| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 23 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 1 | சீதக்கடல் உள்ளமுதன்ன தேவகி கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த பேதைக் குழவி பிடித்துச் சுவைத்து உண்ணும் பாதக் கமலங்கள் காணீரே பவள வாயீர் வந்து காணீரே –1-2-1 | சீதம்,Seetham - குளிர்ந்திரா நின்றுள்ள கடல்,Kadal - திருப்பாற்கடலிலே உன் அமுது அன்ன,Un amuthu anna - உள்ளமுதாகப் பிறந்த பிராட்டியோடொத்த தேவகி,Devaki - தேவகிப் பிராட்டியால் கோதை குழலான் அசோதைக்கு போத்தந்த,Kothai kuzhalan asothai ku pothantha - பூ மாலையால் அலங்கரிக்கப்பட்ட கேச பாசத்தை யுடைய யசோதைப் பிராட்டிக்குப் போகவிடப்பட்டவனாய் பேதை,Pethai - அறிவின்மையை யுடையனாய் குழவி,Kuzhavi - சிசுவான கண்ணபிரான் பிடித்து,Pidithu - (தன் கைகளால்) பிடித்து சுவைத்து,Suvaithu - ருசி பார்த்து உண்ணும்,Unnum - திருப்பவளத்தில் வைத்து புஜியா நின்றுள்ள பாதம் கமலங்கள்,Paatham kamalangal - திருவடித் தாமரைகளை. காணீர்,Kanneer - வந்து காணுங்கோள். பவளம்,Pavalam - பவளம் போல் சிவந்த வாயீர்,Vaayir - அதரத்தையுடைய பெண் காள்! வந்து காணீர்! |
| 24 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 2 | முத்தும் மணியும் வயிரமும் நன் பொன்னும் தத்திப் பதித்துத் தலைப் பெய்தாற் போல் எங்கும் பத்து விரலும் மணி வண்ணன் பாதங்கள் ஒத்திட் டிருந்தவா காணீரே ஒண்ணுதலீர் வந்து காணீரே–1-2-2 | முத்தும்,Muttum - முத்துக்களையும் மணியும்,Maniyum - ரத்நங்களையும் வயிரமும்,Vairamum - வஜ்ரங்களையும் நல் பொன்னும்,Nal ponnum - மாற்றுயர்ந்த பொன்னையும் தத்திப்பதித்து,Tattippatitthu - மாறி மாறிப் பதித்து தலைப்பெய்தாற்போல்,Talaippeydaarpol - சேர்த்தாற்போலே எங்கும்,Engum - திருமேனி யெங்கும் மணி வண்ணன்,Mani vannan - மணி போன்ற வர்ணத்தை யுடையனான கண்ணனுடைய பாதங்கள்,Paathangal - திருவடிகளிலுள்ள பத்து விரலும்,Pathu viralum - விரல் பத்தும் ஒத்திட்டிருந்வா,Ottittirunva - ஒன்றோடொன்றெத்து அமைந்திருக்கும்படியை காணீர் ஒண் நுதலீர்,Kaanir onnudhalieer - ஒளிபொருந்திய நெற்றியை யுடையீர் காண்! வந்து காணீர்!,Vandhu kaanir! - வந்து காணீர்! |
| 25 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 3 | பணைத் தோளிள வாய்ச்சி பால் பாய்ந்த கொங்கை அணைத்தார உண்டு கிடந்த இப் பிள்ளை இணைக் காலில் வெள்ளித் தளை நின்றிலங்கும் கணைக் கால் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே–1-2-3 | பணை,Panai - மூங்கில்போன்ற தோள்,Thol - தோள்களை யுடையளாய் இள,Ila - இளமைப் பருவத்தை யுடையளான ஆய்ச்சி,Aaychi - யசோதையினுடைய பால் பாய்ந்த,Paal paayndha - பால் சொரிகிற கொங்கை,Kongai - முலையை அணைத்து,Anaiththu - (திருக்கையால்) அணைத்துக்கொண்டு ஆர,Aara - வயிறு நிரம்ப உண்டு,Undu - (பாலை) அமுது செய்து கிடந்த,Kidandha - (களித்துக்) கிடக்கின்ற இ பிள்ளை,I pillai - இந்தக் கண்ண பிரானுடைய இணை,Inai - சேர்த்தி யழகு அமைந்த காலில்,Kaalil - திருவடிகளில் வெள்ளி தளை நின்று,Velli thalai nindru - வெள்ளித் தண்டை நின்று இலங்கும்,Ilangum - விளங்கா நிற்கிற கணைக்கால் இருந்த ஆ,Kanaikkaal irundha aah - கணைக்காலிருந்தபடியை காணீர்! காரிகையீர்,Kaarigaiyer - அழகுடைய பெண்காள் வந்து காணீர்!! |
| 26 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 4 | உழந்தாள் நறு நெய் ஒரோ தடா வுண்ண இழந்தா ளெரிவினா லீர்த்து எழில் மத்தின் பழந் தாம்பாலோச்சப் பயத்தால் தவழ்ந்தான் முழந்தாள் இருந்தவா காணீரே முகிழ் முலையீர் வந்து காணீரே–1-2-4 | உழந்தாள்,Uzhandhaal - (நெய் முதலியவற்றை) பிரயாஸப்பட்டுத் தடாவிலே சேர்த்த யசோதையினுடைய நறு நெய்,Naru nei - மணம் மிக்க நெய்யை ஒரோ தடா,Oro thadaa - ஒவ்வொரு தடாவாக உண்ண,Unna - (கண்ணன்) அமுது செய்த வளவில் இழந்தாள்,Izhandhaal - (பிள்ளையைத்) தான் இழந்தவளாக நினைத்த யசோதை எரிவினால்,Erivinaal - வயிற்றெரிச்சலாலே ஈர்த்து,Eerththu - கையைப் பிடித்திழுத்து எழில் மத்தின்,Ezhil maththin - அழகிய மத்தினுடைய பழ தாம்பால்,Pazha thaambaal - சுற்றிக் கடைந்தமையாலுண்டான) பழமை பொருந்திய தாம்பை ஒச்ச,Ocha - (அடிப்பதாகக்) கையிலெடுக்க பயத்தால்,Payaththaal - அச்சத்தாலே தவழ்ந்தான்,Thavazhnthaan - (அதைத் தப்பிப் போவதாக) தவழ்ந்த கண்ணனுடைய முழந்தான் இருந்த ஆ காணீரே,Muzhandhaan irundha a Kaanire - முழங்கால்களிருந்தபடியை காணீர்! முகிழ் முலையீர் வந்து காணீரே,Mukhil mulaiyer vandhu kaanire - முகிழ்த்த முலையையுடைய பெண்காள்! வந்து காணீர்!! |
| 27 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 5 | பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத் துண்டிட்டு உறங்குவான் போலே கிடந்த இப் பிள்ளை மறங்கொ ளிரணியன் மார்பை முன் கீண்டான் குறங்குகளை வந்து காணீரே குவி முலையீர் வந்து காணீரே–1-2-5 | முன்,Mun - முற்காலத்திலே மறம்கொள்,Maramkol - த்வேஷங்கொண்ட இரணியன்,Eranian - ஹிரண்யனுடைய மார்வை,Maarvai - மார்பை கீண்டான்,Keendan - பிளந்தவனாய், பிறங்கிய,Pirangiya - (கொடுமையால் வந்த) ப்ரகாசத்தை யுடைய பேய்ச்சி,Peychchi - பூதனையினுடைய முலை,Mulai - முலையை சுவைத்து,Suvaiththu - (பசையறும்படி) ஆஸ்வாதித்து உண்டிட்டு,Undittu - அமுது செய்து உறங்குவான் போலே,Uranguvaan pole - (ஒன்றுமறியாமே) உறங்குமவனைப் போலே கிடந்த,Kidandha - படுத்திருப்பவனான இ பிள்ளை,E pillai - இந்தக் கண்ணனுடைய குறங்குகளை வந்து காணீர்!,Kurangugalai vandhu kaanire - திருத்துடைகளை வந்து காணீர்! குவி முலையீர் வந்து காணீரே,Kuvi mulaiyer - குவிந்த முலைகளை யுடைய பெண்காள்! வந்து காணீர்!! |
