து, Soozhndhu - கீழ்ச் சொன்ன இரண்டு தத்வங்களையும் வியாபித்து அகற்றுக்கும் நிர்வாஹகமாய்
சுடர் ஞானம் இன்பமே ஓ, Sudar Gnanam Inbame O - ஙை;கல்ப பமாய் ஸூகரூபமான ஞானத்தை யுடையவனே!
சூழ்ந்து, Soozhndhu - அந்த தத்வத்ரயத்தையும் வளைத்துக்கொண்டு
அதனில் பெரிய, Adhanil Periya - அதிலும் மிகப் பெரிதான
என் அவா, En Avaa - என் அபிநிலேசமானது
அற, Ara - தீரும்படியாக
சூழ்ந்தாயே, Soozhndhaye - வந்து ஸம்ச்லேஷித்தாயே!
3776திருவாய்மொழி || 10-10 முனியே (பரபக்தி பரஜ்ஞான பரமபக்தி தசைகளென்று மூன்றுண்டே; சூழ்விசும்பணி முகிலுக்கு முன்வரையில் பரபக்தி தசையாய்ச் சென்றது. சூழ்விசும்பணி முகில் திருவாய் மொழியானது பரஜ்ஞான தசையிற் சென்றது. முனியே நான்முகனே யென்கிற இத்திருவாய் மொழியானது பரமபக்தி தசையிற் சென்றது. பரமபக்திக்கே ‘முடிந்த அவா’ என்று பெயர். இப்படிப்பட்ட பரமபக்தி பேசுவித்த இப்பதிகம் வல்லவர்கள் இவ்விருள் தருமா ஞாலத்திற் பிறந்து வைத்தே ‘நித்ய ஸூரிகளேயிவர்கள் என்னும்படியான பெருமையோடே பொலிவர்களென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11
அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11
அவா அற, Ava Ara - அடியேனுடைய அபிநி வேசம் தீரும்படி
சூழ், Soozh - ஸம்ச்லேஷிப்பவனாய்
அர்யை, Aryai - இப்படி தாபத்தை ஹாரிப்பவனாகையாலே ஹாரியென்று திருநாமம் பெற்றவானாய்
அயனை, Ayanai - பிரமனுக்கு அந்தரியாமியாய்
அரணை, Aranai - ருத்ரனுக்கு அந்தரியாமியாய்யிருக்கிற எம்பெருமானை
அலற்றி, Alatri - கூப்பிட்டு
அவா அற்று வீடு பெற்ற, Ava Attru Veedu Petra - ஆசை தீர்ந்து வீடு பெற்ற வாரன
குருகூர் சடகோ பன், Kurukoor Sadagoban - நம்மாழ்வார்
சொன்ன, Sonna - அருளிச் செய்ததாய்
அவாவில், Avaavil - பக்தியினா லுண்டானதான
அந்தா திகளால், Antha thigalaal - அந்தாதித் தொடையான பாசுரங்களால் நிறைந்த
இவை ஆயிரமும், Ivai Aayiramum - இவ்வாயிரத்தினுள்ளே
முடிந்த அவாவில், Mudintha Avavil - பரம பக்தியாலே பிறந்ததான
அந்தாதி, Anthaathi - அந்தாதியான
இப்பத்து, Ippathu - இப்பதிகத்தை
அறிந்தார், Arindhaar - அறியக் கற்குமவர்கள்
பிறந்தே உயர்ந்தார், Pirandhe Uyarndhar - ஸம்ஸாரத்தில் பிறந்தருக்கச் செய்தேயும் உயர்ந்த வர்களாவர்