| 28 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 6 | மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை சித்தம் பிரியாத தேவகி தன்வயிற்றில் அத்தத்தின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன் முத்த மிருந்தவா காணீரே முகிழ் நகையீர் வந்து காணீரே–1-2-6 | மத்தம்,Maththam - மதத்தையுடைய களிறு,Kaliru - யானைகளை நிர்வஹிக்குமவரான வசுதேவர் தம்முடை,Vasudevar thammudai - ஸ்ரீவஸுதேவருடைய சித்தம் பிரியாத,Siththam priyadha - மனத்தை விட்டுப் பிரியாத தேவகி தன்,Devagi than - தேவகியினுடைய வயிற்றில்,Vayitrril - வயிற்றிலே அத்தத்தின் பத்தாம் நாள்,Aththaththin paththaam naal - ஹஸ்த நக்ஷத்ரத்துக்குப் பத்தாவதான திரு நாளிலே தோன்றிய,Thonriya - திருவவதரித்த அச்சுதன்,Achchuthan - கண்ண பிரானுடைய முத்தம் இருந்த ஆ காணீரே,Muththam irundha aa kaanire - சண்ணமிருந்த படியை காணீர்!! முகிழ் நகையீர் வந்து காணீரே,Mugil nagaiyeer vandhu kaanire - புன் சிரிப்பை யுடைய பெண்காள்! வந்து காணீர்!! |
| 29 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 7 | இருங்கை மத களிறு ஈர்க்கின் றவனை பருங்கிப் பறித்துக் கொண்டு ஓடு பரமன் தன் நெருங்கு பவளமும் நேர் நாணும் முத்தும் மருங்கும் இருந்தவா காணீரே வாணுதலீர் வந்து காணீரே–1-2-7 | இரு கை மத களிறு,Eru kai matha kaliru - பெரிய துதிக்கையையுடைய மத்த கஜமான குவலயாபீடத்தை ஈர்க்கின்றவனை,Eerkkindravanai - தன் வசமாக நடத்தா நின்றுள்ள பாகனை பருங்கி,Parungi - கொன்று பறித்துக்கொண்டு,Pariththukkondu - (யானையின் கொம்புகளை) முறித்துக் கொண்டு ஓடு,Odu - (கம்ஸனிருக்குமிடத்தைத் தேடிக்கொண்டு) ஓடின பரமன் தன்,Paraman than - பரமபுருஷனான கண்ணனுடைய நெருங்கு,Nerungu - செறியக் கோத்த பவளமும்,Pavalamum - பவள வடமும் நேர் நாணும்,Ner naanum - அழகிய அரை நாணும் முத்தும்,Muththum - முத்துவடமும் (இவற்றோடே சேர்ந்த) மருங்கும் இருந்த ஆ,Marungum irundha aa - திருவரையும் இருந்தபடியை காணீர்! வாள் நுதலீர் காணீர்!,Vaal nudhaleer kaanire - ஒளி பொருந்திய நெற்றியை யுடைய பெண்காள்! வந்து காணீர்!! |
| 30 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 8 | வந்த மதலைக் குழாத்தை வலி செய்து தந்தக் களிறு போல் தானே விளையாடும் நந்தன் மதலைக்கு நன்று மழகிய உந்தி இருந்தவா காணீரே ஒளி யிழையீர் வந்து காணீரே–1-2-8 | வந்த,Vanda - (தன்னோடு விளையாட) வந்த மதலை குழாத்தை,Mathalai kuzhaaththai - சிறு பிள்ளைகளின் கூட்டத்தில் வலி செய்து,Vali seydhu - தன் வல்லமையைக் காட்டிக் கொண்டு தந்தம் களிறு போல்,Thandham kaliru pol - கொம்பு முளைத்த யானைக் குட்டி போல் தானே,Thaane - தானே முக்கியனாய் நின்று விளையாடும்,Vilayaadum - விளையாடுமவனாய் நந்தன்,Nandhan - நந்தகோபர்க்கு மதலைக்கு,Mathalaikku - (விதேயனான) பிள்ளையாகிய கண்ணனுடைய நன்றும் அழகிய,Nandrum azhagiya - மிகவுமழகிதான உந்தி இருந்த ஆ காணீரே,Undhi irundha aa kaanire - நாபி இருக்கிறபடியை காணீர்! ஒளி,Oli - ஒளியால் விஞ்சின இழையீர் வந்து காணீரே,Ezhaiyeer vandhu kaanire - ஆபரணங்களணிந்த பெண்காள்! வந்து காணீர்!! |
| 31 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 9 | அதிரும் கடல் நிற வண்ணனை ஆய்ச்சி மதுர முலை யூட்டி வஞ்சித்து வைத்து பதறப் படாமே பழந் தாம்பா லார்த்த உதரம் இருந்தவா காணீரே ஒளி வளை யீர் வந்து காணீரே–1-2-9 | அதிரும்,Athirum - கோஷிக்கின்ற கடல்நிறம்,Kadalniram - கடலினது நிறம்போன்ற வண்ணனை,Vannanai - நிறத்தை யுடைய கண்ணனுக்கு ஆய்ச்சி,Aaychchi - யசோதை யானவள் மதுரம் முலை ஊட்டி,Madhuram mulai ootti - இனிய முலைப் பாலை ஊட்டி, வஞ்சித்து வைத்து,Vanchiththu vaiththu - (மேல், தான் இவனைக் கட்டப் போகிறதை இவனறிய வொண்ணாதபடி) ஏமாத்தி பதறப் படாமே,Patharappadaame - தன் எண்ணம் தப்பாதபடி பழ தாம்பால்,Pazha thaambaal - பழகின கயிற்றாலே ஆர்த்த,Aartha - கட்டி வைத்த உதரம் இருந்த ஆ காணீரே,Utharam irundha aa kaanire - வயிறு இருந்தபடியை காணீர்! ஒளி வளையீர் வந்து காணீரே,Oli valaiyeer vandhu kaanire - ஒளி மிக்க வளையை யுடைய பெண்காள்! வந்து காணீர்!! |
| 32 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 10 | பெருமா வுரலில் பிணிப் புண்டிருந்து அங்கு இருமா மருதம் இறுத்த இப் பிள்ளை குரு மா மணிப் பூண் குலாவித் திகழும் திரு மார்பு இருந்தவா காணீரே சேயிழையீர் வந்து காணீரே–1-2-10 | பெரு மா உரலில்,Peru maa uralil - மிகப்பெரிய உரலோடு பிணிப்புண்டு,Pinippundu - கட்டுண்டிருந்து இருந்து அங்கு,Angu - அந்த நிலைமையிலே இரு மா மருதம்,Eru maa marutham - இரண்டு பெரிய மருத மரங்களை இறுத்த,Eruththa - முறித்தருளின இ பிள்ளை,E pillai - இக் கண்ண பிரானுடைய, குரு மா,Guru maa - மிகவும் சிறந்த மணி பூண்,Mani poon - கௌஸ்துபாபரணமானது குலாவி திகழும்,Kulaavi thigazhum - அசைந்து விளங்கா நின்றுள்ள திருமார்வு இருந்த ஆ காணீரே,Thirumaarvu irundha aa kaanire - திருமார்வு இருந்த ஆ காணீர்! சே இழையீர் வந்து காணீரே,Se izhaiyeer vandhu kaanire - செவ்விய ஆபரணங்களை யுடைய பெண்காள் வந்து காணீர்! |
| 33 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 11 | நாள்களோர் நாலைந்து திங்க ளளவிலே தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப்போய் வாள்கொள் வளையெயிற்று ஆருயிர் வவ்வினான் தோள்கள் இருந்தவா காணீரே சுரிகுழ லீர்வந்து காணீரே-1-2-11 | நாள்கள்,Naalgal - (கண்ணன் பிறந்த பின்பு சென்ற) நாட்கள் ஓர்நாலு ஐந்து திங்கள் அளவிலே,Ornaalu aindhu thingal alavile - ஒரு நாலைந்து மாதத்தளவிலே தாளை நிமிர்ந்து,Thaalai nimirndhu - காலைத் தூக்கி சகடத்தை,Sakataththai - சகடாஸுரனை சாடிப்போய்,Saadippoy - உதைத்துவிட்டு, வாள் கொள்,Vaal kol - ஒளிகொண்டதாய் வளை,Valai - வளைந்திராநின்றுள்ள எயிறு,Eyiru - கோரப்பற்களையுடைய பூதனையினது ஆர் உயிர்,Aar uyir - அரிய உயிரை வவ்வினான்,Vavvinan - முடித்த கண்ணனுடைய தோள்கள் இருந்த ஆ காணீரே,Tholgal irundha aa kaanire - தோள்கள் இருந்த ஆ காணீர்! சுரி குழலீர் வந்து காணீரே,Suri kuzhalir vandhu kaanire - சுருண்ட கேசத்தையுடைய பெண்காள்! வந்து காணீர்!! |
| 34 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 12 | மைத்தடங் கண்ணி யசோதை வளர்க்கின்ற செய்த்தலை நீல நிறத்துச் சிறுப்பிள்ளை நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய கைத்தலங் கள்வந்து காணீரே கனங்குழை யீர்வந்து காணீரே–1-2-12 | மை,Mai - மையணிந்த தட,Thada - பெரிய கண்ணி,Kanni - கண்களையுடைய அசோதை,Asodhai - யசோதைப்பிராட்டியாலே வளர்க்கின்ற,Valarkkinra - வளர்க்கப்படுகின்றவனாய் தலைசெய்,Thalaisei - உயர்ந்த க்ஷேத்ரத்திலே (அலர்ந்த) நீலம் நிறம்,Neelam niram - கருநெய்தல் பூவினது போன்ற நிறத்தையுடையவான சிறுபிள்ளை,Sirupillai - (இந்த) பாலக்ருஷ்ணனுடைய நெய்,Ney - கூர்மைபொருந்திய தலை,Thalai - நுதியையுடைய நேமியும்,Nemiyum - திருவாழியும் சங்கும்,Sangum - திருச்சங்கும் நிலாவிய,Nilaviya - அமைந்திராநின்றுள்ள கைத்தலங்கள் வந்து காணீரே,Kaithalangal vandhu kaanire - உள்ளங்கைகளை வந்து காணீர்! கனம்,Kanam - பொன்னால்செய்த குழையீர் வந்து காணீரே,Kuzhaiyeer vandhu kaanire - காதணிகளையுடைய பெண்காள்! வந்து காணீர்!! |
| 35 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 13 | வண்டமர் பூங்குழல் ஆய்ச்சி மகனாகக் கொண்டு வளர்க்கின்ற கோவலக் குட்டற்கு அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய கண்டம் இருந்தவா காணீரே காரிகை யீர்வந்து காணீரே–1-2-13 | வண்டு அமர்,Vandhu amar - வண்டுகள் படிந்திருக்கிற பூ குழல்,Poo kuzhal - பூ அணிந்த குழலையுடையளான ஆய்ச்சி,Aaychchi - யசோதைப் பிராட்டியானவள் மகனாக கொண்டு,Maganaaga kondu - (தன்) புத்ரனாக ஸ்வீகரித்து வளர்க்கின்ற,Valarkkinra - வளர்க்கப் பெற்றவனாய் கோவலர்,Kovalar - ஸ்ரீநந்தகோபருடைய குட்டற்கு,Kuttarku - பிள்ளையான கண்ணபிரானுடைய, அண்டமும்,Andamum - அண்டங்களையும் நாடும்,Naadum - (அவற்றினுள்ளே கிடக்கிற) சேதநாசேதநங்களையும் அடங்க,Adanga - முழுதும் விழுங்கிய,Vizhungiya - (ப்ரளயகாலத்தில்) கபளீகரித்த கண்டம் இருந்த ஆ,Kandam irundha a - கழுத்திருந்தபடியை |
| 36 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 14 | எந்தொண்டை வாய்ச்சிங்கம் வாவென்றெடுத்துக்கொண்டு அந்தொண்டை வாயமு தாதரித்து ஆய்ச்சியர் தம்தொண்டை வாயால் தருக்கிப் பருகும்இச் செந்தொண்டை வாய்வந்து காணீரே சேயிழை யீர்வந்து காணீரே–1-2-14 | ஆய்ச்சியர்,Aaychchiyar - இடைப்பெண்கள் தொண்டை,Thondai - ‘‘கொவ்வைக்கனி போன்ற வாய்,Vaai - அதரத்தையுடைய எம் சிங்கம்,Em singam - எமது சிங்கக்குருவே! வா என்று,Vaa endru - (எம்பக்கல்) வா’’ என்று எடுத்துக் கொண்டு,Eduththuk kondu - (இடுப்பில்) எடுத்துக்கொண்டு அம் தொண்டை,Am thondai - அழகிய கொவ்வைபோன்ற வாய்,Vaai - (கண்ணனுடைய) அதரத்தில் அமுது,Amudhu - (ஊறுகிற) அம்ருதத்தை ஆதரித்து,Aadhariththu - விரும்பி, தம்,Tham - தங்களுடைய தொண்டை வாயால்,Thondai vaayaal - கோவை வாயை தருக்கி,Tharukki - (கண்ணன் வாயோடே நெருக்கி) பருகும்,Parugum - பாகம் பண்ணப்பெற்ற இ செம் தொண்டை வாய் வந்து காணீரே,E sem thondai vaai vandhu kaaneere - இந்தச் சிவந்த கோவை வாயை வந்து காணீர்! சேயிழையீர்! வந்து காணீரே,Seeyizhaiyeer! Vandhu kaaneere - சேயிழையீர்! வந்து காணீர்! |
| 37 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 15 | நோக்கி யசோதை நுணுக்கிய மஞ்சளால் நாக்கு வழித்துநீ ராட்டும்இந் நம்பிக்கு வாக்கும் நயனமும் வாயும் முறுவலும் மூக்கும் இருந்தவா காணீரே மொய்குழ லீர்வந்து காணீரே–1-2-15 | அசோதை,Asothai - யசோதைப்பிராட்டி நோக்கி,Nookki - (கண்ணபிரான்திருமேனியின் மென்மைக்குத் தக்கப்படி) பார்த்து ஆராய்ந்து நுணுக்கிய,Nunikkiya - அரைத்த மஞ்சளால்,Manjalal - மஞ்சட்காப்பாலே, நாக்கு வழித்து,Naakku vazhiththu - நாக்கு வழித்து நீராட்டும்,Neeraattum - ஸ்நாநம் செய்விக்கப் பெறுகின்ற இ நம்பிக்கு,I nambikku - இக்கண்ணபிரானுடைய வாக்கும்,Vaakkum - திருவாக்கும் நயனமும்,Nayanamum - திருக்கண்களும் வாயும்,Vaayum - அதரஸ்புரணமும் முறுவலும்,Muruvalum - புன்சிரிப்பும் மூக்கும் இருந்த ஆ காணீரே ,Mookkum irundha aa kaaneere - மூக்குமிருந்தபடியை காணீர்! மொய்குழலீர் காணீரே,Moikuzhaleer kaaneere - செறிந்தகுழலையுடைய பெண்காள்! வந்து காணீர்! |
| 38 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 16 | விண் கொளமரர்கள் வேதனை தீர முன் மண் கொள் வசுதேவர் தம் மக னாய் வந்து திண் கொளசுரரைத் தேய வளர்கின்றான் கண்கள் இருந்தவா காணீரே கன வளையீர் வந்து காணீரே–1-2-16 | விண் கொள்,Vin kol - ஸ்வர்க்காதிலோகங்களை இருப்பிடமாகக் கொண்ட அமரர்கள்,Amararagal - தேவதைகளுடைய வேதனை தீர,Vedhanai theera - துன்பங்கள் தீரும்படி முன்,Mun - முன்னே மண்கொள்,Man kol - பூமியை இருப்பிடமாகக் கொண்ட வசுதேவர் தம்,Vasudevar tham - வஸுதேவர்க்கு மகனாய் வந்து,Maganaai vandhu - பிள்ளையாய் வந்து பிறந்து திண்கொள்,Thin kol - வலிமைகொண்ட அசுரர்,Asurar - அஸுரர்கள் தேய,Theya - க்ஷயிக்கும்படி வளர்கின்றான்,Valar kindraan - வளராநின்ற கண்ணனுடைய கண்கள் இருந்த ஆ வந்து காணீரே,Kangal irundha aa vandhu kaaneere - கண்கள் இருந்த ஆ காணீர்! கனம் வளையீர் வந்து காணீரே,Kanam valaiyeer vandhu kaaneere - கநக கங்கணத்தை யுடைய பெண்காள் வந்து காணீர்!! |
| 39 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 17 | பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்ய திருவின் வடிவொக்கும் தேவகி பெற்ற உருவு கரிய ஒளி மணி வண்ணன் புருவம் இருந்தவா காணீரே பூண் முலையீர் வந்து காணீரே–1-2-17 | பருவம்,Paruvam - வயது நிரம்பாமே,Nirambaame - முதிருவதற்கு முன்னமே பார்எல்லாம்,Paar ellaam - பூமியிலுள்ளார் எல்லாரும் உய்ய,Uyyya - உஜ்ஜீவிக்கும்படியாக திருவின் வடிவு ஒக்கும்,Thiruvin vadivu okkum - பிராட்டியின் வடிவுபோன்ற வடிவையுடையளான தேவகி,Devagi - தேவகிப்பிராட்டியாலே பெற்ற,Pettra - பெறப்பட்டவனாய் உருவு கரிய,Uruvu kariya - உருவால் கறுத்ததாய் ஒளி,Oli - உஜ்ஜவலமான மணி,Mani - மணி போன்ற வண்ணன்,Vannan - வடிவையுடையனான கண்ணபிரானுடைய புருவம் இருந்த ஆ வந்து காணீரே,Pruvam irundha aa vandhu kaaneere - புருவம் இருந்த ஆ காணீர் பூண் முலையீர் வந்து காணீரே,Poon mulaiyeer vandhu kaaneere - ஆபரணம் பூண்ட முலையையுடைய பெண்காள்! வந்து காணீர்!! |
| 40 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 18 | மண்ணும் மலையும் கடலும் உலகேழும் உண்ணுந் திறத்து மகிழ்ந்துண்ணும் பிள்ளைக்கு வண்ண மெழில்கொள் மகரக் குழையிவை திண்ணம் இருந்தவா காணீரே சேயிழை யீர்வந்து காணீரே–1-2-18 | மண்ணும்,Mannum - பூமியையும் மலையும்,Malayum - மலைகளையும் கடலும்,Kadalum - கடல்களையும் உலகு எழும்,Ulagu ezhum - ஸப்தலோகங்களையும் உண்ணுந்திறந்து,Unnundhirandhu - திருவயிற்றிலே வைக்கிறவளவில் மகிழ்ந்து,Magizndhu - உகந்து உண்ணும்,Unnum - திருவயிற்றிலே வைத்த பிள்ளைக்கு,Pillaiyukku - (இக்) கண்ணபிரானுடையதான எழில் வண்ணம் கொள்,Ezhil vannan kol - அழகிய நிறங்கொண்ட மகரம் குழை இவை,Magaram kuzai ivai - இம்மகர குண்டலங்களின் திண்ணம் இருந்த காணீரே ,Thinnam irundha kaaneere - திண்மை இருந்தபடியை காணீர் சேயிழையீர்! காணீரே,Seyizhaiyeer! Kaaneere - சேயிழையீர்! வந்து காணீர்!! |
| 41 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 19 | மண்ணும் மலையும் கடலும் உலகேழும் உண்ணுந் திறத்து மகிழ்ந்துண்ணும் பிள்ளைக்கு வண்ண மெழில்கொள் மகரக் குழையிவை திண்ணம் இருந்தவா காணீரே சேயிழை யீர்வந்து காணீரே–1-2-18 | மண்ணும்,Mannum - பூமியையும் மலையும்,Malayum - மலைகளையும் கடலும்,Kadalum - கடல்களையும் உலகு எழும்,Ulagu ezhum - ஸப்தலோகங்களையும் உண்ணுந்திறந்து,Unnundhirandhu - திருவயிற்றிலே வைக்கிறவளவில் மகிழ்ந்து,Magizhndhu - உகந்து உண்ணும்,Unnum - திருவயிற்றிலே வைத்த பிள்ளைக்கு,Pillaiyukku - (இக்) கண்ணபிரானுடையதான எழில் வண்ணம் கொள்,Ezhil vannan kol - அழகிய நிறங்கொண்ட மகரம் குழை இவை,Magaram kuzai ivai - இம்மகர குண்டலங்களின் திண்ணம் இருந்த காணீரே,Thinnam irundha kaaneere - திண்மை இருந்தபடியை காணீர் சேயிழையீர்! காணீரே,Seyizhaiyeer! Kaaneere - சேயிழையீர்! வந்து காணீர்!! |
| 42 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 20 | அழகிய பைம்பொன்னின் கோல் அங்கைக் கொண்டு கழல்கள் சதங்கை கலந்து எங்கு மார்ப்ப மழகன் றினங்கள் மறித்துத் திரிவான் குழல்கள் இருந்தவா காணீரே குவி முலையீர் வந்து காணீரே–1-2-20 | அழகிய,Azhagiya - அழகியதும் பைம் பொன்னின்,Paim ponnin - பசும் பொன்னால் செய்யப்பட்டதுமான கோல்,Kol - மாடு மேய்க்குங் கோலை அம் கை,Am kai - அழகிய கையிலே கொண்டு,Kondu - பிடித்துக் கொண்டு கழல்கள்,Kazhagal - (கால்களிலுள்ள) வீரக் கழல்களும் சதங்கை,Sathangai - சதங்கைகளும் கலந்து,Kalanndhu - தன்னிலே சேர்ந்து எங்கும் ஆர்ப்ப,Engum aarpa - போமிடமெல்லா மொலிக்க மழ,Mazha - இளமை பொருந்திய கன்று இனங்கன்,Kanru inankan - கன்றுகளின் திரள்களை மறித்து,Mariththu - (கை கழியப் போகாமல் மடக்கி) திரிவான்,Thirivaan - திரியுமவனான கண்ணபிரானுடைய குழல்கள் இருந்தவா காணீரே,Kuzhalgal irundhavaa kaaneere - திருக் குழல்களானவை இருந்த ஆ காணீர்! குவி முலையீர் வந்து காணீரே,Kuvi mulaiyeer vandhu kaaneere - குவி முலையீர்! வந்து காணீர்!! |
| 43 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 21 | சுருப்பார் குழலி யசோதை முன் சொன்ன திருப் பாத கேசத்தைத் தென் புதுவைப் பட்டன் விருப்பா லுரைத்த இருபதோ டொன்றும் உரைப்பார் போய் வைகுந்தத் தொன்றுவர் தாமே–1-2-21 | சுரும்பு ஆர்,Surumbu aar - வண்டுகள் படிந்து நிறைந்த குழலி,Kuzhali - கூந்தலை யுடையளான அசோதை,Asodhai - யசோதைப் பிராட்டியால் முன்,Mun - க்ருஷ்ணாவதார ஸமயத்திலே சொன்ன,Sonnan - சொல்லப்பட்ட திருப்பாத கேசத்தை,Thirupaadha kesaththai - பாதாதிகேசாந்த வர்ணநப் பாசுரங்களை தென் புதுவை பட்டன்,Then puduvai pattan - அழகிய ஸ்ரீவில்லிபுத்தூருக்கு (நிர்வாஹகரான) அழ்வார் விருப்பால்,Viruppaal - மிக்க ஆதரத்தோடு உரைத்த,Uraiththa - அருளிச்செய்த இருபதோடுஒன்றும்,Irupathodunonrum - இவ்விருபத்தொரு பாட்டுக்களையும் உரைப்பார் தாம்,Uraipaar thaam - ஓதுமவர்கள் போய்,Poy - (இம் மண்டலத்தைக் கடந்து) போய் வைகுந்தத்து,Vaikunthaththu - ஸ்ரீவைகுண்டத்திலே ஒன்றுவர்,Ondruvar - பொருந்தப் பெறுவார்கள் |